
அண்மையில் எழுநா மின்னிதலிழ் நண்பர் வேலாயுதம் இராமர் “மலையக வாய்மொழி பாடல்களில் கண்காணிகளின் இருப்பு! மலையக மக்களின் வாய்மொழிப் பாடல்கள் பேசும் வாழ்வியல்” எனும் தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். அதில் ஆதங்கத்தோடு மக்கள் கவிமணி சி.பி வேலுப்பிள்ளை குறித்து ஒரு குறிப்பை பின்வருமாறு கோடிட்டு காட்டியிருந்தார். அதாவது.
"மலையக மக்களின் வாழ்வியலை இலக்கியத்தின் ஊடாக உலகறியச் செய்த சீ.வி வேலுப்பிள்ளை கூட, பெரியகண்காணிகள் தமது மக்களுக்கு செய்த கொடுமைகளை எந்த இடத்திலும் விமர்சிக்கவோ, தொட்டு காட்டவோ செய்யவில்லை. இதற்கான காரணமாக அவர் ஒரு பெரிய கண்காணியின் வாரிசாக இருந்ததையும் அதனால் நேர்திருந்த கடப்பாடுகளையும் குறிப்பிடலாம்."
மேற்படி பந்தியில் வேலாயுதம் இராமர் சி.வி. வேலுப்பிள்ளை அவர்கள் குறித்து எந்த தள்ளாட்டமும் இல்லாமல் பின்வரும் விடயங்களை பட்டியிலிடுகிறார்.
1. பெரிய கங்காணிகள் மலையக மக்களுக்கு செய்த கொடுமைகளை சீ.வி. வேலுப்பிள்ளை தொட்டுகாட்டவில்லை.
2. பெரிய கங்காணிகளை சீ.வி வேலுப்பிள்ளi விமர்சிக்கவில்லை.
3. இவ்வாறு விமர்சிக்கவோ, தொட்டுகாட்டவோ அவருக்கு முடியாது போனதுக்கு அவர் ஒரு பெரிய கங்காணியின் வாரிசாக இருந்ததே காரணம்.
4. சீ.வி வேலுப்பிள்ளை அவர்கள் பெரிய கங்காணிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததோடு அவர்களுக்கு கடமைப்பட்டவராகவும் இருந்தார்.
உண்மையில் வேலாயுதம் இராமர் அவர்களின் இந்த ஆதங்கள் எந்தளவிற்கு யதார்த்தமானது என்பதை கண்டறிய வேண்டியுள்ளது.