'தாய் மொழிக் மொழிக் கல்வியும் இளம் தலைமுறையினரின் மன வளர்ச்சியும்'! - இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -
- லண்டன் வொல்த்தம்ஸ்ரோவ் தமிழ்பபாடசாலைப் பெற்றோருக்கு,13.3.21ல் கொடுத்த சொற்பொழிவின் விளக்கவுரை -
எங்கள் தெய்வத் தமிழ் மொழிக்; கல்வியை லண்டன் மாநகரில்,எங்கள் இளம்தமிழ்ச் சிறார்களுக்கு முன்னெடுக்கும் உங்களுக்கு எனது அன்பான வணக்கம். எங்கள் தமிழ் மொழி மிகவும் நீண்டகால வரலாற்றைக் கொண்ட முதுமொழி.இன்று உலகில் பேசப்படும் கிட்டத்தட்ட 7000 மொழிகளில் முதல் வழிவந்த மூத்த மொழி.மனித இனத்தின் மேன்மைக்குப் பற்பல நூல்களை உலகுக்குத் தந்த மொழி.'எம்மதமுமு; சம்மதமே' என்ற உயரிய தத்துவத்தைக் கொண்டது'.'யாதும் உரோ யாரும் கேளீர்' என்ற அற்புதமான நான்கு வரிகளில் உலகில் நான்கு திசைகளிலுமுள்ளவர்களையும் ஒன்றாய் அணைக்கும் மொழி எங்கள் மொழி.
'அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்'; என்றுரைத்து ஒரு குழந்தைக்குத் தன் தாய் தந்தையரின் சொற்களை மனதில் உறுத்தி எதிர்கால வாழ்க்கைக்கு வழிகாட்டுவது எங்கள் தமிழ். 'ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்று இறையுணர்வை மனதில் பதிப்பது எங்கள் பக்தித் தமிழ். 'தாயைச் சிறந்த ஒரு கோயிலுமில்லை,தந்தை சொல் மிக்க மந்திரமில்லை' என்று தாரக மந்திரத்தைக் குழந்தையின் மனதில் பதிக்கும் தெய்வீக் மொழி; எங்கள் அருமைத் தாய்மொழயான தமிழ் மொழி. ஓரு மனிதனின் வாழக்கையில் 'எண்ணும் எழுத்தும் இரு கண்ணாகும்'; என்றும்இளமையிற் கல்வி சிலையில் எழுத்து' என்றுரைத்துக் கல்வியின் மகத்துவத்தை இளம்மனதில் வித்திட்டவர்கள் எங்கள் தமிழ்; மூதாதையர்கள். 'பெற்றதாயும் பிறந்தபொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தனவே' என்றுரைத்து ஒரு குழந்தையின்,தன்னைப் பெற்ற தாயையும் தன்னைத் தாங்கிய பிறந்த நாட்டைப் போற்றவும் மனதில் கடமையுணர்சி;சியைப் பதிப்பது எங்கள் தனித்தமிழ். 'அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்கேயுலகு' என்று எங்கள் வாழ்க்கையை எங்கள் மொழியுடன் இணைக்கும் மனத்திடத்தைத் தந்தது எங்கள் தெய்வத் தமிழ்.

- தற்போது முகநூலில், பதிவுகளில் இடம் பெறும் எழுத்தாளர் மு.தளையசிங்கம் பற்றிய விவாதங்களில் இடம் பெறும் கருத்துகளையிட்டு , எழுத்தாளர் நந்தினி சேவியர் தனது கருத்துகளை அனுப்பி வைத்துள்ளார். அவற்றையும் இங்கு பகிர்கின்றோம். - பதிவுகள் -

