பதிவுகள் முகப்பு

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவல் பற்றிய ஆய்வுக் கட்டுரையொன்று!

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
13 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ராஜா பதிப்பகத்தினரால் வெளியிடப்படும் பன்னாட்டுப் பன்முகத் தமிழ் ஆய்விதழான 'நவீனத்தமிழாய்வு' (Modern Thamiz Research)) இதழின் மார்ச் 2021 பதிப்பில் எனது, வ.ந.கிரிதரனது,  'குடிவரவாளன்' நாவல் பற்றிய விரிவான ஆய்வுக் கட்டுரையொன்று வெளியாகியுள்ளது. இதனை முகநூல் நண்பரும், பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளருமான சரவணகுமார் அவர்கள் அறியத்தந்திருந்தார். அவருக்கு நன்றி.

எனது 'குடிவரவாளன்' நாவலைப்பற்றி 'அமெரிக்க நாட்டில் அகதியர்கள்: வ.ந.கிரிதரனின் குடிவரவாளன் புதினத்தை முன் வைத்து....' என்னும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரையினை எழுதியிருப்பவர் க.ஆனந்தராஜன் , முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ் உராய்வு மையம், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு இந்தியா.

மேலும் படிக்க ...

தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (4) - மின்னலே! நீ மின் பின்னியதொரு பின்னலா ? - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
நாவல்
12 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அத்தியாயம் நான்கு: மின்னலே! நீ மின் பின்னியதொரு பின்னலா ?

'கண்ணம்மா' என்றேன். மனோரஞ்சிதம் பெருங்காதலுடன் திரும்பிப் பார்த்தாள். கண்ணம்மா என்று நான் அழைப்பதைப் பெரிதும் விரும்புபவள். அச்சமயங்களிலெல்லாம் பதிலுக்குக் 'கண்ணா' என்று என்னை அன்பூற மென்மையாக அழைப்பாள். அந்த அன்பு குழைந்த அவளது அழைப்பைக் கேட்பதற்காகவே அவளை நான் கண்ணம்மா என்று விளிப்பதுண்டு. என்னைப்பொறுத்தவரையில் இவ்விருப்பின் அற்புதமாக அவளை நான் காண்பதுண்டு. அவளற்ற இருப்பை கற்பனை செய்வதே எனக்கு மிகவும் சிரமமானது.

'என்ன கண்ணா மெளனமாகிவிட்டாய்?" என்றாள் அவள்.

'எல்லாம் நம் இருப்பு பற்றிய சிந்தனைதான் கண்ணம்மா"

'இருப்பு பற்றி.. வழக்கம்போல் தத்துவவிசாரம்தானா கண்ணா'

'கண்ணம்மா உனக்குத்தானே எனக்கு பாரதி பாடல்கள் பிடிக்குமென்று தெரியும். எனக்குப் பிடித்த அவரது பாட்டைக் கூறு பார்க்கலாம்."

'கண்ணை மூடிக்கொண்டு கூறுவேன் கண்ணா. 'நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே பாடல்தானே'

'சரியாகவே கூறினாய் கண்ணம்மா. நீ என் மனத்தை நன்றாகவே  புரிந்து வைத்திருக்கிறாயடி.'

'இந்தக்கவிதை எனக்கும் பிடித்தது கண்ணா. அதற்குக் காரணமே இருப்பு பற்றிய கவிஞரின் கேள்விகளே."

'நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ? சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?  ஒரு விதத்தில் தர்க்கரீதியாகப் பார்க்கப்போனால் இதுகூடச் சரிதானென்று வாதிடலாம். இல்லையா கண்ணம்மா?'

"எப்படி கண்ணா? எமக்கு வெளியே விரிந்து கிடக்கின்றது நாம் காணும் இப்பிரபஞ்சம். இவ்வுலகம். இப்புற உலகு மாயை என்று எப்படிக் கூறுவது கண்ணா?'

மேலும் படிக்க ...

இலக்கியப்பூக்கள் 264 - முல்லை அமுதன் -

விவரங்கள்
- முல்லை அமுதன் -
நிகழ்வுகள்
12 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வணக்கம், இவ்வாரம் வெள்ளிக்கிழமை (14/10/2022) லண்டன் நேரம் இரவு 8.15 இற்கு (இரவு பிரதான 8.00 மணிச் செய்திக்குப் பிறகு) அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள்வானொலியில்(www.ilctamilradio.com) இலக்கியப்பூக்கள் 264 ஒலிபரப்பாகும்.

