சிறுகதை: அவிழாப் புதிர்! - கிறிஸ்டி நல்லரெத்தினம் -
நேக்கு பூனையை பிடிக்காது. தப்பு, தப்பு...... பூனைகளைன்னு மாத்தி வாசியுங்கோ. பூனையாம் பூன. அதென்ன..... நம்ம கண்ணுக்குள்ளயே ஏதோ தேடற பார்வை...
' சீ, நீ ஒரு பதர்' அப்படின்னு பார்க்கிற மாதிரி ஒரு அலட்சிய பார்வ.... மீசையாம் மீசை.... நார் நாரா உதடுக்கு மேல ஈர்க்கில் போல ... பார்க்கவே சகிக்கல... உற்ற்ற்... உற்ற்ற் ன்ன எப்பவும் வயிற்றுக்குள்ள இருந்து ஒரு இரைச்சல் சத்தம் வேற. வயிறா இல்ல ஏதாவது பாக்டரியா?
வால் மட்டும் என்னவாம்? எங்க ஜிம்மிக்கு புசு புசுண்ணு என்னமா பஞ்சு மாதிரி சாஃப்டான வாலு.... பாம்புக்கு ஸவெட்டர் போட்டாபல இருக்கும். பூனையாம் பூன..... ஏதோ திட்டம் போட்டு ஒவ்வொரு அடியையும் அளந்து அளந்து வச்சி தலய மெதுவா திருப்பி பார்த்திட்டு அப்புறம் அலட்சியமா போறப்ப சினிமால 'உன்ன அப்புறமா வந்து கவனிச்கிறேன்னு' வில்லன் சொல்லறாப்பல இருக்கும்.
என்ன.... ஒரே குறையா சொல்றேன் சண்டைக்காரின்னு நினைச்சீங்களோ? மாமா கூட அம்மா கிட்ட இதேதான் சொன்னார். "கொண்டு வர்ர எல்லா வரனையும் வேணாம் வேணாம்னு உதைச்சி தள்ளுறா உன் மக. நாம பார்க்கிற பையங்க வேணாமா இல்ல கல்யாணமே வேணமா? அவளா பாத்து ஒரு டாக்டரையோ, ஐ.ஏ.எஸ் பையனயோ கூட்டிண்டு வரட்டும். ஜாம் ஜாம்னு நடத்தி நானே முன்னால நின்னு தாலிய எடுத்து கொடுக்கிறேன்."
மாமா மீது கோபம் பிச்சுண்டு வரும். டாக்டர் ஐ.ஏ.ஸ் ன்னா என்னா கொம்பா?
எதிர் வீட்டு கோமதியும்தான் பெரிசா 'டாக்டர் மாப்பிள, டாக்டர் மாப்பிளன்னு' பீத்திண்டு மூஞ்ச திருப்பிண்டு பெங்களூருக்கு குடித்தனம் போனா. எட்டு மாசம் தாங்கல..... தனியா டாக்சில வந்து இறங்கினா. பாவம்... அழுது அழுது முகமெல்லாம் வீங்கி.... என்ன எழவோ. 'டி..மஞ்சு... கோமதி கத தெரியுமோடி? அவ.....'. அம்மா தொடங்கும் முன்னே 'ஸ்டொப் இட் மா. டோண்ட் டெல் மி' ணு சொல்லி கட் பண்ணிட்டேன். பொம்மனாட்டிக்குள்ள இருக்திற வலியையும் வேதனையும் ஒரு வேடிக்கையா பார்க்கிற சமூகம்.... நிராகரிக்கப்பட்டவள் அப்படீனு சமூகம் முத்திரை குத்தி மூலயில போட்ட பொம்மையாட்டம் அவ வாழ்க்கை இப்போ.


அண்மையில் நண்பர் எல்லாளன் தந்திருந்த நூல்களிலொன்று 'சமாதானத்திற்கான ஶ்ரீலங்கா சார்புக் கனேடியர்கள்' அமைப்பு வெளியிட்டிருந்த மலையகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளரும், முன்னாட் விடுதலைப் போராளியுமான வரதன் கிருஷ்ணா எழுதிய 'வெந்து தணியாத பூமி' என்னும் சிறு நூல். இந் நூலை வாசித்தபோது ஒன்று புரிந்தது. இது தொட்டிருக்கும் விடயம் தற்போதுள்ள சூழலில் மிகவும் முக்கியமானதொன்று. இது ஆற்றியிருக்கும் பணியும் முக்கியமானது. காலத்தின் தேவை.

திருமணமாகி மதுரை வந்த நாள்முதல் அடிக்கடி இரவு ஒன்பதுமணிக்கு, எங்கள் பெட்ரூமிலிருந்து அம்மாவிடம், வீடியோ காலில்தான் பேசுவேன். அம்மா தனது பெட்ரூமிலயிருந்து பேசுவாங்க. சிலநாட்களில் சமையல்காரப் பையன் எடுத்துப் பேசுவான். தவிர, நேரம் கிடைக்கும்போதெல்லாம் அத்தானும் பேசத் தவறுவதில்லை.
2012 ஏப்ரல் 12ம் தேதி வியாழக் கிழமை காலை 10 மணியளவில் வவுனியா பூங்காப் பகுதி தடை முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட முப்பத்தொரு பெண்களில் சங்கவி ஒருத்தியாக இருந்தாள். அவர்களில் நான்கு பேர் குழந்தைகளோடு இருந்தார்கள்.