மு. தளையசிங்கத்தின் 'ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி' கட்டுரைத்தொடர் கண்டியிலிருந்து வெளியான 'செய்தி' பத்திரிகையில், 1964/65 காலப்பகுதியில் வெளியான தொடராகும். மு.த. அவர்கள் இத்தொடருக்கு, 'ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி: அவசரக் குறிப்புகள்' என்றுதான் தலைப்பிட்டிருந்தார். இத்தொடர் வெளிவந்துகொண்டிருந்தபோதே, 'என்ன அவசரம்?' என்ற தலைப்பில், ப.வயிரவன் 2, 3 இதழ்களில் இக்கட்டுரைத்தொடரை விமர்சித்து எழுதியிருந்தார். கே.எஸ்.சிவகுமாரன், 'ஒரு விமர்சகரின் இலக்கியப் பார்வை' என்ற தனது நூலில், மெய்யியலாளர் காசிநாதன் அவர்களே வயிரவன் என்ற பெயரில் விமர்சனங்கள் எழுதிவந்தார் என்று குறிப்பிடுகிறார்.
இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் மு.தளையசிங்கத்துக்கு முக்கிய பங்குண்டு. எழுத்தாளராக, சமூக, அரசியற் செயற்பாட்டாளராகச் செயற்பட்டவர்களில் அவருமொருவர். டானியல், அ.ந.கந்தசாமி, மு.தளையசிங்கம் போன்றவர்கள் எழுத்தாளர்களாக இருந்த அதே சமயம் தாம் நம்பிய அரசியல் கோட்பாடுகளுக்காக மக்கள் மத்தியில் இறங்கிச் செயற்பட்டவர்களும் கூட. 
- வ.ந.கிரிதரனின் 'எழுத்தாளர் மு.தளையசிங்கம் பற்றிய கருத்தரங்கும், மல்லிகை ஆசிரியர் மீதான குற்றச்சாட்டும் பற்றி.' என்னும் கட்டுரைக்கு முகநூலில் கிடைத்த எதிர்வினைகள்! எதிர்வினைகளில் சிலவற்றில் பதிவுகள் இணைய இதழ் ஏற்கமுடியாத சொற்பதங்களுள்ளன. அவை தவிர்க்கப்பட்டுள்ளன. - பதிவுகள் -
அகிலன் வேலைக்கு அவசரமாகப் புறப்பட்டுக் கொண்டிருந்தான். அவன் மெல்பேர்ண் நகரத்திலுள்ள வைத்தியசாலையில் வைத்தியராகப் பணி புரிகின்றான். வழக்கமாக காலை ஆறுமணிக்கெல்லாம் கிழம்பிவிடுவான்.
- பதிவுகள் இணைய இதழில் வெளியான 'எழுத்தாளர் மு.தளையசிங்கம் பற்றிய கருத்தரங்கும், மல்லிகை ஆசிரியர் மீதான குற்றச்சாட்டும் பற்றி.. - வ.ந.கிரிதரன் -' என்னும் கட்டுரைக்கான எழுத்தாளர் முருகபூபதியின் எதிர்வினை - பதிவுகள் -

தமிழ் மொழிச் செயற்பாட்டகம் இன்று இலண்டனில் நடாத்திய எழுத்தாளர் மு,தளையசிங்கம் பற்றிய Zoom வழி இணையவெளிக் கருத்தரங்கில் நான் கலந்துகொள்ளவில்லை, ஆனால் இக்கருத்தரங்கில் இளம் எழுத்தாளர் அனோஜன் பாலகிருஷ்ணன் கூறிய கருத்தொன்றினைப் பற்றி, எழுத்தாளர் ஷோபா சக்தி முகநூற் பதிவொன்றினை இட்டிருந்ததை வாசிக்கும் சந்தர்ப்பமேற்பட்டது. அப்பதிவில் ஷோபாசக்தி பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:
கண்டி-கொழும்பு பெருவீதியில் பயணித்திருக்கக் கூடியவர்களுக்கு, கேகாலை தென்பட்டிருக்க முடியுமாயினும், நகரத்திலிருந்து உள்ளே சுமார் பதினைந்து கிமீ தொலைவிலிருந்த அரநாயக்க கிராமம் அந்தச் சாத்தியமும் அற்றிருந்தது. அதுவே ஒரு சிற்றரசாயிருந்த சரித்திரத்தைக் கொண்டிருந்தது. மண்படையும், அதன் மேல் கல் படையும், அதற்கு மேலே இன்னொரு மண்படையுமாய் அந்த மேட்டுப் பூமியின் நிலவியல் அமைந்திருந்ததில், சமாந்தரத்தில் அமைந்திருக்காத வீடுகளைக் கொண்டிருந்தது அது. அது ஒரு கூம்பு வடிவ அடுக்கு வீட்டுத் திட்ட குடியிருப்புப்போல தூரத்திய பார்வைக்குத் தென்பட்டது. நடுப்பகுதியிலிருந்த ஒரு வீட்டிலிருந்து பார்த்தால் பின்னாலிருந்த வீடுகள் மேலேயாய்த் தெரிய, முன்புறத்திலுள்ள வீடுகள் பள்ளத்தில் கிடப்பனவாய்த் தோன்றின. அவற்றின் கூரைகளும், முற்றத்தில் நடமாடும் மனிதர்களின் உருவங்களும்கூட துல்லியமாக காட்சிப்பட்டன. மேலேயுள்ள வீடுகளுக்குச் செல்ல அதற்கென அமைந்த வட்டப் பாதையிருந்தது. அப்பாதையில் அரை மணி நேரத்தில் செல்லும் ஒரு தூரத்தை, குறுக்கு வழியில் பத்தே நிமிஷங்களில் அடைந்துவிட முடியும். மழை பெய்யாத காலங்களில்தான் அது சாத்தியமாயிருந்தது. எங்கேயிருந்து வருகிறதெனத் தெரியாதபடி மழைகாலம் சகல இடங்களிலும் சிற்றாறுகளைத் தோற்றுவித்து, சேற்றுக் குட்டைகளை உண்டாக்கி குறுக்குப் பாதைகளை அழித்துவிடும். அப்போது அவை செந்நிற ஓடைகளாய் ஓடிக்கொண்டிருக்கும். அரநாயக்கவிலிருந்து அசுபினி நீர்வீழ்ச்சியைக் காணமுடியும். அது அரநாயக்க விரித்த காட்சிப் புலத்தின் இன்னொரு அழகு.

