23 - 24 வயதில் பாரதியின் வர்க்கச் சிந்தனைகள் (2) - எல்.ஜோதிகுமார் -

பெரும்பாலும் கவிஞனாகவே அறியப்பட்ட பாரதி, பெருமளவு எழுதியது என்னவோ கட்டுரைகளே. அதிலும் 1905-1907 காலப்பகுதியில் அவனது கட்டுரைகளில் பெரும்பாலானவை அரசியல் கட்டுரைகள் என வரையறுக்கப்படலாம். இன்னும் சில சமூகம் சார்ந்த கட்டுரைகள் என்றும் கூறப்படலாம்.
1905 முதல், அவன் தமிழ் நாட்டை விட்டு அகன்று, (1907 ஆகஸ்ட் நடுப்பகுதியில்), புதுவையில் அடைக்கலம் புகும் வரை கிட்டத்தட்ட 454 விடயங்களை பல்வேறு தலைப்புகளின் கீழ் எழுதியுள்ளான். 1904இல் எழுதப்பட்ட அவனது ‘தனிமை இரக்கம்’ என்ற கவிதையும் சேர்த்து கூட்டி பார்த்தாலும் ஜுலை 1907 வரை அவன் எழுதிய கவிதைகளின் மொத்த எண்ணிக்கை 28 அல்லது 29 ஐ தாண்டாது.
ஆக, மிகுதி 415உம் கட்டுரைகளாகவே தேறும்.
ஸி.எஸ்.சுப்ரமணியம் எழுதுவார்:
“1906 டிசம்பரில் நடந்த கல்கத்தா காங்கிரசில் இருந்து திரும்பி வந்தவுடன் பாரதி தீவிர அரசியலில் ஈடுபட்டான்”
(பாரதி தரிசனம்: 2ம் பாகம்: பக்கம் XV)
இருக்கலாம். பாரதி, அரசியல் தளத்திலேயே இயங்கிய ஒருவன். அவ்வப்போது இலக்கிய சோலையினுள் தரித்து நின்று கவிதைகள் ஆற்ற முனைந்தான் என்பதில் உண்மை இல்லாமலும் இல்லை. ஆனால், இப்படி கூறுவதற்கூடு, அவனது கவிதைகளை குறைத்து மதிப்பிடுகின்றோம் என்பதாகாது. கவிதைகளில், சிலர் கூற முனைவது போல, வாழ்வை சாறு பிழிந்து கொடுக்க முற்பட்டான் என கூறலாம்.

தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' பத்திரிகை நிறுவனமொன்றினை நடத்தும் குடும்பம் கொடுக்கும் விருது ஞானபீட விருது. இது இந்திய அரசின் சாகித்திய அமைப்பு கொடுக்கும் விருதினைப் போன்றது அல்ல. ஆனால் மதிப்புக்குரிய விருதாகக் கருதப்படும் விருது. இதற்கு இம்முறை எழுத்தாளர் வைரமுத்துவுக்குக் கிடைத்துள்ளது. அவரது திரைப்பாடல்கள் மூலம் கவிஞர் வைரமுத்துவாக மக்கள் மத்தியில் அறியப்பட்டவர் அவர். அவரது இதுவரை கால கலை, இலக்கியப் பங்களிப்புக்காகக் கொடுத்திருக்கின்றார்கள். தனிப்பட்ட அவரது படைப்பு ஒன்றுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட வில்லை. 
நந்தா, போரின் சாம்பல் மேடுகளிலிருந்து உயிர்த்தெழுந்த ஒரு பீனிக்ஸ் பறவை. குண்டுச் சத்தங்கள் காதுகளில் ரீங்காரமிட, இரத்த வாடை நாசியில் ஒட்டிக்கொண்டிருக்க, அந்த தேசத்தை விட்டு வெளியேறினாள். சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் கணவனையும், நினைவுகள் உறங்கும் வீட்டையும் விட்டுவிட்டு, நான்கு பிள்ளைகளைத் தன் சிறகுகளுக்குள் பொத்தி வைத்துக்கொண்டு ஒரு ஐரோப்பிய தேசத்தில் வந்திறங்கினாள்.
மகாகவி பாரதியார் பாடல் - மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்
மகாகவி பாரதியார் பாடல் - ஜய பேரிகை கொட்டடா
வ.ந.கிரிதரன் பாடல் - இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.
பாரதியாரின் 'நிற்பதுவே,நடப்பதுவே' பாடலை செயற்கை நுண்ணறிவு மூலம் இசையமைத்துப் பாட வைத்திருக்கின்றேன்.
பாரதியாரின் 'நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா!' பாடலை செயற்கை நுண்ணறிவு மூலம் இசையமைத்துப் பாட வைத்திருக்கின்றேன்.



