பதிவுகள் முகப்பு

முகநூற் குறிப்புகள் : நானும் எழுத வந்தேன்.. - எஸ்.எல்.எம்.ஹனிபா -

விவரங்கள்
- எஸ்.எல்.எம்.ஹனிபா -
முகநூல் குறிப்புகள்
20 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- முகநூற் பக்கங்களில் வெளியாகும் பயனுள்ள குறிப்புகள் அவற்றின் பயன் கருதிப் பதிவுகளின் இப்பக்கத்தில் வெளியாகும். -  பதிவுகள்.காம் -


எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனிபாவின் முகநூற் குறிப்பொன்று! - வ.ந.கிரிதரன் -

எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனிபாவின் முகநூற் பதிவொன்று என் மனத்தைக்  கவர்ந்தது. 'நானும் எழுத வந்தேன்' என்பது தலைப்பு.  எழுத்தாளர் திக்குவல்லை கமால் வில்லிதேவசிகாமணி விருது  பற்றி ஹனிபாவுக்குக் குறிப்பிட்டு அவரது 'மக்கத்துச் சால்வை' நூலை அவ்விருதுக்காக அனுப்பும்படி கூறுகின்றார்.

விண்ணப்பிப்பதற்குரிய காலம் குறுகியதாகவிருந்தது. ஹனிபா அவர்கள் 'மக்கத்துச் சால்வை'யின் ஐந்து பிரதிகளை எடுத்துக்கொண்டு தபால் நிலையம் செல்கின்றார். அனுப்பச் செலவு ரூபா 350 என்கின்றார்கள்.  அது அன்றுள்ள வாழ்க்கைச் செலவில் அதிகமான தொகை.  அவரிடமிருந்ததோ ரூபா 200. விருதும் வேண்டாம். எதுவும் வேண்டாம் என்னும் மனநிலையில் ஹனிபா அவர்கள் திரும்ப முற்படுகையில் 'போஸ்ட் மாஸ்டர்'  கே.எல்.எம். புகாரி  அவர்கள் மீதிப்பணத்தைத் தாமே போட்டு புத்தகங்களை அனுப்பி வைக்கின்றார். அந்நூலுக்கு விருதும் கிடைக்கின்றது.

அவ்விருது அனுபவத்தையும் ஹனிபா அவர்கள் மேற்படி முகநூற் பதிவில் விபரிக்கின்றார். அவ்விருதில் பேசிய  நடுவர்களில் ஒருவரான எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் அவர்கள் உரையாற்றுகையில் குறிப்பிட்டதையும் ஹனிபா அவர்கள் பதிவு செய்திருக்கின்றார்:

"இலங்கையிலிருந்து வந்த மக்கத்துச் சால்வை சிறுகதைத் தொகுதியிலுள்ள கதைகள், அதன் தமிழ் எங்களுக்குப் புரியவில்லை என்று என்னுடைய சக நடுவர் நண்பர்கள் சொன்னார்கள், நான் சொன்னேன்: இலங்கை வாசகர்கள் சென்னைத் தமிழைப் படிக்கிறார்கள், கோவில்பட்டித்தமிழை,கோயம்புத்தூர் தமிழைப் படிக்கிறார்கள்… என்று பல பெயர்களைச் சொல்லி இந்தத் தமிழையெல்லாம் அவர்கள் உள்வாங்கி இரசிக்கிறார்கள். அப்படியென்றால் நீங்கள் ஏன் ஹனிபாவின் தமிழ் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்று சொல்கிறீர்கள். அந்தக் கதை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், உங்களுக்கு எழுத்தும்இலக்கியமும் புரியவில்லைஎன்றுதான் அர்த்தம் என்று'"

ராஜம் கிருஷ்ணன் அற்புதமான மனுஷி. எழுத்தாளர்.  இலங்கைத் தமிழ் எழுத்து பற்றி அன்று அவ்வப்போது இளக்காரமாகக்  கருத்துகள் தெரிவித்த தமிழக எழுத்தாளர்களுக்கு அவர் கொடுத்த அற்புதமான சாட்டையடியாக அமைந்திருக்கும் கூற்று அது.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் இந்துமதியுடனான இயக்குநர் சித்ரா லட்சுமணனின் உரையாடல்! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
19 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இயக்குநரும், தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணனின்  ' CHAI WITH CHITHRA -SOCIAL TALK' புகழ்பெற்ற யு டியூப் சானல். அதில் பல்வேறு கலை, இலக்கிய ஆளுமைகளுடன் சித்ரா லட்சுமணன் நடத்தும்  நேர்காணல்கள் இடம் பெறும். அண்மையில் அவ்விதமான உரையாடல்களில் என்னைக் கவர்ந்த உரையாடல் எழுத்தாளர் இந்துமதியுடன் அவர் நடாத்திய நேர்காணல்.

எழுத்தாளர் இந்துமதி எனக்கு அறிமுகமானது என் பால்ய பருவத்து வாசிப்பின்போது. ஆனந்த விகடனில் எழுத்தாலார் சிவசங்கரி அறிமுகமானது அவரது 'எதற்காக?" என்னும் சிறு நாவல் மூலம். ஓவியர் ஜெயராஜின் ஓவியங்களுடன் , இளந்  தம்பதியின் காதல் மிகுந்த உரையாடல்களுடன் நடைபோட்ட நாவலின் முடிவு எதிர்பாராதது. நாயகி குளியலறையில் குளிக்கும்போது மின்சாரம் தாக்கி இறந்து போகின்றார். இதெல்லாம் எதற்காக என்று நாவல் முடிந்திருக்கும். இவைதாம் என் நினைவில் அந்நாவல் பற்றி நிற்கும் நினைவுகள்.

மேலும் படிக்க ...

படித்தோம் சொல்கின்றோம்: அ. யேசுராசாவின் 'அங்குமிங்குமாய் ' நூல் கூறும் பலதரப்பட்ட இலக்கிய புதினங்கள் ! -- முருகபூபதி --

விவரங்கள்
-- முருகபூபதி --
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
19 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலக்கிய வடிவங்களுக்கு இலக்கணம் வகுப்பது கடினம். ஏனென்றால், எல்லாப் படைப்புகளும் படைப்பின் எல்லா அம்சங்களும் இந்த வரையறைக்குள் அடங்கிவிடும் என்பதில்லை. ஆற்றல் வாய்ந்த கலைஞர்கள் இத்தகைய வரைவிலக்கணங்களை மீறியபடியே, புதுவிதமான அம்சங்களைக் கொண்ட சிறந்த படைப்புகளை அவ்வப்போது உருவாக்கி வருகின்றனர். வரைவிலக்கணங்களெல்லாம் பொருந்தி இருந்துவிடுவதனால் மட்டும், ஓர் இலக்கியப்படைப்பு சிறந்ததாக இருக்குமென்றுமில்லை. இலக்கணங்களெல்லாம் பொருந்தியிருந்தும் அதில்   உயிர் இல்லையாயின் - வாசகரின் மனதைப்பிணிக்கும் கலைத்தன்மை இல்லையாயின் – அதிற் பயனேதுமில்லை. இதனூடாக, இலக்கிய வடிவங்களிற்குத் திட்டவட்டமான வரையறைகளைக் கொடுக்கமுடியாதென்பதையும்,  அவற்றின் முக்கிய அம்சங்கள் சிலவற்றை புரிந்துகொள்ளலாம் என்பதையுமே, நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். இங்கு நாம் எடுத்துக்கொண்டிருக்கும் சிறுகதை  என்ற இலக்கியத்துக்கும் இது பொருந்தும்.   

