அமெரிக்கப் பயணத்தொடர்: மேற்கு அமரிக்கா (2) - நடேசன் -

அமரிக்காவின் மேற்கு மாநிலங்களில் எங்கள் பஸ் பயணத்தின் அடுத்த பகுதி கிராண்ட் கனியன் எனப்படும் பிரசித்தி பெற்ற புவியில் ஏற்பட்ட நீண்ட பிளவாகும். கிட்டத்தட்ட ஒரு மைல் ஆழத்திலும், பல மைல் அகலத்திலும் செங்குத்தாக அமைந்த பாறைகளின் பள்ளத்தாக்காக இது உள்ளது. இந்தப் பாறைகளின் வடிவமைப்பு பல மில்லியன் ஆண்டுகளாக கொலராடோ நதி என்ற சிற்பியால் செதுக்கப்பட்டது என்பதை அறியும்போது, மனிதர்களின் கலையின் ஆரம்ப ஊற்று இயற்கையே அதிலும் நீரும் காற்றும் ஆரம்ப காட்சியின் பிரதான இயக்குநர்கள் என நினைத்தேன்.
கிராண்ட் கனியன் அமைந்துள்ள பகுதி மிகவும் வரண்ட பிரதேசம். அதிக மரங்களற்று வெளியாக பாறைகள் அமைந்த பிரதேசமாக கண்ணுக்கெட்டியவரையில் தெரிந்தது. கிராண்ட் கனியன் மேல் ஹெலிகாப்டரில் பறந்தபடி பார்க்கும் ஒரு பயணம் இருந்தது. சியாமளா பயந்தபோது ஒரு மாதிரி தைரியம் கொடுத்து ஹெலிகாப்டரில் ஏற்றி சென்றேன். நல்ல வேளையாக பைலட்டேடு ஆறு பேர் அமரும் அந்த ஹெலிகாப்டரில் எங்களை முன் இருக்கையில் உட்கார வைத்தனர். முழுப் பகுதிகளையும் இலகுவாக பார்க்க படம் எடுக்க முடிந்தது. நாங்கள் கேட்காமலே அந்த வசதி கிடைத்தது.மேற்கு நாடுகளில் குறிப்பாக வயதிற்கு கிடைக்கும் மரியாதையை எம்மால் உணர முடிந்தது.
கிராண்ட் கனியன் பல மாநிலங்களில் விரிந்து பரவி இருந்தாலும் பெரும் பகுதி அமைந்திருப்பது அரிசோனா மாநிலத்தில் தான். மிகச் சிறிய பகுதிகள் யூட்டா மற்றும் நெவாடா மாநிலங்களில் உள்ளன. இந்த கிராண்ட் கனியன் 447 கிலோமீட்டர் நீளமானது. கிராண்ட் கனியன் அமைந்துள்ள பகுதியை வடக்கு–தெற்கு என பிரிக்கிறார்கள். கிராண்ட் கனியன் வடக்குப் பகுதி சமீபத்தில் காட்டுத்தீயால் அழிந்ததால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. நாம் சென்றது தென் பகுதி. கிராண்ட் கனியன் யுனெஸ்கோவால் பாதுகாக்கப் படவேண்டிய பரதேசமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இயற்கையின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த கிராண்ட் கனியன் அமைப்பை பல காலம் கேள்விப்பட்டிருந்த போதிலும், மேலிருந்து பார்ப்பது ஒரு வரப்பிரசாதம் என நினைத்தேன். இது அமரிக்காவின் முக்கிய தேசியப் பூங்காவாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.



“ராகவியை நினைச்சா … அவளின்ர சிரிப்புத்தான் முதலில கண்ணுக்குத் தெரியும்,” ராகவியின் பாடசாலைச் சினேகிதி மாயா அவளின் அந்தியேட்டி நிகழ்வில் கண்ணீர்மல்க உரையாற்றிக் கொண்டிருந்தாள்.
மனித சமூகம் வளர்ச்சியின் பல அடுக்குகளை கடந்து வந்துள்ளது. அறிவியல் வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம், உலகமயமாக்கல் போன்ற பல மாற்றங்கள் நிகழ்ந்தாலும், மனித மனப்பாங்கில் பதிந்துள்ள சில பழமையான கட்டமைப்புகள் இன்னும் முற்றிலும் கலைந்து போகவில்லை. அவற்றுள் முக்கியமானது ஆணாதிக்கம். ஆணுக்கு மேலாதிக்கமும் பெண்ணுக்கு கீழாதிக்கமும் வழங்கும் இந்த சமூக அமைப்பு, காலத்தின் ஓட்டத்தில் பல வடிவங்களில் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதை ஒழிக்க ஒரே ஒரு தீர்வு போதாது; பல்வேறு தளங்களில் ஒருங்கிணைந்த முயற்சி அவசியம். பெண்களுக்கு சமமான
பகுதி 2
வேலுப்பிள்ளையின் எழுத்துக்கள் மூன்று கட்டங்களாக பிரிபடலாம்.
இள வயதில் வாசிப்பை நெறிப்படுத்த மூத்தவர்கள் ஓரிருவருடைய உதவி எனக்கு இருந்திருந்தாலும், பின்னால் இலக்கியரீதியான வழிகாட்டலுக்கு யாரும் இருந்திருக்கவில்லை என்பது துர்பாக்கியமாகும். அந்த வெளியைக் கடந்தேனென்றாலும், அது சுலபத்தில் கைகூடியிருக்கவில்லை. பிழைவிட்டு திருந்தி, பிழைவிட்டு திருந்தி… ஒவ்வொரு அடியையும் எடுத்துவைக்கவேண்டி இருந்தது. காலமே, ஒரு சக்தியாகயிருந்து அந்த வெறுமையை நிவர்த்தித்தது என்றுதான் இப்போது நினைக்கத் தோன்றுகிறது.
சர்வதேச மகளிர் தினத்திற்காய்த் துணிவுடன் போராடி, அளப்பரிய தியாகங்களை மேற்கொண்ட அனைத்துப் பெண்களையும் முதற்கண் இவ்வேளை நினைவுகூர்ந்து தலைசாய்த்து வணங்குகின்றேன்.