- - சர்வதேச மகளிர் தினத்தையொட்டி (மார்ச் 8) திண்டுக்கல் காந்திக்ராம் பெண்கள் இன்ஸ்டியூட் மாணவிகளுக்கு 8.3.2021ல் ஆற்றிய சொற்பொழிவின் சாரலிலான விளக்கமான கட்டுரை. -

ஆய்வுச்சுருக்கம்
இலங்கை வடபுலத்தில் உரும்பராயில் 1928 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09 ஆம் திகதி பிறந்திருக்கும் கணேசலிங்கன் அவர்கள் தமது 93 ஆவது அகவையை இன்று நகர்ந்துள்ளார். உரும்பராய் கிராமத்தில் செல்லையா – இராசம்மா தம்பதியருக்கு இரண்டாவது புதல்வனாகப்பிறந்த கணேசலிங்கன், தனது ஆரம்பக்கல்வியை உரும்பராயில் ஒரு கிறீஸ்தவ பாடசாலையிலும் அதனையடுத்து சந்திரோதய வித்தியாசாலையில் ஆறாம் தரம் வரையிலும் கற்றபின்னர், யாழ். பரமேஸ்வரா கல்லூரியில் மேற்கல்வியை தொடர்ந்தார். கணேசலிங்கன் அன்று கற்ற பரமேஸ்வராக்கல்லூரிதான் பின்னாளில் 1974 இல் யாழ். பல்கலைக்கழக வளாகமாக உருமாறியது. இந்தப்பல்கலைக்கழகத்தில் 1976 ஆம் ஆண்டு நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கு நடந்தபோது, கணேசலிங்கனின் நாவல்களும் திறனாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
சில வாரங்களுக்கு முன்பு வி.சபேசனின் ‘துணை’ குறும்படம் குறித்து ஒரு சிறு குறிப்பொன்றினை இத்தளத்தில் பதிவிட்டிருந்தேன். அதன்போது சுமார் 20 வருடங்களுக்கு முன் வெளிவந்திருந்த அருந்ததியின் ‘முகம்’ குறித்தும் ஜீவனின் ‘எச்சில் போர்வைகள்’ குறித்தும் சில குறிப்புக்களைத் தொட்டுச் செல்ல வேண்டியதாயிற்று. அப்போதுதான் எனக்கு இந்த நூல் ஞாபகம் வந்தது. இயக்குனர் அருந்ததியும், யமுனா ராஜேந்திரனும் தொகுத்தளித்த ‘புகலிடத் தமிழ் சினிமா’ என்ற இந்த நூலானது இன்றைய சூழ்நிலையிலும் ஒரு முக்கியமான நூலாக எனக்குப்பட்டது. முக்கியமாக அன்று இந்நூலில் கட்டுரையாளர்கள் வெளிப்படுத்திய புகலிட தமிழ் சினிமாவானது எதிர்நோக்கிய அதே சிக்கல்களையும் சவால்களையும் இன்றைய சமகாலத்திலும் எதிர்நோக்குவதினால் இந்நூல் குறித்து சில கருத்துக்களை பகிர்வதும் அவசியம் என நினைக்கிறேன்.
இன்று செம்மொழியான தமிழ் தொடர்ந்து வாழ்கின்றதென்றால் காரணம் என்ன? நான் குறிப்பிடும் தமிழ் காப்பியங்களில், இலக்கியத்திலுள்ள தமிழ். பிறமொழிச்சொற்களை உள்வாங்கி ,வளமுடன் திகழும் தமிழ். இந்தத்தமிழ் இன்றும் நிலைத்து நிற்கின்றதென்றால் காரணம்..



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