இவ்வாறு தனது அங்குமிங்குமாய்… நூலில் எழுத்தாளர் அ. யேசுராசா மறைந்துவிட்ட எழுத்தாளர் அ.செ. முருகானந்தனின் மனித மாடு சிறுகதைத் தொகுப்பினை முன்வைத்து எழுதியிருக்கும் விமர்சனக்குறிப்பின் தொடக்கத்தில் பதிவுசெய்துள்ளார்.

அண்மையில் கனடா ரொறன்றோ தமிழ்ச்சங்கம் இணையவழியில் நடத்திய கலந்துரையாடலில், அங்கே வதியும் இலக்கிய திறனாய்வாளர் பேராசிரியர் நா. சுப்பிரமணியன் அவர்கள்   அழகியல் நோக்கில் தமிழிலக்கியம் என்ற தலைப்பில் நீண்டதோர் உரையை நிகழ்த்தியபோது, யேசுராசாவின் அங்குமிங்குமாய் … நூல்தான் நினைவுக்கும் வந்தது. யேசுராசாவும்  இந்த நூலில் ஆங்காங்கே எம்மவர் படைப்புகள் குறித்து எழுதும்போது இந்த அழகியல் விடயத்தையும் தூவிச்சென்றுள்ளார். மொத்தம் 75 பதிவுகளைக்கொண்ட இந்த நூல், ஈழத்து இலக்கிய வளர்ச்சியின் போக்குகளையும் இனம் காண்பித்தவாறு, மொழிபெயர்ப்பு, ஓவியம், இசை, திரைப்படம், பயணங்கள், அவதானிப்புகள், நூல் விமர்சனங்கள் மற்றும் யேசுராசாவுக்கு மிகவும் பிடித்தமான கலை, இலக்கிய ஆளுமைகள் குறித்தெல்லாம் பேசுகின்றது. அத்துடன்  அரை நூற்றாண்டுக்கும் மேற்பட்ட கால கட்டத்தின்  ஈழத்து இலக்கிய வரலாற்றினையும்  யேசுராசா தனது பாணியில்  நினைவூட்டியிருக்கின்றமையால்,  அதனை வாசிக்கும்போது கடந்த காலங்கள் எனக்கு நினைவுக்கு வந்தன.

யேசுராசா, சிறுகதைப்படைப்பாளி, விமர்சகர், தொகுப்பாளர், பதிப்பாளர், இதழாசிரியராக இயங்கிய அனுபவம் மிக்கவர். அத்துடன் கலா ரசிகர்.  கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிவருபவர்.  அலை, கவிதை, தெரிதல் முதலான இதழ்களை வெளியிட்டவர். யாழ்ப்பாணத்திலிருந்து முன்னர் வெளியான திசை வார இதழின் துணை ஆசிரியராகவும் இயங்கியிருப்பவர். எனவே,  யேசுராசா கலை, இலக்கிய உலகில் கற்றதும் பெற்றதும் அநேகம்.  

1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி யாழ். குருநகரில் பிறந்திருக்கும் இவர்,  இம்மாதம் தனது 76 ஆவது பிறந்த தினத்தை நெருங்குகிறார்.

கலை, இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு அவசியம் என்பதில் உறுதியானவர்.  

சிலசமயங்களில் அவரது பதிவுகளில் அறச்சீற்றத்தையும் காணமுடியும்.  அங்குமிங்குமாய்… நூலில் அவரது ஐந்து பக்கங்களுக்கு விரியும் என்னுரையிலும் யேசுராசாவின் அறச்சீற்றத்தை காணமுடிகிறது. ஒரு காலத்தில்  இவருடன் நல்ல நண்பர்களாக திகழ்ந்த சிலரும்,   இந்த அறச்சீற்றத்தை சகிக்க முடியாமல்  இவரிடமிருந்து ஒதுங்கிச்சென்றுவிட்ட  துயரத்தையும் என்னால் பார்க்க முடிந்தது. முன்னர் இலங்கையிலிருந்த காலப்பகுதியில் அவதானித்தேன். பின்னர் புகலிட தேசத்திலிருந்தும் ( அவுஸ்திரேலியா ) பார்க்கின்றேன். ஆனால், யேசுராசா அதற்கெல்லாம் மனதளவில் அலட்டிக்கொள்ளாமல், தொடர்ந்தும் கலை, இலக்கியத் தேடலுடன் இயங்கிக்கொண்டேயிருப்பவர்.

கருத்துப்பகைமை தனிப்பட்ட பகைமையாகிவிடுவது மிகுந்த கவலையை  எனக்குத்தந்திருக்கிறது என்பதையும் வலியுடன் சொல்லிக்கொள்கின்றேன்.

மேலும் படிக்க ...

இந்து மதமும் ராஜராஜனும் - காவடி மு. சுந்தரராஜன், கோவை -

விவரங்கள்
- காவடி மு. சுந்தரராஜன், கோவை -
ஆய்வு
17 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சமீப காலத்தில் பொன்னியின் செல்வன் திரைப் படம் குறித்தும், அதனைத் தொடர்ந்து மாமன்னர் ராஜராஜன் குறித்தும் பலராலும், பலவகைகளிலும் கருத்துகள் வெளியிடப் படுகின்றன. நானும் சில வார்த்தைகள் சொன்னால் குறைந்தா விடப் போகிறது?

நான்கு விஷயங்கள் குறித்துத் தான் விவாதங்கள் அதிகம் நடந்தன. 

    1. பொன்னியின் செல்வன் படம் 
    2. ராஜராஜன் தன் தமையன் ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்கள் விஷயத்தில் மனு தர்மத்தைக் கடைப் பிடித்தார். 
    3. ராஜராஜன் காலத்தில் இந்து மதம் என்ற பெயர் இருந்ததா? இல்லையா?
    4. திரு கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ராஜராஜனின் கொலையாளிகள் பிராமணர்கள் என்பதை மறைத்தாரா ?

  பொன்னியின் செல்வன் திரைப்படம் படத்தையும், கதையையும் ஒப்பிடுவது தவிர்க்க முடியாதது என்ற போதிலும்  தேவையற்ற ஒன்று. அந்தக் கதையில் மூழ்கிப் பாத்திரங்களோடும், ஓவியங்களோடும் ஒன்றி விட்டவர்களால் நிச்சயமாக அப்படி ஒப்பிடுவதே “ நினைத்துப் பார்க்கக் கூடாத ஒன்று “ என்ற மன நிலையில்தான் இருக்க முடியும். படம்  திரைப் படம் என்ற அளவில் மிக அருமையாக இருந்தது. அதனைக் கதையுடன் ஒப்பிட்டுக் குறை, நிறை கூறுவதை, அதிலும் குறை கூறுவதை  ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

மேலும் படிக்க ...

வழக்கிழந்த நீதிகள் முதுமொழிக்காஞ்சியை முன் வைத்து…. - முனைவா் நா.கவிதா, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியா், தி ஸ்டாண்டா்டு ஃபயா் ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி,(தன்னாட்சி), சிவகாசி. -

விவரங்கள்
- முனைவா் நா.கவிதா, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியா், தி ஸ்டாண்டா்டு ஃபயா் ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி,(தன்னாட்சி), சிவகாசி. -
ஆய்வு
16 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

அறம் என்ற ஒற்றைச் சொல்லால், மனித வாழ்க்கையின் எல்லா நிகழ்வுகளையும் செயல்படுத்திய, பண்டைத் தமிழரின் அறவோர் வாழ்க்கை நெறி இன்று தனது பழம் வடிவத்தை இழந்து நிற்கிறது. கொடை, நீதி, இன்பம், தலைமை, பொது நலம் என்ற சொற்கள் இன்றைய சமூகத்தில் இளைய தலைமுறைகளால் புதிய வடிவாக்கம் பெறுகின்றன. கொடை என்பது இன்று புகழ் தரக்கூடிய விளம்பரச்சூழ்ச்சி;  நீதி என்பது தனது மனதின் எண்ணத்திற்கு ஏற்ப வளைத்துக்கொள்ளும் தலையாட்டி பொம்மை; இன்பம் என்ற பெயரில் தீய அறிவின் வழியே புலன்களை மயக்கம் காட்டிச் செல்வது அழியா இன்பம்; தலைமை என்பது தனக்கென மட்டுமே வாழும் கொள்கை; பொதுநலம் தனது அகராதியின் பொருள் இழந்து காட்சி அளிக்கின்றது. அவ்வகையில் வழக்கிழந்த நீதிகளின் நிலைமைகளை  முதுமொழிக் காஞ்சியின் வழி எடுத்துரைப்பதோடு,  சமூகத்தில் அறம் தகவு பெற்று, புத்துயிர் பெற வழி காட்டுவதே இவ் ஆய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.

