உணர்வுசார் நுண்ணறிவை வளர்ப்போம்! - ஸ்ரீரஞ்சனி -

- இன்று பெப்ருவரி 3 'உங்கள் குழந்தையை நூலகத்து அழைத்துச் செல்லுங்கள் தினம்' (Take Your Child to the Library Day). அதனையொட்டி எழுதப்பட்ட கட்டுரை. -
உணர்வுகளை அடையாளம்காண்பதற்கும், அவற்றை விளங்கிக்கொள்வதற்கும், தகுந்த முறையில் அவற்றைக் கையாள்வதற்குமான திறன், உணர்வுசார் நுண்ணறிவு எனப்படுகிறது. இது எம்மைச் சூழவுள்ளவர்களுடன் வினைத்திறனாகத் தொடர்புகொள்வதற்கும், எமக்கும் அவர்களுக்கும் இடையேயுள்ள முரண்பாடுகளைத் தீர்த்துக்கொள்வதற்கும், எமது மனத்தகைப்பைக் குறைப்பதற்கும் உதவிசெய்கிறது.
வாழ்க்கைக்கு அவசியமான இந்த உணர்வுசார் நுண்ணறிவைப் பயிற்சியின் மூலம் நாம் வளர்த்துக் கொள்ளமுடியும். உணர்வுசார் நுண்ணறிவு அதிகமாக இருக்கும்போது, நாம் செய்யும் வேலையைச் சிறப்பாகச் செய்யவும், எமது உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கவும், உறவுகளை நல்ல முறையில் பேணவும் அது உதவும்.
எமது தனிப்பட்ட வாழ்க்கையிலோ அல்லது வேலையிலோ உணர்வுசார் நுண்ணறிவு அதிகமாகவிருக்கும் ஒரு சிலரையாவது நாம் சந்தித்திருப்போம். எந்த நிலைமையிலும் எம்மை எரிச்சலூட்டாமல் அல்லது புண்படுத்தாமல் எதை, எப்படிச் சொல்ல வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கும். அத்துடன், தமது பலத்தையும் பலவீனத்தையும் அறிந்திருக்கும் அவர்களால், கண்டனங்களை ஏற்றுக்கொள்ளவும், பிரச்சினைகளை இனம்கண்டு அவற்றுக்கான தீர்வுகளை, அமைதியான முறையில் காணக்கூடியதாகவும் இருக்கும். எமது பிரச்சினைகளை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது, தீர்வொன்றைக் காண்பதற்கு அது உதவாமல் போனாலும்கூட, எம்மில் அவர்கள் காட்டும் கரிசனை எமக்கு ஆறுதலைத் தரும்.




அவுஸ்திரேலியாவில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக தமிழ் இலக்கியம் மற்றும் கலைச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கம், இலங்கையில், வெளியிடப்படும் தமிழ் நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டமொன்றை கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது.
இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் என்னும் இடத்தில் பிறந்த குழந்தை காந்தி எப்படி மகாத்மாவானார்...? எவ்வாறு ஒரு தேசத்தின் பிதாவாக மாறினார் ....? என்பதற்கெல்லாம் வரலாறுகள் இருக்கின்றன. தற்காலக் குழந்தைகளுக்கும் இனிபிறக்கவிருக்கும் குழந்தைகளுக்கும் இப்படியும் ஒரு மனிதர் ஆசியாக்கண்டத்தில் ஒரு காலத்தில் பிறந்து - வாழ்ந்து - மறைந்தார் என்று சொல்லிக்காண்பிப்பதற்கு காந்தி பற்றிய திரைப்படங்களும் ஆங்கிலத்திலும் அனைந்திந்திய மொழிகளிலும் இருக்கின்றன.


ஆறு தசாப்தங்களுக்கு முன்னர், அதாவது 1960 ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரத் தொடங்கிய விவேகி மாத இதழின் அன்றைய விலை நாற்பது சதம்தான். “நாற்பது சதமா…?“ அது எப்படி இருக்கும் என்று சமகாலத்தில் எமது குழந்தைகள் கேட்பார்கள். இலங்கையில் பணவீக்கம் படிப்படியாக வளர்ச்சி கண்டு, அக்கால நாணயங்களை மதிப்பிழக்கச் செய்துவிட்டது. அதற்கு காரண கர்த்தாக்கலான அரசியல்வாதிகளும் தவறான பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றிய அரசுகளும் நாணயமற்றுப் போனதன் விளைவை இலங்கை இன்று அனுபவித்துக்கொண்டிருக்கிறது.







மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை இசைக் கருவிகள் இசைக்கப்படுகின்றன. இசைக்கருவிகளைத் தமிழர்கள் தோல் கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவி, கஞ்ச கருவி, மிடற்றுக்கருவி எனப் பகுத்து வைத்தனர்.அரசனது அறிவிப்புகளை மக்களுக்கு முரசறைந்து அல்லது பறையடித்துச் சொல்வது மரபாகும்.இலக்கியங்களில் திருமணச்செய்தியை அறிவிக்க,முடி சூட்டு விழாவை அறிவிக்க, போர்த் தொடக்கத்தை அறிவிக்க, போர்ப் பூவைப் பெற்றுக்கொள்ள, போர் ஆரம்பித்து விட்டது என்பதை அறிவிக்க, சமாதானத்தை அறிவிக்க, போர் வெற்றியை அறிவிக்க, பிறந்தநாள் விழாவை அறிவிக்க,விழா நடைபெற இருப்பதை அறிவிக்க என்று பல அறிவிப்புகளை மக்களுக்குத் தெரிவிப்பதற்காகவே முரசு முழக்கப்பட்டதை இக்கட்டுரையில் ஆராய்வோம்.
என் கணவர் ஆபிரகாமின் இரண்டாவது தங்கை திரேசாவுக்கும் - ஸ்டீபனுக்கும் புனிதவியாகப்பர் ஆலயத்தில் நடந்துகொண்டிருந்த திருமணம், மணப்பெண்ணின் மறுப்பினால் பாதியிலே தடைபட்டது.
4


தைபிறந்து விட்டாலே தங்கமே தங்கம் 


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









