நாவில்லா உபதேசிகள்: காலனிய யாழ்ப்பாணத்தில் சிறுபுத்தகக் கலாசாரமும் சமயக் கருத்தாடலும்! (பகுதி ஒன்று) - கலாநிதி செல்லத்துரை சுதர்சன் -

- யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தரும் தமிழ்ப் பேராசிரியருமான சு. வித்தியானந்தன் அவர்களின் நினைவாக 17.11.2022 அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கைலாசபதி கலையரங்கில் நிகழ்த்திய நினைவுப் பேருரையின் எழுத்துவடிவமே இக்கட்டுரை. இக்கட்டுரையாசிரியர் முனைவர் செல்லத்துரை சுதர்சன் - சிரேஷ்ட விரிவுரையாளர், தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம். -
அறிமுகம்
பருத்தித்துறைச் சந்தையில் இருந்த புளியமரம் ஒன்றின் கதை சுவாரசியமானது. வரலாற்று நூல்களில் பதிவான அந்தப் புளியமரத்தின் கதையைக் கூறுவதோடு, இந்தக் கட்டுரையை ஆரம்பிப்பது பொருத்தம் என எண்ணுகிறேன். 1548 இல் சவேரியார் என்னும் பெயருடைய கத்தோலிக்க மதகுரு யாழ்ப்பாணம் வந்து, சங்கிலி அரசனைச் சந்தித்த பின்னர், பருத்தித்துறை வழியாகத் திரும்பிச் சென்றபொழுது, இந்தப் புளியமர நிழலில் நின்று சமயப் பிரசங்கம் செய்தார் என்ற செவிவழிக் கதையோடு இதன் புகழ் பரவ ஆரம்பிக்கிறது. ஒல்லாந்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த பால்டியஸ் (Baldaeus) என்ற புரட்டஸ்தாந்து மதகுரு, 1658 இல் நான்கு புறமும் சடைவிரித்துப் பரந்த, கடலோரக் காற்று இதமாகத் தழுவிய, இந்தப் புளியமர நிழலில் நின்று வேதாகம சுவிஷேசத்தைப் பிரசங்கம் செய்து மக்களைச் சுவீகரித்தார். இந்த வரலாற்றுச் செய்தி புளியமரத்தின் புகழை மேலும் ஓங்கச் செய்தது. எவ்வாறெனில், இது பால்டியஸ் செய்த முதல் பிரசங்கம் மட்டுமன்றி, யாழ்ப்பாணத்தில் புரட்டஸ்தாந்து சமயத்தின் முதல் பிரங்கமாகவும், இந்தப் புளியமர நிழலில் நிகழ்த்திய முதலாவது பிரசங்கமாகவும் வரலாற்று எழுத்துகளில் பதிவுபெற்றுள்ளது. இதன் பின்னர், தென்னிந்தியாவின் தரங்கம் பாடி மிஷனைச் சேர்ந்தவரும் புகழ்பெற்ற மிஷனரியுமாகிய பிரடெரிக் வார்ச் என்பார், 1760 இல் இந்தப் புளியமர நிழலில் நின்று, கிறிஸ்தவப் பிரசாரம் செய்து சென்றார் என்பதும் எழுத்துமூல வரலாறு. (வேலுப்பிள்ளை, சி.டி. 1984:25-26). முன்னர் குறிப்பிட்ட பால்டியஸ் என்பார், தெல்லிப்பளையிலிருந்து பலகாலம் கிறிஸ்தவத்தைப் பரப்பியும், ‘கொறமண்டலும் இலங்கையும்’ எனும் வரலாற்று நூலை எழுதியுமிருந்த காலத்தில்தான், புளியமர நிழலிலே, கடலோரக் காற்றில் கலந்த அவரது பிரசங்கம், அவ்வாறு கலவாதிருக்க, அச்செழுத்துக்களை வேண்டியிருந்தது! முதன் முதலில் தமிழ் அட்சரங்களை ஐரோப்பாவில் அச்சிடுவதற்குக் காரண கர்த்தாவான பால்டியஸ் என்பவரால், அவர் முதலில் நின்று பிரசங்கித்த புளியமரம், ‘பால்டியஸ் புளியமரம்’ (வேலுப்பிள்ளை, சி.டி. 1984:25-26) என்ற பெருமையையும் சூடிக்கொண்டது.