முதுமொழிக்காஞ்சி வரலாறு

         முதுமொழிக்காஞ்சி என்பது காஞ்சித்திணையின் துறைகளில் ஒன்று. காஞ்சித்திணை குறி்த்து தொல்காப்பியா்,

“காஞ்சி தானே பெருந்திணைப் புறனே
பாங்கருஞ் சிறப்பிற் பின்னெறியானும்
நில்லா உலகம் புல்லிய நெறித்தே ”
                                                  (தொல்காப்பியம் - புறத்திணையியல்,18)   

என்று வரையறுக்கிறார். இதில், ‘வீடு, பேறு  அடைவதற்குத்  தடைகளாகத் திகழும் பல்வேறு நிலையாமைக் கருத்துக்களைச் சான்றோர் எடுத்துரைப்பதே காஞ்சி’ என்ற இலக்கணம் புலப்படுகிறது. அறக்கருத்துக்களை எடுத்துரைக்கும் முதுமொழிக்காஞ்சி என்ற நூலின்  ஆசிரியா் மதுரைக் கூடலூர் கிழார். இவரை புலத்துறை முற்றிய கூடலூா் கிழார்  என்றும் அழைப்பா்.  ‘மூத்தோர் சொற்கள் பலவற்றை தொகுத்துரைக்கும் நூலே முதுமொழிக்காஞ்சி’ என்றும், அறவுரைக்கோவை, ஆத்திச்சூடியின் முன்னோடி என்றும் வழங்குவா். இந்நூல் தோன்றிய காலம் சங்கம் மருவிய காலமான ஐந்தாம் நூற்றாண்டு ஆகும். பத்துப்பாடல்களைக் கொண்ட பதிகம் பத்து கொண்டு இந்நூலில் 100 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இன்றைய நவீன அறிவியல் உலகில் மாந்தா் துன்பமின்றி வாழ, மனித வாழ்வியலுக்கு தேவையான அறக்கருத்துக்கள் இந்நூலில் நிறைந்துள்ளன.. ஆனால் காலத்தின் காரணமாக வழக்கு இழந்த நீதிகளை முதுமொழிக்காஞ்சி என்ற நூலினை முன் வைத்து பின் வரும் பகுதியில் ஆராயப்பட்டுள்ளன.

மேலும் படிக்க ...

தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (16) - நவீன விக்கிரமாதித்தனின் குறிப்பேட்டுப் பக்கங்கள் சில. - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
நாவல்
16 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அத்தியாயம்  (16) நவீன விக்கிரமாதித்தனின் குறிப்பேட்டுப் பக்கங்கள்..

மனோரஞ்சிதம் எதனையெடுத்து வாசித்துக்கொண்டிருந்தாள். அவ்வாசிப்பில் தன்னை முழுமையாக  மூழ்கடிக்க வைத்து வாசித்துக்கொண்டிருந்தாள். அப்படியெதைத்தான் அவள் இவ்விதம் வாசித்துக்கொண்டிருக்கின்றாள் என்பதை அறியும் ஆவல் மேலிட்டது. மேலிட்ட ஆவலுடன் அவளை நெருங்கி அவள் வாசித்துக்கொண்டிருந்த நூலைப் பார்த்தேன். உண்மையில் அது நூலல்ல. ஒரு குறிப்பேடு. அது என் குறிப்பேடுகளிலொன்று.  அவ்வப்போது என் எண்ணங்களை எழுத்துகளாக  அக்குறிப்பேட்டில் பதிவு செய்வது என் பொழுது போக்குகளிலொன்று. கவிதைகளாக, கட்டுரைகளாக எனப் பல் வடிவங்களில் அவை இருக்கும். அக்குறிப்பேடுகளிலொன்றினைத்தான் அவளெடுத்து வாசித்துக்கொண்டிருந்தாள்.

"கண்ணம்மா, ஒருத்தரின் குறிப்பேட்டை அவரது அனுமதியின்றி இன்னொருவர் வாசிப்பது தவறில்லையா?"

"கண்ணா, என் கண்ணனின்  குறிப்பேட்டை நான் வாசிக்காமல் வேறு யார் வாசிப்பது? உன் கண்ணம்மா வாசிப்பதில் தவறேதுமில்லை. பேசாமல் மனத்தைக் குழப்பிக்கொள்ளாதே கண்ணா."

சிறிது நேரம் வாசித்துவிட்டுக் கூறினாள்:

"கண்ணா இவையெல்லாம் உன் 'டீன் ஏஜ்' பருவத்தில் எழுதியவை. ஒவ்வொரு கவிதைக்கும், கட்டுரைக்கும் மேல் எழுதின திகதி, மாதம், ஆண்டைக் குறிப்பிட்டிருக்கிறாய்."

"உண்மைதான் கண்ணம்மா. அவ்வப்போது என் சிந்தையிலேற்பட்ட உணர்வுகளை வடிப்பதற்காக எழுதியவை இவை. உண்மையில் என் எண்ணங்களின் வடிகால்கள் இவை. இவ்வடிகால்கள் இல்லாவிட்டால் அவை என் நெஞ்சைப் போட்டு வாட்டு வதக்கியெடுத்திருக்கும்."

"கண்ணா, உன் குறிப்புகளை வாசிக்கையில் உண்மையில் எனக்கு ஆச்சரியமாகத்தானிருக்கறது."

மேலும் படிக்க ...

தொடர் : தீவுக்கு ஒரு பயணம் (5) - கடல்புத்திரன் -

விவரங்கள்
- கடல்புத்திரன் -
நாவல்
16 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அத்தியாயம் ஐந்து - அடுத்த  நாள்

இதற்கு மேலே செல்கிறார்கள் . புளொமின்டன் " லுக் அவுட் " , என்கிற அதிகமான மலையின் உயரப் புள்ளி வருகிறது . அதிலிருந்து கீழ் நோக்கி அதிகளவு சரிவைப் பார்க்கலாம் . கண் கொள்ளாக் காட்சிகள்  கண்களை நிறைக்கின்றன . அதிலிருந்து பார்த்தால் கஸ்பி நிலங்களையும் பார்க்கலாம் என்றால் இன்னொரு புறத்தில் இவர்கள் இருக்கிற வீடும்  இருக்க வேண்டும் .  சற்று  செல்ல சிவப்பு மண் சுவருடன் பள்ளத்தில் இறங்கிற கடற்கரை . ஓரிரு மரங்களின் வேர்கள் சிறிது வெளியில் தெறிய  முக்கால்வாசி வேருடன் சுவர் மண்ணுடன் நிற்கிற மரங்கள் . மண்ணை அரித்தாலும் சரிந்து விழாது உறுதியாகக் கிடக்கிற மண்ணாகக் கிடக்க வேண்டும் . நம்மூரில் என்றால் மரம் சரிந்து விழுந்திருக்கும் . மண்ணும் தான் . அப்படி கரை தோறும் அங்காங்கே கடற்கரைகள்  இருக்கின்றன .