நிகழ்வில்,

      கவிஞர்.பா.நூருல்லாஹ்(மதுரை) (சிறுகதை:வேண்டாத காரணம்..),
      கவிஞர்.கவிஜி (கவிதை:இறைவேளை..),
      கவிஞர்.பாத்திமா முஜாமளா முபாரக்,
      கவிஞர்.ராகினி முருகேசன்(கவிதை:பிரசவிக்கும் வலி..),
      எழுத்தாளர்.முபீன் சாதிகா (குறுங்கதை:மயில் பெண்),
      எழுத்தாளர்.திருமலை.சுந்தா(குறுங்கதை: பொறுமையும் சினமும்..),
      கவிஞர்.வே.சுகந்தி(தமிழகம்)(கவிதை:தென்றலே தூது போ)
      கவிஞர்.விக்ரமாதித்தன் (எப்படியும் இருந்துகொண்டே இரு.. நன்றி:ஸ்ரீ என் ஸ்ரீவத்ஸா'),
      எழுத்தாளர். இரா.சம்பந்தன்(கனடா) (கட்டுரை:ஓளவை காட்டும் பெண்கள்),

ஆகியோரின் படைப்புக்கள் இணைக்கப்பட்டுள்ளன. இது ஒலிப்பதிவு செய்து ஒலிபரப்பாகும் நிகழ்வாகும்.  உங்கள் படைப்புக்களையும் உங்கள் குரலில் (எம் பி 3 ஒலிவடிவில்)ஒலிப்பதிவுசெய்து அனுப்புங்கள்.உங்கல் நண்பர்களின் படைப்புக்களையும் அறிமுகம் செய்துவையுங்கள்.

மேலும் படிக்க ...

இரு நூல்களின் வெளியீட்டு விழா நிகழ்வு - வெலிகம ரிம்ஸா முஹம்மத் -

விவரங்கள்
- வெலிகம ரிம்ஸா முஹம்மத் -
நிகழ்வுகள்
12 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மக்கொன ஸுல்பிகா எம். ஸாலிஹ் ஸினான் எழுதிய சிந்திக்க மறந்த உள்ளங்கள் மற்றும்  எழுத்தாளர் திக்குவல்லை ஸஃப்வான் அவர்களது வாப்பாவுக்கு ஒரு சால்வை நூல் ஆகிய இரண்டு சிறுகதை நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் 2022.10.16 ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 02.30 மணிக்கு பேருவலை, மருதானையிலுள்ள அல் பாஸியதுல் நஸ்ரியா முஸ்லிம் மகளிர் கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

ஓய்வு பெற்ற அதிபர் அல்ஹாஜ் அப்துல் அஃலாவின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், இரத்தினக்கல் வியாபாரிகளான அல்ஹாஜ் எம்.ரீ.எம். ஹாரிஸ் மற்றும் அல்ஹாஜ் அஸ்ஹர் ஸவாஹிர் ஆகியோர்கள் நூல்களின் முதல் பிரதிகளைப் பெற்றுக்கொள்வார்கள்.

மேலும் படிக்க ...

பொன்னியின் செல்வன் பார்த்தேன்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
11 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நேற்று இரவு 7.30 காட்சியாகப் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தைக் குடும்பத்தினருடன் சென்று TIFF திரையரங்கில் பார்த்தேன். சென்றவாரம் 'டிக்கற்' எடுத்திருந்தேன். மூன்றாவது வரிசையில்தான் இடம் கிடைத்திருந்தது. இன்று காட்சி 'ஹவுஸ் ஃபுல்'. எல்லோருக்கும் நன்கு பிடித்திருந்தது. மகள்மார் இருவரும் PS 2 பார்ப்பதற்கு இப்பொழுதே ஆர்வமாகவிருக்கின்றார்கள்.  படம் பார்க்க முன் வந்தியத்தேவன் வேடத்திற்கு கார்த்தி எவ்விதம் பொருந்துவார் என்பதில் சந்தேகமிருந்தது. படம் பார்த்த பின்னர் என் முடிவை மாற்றிக்கொள்ளும் வகையில் கார்த்தியை வந்தியத்தேவனாக மாற்றுவதில் இயக்குநர் மணிரத்தினம் வெற்றியடைந்திருக்கின்றார் என்றே கூறுவேன்.

மேலும் படிக்க ...

'பண்பாட்டுப் பெட்டகம்' நூல் வெளியீட்டு விழா!