[எழுத்தாளர் மா.சித்திவினாயகம் 'ரொறன்ரோ தமிழ்ச் சங்க'த்தில் 'கனடாவில் நவீனத் தமிழ்க் கவிதை' பற்றி ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்]
கனேடியப் பனி நிலத்தின்இந்தப் பெருங் குளிரிலும், நம் தமிழ்க் கவிதைப் பூந்தோட்டம் சீரோடு செழிக்கிறது. அது கொடிவிட்டுத் தழைத்துச் செழிக்கின்ற புனிதத்தைப் போற்றுகிற, இந்த தமிழ்க்கவிதை உரையாடலுக்கு வருகை தந்திருக்கும் அறிஞர்களே, கவிஞர்களே அன்பு உறவுகளே உங்கள் கரங்களை தமிழன்போடு இறுகப் பற்றுகின்றேன்.
கட்டுரையாளர் - முனைவர் கு.வளர்மதி, உதவிப்பேராசிரியர், இளங்கலைத் தமிழ்த்துறை, தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி. -
எளிமையின் உருவமாக
இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் முன்னாள் தலைவரும், கட்சியின் முன்னாள் செயலாளருமான இரா. நல்லகண்ணு அவர்கள் பெப்ருவரி 25, 2026 அன்று, தனது நூறாவது வயதில் மறைந்தார். தனது பதினெட்டாவது வயதிலிரிந்து கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக்கொண்டவர். இந்தியாவில் ஆங்கிலேயருக்கெதிராகப் போராடிய சுதந்திர வீரர். கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டபோது நெல்லை சதி வழக்கில் இவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுச் சிறை வாசம் அனுபவித்தவர். பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடை நீங்கியபோது விடுதலை செய்யப்பட்டார். விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவராகவும் பணியாற்றியவர்.
முன்னுரை
'காந்தளகம்' மறவன்புலவு க.சச்சிதானந்தன் அவர்களை இ துவரை பதிப்பாளராக, ஐக்கிய நாடுகள் அபிவிருத்திச் சபையில் பணி புரிந்தவராக, எழுத்தாளராக, சூழலியலில் ஆர்வமுள்ளவராக , அண்மைக்காலமாக ஹிந்துத்துவா நோக்கில் செயற்படுவராக அறிந்திருக்கின்றேன். அண்மையில் இலங்கையில் ஒடுக்கப்பட்ட தமிழ்ச் சமூகத்துக்காகக் குரல் கொடுத்துவரும் அருண் சித்தார்த் தனது முகநூற் பக்கத்தில் பகிர்ந்திருந்த காணொளியொன்றில் தென்பட்ட மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்களின் நேர்காணலொன்று என் கவனத்தை ஈர்த்தது.


கட்டுரையாசிரியர் - முனைவர் ரா.பிரேம்குமார், உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), திருவானைகோவில், திருச்சிராப்பள்ளி-05 -
வ.ந.கிரிதரனின் பாடல் - இருப்பைப் புரிந்து கொள்ளல்!
ஒரு முன்னுரை
"வாசிப்பு என்பது ஒரு திறப்பு; கவிதை என்பது அந்தத் திறப்பின் வழி நுழையும் ஒளி."
கட்டுரையாளர் - முனைவர். அ. ஸ்ரீதேவி , துறைத்தலைவர் தமிழ்த்துறை, நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்.105 -

வெலன்ரைன் தினம் என்பது உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் பலராலும் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி கொண்டாடப்படும் ஒரு கொண்டாட்ட நாளாகும். பொதுவாக அன்பைப் பரிமாறும் தினமாக இதை எடுத்துக் கொள்வதால், ‘அன்பைப் பரிமாறும் நாள்’ என்றும் குறிப்பிடுவர். இத்தினத்தில் வேறுபாடு காட்டாமல் யாரும் யாரிடமும் தங்கள் அன்பைப் பரிமாறிக் கொள்வதால், மனதால் பண்பட்ட யாரும் அதைத் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். 


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