    அவ்விடத்தில் தான் அதிகபட்ச உயர் அலைகள் அடிப்பதாகவும்  கூறப்படுகிறது . அந்த தீவின் நில மட்ட உயரங்களைப் புரிந்து கொள்ள சிரமப் படுகிறான் . நில அளவையியல்  அறிவு அவசியம் தேவைப்படுகிறது . தில்லைக்கு  தட்டுத் தடுமாறிய ... நிலையிலே கிடக்கிறது .

      கடலுக்குள் நீட்டிக் கொண்டிருக்கிற  துண்டு நிலப்பரப்பில்  இருக்கிற  பசுமைக் காட்டினுள் ஐந்து கிலோ மீற்றர்  , பத்து  ...என அதிக தூரம் நடக்கிற சுற்றுக்கள் இருக்கின்றன .  நானும்  பிள்ளைகளும் நடந்திருக்கிறோம்  " என்கிறாள் பூமலர் .  " பூச்சிகள் ...மலை ஏறுவது போல நடக்க முடியாது " என ஜெயந்தி கூற அதை தவிர்த்து விடுகிறார்கள் . ஆனால்  , கடற்கரை அழகாகவேக் கிடக்கிறது .  " கல்லை அலை அடித்து குகையை ஏற்படுத்தி இருக்கிறது எல்லாம் மேலே செல்ல தான் வருகிறது . நீருக்கு நடுவே சிற்பி போல செதுக்கிய உருவங்களும் கிடக்கின்றன " என்று  விபரிக்கிறாள் பூமலர்  .    நீரும் லேசு பட்டதில்லை  .     

மேலும் படிக்க ...

அண்ணாமலை கனடா தமிழ் - நுண்கலை- யோகா ஆய்வரங்கம் மாதந்தோறும் நடத்தும் சங்க இலக்கியக் கருத்தரங்கத்தின் 13ஆவது கருத்தரங்கம் “பழந்தமிழ் இலக்கிங்களில் நாடகக் கூறுகள் - ஓர் ஆய்வு”

விவரங்கள்
- தகவல்: பேராசிரியர் இ.பாலசுந்தரம் -
நிகழ்வுகள்
15 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ஆண்டுப்பொதுக்கூட்டம் மெய்நிகரில் 18-12-2022 ஞாயிறு மாலை அவுஸ்திரேலியா நேரம் 3-00 மணி - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
நிகழ்வுகள்
15 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அவுஸ்திரேலியாவில் நீண்ட காலமாக இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ( 1988 – 2022 ) வருடாந்த பொதுக்கூட்டம்  இம்மாதம்  18 ஆம் திகதி (18-12-2022) ஞாயிற்றுக் கிழமை மாலை 3-00 மணியிலிருந்து மாலை 5-00 மணி வரையில் மெய்நிகரில்  ( Zoom Meeting) நடைபெறும்.   

மேலும் படிக்க ...

வாசிப்பு அனுபவம்: காட்சி மொழி - சினிமாவுக்கான இதழ்! - விதுஷா- பேராதனைப் பல்கலைக் கழகம் , கண்டி -

விவரங்கள்
- விதுஷா- பேராதனைப் பல்கலைக் கழகம் , கண்டி -
நூல் அறிமுகம்
15 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கையில் தமிழ் மொழியிலான சினிமா பற்றிய உரையாடல்களை ஏற்படுத்துவதற்கான தளங்கள் விரிவாக்கப்பட வேண்டிய தேவை அதிகமாக உணரப்படுகின்றது.

இச்சூழலில் காட்சி மொழி காலாண்டு இதழ் பேசப்படவேண்டிய ஒரு இதழாக வெளிவந்துள்ளது.  இலங்கையில் இருந்து உலக சினிமாவிற்காக வெளிவந்திருக்கும் காட்சிமொழி, சினிமா அரசியலையும் அதன் வடிவங்களையும்,  வரலாறுகளின் வளரச்சிப்  படிமங்களையும் உரையாடலுக்கான களமாக திறந்துவிட்டுள்ளது.

இந்திய -  இலங்கைச் சூழலில் இருந்து வெளிவரும் பெரும்பாலான கதாநாயக  வழிபாட்டை மையப்படுத்திய 'கமர்ஷியல்' சினிமாவின் போக்கும் அதன் பின்னணியில் உள்ள முதலாளித்துவப் பரப்புரைகளும், விளம்பரங்களும், பெண்ணுடல் பண்டமாக்கப்படுவதும்,  பாலியல் சுரண்டல்களும், கிசு கிசுத் தகவல்களுமே சினிமாவாக சித்திரிக்கப்பட்டு நமக்குப் பழக்கப்படுத்தப்படுகின்றது.

இது பெரும்பாலும் சினிமாவை ஒரு 'கமர்ஷியல்' பொழுதுபோக்கு சாதனமாக மட்டுமே நம்மிடம் நம்பவைக்க முயற்சிசெய்து கொண்டிருக்கின்றது.

அதற்கு அப்பால் சினிமாவினை கலைவடிவத்தோடு  இணைந்த உயிரோட்டமான வெகுசன சமூக ஊடகமாக வெளிப்படுத்தக் கூடிய வெளிகளை இந் நிலை மறைத்தும் வைத்துள்ளது.

காட்சிமொழி இதழ் அந்த கட்டமைப்புகளை உடைத்து ஒரு சமூக கலை இலக்கிய சினிமாவிற்கான உரையாடலை நிகழ்த்தக்கூடிய தளமாக உருப்பெற்றிருக்கின்றது.

நான்கு தமிழ் மொழியிலான கட்டுரைகளுடனும் மூன்று மொழிபெயர்ப்புக் கட்டுரைகளுடனும் வெளிவந்துள்ள இவ் இதழ் , சினிமாவில் வழக்கமாகப் பேசப்படுகின்ற விடயங்களில் இருந்து விலகிய  அல்லது அவற்றிற்கு முரணான வெளிப்படுத்தல்கள் எந்தளவு தூரம்  சினிமாவினை இன்றுவரை ஒரு காத்திரமான கலைப் படைப்பாகவும்  ஊடகமாகவும் கொள்வதற்கு வழிசமைத்துள்ளது என்பதை வெளிப்படுத்துகின்றன.

மேலும் படிக்க ...

நூல் அறிமுகம் : கே.எஸ்.சுதாகரின் 'பால் வண்ணம்' சிறுகதைத்தொகுப்பு பற்றிய குறிப்புகள்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
13 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் கே.எஸ்.சுதாகரை நினைத்ததும் எனக்கு அமரர் காவலூர் எஸ்.ஜெகநாதன் நினைவுக்கு வருவார். பத்து சிறுகதைப்போட்டிகளில் முதற் பரிசு பெற்றவர். நான்கு சிறுகதைப்போட்டிகளில் தங்கப்பதக்கங்களைப் பெற்றவர். அகில இலங்கைரீதியில் நடத்தப்பட்ட பதினாறு சிறுகதைப்போட்டிகளில் பங்குபற்றிப் பரிசில்களைப் பெற்றதால் 'பரிசு எழுத்தாளர்' என்று அழைக்கப்பட்டவர். கே.எஸ்.சுதாகரும் பல சிறுகதைப்போட்டிகளில் பங்கு பற்றி பரிசுகள் பெற்ற  பரிசு எழுத்தாளர். ஞானம் சஞ்சிகை நடத்திய சிறுகதைப்போட்டிகளில் பத்துத்தடவைகளும், ஏனைய ஊடகங்களில் பதினெட்டுத் தடவைகளும் பரிசுகள் பெற்றவரென்று கே.எஸ்.சுதாகரின் 'பால் வண்ணம்' நூலுக்கு எழுதிய தனது முன்னுரையில் ஞானம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியரான தி.ஞானசேகரன் குறிப்பிடுகின்றார்.