விவரங்கள்
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா -
நிகழ்வுகள்
11 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

சிறுகதை: மாட்டுப் பிரச்சனை - கடல்புத்திரன் -

விவரங்கள்
- கடல்புத்திரன் -
சிறுகதை
10 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சலீம்மைத் தேடி சிற்ரரஞ்சன்,பாபு,இன்னும் இருவர் வந்திருந்தார்கள்."தோழர் இவர்கள் மாட்டுப் பிரச்சனையைக் கொண்டு வாரார்கள்  . " எங்களை வந்து தீர்க்கட்டாம் " என்ற ரஞ்சஜனைப் பார்த்து "பிரச்சனையைக் கூறு" என்றவன், யோசித்து விட்டு."கேட்டடியிலே நின்று கதைக்க வேண்டாம், உள்ளே  வாருங்கள் " கூட்டிச் சென்றான்.  வாடகையில்  'ராஜ' களையுடன் இருக்கிற அந்த பெரிய பழைய வீடு   வந்தாரை வாழ வைக்கும் .  வெளியிலுள்ள பூச்சுக்கள் கழன்று பெரிதாக விழுந்திருக்கவில்லை . உள்ளுக்க தான் அங்காங்கே விழுந்து கொஞ்சம் அலங்கோலமாக இருக்கிறது .  அந்த காலத்தில், முருகைக்கற்களை  வைத்து  சுண்ணாம்புக் காறையால் கட்டிய தடித்த சுவர்களை உடையது . செல்லடிக்கெல்லாம் லேசிலே விழுந்து விடாது பயப்படாமல் நிற்க வல்லது . வக்கீலுக்குச் சொந்தமாக பழைய சங்கக் கடை இருந்த   இதே போன்ற  வீட்டை  திருத்தி  புது வீடாக்கி இருக்கிறார் . "  பாரம் குறைந்த (முருகைக்) கல் வீடு ,உறுதிப் படைத்தது ! " .அவருக்கு தெரிந்திருக்கிறது . எங்களைப்  போல வெங்காயம் என்றால் அதை தகர்த்து விட்டு புதியதாய்க் கட்டியிருப்போம் . இந்தியனாமி  ,பாலத்தடியிலே இருந்த கிறிஸ்தவ சுடலையிருந்து அடித்த செல்லிலே பாதுகாப்பற்றதாக 'கொல கொல'த்திருக்கும் . ஆனால் நாம் ஓடியது அந்த வீட்டுக்குத் தான் . நாம் ( அம்மா , தங்கச்சி , அவர்கள் எல்லோரும் ) சுவரை ஒட்டியே இருந்தோம் .  அந்த வீடு இன்றும் இருக்கிறது . ஆனால் நாம் இருந்தது ...இப்ப இல்லை . உள்ளுக்க ஒரு அழுகை இருக்கிறது .

          எங்க வீட்டின் கதை ஆச்சரியமானது . சொந்தக்காரர் ஒரு இன்ஜினியர் . தனது கனவு இல்லமாக கட்ட வெளிக்கிட்டாராம் . டையினிங் ரூமை வாசிகசாலை பெரிய மேசை வைக்கக் கூடிய மாதிரி நீட்டி  மண்டபமாக்கி விட்டிருந்தார் . நிஜமாகவே மண்டபத்துண்டு தான் .  மூன்று பக்கமும் ஜன்னல்களுடன் பின் வாசல்  கதவு . அப்படியே இறங்கி தோட்டத்திற்குள் ( வளவுக்குள் ) பிரவேசிக்கலாம் . வரிசைக்கு நல்ல இடைவெளியுடன் வைக்கப்பட்ட தென்னை மரங்கள் . பூவரச மரங்களுடன் கூடிய (கம்பி) வேலி வீடு வீதியோடு ஒட்டிய தோடு இருக்கிற நீளத்திற்கு  சற்று தூரம் வரையில் உயர்ந்த மதில் சுவர் .அடுத்து சிறிய நீளத்திற்கு செவவரத்தை மரங்கள் .செடி மரம் போல வளர்ந்த்து பூக்களாக பூத்து தள்ளும் . காலையிலே ஐயர் வீட்டினர் வீதியிலே இருந்தே பூவை பறித்து விட்டுச் செல்வர் . பின்வளவு மூலையில் பெரிய புளியம் மரம் ,அடுத்து வீட்டுப் பக்கமும் கிளையை பரப்பு பகிர்ந்து கொண்டு கம்பீரமாக நிற்கிறது  . பின்வளவின் மத்தியிலே இரண்டு கழிவறைகளுடன் நிற்கும் கூண்டு . இடதுபுறமாக சிமேந்துப்பலகை மூடிய கிடங்கு . அதில் பொறியியல் இன்னமும் தேவைப்படுவதாக நினைக்கிறான். அவர்கள் நினைக்கிற வட்டம் ....நடைபெறுவதில்லை எனப்படுகிறது . உக்கப்படுவதை ஊக்குவிக்க ஏதாவது இரசாயனம் சேர்க்கப்பட வேண்டுமோ ?