கோடை காலத்தில்,மத்தியானம் ஆனதும் ஊர்போல வெயில் கொளுத்தி எரிக்கும். உடல் முழுக்க வேர்த்து, வேர்வை ஒட்டிக்கொள்ளும்.தேகம் பிசுபிசுக்கும்.‘நா'வரண்டுபோகும். காற்று வராதா? வந்து எம்மை வருடாதா? என்று ஒவ்வொரு மனசும் எதிர்பார்க்கும்.சிலவேளைகளில் அதுவும் சாத்தியமாகும்.
கட்டுரையாளர்: அருணாசலம் லெட்சுமணன், அமைப்பாளர், நிகர் சமூக கலை இலக்கிய அரங்கம், அதிபர்- ம.மா-கொத்- உனுக்கொட்டுவ தமிழ் வித்தியாலயம்.
தென்னிந்தியாவில் இருந்து வருகைத்தந்து இலங்கையின் பெருந்தோட்ட பொறிமுறையினை விருத்தி செய்வதில் இந்திய வம்சாவளி தமிழர்களின் பங்கேற்பு மிக முக்கியத்திற்குரியதாக விளங்குகிறது. இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான பூர்வீகத் தொடர்பு நிலைகள் குறித்த ஆதாரங்கள் பல உள்ளன. அவ் ஆதாரங்களை முன்வைப்பதில் இராமாயண சித்திரிப்புக்கள் குறித்த பார்வை மிகுந்த கவனத்தை பெறுகின்றன. இவ்வாறான தொடர்பு நிலைகள் பல இருந்த போதிலும் 1823ம் வருடத்தை பிரதானப்படுத்திய நகர்வு 'மலையக சமூக' உருவாக்கத்தில மிக முக்கிய கட்டமாக அமைகிறது. அப் பிரயத்தனத்தில் 'மலையகம் - 200' என்ற கோசத்தின் பின்னணியில் இடம்பெற்ற நிகழ்வுகள் அவதானத்திற்குரியதாக அமைந்தன. இவ் இருநூறு வருடகால அவதானிப்பில் மலையக மக்களின் வரவு, வாழ்வு, புலம்பெயர்வு, இருப்பின் ஆர்வம், புலம்பெயர்வின் நிர்ப்பந்தம், பிரயோக அரசியலின் பலம் பலவீனம், கலை பண்பாட்டு அம்சங்கள், கல்வி நிலைகள், பொருளாதார நகர்வுகள் போன்றவை பற்றிய அவதானங்களும் கவனத்தை பெறுகின்றன. மலையக மக்களின் இருப்பை தக்க வைப்பதிலும் அவர்களின் அடையாளத்தை பிரதிபலிப்பதிலும் கலைகள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. அக் கலைகளுள் முத்தாய்ப்பாகவும், மலையகத்தின் முக்கூத்துக்களில் மூலமாகவும் அமையும் காமன்கூத்து மலையக மக்களை ஒருங்கிணைப்பதில் முக்கிய வகிபங்கை பெறுகிறது எனலாம்.
வ.ந.கிரிதரனின் பாடல் : "ஆழ நடுக்காட்டில் என்னை இருத்தி
- எழுத்தாளர் மாத்தளை வடிவேலன் அவர்கள் மறைந்தார் என்னும் தகவலை அறிந்தோம், துயர் அடைந்தோம், அவரது மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவர்தம் துயரிலும் பதிவுகளும் பங்கு கொள்கின்றது. அவர் நினைவாக , கலைம், இலக்கியத்திறனாய்வாளர் மு.நித்தியானந்தன் மாத்தளை வடிவேலனின் சிறுகதைத்தொகுப்பு பற்றி எழுதிப் பதிவுகளில் வெளியான கட்டுரையை மீள் பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள்.காம் -
நீர் வார்த்த அய்யனார்! - சுருளி காந்திதுரை (மதுரை) -
திரு முருகபூபதி அவர்கள் சமூகத்திற்கு செய்த பங்களிப்புகளை மூன்று முக்கியப் பிரிவுகளாகக் கூறலாம். எழுத்தாளர், சமூகப் பணியாளர், மற்றும் சமூகப் பதிவாளர். மெல்போர்ன் தமிழ்ச் சமூகத்தில் இம்மூன்று துறைகளிலும் ஒரே நேரத்தில் பணியாற்றியவர்களை காண்பது மிகவும் அரிது. முதலில் நான் பேச விரும்புவது எழுத்தாளர் என்ற அவருடைய பங்களிப்பைப் பற்றியே.
ஊழின்வலி பெறுஒரே உயிரினம் யான் மட்டுமே
முகத்தில்
தாகூரின் செல்வாக்கில் இருந்து, கழன்ற சி.வி.வேலுப்பிள்ளையின், நெடுங்கவிதையின் மூன்றாம் பகுதி இங்கே காணக்கிட்டுகின்றது. தமது காலத்தைய, அழுத்தமான மக்கள் குரலை வேலுப்பிள்ளை ஒலித்ததை போன்று, அவருக்கு பின்னால் வந்த எந்த ஒரு கவிஞனும் மலையக சமூகம் பொறுத்து ஒலித்தது கிடையாது எனலாம். ஆழ்ந்த சமூக பற்றுடன் இவரது குரல் ஒலித்தமைக்கான விலையை இவர் தம் வாழ்வின் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் கொடுத்திருக்க கூடும். இவரது அக்காலத்தைய எழுத்துக்கள், அக்காலத்தைய மலையக அரசியல் சார்ந்த சிந்தனைக்கு மாத்திரமல்ல, பொதுவில் உழைக்கும் மக்களின் சிந்தனைக்குள்ளும் வலை விரிக்க கூடியதே. இனி மீண்டும் கவிதைக்குள் செல்லலாம்:



“ராகவியை நினைச்சா … அவளின்ர சிரிப்புத்தான் முதலில கண்ணுக்குத் தெரியும்,” ராகவியின் பாடசாலைச் சினேகிதி மாயா அவளின் அந்தியேட்டி நிகழ்வில் கண்ணீர்மல்க உரையாற்றிக் கொண்டிருந்தாள்.
பகுதி 2

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