யாழ் தெல்லிப்பளையில் பிறந்து தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கும் கே.எஸ்.சுதாகர் பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியற் பட்டதாரி. அவரது 'பால்வண்ணம்' சிறுகதைத்தொகுப்பு பற்றிய எனது எண்ணங்களே இக்கட்டுரையாகும். ஏற்கனவே இவரது 'சென்றிடுவீர் எட்டுத்திக்கும்', 'எங்கே போகின்றோம்' ஆகிய சிறுகதைத்தொகுப்புகள் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க ...

கவிதை: முப்பிறப்பு ! - சி. ஜெயபாரதன், கனடா -

விவரங்கள்
- சி. ஜெயபாரதன், கனடா -
கவிதை
12 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மானுடப் பிறவிகளுக்கு
முப்பிறப்பு என்பது
புதிய கணிப்பு,  
புதிய ஞானம்,
புதிய பாடம் !

ஏழு பிறப்பு என்பது
வாழும்  மாந்தர்க்கு ஒவ்வாத
பழைய சுவடு !
முற்பிறப்பு, இப்பிறப்பு
பிற்பிறப்பு  
முடிவில்லா தொடர்ச்சி.
பிறப்பும்,  இறப்பும்
இடைபுகும் நிகழ்ச்சி.

முற்பிறப்பு இல்லை  எனின் 
இப்பிறப்பு இல்லை,
இருக்க முடியாது !
இறப்பு மூலம் ஊழ்விதி
பிற்பிறப்புக்கு
நாத்து நடுகிறது !  
இப்பிறப்பு நிகழ்வு கட்கு
முற்பிறப்பு தான்
காரணி !

மேலும் படிக்க ...

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணைய வழிக் கலந்துரையாடல்

விவரங்கள்
- தகவல்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
12 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

கவிதை: கண்ணக்கோல்! - முனைவர் சி. இரகு , உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இலொயோலா கல்லூரி, வேட்டவலம், திருவண்ணாமலை மாவட்டம். -

விவரங்கள்
- முனைவர் சி. இரகு , உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இலொயோலா கல்லூரி, வேட்டவலம், திருவண்ணாமலை மாவட்டம். -
கவிதை
12 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

  
அவள்
எழுதுகிறாள்
எழுதிக்கொண்டே
இருக்கிறாள்
கண்ணில் நிரம்பிய
மையால்…!

உள்ளதில்
உள்ளதையே
எழுதுவாளோ…?
இல்லை
எழுதுவதுபோல்
நடிக்கின்றாளோ…?

என்னதான்
எழுதுகிறாள்
என்னென்னவோ
எழுதுகிறாள்.

மேலும் படிக்க ...

வாழ்க நீ எம்மான்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
11 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இன்று மகாகவி பாரதியாரின் பிறந்ததினம்.  என் பால்ய பருவத்தில் என்று என் தந்தையார் பாரதியாரின் முழுக்கவிதைகளும் அடங்கிய தொகுதியை வாங்கித் தந்தாரோ அன்று ஆரம்பித்த பிணைப்பு இன்றுவரை தொடர்கிறது. இவரது கவிதைத்தொகுப்பொன்று எப்பொழுதும் என் மேசையில் அருகில், கண்ணில் படும் தூரத்திலிருக்கும்.

சமுதாயம், அரசியல், தேசிய விடுதலை, வர்க்க விடுதலை, மானுட விடுதலை, இருப்பு பற்றிய தேடல்கள், காதல் போன்ற மானுட உணர்வுகள்,  இயற்கை , எழுத்து ,  பெண் உரிமை என்று அனைத்தைப் பற்றியும் இவர்  பாடியிருக்கின்றார். அவற்றிலுள்ள புலமை, எளிமை, அனுபவத்தெளிவு இவைதாம் என்னை இவர்பால் ஈர்த்ததற்குக் காரணம். இன்னுமொரு முக்கிய காரணம் - ஆரோக்கிய எண்ணங்களை  வெளிப்படும் வரிகள்.

மேலும் படிக்க ...

ஒரு கடிதம்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
11 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மையில் தமிழகத்தில் அமெரிக்கன் கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வாளராகவிருக்கும் க.ஆனந்தராஜன் அவர்கள்  எனது 'குடிவரவாளன்' நாவலைப்பற்றி 'நவீனத் தமிழாய்வு' என்னும் பன்னாட்டுக் காலாண்டு ஆய்விதழில் எழுதிய ஆய்வுக்கட்டுரை பற்றி எழுதியிருந்தேன். அது பற்றி அவர் எனக்கொரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதிலவர் எனது 'அமெரிக்கா', 'குடிவரவாளன்' ஆகிய இரு நாவல்களை மையமாக வைத்துத் தான் முனைவர் பட்ட  ஆய்வு செய்வதாகவும்,  எனது அமெரிக்கா நாவல் அமெரிக்கன்  கல்லூரியின் பாடத்திட்டத்திலும் உள்ளதாகவும் எழுதியிருந்தார்.  மகிழ்ச்சி தந்த விடயமிது. அவரது முனைவர் பட்ட ஆய்வு வெற்றியடைய வாழ்த்துகள்.

மேலும் படிக்க ...

சிறுகதை : சீத்துவக்கேடு - எஸ் அகஸ்தியர் -     

விவரங்கள்
- எஸ் அகஸ்தியர் -
சிறுகதை
09 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 - எழுத்தாளர் அகஸ்தியர் நினைவு தினம் டிசம்பர் 8. -    

‘சீவன் போக முன்னம் பிள்ளையள் வந்து தாயின்ர கண்ணில் முழிக்குங்களென்டு நான் நம்பேல’
        இவள்பாவி என்ன,  எடுத்தாப்போல ‘சகுனி’ யாட்டம் சொல்கிறாள்.
    ‘அது பாவம் மனுசி பெத்ததுகளைக் கடைசியாப் பாத்திட்டுக் கண் மூடவெண்டு கொட்டுக்க சிவனை வைச்சுக்கொண்டு படுற பாட்டைக் கண் குடுத்துப் பாக்கக் கறுமமாக் கிடக்கு’
        கள்ளி,  மனிசியில உருகுமாப் போல சும்மா சாட்டுக்கு மாய வித்தை காட்டுறாள்.
    ‘அது சரி,  தந்தி எப்ப குடுத்ததாக்கும்?’
    ‘வேளையோட குடுத்திருப்பினம் தானே?’
     ‘அக்காள்,  வாய் புளிக்குது,  உந்த வெத்திலைத் தட்டத்தை இஞ்சாலையும் ஒருக்கா அரக்கிவிடு’
     ஓ, வருத்தம் பாக்கிற சாட்டா,  ‘தாக்கற’ இருந்து வெத்திலையும் சப்பிக்கொண்டு வியளம் பறைய வந்திருக்கிறாளுகள்.
    ‘தந்தி குடுத்து ரண்டு நாளாப்போச்சு,  இஞ்சால இன்னும் ஒரு மறுமொழியும் வரக்காணன்,  என்ன சங்கதி?’
     ‘வயிலசில பேசினாச் சுறுக்கில் கிடைக்குமல்லே’
     ‘தந்தி என்னெண்டு குடுத்துதுகளோ?’
     ‘ஆச்சிக்குக் கடுமை உடனே புறப்பட்டு வாருங்கோ’ண்டு தான் அடிச்சவையாம்’
     ‘ஒரு பிள்ளையளிட்டயிருந்தும் மறுமொழி வரேல்லயாமோ?’
     இதேன் இவளவே இதுகளைக் கிண்டிக் கதைச்சு விசேண்டியத்தை ஊட்டுறாளவையோ தெரியல்லே.
     ‘இல்ல பாவம்,  தேப்பன் மனுசன் தந்தி குடுத்துப்போட்டுப் பெஞ்சாதிக்குப் பக்கத்திலயிருந்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கு’
     வேண்டிப்போட்ட வெத்திலை பாக்குச் சமையப் போகுதாக்கும் தேப்பனைத் தின்னியளாட்டம் மனிசனிலையும் பரிவு காட்டிக் கரிசனையாய்ப் பறையிறாளவ.