மேலும் படிக்க ...

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இலக்கியத் திறனாய்வாளர் அமரர் கே. எஸ். சிவகுமாரன் வாழ்வை கொண்டாடுதல் - தகவல்: முருகபூபதி -

விவரங்கள்
- தகவல்: முருகபூபதி -
நிகழ்வுகள்
10 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கையில் அண்மையில் மறைந்த மூத்த எழுத்தாளரும், ஊடகவியலாளரும் இலக்கியத் திறனாய்வாளருமான கே. எஸ். சிவகுமாரன் அவர்களின் வாழ்வையும் பணிகளையும் பற்றி உரையாடும் வகையில்,  அன்னாரை கொண்டாடும் நிகழ்ச்சியினை அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இம்மாதம் 15 ஆம் திகதி ( 15-10-2022 ) சனிக்கிழமை மெய்நிகரில் ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வில் இணைந்துகொள்ளுமாறு கலை, இலக்கியவாதிகளையும் ஊடகவியலாளர்களையும்  அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம்  அன்புடன் அழைக்கின்றது.

மேலும் படிக்க ...

நிட்டின் கோக்லே, கவிஞர் ஜெயபாலன் பேட்டி, கலாநிதி அகிலன் கதிர்காமரின் கூற்று, மற்றும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி பற்றி... (6 - 12) - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
07 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

6

தம்மை பதவியில் இருந்து நீக்கியதில் அமெரிக்கா நேரடியாக சம்பந்தப்பட்டு இருந்தது என்று இம்ரான் கான் பகிரங்கமாக தெரிவித்த குற்றச்சாட்டில் உண்மை இருக்கலாம். அல்லது இல்லாமலும் இருக்கலாம்.  ஆனால், அவரது அமைச்சர்களில் ஒருவர் (Mifta Ismail) ஏற்கனவே இம்ரான்கான், பெப்ரவரியில் அறிவித்திருந்த மக்களுக்கான உதவி பொதியை உடனடியாக வாபஸ் பெற்றுவிட்டு IMFஇன் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு அது பிரயோகிக்கும் ஓர் பொறிமுறையை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்ற ஓர் கோரிக்கையின் பின்னணியிலேயே இம்ரானின் பதவிபறிப்பு நிகழ்ந்தேறியதாக  அவர் குற்றம் சாட்டியிருந்தார் (22.04.2022). பாகிஸ்தானின் இம்ரான் கானுக்கு முந்தைய அரசு, 25 கோடி டொலரை, துண்டு விழும் தொகையாக அறிவித்திருந்தது. அது பின்னர், 1.3 ட்ரில்லியன் பாகிஸ்தான்-ரூபாயாக வளர்ச்சி கண்டிருந்தது என்பது அறிந்த ஒன்றே. IMFஇன் கோரிக்கைகளில் ஒன்று, 21 ரூபாயாக இருந்த பெற்றோலின் விலையை, பாகிஸ்தான், உடனடியாக 134 ரூபாவாக மாற்றியமைக்க வேண்டும் என்பதனையும் உள்ளடக்கும்.

எண்ணெய் தொடர்பில், இலங்கை போன்றே பாகிஸ்தானும் சலுகைகளை தன் மக்களுக்கு அளித்து வந்த காலம், அந்த காலம். கூடவே, பாகிஸ்தானின் கடன் முறி உள்ளடங்கலான, வெளிக்கடன் 130,192 மில்லியன் டொலர்களாகும். (அதாவது 130.2 பில்லியன்களாகும்) - இதில் 30 கோடி டொலர்  சீனக்கடன் 30மூ  எனவும் கூறப்படுகின்றது.

அதாவது, 2006 இல், வெறும் 37.2 பில்லியன் டொலராக இருந்த பாகிஸ்தானின் வெளிநாட்டு கடன், இன்று மேற்படி 130.2 பில்லியன் டொலராக பரிணமித்துள்ளது என்பதும், இதில் IMFஇன் திட்டமிடுதல் எந்தளவுக்கு பங்கு வகிக்கின்றது என்பதும் எழக்கூடிய கேள்விகளில் ஒன்றாகும். ஏனெனில் இதுவரையில், பாகிஸ்தான், IMFஇடம் 22 முறையில் கடன் வாங்கிய சரித்திரத்தை கொண்டுள்ளது, என்பதுவே இங்கே முக்கியமானதாகின்றது.  சுருக்கமாக கூறினால், இம்ரான்கானின் பதவி பறிப்பு என்ற ஓர் நிகழ்வின் பின்னணியில், பாகிஸ்தான் என்ற ஓர் நாட்டை வீழ்த்தும் பொருளாதார பொறி, அந்நாட்டின் அரசியலையும் தீர்மானிக்கும் வலுவான காரணியாகின்றதா என்ற கேள்வி, சந்தேகத்துக்கிடமில்லாத வகையில் முன்னோக்கி நகர்வதாயுள்ளது.