நாவலில் வரும் முக்கிய பாத்திரங்களில் ஒன்று ஏய்டன். மற்றது நீலமேகம். மற்றது காத்தவராயன் எனும் தலித் இளைஞன். இடையே ஏய்டனின் தோழி – ஓர் ஆங்கிலோ இந்திய விலைமாது. ஒரு மதகுரு. இன்னும் ஓர் ஆங்கிலேய காலனித்துவ அதிகாரி இப்படியாய் சில பாத்திரங்கள் வந்து போகின்றன, கதையின் தேவை கருதி. இருந்தும், மேலே கூறப்பட்ட மூன்று பாத்திரங்கள் முக்கியமானவை. காரணம் அவை சமூகத்தில் இயங்கும் அரசியலை ஏந்திபிடிக்க வசதி செய்து தருவன.


திரு.கிரிதரன் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக ஈழத்து சஞ்சிகைகள், பத்திரிகைகளில் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுதி நன்கு அறிமுகமானவர். பின்னர் புலம்பெயர்ந்து கனடா சென்று தமது படைப்பாற்றலை அங்கும் தொடர்ந்து ஈழத்திலும் வெளிப்படுத்தி வந்துள்ளார். அத்துடன் நின்றுவிடவில்லை. தொடர்ந்து தமிழ் நாட்டிலும் தமிழர் தொழில்முறையாகவும் புலம்பெயர்ந்தும் வாழும் உலக நாடுகளிலெல்லாம் அறிமுகமானார். ஆயினும் நான்கு குறுநாவல்கள் அடங்கிய இத்தொகுதியே அன்னாரின் படைப்பாற்றலையும் எழுத்து வன்மையையும் எளிதில் அளவிடக் கூடியதாக அமைந்துள்ளது எனக்கூறலாம்.
- தமிழ்புக்ஸ்.காம் தளத்தில் வெளியான அஞ்சலிக் கட்டுரை. அனுப்பியவர் நண்பர் ஸ்நேகா பாலாஜி -

எனது ஐந்து வயதுப்பேரனுக்கு பீட்டர் என்ற முயலின் கதையை (Tale of Peter the Rabbit) சமீபத்தில் வாசித்தேன் . அந்த கதை பலருக்குத் தெரிந்திருக்கும். தாய் முயல் தனது பிள்ளைகளான புளுப்சி, மெர்சி, கொட்டன் ரயில் மற்றும் பீட்டரிடம் , “நீங்கள் போய் விளையாடுங்கள். ஆனால் மிஸ்டர் மக்கிரகரின் தோட்டத்திற்கு போகவேண்டாம் . ஏற்கனவே அங்கு போனதால் திருமதி மக்கிரகர், சில காலத்தின் முன்பு உங்களது தந்தையை தங்களது உணவாக சமைத்து உண்டுவிட்டார்கள். ஆகவே கவனம் ” என எச்சரிப்பார்



கத்யானா அமரசிங்ஹவின் மூன்றாவது சிங்கள நாவலான ‘தரணி’, எம்.ரிஷான் ஷெரீபின் மொழிபெயர்ப்பில் பூபாலசிங்கம் புத்தகசாலை வெளியீடாக சென்றவாண்டு (2020) வெளிவந்திருக்கிறது.
அறிமுகம்
அண்மையில் எனது நண்பர் ஒருவர் மூலமாக ஒரு புத்தகம் கிடைத்தது. அனேகமாக இந்த காலம் முழுக்க முழுக்க அனேகமானவர்கள் இணையத் தளத்திலேயே முகம் புதைத்து காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு நானும் விதிவிலக்கல்ல எனது நேரத்திலும் குறிப்பிட்ட பகுதி இணையத்திற்குள் தான் முடங்கிப்போய்விடுகிறது. இதற்கு இந்த கொரோனா நோய்த்தொற்று இன்னமும் உரமூட்டிவிட்டிருக்கிறது என்று தான் கூறவேண்டும். இப்படியான சந்தர்ப்பத்தில்தான் அந்த நண்பர் எனக்கு இந்த நூலை அளித்திருந்தார். இணையத்தோடு வாசிப்பு பழக்கம் ஒன்றிப்போய்விட்டதால் புத்தகத்தை பெறும்போது எனது நூலகத்திற்கு மற்றொரு நூல்கிடைக்கிறது என்ற மகிழ்ச்சி ஒருபுறமிருந்தாலும் அதனை படித்து முடிக்க எவ்வளவு நாளாகும் என்ற யோசனை மற்றொருபுறம் என்னை குழப்பியது. காரணம் அது ஒரு நாவல் அதேவேளை 198 பக்கங்களையுடைய பெரிய புத்தகம். தற்போது எல்லாமே கைக்கடக்கமாக பழகிப்போய்விட்டதால் அதனுடைய பக்க எண்ணிக்கை சற்று சஞ்சலத்தை உண்டுபண்ணியது. மேலும் ஒரு விடயம் யாதெனில் அந்த நாவலை எழுதியவர் ஒரு புதிய எழுத்தாளர் அதே வேளை இந்த நாவல் அவரது முதலாவது நாவல் என்ற விடயம் மேலும் அதனை படிப்பதில் தயக்கத்தை உண்டுபண்ணியது. அந்த நூலை படித்து முடித்ததும் உடனடியாகவே இந்த கட்டுரையை எழுததொடங்கிவிட்டேன். அந்த நாவலை படிக்கும்போது என்னுள் ஏற்பட்ட உளக்கிளர்ச்சியே என்னை இந்த ஆய்வை எழுதத் தூண்டிற்று.
பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