மேலும் படிக்க ...

அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு..! எழுத்தாளர் முருகபூபதியின் கடிதமொன்று. - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
09 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு வணக்கம்.  என்னிடம் முகநூல் கணக்கு இல்லாதமையினால், உங்கள் முகநூல் குறிப்புகளை தங்கள் பதிவுகள்  இணையத்தளம் ஊடாகத்தான் படிக்கின்றேன். அண்மையில் தங்கள் தந்தையார் பற்றிய நினைவுப்பதிவும் படித்தேன். உடனே எனது தந்தையாரும்  நினைவுக்கு வந்தார். எமது குடும்பத்தில் என்னை ஒரு எழுத்தாளனாக முதல் முதலில் அங்கீகரித்து ஊக்கம் தந்தவர்தான் எனது தந்தையார். அதன்பிறகுதான் அம்மாவும் குடும்ப உறவுகளும் வருகிறார்கள். (  காரணம் எழுத்து சோறு போடாது என்பதுதான்  அவர்களின் பொதுவான சிந்தனை. ஆனால், எனக்கு எழுத்துதான் சோறு போட்டது )

ஒவ்வொரு ஆண்டிலும் டிசம்பர் மாதம் வரும்போது மட்டுமல்ல, ஒவ்வொரு மாதங்களிலும் நான்  உளமாற நேசித்த பல ஆக்க இலக்கிய ஆளுமைகள் நினைவுக்கு வந்துகொண்டேயிருக்கிறார்கள்.  அவர்களின் நினைவுகளில் நாம் வாழ்ந்துகொண்டிருப்பதே அதற்குக்  காரணம். கலை, இலக்கிய விமர்சகரான பேராசிரியர் க.கைலாசபதி, எழுத்தாளரும் ,விமர்சகரும், வெளியீட்டளாருமான செ.கணேசலிங்கன், எழுத்தாளர் எஸ்.அகஸ்தியர் ஆகியோரின் நினைவு தினங்களை  ( டிசம்பர் 6, டிசம்பர் 4 & டிசம்பர்   8. ) எமது எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் நீங்கள்  நினைவூட்டியிருக்கிறீர்கள். மிக்க நன்றி நண்பரே.

மேலும் படிக்க ...

தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (15) - கண்ணம்மா எழுதிய கவிதை! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
நாவல்
09 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அத்தியாயம் 15: கண்ணம்மா எழுதிய கவிதை!     

"கண்ணா, எனக்கொரு கேள்வி அவ்வப்போது நினைவில் வருவதுண்டு."

மனோரஞ்சிதம் இவ்விதம் ஒருமுறை திடீரென்று கூறவே அவளை வியப்புடன் பார்த்தேன்.

"கண்ணம்மா, அப்படியென்ன கேள்வி. அது எது பற்றிய கேள்வி?" என்றேன்.

"எல்லாம் எழுத்து பற்றியதுதான். "

"எழுத்து பற்றியதா? எந்த எழுத்து பற்றி நீ கூறுகிறாய் கண்ணம்மா?"

"கண்ணா, உன்னைப்போன்ற எழுத்தாளர்களின் எழுத்தைப் பற்றித்தான் கண்ணா? வேறென்ன எழுத்தைப்பற்றி நான் கேட்கப்போகின்றேன்?"

"அப்படியா கண்ணம்மா, சரி கேளடி என் கண்மணி."

"எழுத்துக்குக் கட்டாயம் ஒரு நோக்கம் இருக்க வேண்டுமா? அல்லது அது தேவையில்லையா? கண்ணா?"

"கண்ணம்மா, நீ என்ன கேட்க வருகிறாய் என்பது புரிகிறது., கலை மக்களுக்காகவா அல்லது கலை கலைக்காகவா என்பதைத்தான் நீ எளிமையாக இப்படிக் கேட்கிறாய். காலம் காலமாக கலை, இலக்கிய உலகில் கேட்கப்படும், தர்க்கிக்கப்படும் கேள்விதான். இது பற்றி எப்பொழுதும் கருத்துகள் ஒன்றாக இருப்பதில்லை."

"இவ்விடயத்தில் உன் கருத்தென்ன கண்ணா? அதைச்சொல்  முதலில். எனக்கு உன் கருத்துத்தான் முக்கியம் கண்ணா."

'கண்ணம்மா, எனக்கு இவ்வளவுக்கு முக்கியத்துவம் தருவது மகிழ்ச்சியைத் தருகிறது. என்னைப்பொறுத்தவரையில் எழுத்துக்கு நிச்சயம் ஒரு நோக்கமிருக்க வேண்டும். நோக்கமற்ற எழுத்து வாசிப்பதற்கு சுவையாகவிருக்கக்கூடும்.  ஆனால் சமுதாயப் பயனற்றுப் போய்விடும். ஆனால் அந்த நோக்கம் அந்த எழுத்தின் எழுத்தின் கலைத்துவத்தைச் சீர்குலைத்து விடக்கூடாது என்பதும் என்னைப்பொறுத்த வரையில் மிகவும் முக்கியம்."

"சரி கண்ணா, இன்னுமொரு கேள்வி. "

"என்ன கண்ணம்மா? என்ன புதுக்கேள்வி?"

"நோக்கம் ஒரு தீர்வினையும் கூற வேண்டுமா? அல்லது வாசகர்களே அதனை எழுத்திலிருந்து தீர்மானிக்கும் வகையில் அமைந்திருக்க வேண்டுமா கண்ணா?"

மேலும் படிக்க ...

கவிஞர் சுகாதாகுமாரி ஒரு சமூக, அரசியல் & சூழலியற் செயற்பாட்டாளர்! - சுப்ரபாரதிமணியன் -

விவரங்கள்
- சுப்ரபாரதிமணியன் -
சுப்ரபாரதிமணியன் பக்கம்
08 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- சுகாதாகுமாரி  (22 சனவரி 1934 – 23 திசம்பர் 2020)   கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்.  கவிஞர். சமூக, அரசியல் & சூழலிலற் செயற்பாட்டாளர். பெண்ணிய இயக்கம்,  அமைதி பள்ளத்தாக்கு பாதுகாப்பு இயக்கம், சூழலியல் போன்ற சமுக இயக்கங்களில் பணியாற்றியவர். இவர் கேரள மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவராகவிருந்தவர். -


கேரளா அமைதி பள்ளத்தாக்கு 2022  

கேரளா அமைதி பள்ளத்தாக்கு - கொரோனா காலத்திற்கு பின்னால் நவம்பர் இறுதியில் இந்த முறை போயிருந்தபோது .அந்த மக்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது அந்தப் பகுதியிலும் சூட்டின் தன்மை அதிகமாக வெப்பநிலை அதிகமாக மாறி இருப்பதைச் சொன்னார்கள். உலகம் முழுக்க வெப்பம் அதிகமாகிக் கொண்டிருப்பது. குளோபல் வார்மிங் என்பதற்கு அமைதி பள்ளத்தாக்கும். இலக்காயி இருக்கிறது அதன் காரணமாக ஒரு சதுர கிலோமீட்டரில் 2000க்கும் மேற்பட்ட நுண்ணுயிர்கள் வாழக்கூடிய அந்த பகுதியில் சில மாறுபாடுகள் தென்படுகின்றன.