கனடாவிலே ரொறன்ரோவை மையப்படுத்திய வாழ்க்கைச் சூழலிலே எனக்கும் எனது துணைவியார் கௌசல்யாவுக்கும் கிடைத்த கெழுதகை நண்பர்கள் சிலரில் மிக முக்கியமான ஒருவர் பேராசிரியர் சுப்பராயன் பசுபதி அவர்கள். அறிவியல் துறைசார் கல்வியாளரான அவர் தமிழ் மொழி, இலக்கியம், கலைகள் முதலான பண்பாட்டுத் துறைகளிலும் ஆழ்ந்த புலமை கொண்டவராவார். அவ்வாறான பண்பாட்டுத் துறைகள்சார் புலமை அம்சங்களை ஆய்வரங்குகள் ஊடாகவும் வலைப்பூக்கள் வழியாகவும் சமகால அறிவுலகுக்கு அவர் வாரிவழங்கி வருகிறார்.
வரலாற்றில் நிஜப் பாத்திரங்கள் :



“வாழ்க்கை சவால்களால் நிறைந்துள்ளது. வாழ்க்கை கற்றுத்தரும் பாடங்கள், சில நேரங்களில் வலி நிரம்பியவையாக உள்ளன. சிலநேரம் அப்பாடங்கள் நாம் வளர வாய்ப்பளிக்கின்றன. அவை சவால்கள் போலத் தோன்றினாலும்கூட, அவை சாதனையாக மாற வல்லவை என்பதை மறுப்பதற்கில்லை. வாய்ப்புகள் எப்போதும் வருவதில்லை. என்னால் செய்யமுடியும் என்று முன்வராமல், யாராவது நம்மைத் தேர்ந்தெடுத்து வாய்ப்பைத் தட்டில் வைத்து தருவார்கள் என எதிர்பார்ப்பதும் வாய்ப்புகள் வரும்போது, நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று சொல்வதும் முட்டாள்தனம்“ மேற்சொன்ன வரிகளுடன் தொடங்குகிறது, முனைவர் சந்திரிக்கா சுப்பிரமணியன் எழுதியிருக்கும் பெண் நூறு என்ற நூல். ஒரு பெண்ணாக, பெண்களுக்கென்றே சந்திரிக்கா இதனை எழுதியிருப்பதாகத் தெரியவில்லை. இக்கருத்து ஆண்களுக்கும் பொருந்தும்.
அத்தியாயம் இருபத்தியிரண்டு: ஐன்ஸ்டைனும் நானும் (ஒரு பிதற்றல்)!
அளவில்லாத ‘எம்மெ’ அவரையின் இளங்கொழுந்துகளை உண்டிருந்த அந்த எருமைக்கு நிற்காமல் கழிந்துகொண்டிருந்தது. அது எவ்வளவோ அடக்க முயன்றது போலும். பயனில்லை. அதன் கட்டுப்பாட்டையும்மீறி விரிந்த குதம் இடைவிடாது கக்கிக்கொண்டிருந்தது.



"மாத்தளை எங்கள் மலையகத்தின் தலைவாயில் தமிழகக் கரையிலிருந்து பயங்கரப்படகுகள் மூலம் கடலைக்கடந்து, கொடிய கானகங்களுக்கிடையே கால்நடையாய் உயிர்தப்பி வந்ததற்காக நன்றி கூறும் முதல் தெய்வம் எங்கள் மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன். மலையக மக்களின் வரலாறு மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வரலாற்றுடன் ஆரம்பமாகிறது” என்கிறார் மலையகத்தின் கல்விமான் அமரர் இர.சிவலிங்கம். 

சூரியகுமாருக்கு நாளை காலை பத்திற்கும் பன்னிரண்டுக்கும் இடைப்பட்ட சுப வேளையில் திருமண எழுத்து நடைபெற இருந்தது.
வெளியே பனி கொட்டிக் கொண்டிருந்தது. பனிப்புகாரில் பாதை தெளிவாகத் தெரியவில்லை. பனிமூட்டத்தில் போகிறபாதை தெளிவாகத் தெரியாவிட்டாலும் செல்லவேண்டிய இடத்தை அடைவதில் சுகி குறியாக இருந்தாள்.


அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு வணக்கம். தங்கள் பதிவுகளில் எஸ்.ரி. ஆர். பற்றியும் ஜோர்ஜ் குருஷ்ஷேவ் பற்றியும் நீங்கள் எழுதியிருந்த குறிப்புகளை படித்தேன். அருமை. ஜோர்ஜ் குருஷ்ஷேவை 2007 இல் கனடா வந்த சமயம் ஒரு சந்திப்பில் கண்டு பேசியிருக்கின்றேன். அவரது முகத்தில் தவழும் மந்திரப் புன்னகையையும் நீங்கள் குறிப்பிட்டிருந்தது சிறப்பு. அவருக்கு பெப்ரவரி 27 பிறந்த தினம் என தங்கள் மூலம் அறிந்து வாழ்த்துகின்றேன்.
முன்னுரை