கேரளா அமைதி பள்ளத்தாக்கு பகுதியை சுற்றி பார்க்க நபர் ஒன்றுக்கு ரூபாய் 750 ரூபாய் வசூலிக்கிறார்கள் இப்போது. 300 ஏக்கர் பரப்பிலான விரிந்த அடர்ந்த காட்டுப்பகுதி .அபூர்வமான மரங்கள் செடி கொடிகள் பறவைகள் மிருகங்கள் இவற்றைக் காண வாய்ப்பு கிட்டும் போது இந்த தொகை பெரிதல்ல தான் .ஆனால் கேரளாவைச் சார்ந்த நிறைய பேர் தென்பட்டார்கள்.  தமிழகத்தினரைக் காண முடிவதில்லை அதிகம் . தமிழகத்திலிருந்து அதிக தூரம் இல்லை. கோவை, ஆன்கட்டி, அட்டப்பாடி....  அவ்வளவுதான்

கேரளா அட்டப்பாடி பகுதிகளில் உலக கால்பந்தாட்டம் போட்டியை ஒட்டி கேரளா ரசிகர்கள் வெவ்வேறு அணிகளாக, விசிறிகளாக,  பிரிந்து தங்களுடைய ஆர்வத்தை காட்டியிருக்கும் பதாகைகள் . இதுபோல் தமிழகத்தில் சில சமயங்களில் காண முடிகிறது . ஆனால் உலக கோப்பை கிரிக்கெட்..உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டிகளின் போது கேரள ரசிகர்கள் காட்டும் ஆர்வம் அவர் அபரிமிதமாக இருக்கிறது. இதை அவர்களுடைய படைப்புகளில் கூட சாதாரணமாக காணலாம்.  உதாரணத்திற்கு சுடானி பிரம் நைஜீரியா போன்ற படங்கள் கூட அமைந்துள்ளன.  இது போன்ற நிறைய படங்கள் படைப்புகள்.
 
அமைதிப் பள்ளத்தாக்கில்  அணையொன்றை 197இல் நிறுவுவதற்கு எதிராகத் தோன்றிய மக்கள் இயக்கத்தின் தீவிர செயற்பாட்டாளராக இருந்தவர் கவிஞர் சுகாதாகுமாரி.

மேலும் படிக்க ...

ஸ்ரீரஞ்சனியின் 'ஒன்றே வேறே' சிறுகதைத் தொகுப்பு - ஒரு நோக்கு! - ரஞ்ஜனி சுப்ரமணியம் -

விவரங்கள்
- ரஞ்ஜனி சுப்ரமணியம் -
ரஞ்ஜனி சுப்ரமணியம்
08 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சரளமான மொழிநடை என்பது ஒரு எழுத்தாளருக்கு வரமாக அமைவது. தனது எண்ணங்களை வெளிப்படுத்தும் ஊடகமாக எழுத்தைப் பயன்படுத்தும் வல்லமை பலரிடம் காணப்பட்டாலும், அகம் சார்ந்த  உணர்வுகளை  மென்மையுடனும், புறம் சார்ந்த  தோற்றங்களை  அழகியலுடனும், சமூகம் சார்ந்த அறங்களை  ஓர்மத்துடனும்  வெளிப்படுத்தும் திறன் சிலரிடம் அதீதமாகக் காணப்படும். அவர்களுள் ஒருவர் எழுத்தாளர் ஸ்ரீரஞ்சனி.

அண்மையில் வெளிவந்த 'ஒன்றே வேறே' சிறுகதைத் தொகுப்பு இதற்கு தெளிவான உதாரணமாக அமைகிறது. சிறுகதைத் தொகுப்பின் தலைப்புக்கு பொருத்தமானதும், ஊகங்களுக்கு வித்திடுவதுமான வித்தியாசமான அட்டைப்படம்.  வாசிப்பதற்கு ஆர்வத்தைத் தூண்டும் கைக்கடக்கமான அழகிய வடிவமைப்புடன் கூடிய  இத்தொகுப்பு மட்டக்களப்பு 'மகுடம்' பதிப்பகத்தின் வெளியீடாகும். பாராட்டுகள்.

'ஒன்றே வேறே' என்னும் தலைப்பும் பொருள் பொதிந்தது  . அட்டைப்படத்தில், குறியீட்டுப் பாணியில் வடிவமைக்கப்பட்ட ஆண் பெண் இருபாலார் போல, உலகீய வாழ்வில்  ஒருமித்தே வாழினும், நீட்டப்பட்ட தனிக்கரங்கள் போல தமக்கென சுயமும் தனித்தன்மையும் கொண்டவர்கள் எனப் பொருள் கொள்ளலாம். எழுத்தாளர்கள் சமூகத்தில் காணும் விடயம் ஒன்றேயாயினும்,  அவரவர் படைப்பு முறைமையினால் வாசகருக்கு உணர்த்தப்படும் விதம் வேறானது  எனவும், பிரச்சனைகள் எல்லோருக்கும் பொதுவானவையாக இருப்பினும், அதை அவரவர் எதிர் கொள்ளும் விதத்தில் வேறானவை எனவும் பொருள் கொள்ளலாம். ஆழமான தலைப்பு. சிறப்பு.

மேலும் படிக்க ...

எம்ஜிஆர் மீது ஜெயலலிதாவுக்குக் கடும் வெறுப்பா? சறுக்கிய சவுக்கு சங்கர்! - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
அரசியல்
08 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


ஆதன் தொலைக்காட்சியில் இடம் பெற்ற நேர்காணலில் ஊடகவியலாளர் மாதேஸ் 'எம்ஜிஆர் மீது வெறுப்பாக இருந்தாரா ஜெயலலிதா?"  என்று சவுக்கு சங்கரிடம் கேள்வி கேட்கின்றார். அதற்குப் பதிலளித்த சவுக்கு சங்கர் 'கடும் வெறுப்பாக இருந்தார்'என்கின்றார். உண்மையிலேயே ஜெயலலிதா எம்ஜிஆர் மீது கடும் வெறுப்பில் இருந்தாரா? இந்தக் கேள்வியின் போது என் நினைவுக்கு முதலில் வருவது எம்ஜிஆரின் மரணத்தின்போது அவரது தலைமாட்டில் கவலை படிந்த முகத்துடன் சுமார் 15 மணி நேரத்துக்கும் அதிகமாக நின்ற ஜெயலலிதாவின் தோற்றம்தான். அதன் பின் அவர் ஊடகமொன்றுக்குக் கூறியதாக வெளியான  கூற்று நினைவுக்கு வருகின்றது. அதில் அவர் எம்ஜிஅர் மறைவுக்குப் பின் தான் தற்கொலை செய்யக்கூட எண்ணியதாகக் குறிப்பிட்டிருந்தார். உண்மையில் எம்ஜிஆர் மீது கடும் வெறுப்பில் உள்ள ஒருவர் இவ்விதம் செயற்பட  முடியுமா?

மேலும் படிக்க ...

’காவல் சுவடுகள்’ கல்லுக்குள் ஈரத்தை தொட்டுக் காட்டும் கவிதைகள்! கவிஞர் வசந்தனின் சமீபத்திய கவிதைத்தொகுப்பு குறித்து சொல்லத்தோன்றும் சில குறிப்புகள்! - லதா ராமகிருஷ்ணன் -

விவரங்கள்
- லதா ராமகிருஷ்ணன் -
லதா ராமகிருஷ்ணன் பக்கம்
07 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இன்று மனிதர்களின் மனநிலைகளும் வாழ்வுத்துயரங்களும்,, நெருக்கடிகளும், சிக்கல்களும் அவர்களின் அகவாழ்வும் அது சார்ந்தவையுங்கூட அவர்களின் வாழ்க்கைத் தொழில் முதலான வாழ்வாதாரங்களோடு கண்ணுக்குப் புலனாகாத அளவு இரண்டறக் கலந்திருக்கும் நிலையில் அகவயமான கவிதைகள், புறவயமான கவிதைகள் என்றெல்லாம் திட்டவட்டமான வரையறைகள் சாத்தியமா, அவை தேவையா என்ற கேள்விகள் தவிர்க்கமுடியாமல் எழுகின்றன. கவி என்பவர் எத்தனைக்கெத்தனை தனி மனிதரோ அத்தனைக்கத்தனை சமூக மனிதரும் கூட. இவ்வகையில் ஒரு கவி தன் கவிதையில் முன்வைக்கும் அகச்சூழலும் புறச்சூழலும் இரட்டிப்பு கவனம் கோருபவை.

கவிஞர் வசந்தனின் சமீபத்திய கவிதைத்தொகுப்பான காவல் சுவடுகளைப் படித்த போது மேற்காணும் எண்ணங்கள் மனதில் எழுந்தன. தான் பணியாற்றும் காவல் துறையைப் பின்புலமாகக் கொண்டு அவர் எழுதியுள்ள கவிதைகள் இடம்பெறும் தொகுப்பு இது. இத்தகைய கவிதைகள் வெறும் புலம்பலாகவும், பிரச்சார முழக்கங் களாகவும், சுய விளம்பரமாகவும் முடிந்துவிடக்கூடிய வாய்ப்புகள் அதிகம். அப்படி யாகவில்லை என்பதே ஒரு கவிஞராக தோழர் வசந்தனை சமகாலத் தமிழ்க்கவிதை வெளியில் நிறுவுகிறது எனலாம்.

காவல்துறையைச் சேர்ந்தவர்களைப் பற்றிய சமூகத்தின் பொதுப்புரிதல் அவர்கள் கடுமையானவர்கள், அதிகாரத்தை மக்கள் மீது தவறாகப் பிரயோகிப்பவர்கள் – இப்படியாகத்தான் இருக்கிறது. ஆனால், காவல்துறையைச் சேர்ந்தவர்களை ஆசாபாசங்கள் மிக்க, சமூகப்பிரக்ஞையும் மனிதநேயமும் நிறைந்த மனிதர்களாகத் தனது கவிதைகளில் எளிய, அதேசமயம் கவித்துவம் குறையாத மொழிநடையில் எடுத்துக்காட்டுகிறார் கவிஞர் வசந்தன்.

மேலும் படிக்க ...

நூல் அறிமுகம் - மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணரின் 'திரவிடத்தாய்'

விவரங்கள்
- ஊர்க்குருவி -
நூல் அறிமுகம்
06 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தமிழம் -> திரவிடம் -> திராவிடம்!

மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் எழுதிய நூல் 'திரவிடத்தாய்'. இதன் பதிப்பாசிரியர் புலவர் அ.நக்கீரன். திராவிடம் என்னும் சொல் தமிழம் என்னும் சொல்லிலிருந்து உருவான சொல் என்பது தேவநேயப் பாவாணரின் கருத்து,. இக்கருத்தினை நானும் ஏற்றுக்கொள்கின்றேன். இதனை வலியுறுத்தும் இந்நூல் முக்கியமானது.

நூலை வாசிக்க - திரவிடத்தாய்

மேலும் படிக்க ...

முற்போக்குத் தமிழ் இலக்கியத் தூண்களை நினைவு கூர்வோம்! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
06 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கலை, இலக்கிய விமர்சகரான பேராசிரியர் க.கைலாசபதி, எழுத்தாளரும் ,விமர்சகரும், வெளியீட்டளாருமான செ.கணேசலிங்கன், எழுத்தாளர் எஸ்.அகஸ்தியர் ஆகியோரின் நினைவு தினங்கள்  முறையே டிசம்பர் 6, டிசம்பர் 4 & டிசம்பர் 8.

 அகஸ்தியரைத் தவிர முதலிருவரையும் நான் சந்தித்திருக்கின்றேன். பேராசிரியர் க.கைலாசபதியை , மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்க வருடாந்த இதழான 'நுட்பம்' இதழின் ஆசிரியராக நானிருந்தபோது அதற்காக ஆக்கம் வேண்டி யாழ் பல்கலைக்கழகத்தில் அவரது காரியாலயத்தில் சந்தித்திருக்கின்றேன். கட்டுரை தருவதாகக் கூறியவர் கூறிய நாளில் கட்டுரையைத் தந்தார். சஞ்சிகை வெளியானபோது அது பற்றிய சுருக்கமான விமர்சனக் கடிதத்தையும் அனுப்பி வைத்தார். மறக்க முடியாது. அக்கடிதத்தை இன்றுவரை பேணி வருகின்றேன்.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. அவுஸ்திரேலியா – இலங்கை நண்பர்கள் கழகம் இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம்! ஏனைய அரசியல் கைதிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்க! இலங்கை ஜனாதிபதிக்கு அவுஸ்திரேலியா வாழ் மூவினத்தவரும் வேண்டுகோள்! - முருகபூபதி -
  2. நூல் அறிமுகம்: பொருளியல் அறிஞர் அ.வரதராஜா பெருமாளின் 'எழுந்து முன்னேற முடியாமல் இறுகிப்போயிருக்கும் இலங்கையின் பொருளாதாரம்' நூல் பற்றிய கருத்துகள்! - ஜேம்ஸ் சிவா முருகுப்பிள்ளை (ஈஸ்வரமூர்த்தி) -
  3. மாறும் உலக ஒழுங்கும், தமிழ் கேள்வியும் - ஜோதிகுமார் -
  4. நூல் வெளியீடு - எல்.சாந்திகுமாரின் 'காலமும் மனிதர்களும்'
  5. நூல் அறிமுகம் - அ.வரதராஜா பெருமாளின் 'இலங்கையின் பொருளாதாரம்'
  6. தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (14) - வ.ந.கிரிதரன் -
  7. எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான எம். ரிஷான் ஷெரீப் உடனான நேர்காணல் - ஊடகவியலாளர் நஸார் இஜாஸ் -
  8. விமர்சி.காம் தளத்தில் 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு'
  9. கல்வி, மற்றும் ஆய்வுக்கான புதியதொரு சிங்கள இணையத்தளம் விமர்சி.காம்! - வ.ந.கிரிதரன் -
  10. இன்று என் தந்தை நினைவு நாள்! - வ.ந.கிரிதரன் -
  11. தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (13) - நானொரு காலவெளிக்காட்டி வல்லுனன்! - வ.ந.கிரிதரன் -
  12. கவிதை: மனசுக்குள்ள மனசுக்குள்ள குடிசை கட்டி கதைகள் சொல்லும் கடலம்மா - தமயந்தி (தமயந்தி சைமன்) -
  13. தக்‌ஷிலா ஸ்வர்ணமாலியின் ‘பீடி’: (சிங்கள நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு) சமகால இலங்கை நாவல்களில் முக்கியமான வரவு! -தேவகாந்தன் -
  14. சிறுகதை: சுவ்வே -- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்போசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை. -
பக்கம் 60 / 104
  • முதல்
  • முந்தைய
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
  • 61
  • 62
  • 63
  • 64
  • அடுத்த
  • கடைசி