மேலும் படிக்க ...

'நடந்தாய் வாழி களனி கங்கை' ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் வெளியீடு!

விவரங்கள்
- தகவல் - முருகபூபதி -
நிகழ்வுகள்
07 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

இயக்குநர் மணிரத்தினம் தவறவிட்ட அரிய வாய்ப்புகள் இரண்டு - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
06 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1. 'அலைகடலும் தூங்கையிலே அகக்கடல்தான் பொங்குவதேன்'

பொன்னியின் செல்வனில் வரும் இப்பாடல் இலட்சக்கணக்கான பொன்னியின் செல்வன் வாசகர்களைக் கவர்ந்த பாடல். ஆனால் இதனை இயக்குநர் மணிரத்தினம் 'பொன்னியின் செல்வன் 1'இல் பாவிக்கத்தவறி விட்டார். இன்னும் நான் இத்திரைப்படத்தைப் பார்க்கவில்லை. பார்த்த என் தங்கையொருத்தியின் கூற்றுப்படி படத்தில் இப்பாடலில்லை. மிகவும் அரியதொரு சந்தர்ப்பத்தை இவ்விடயத்தில் தவற விட்டதாகவே நான் கருதுகின்றேன். எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் புனைவதிலும் வல்லவர்கள். அது மட்டுமல்ல இருவருமே தம் நாவல்களில் வரும் பாத்திரங்களுக்கேற்பக் கவிதைகள் எழுதி, தம் நாவல்களில் இணைப்பதில் வல்லவர்கள். கல்கி தன் பொன்னியின் செல்வன் நாவலில் வரும் ஓடக்காரப்பெண் பூங்குழலியின் உணர்வுகளை மையமாக வைத்துக் கவிதையொன்று எழுதியிருப்பார். அந்தக் கவிதை ஒரு முறை வாசித்தாலும் வாசிப்பவர் நெஞ்சினை விட்டு அகலாத தன்மை மிக்கது.

'அலைகடலும் ஓய்ந்திருக்க அகக்கடல்தான் பொங்குவதேன்?' என்னும் அவரது கவிதையானது ஓடக்காரப்பெண் பூங்குழலியின் சோகம் ததும்பிய நிலையினைத்தெரிவிப்பது. பொன்னியின் செல்வன் நாவலில் வரும் அந்தக்கட்டத்தினையும், அந்தக்கவிதை வரிகளையும் என்னால் ஒருபோதுமே மறக்க முடியாது. ஒரு படைப்பானது இது போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிச்சிறந்து விளங்குகின்றது.

மேலும் படிக்க ...

நிட்டின் கோக்லே, கவிஞர் ஜெயபாலன் பேட்டி, கலாநிதி அகிலன் கதிர்காமரின் கூற்று, மற்றும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி பற்றி...(1 -5) - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
06 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1

அண்மையில் வெளிவந்த நிட்டின் கோக்லேயின் பேட்டி மிகுந்த பரபரப்பை, சர்வதேச மட்டத்தில் எழுப்புவதாக அமைந்திருந்தது. பல்வேறு, மிக அர்த்தமுள்ள கேள்விகளை எழுப்பிய இப்பேட்டியானது, அண்மையில் வெளிவந்திருந்த இன்னுமொரு பேட்டியான, கவிஞர் ஜெயபாலன் அவர்களின் பேட்டிக்கு நேரெதிராக அமைந்திருந்தது, அதன் முக்கியத்துவத்தை குறித்து காட்டுவதாக அமைந்து போனது.  ‘ஒன்று சேர்ந்து, கப்பலை கரையேற்றுவோம்’ அல்லது ‘ஒன்று சேர்ந்து கப்பலை காப்பாற்றுவோம்’ என்பதே கவிஞர் ஜெயபாலன் பேட்டியின் தொனிபொருளாக இருந்த போதிலும், கோக்லேயின் பேட்டியானது கப்பல் செல்ல உத்தேசித்திருக்கும் ‘திசையை’ இலை மறை காய் மறையாக காட்டி நின்றதே அதன் அடிப்படை சிறப்பு எனலாம். அதாவது ஒருபுறம் அவா – கவிஞனின் கனவு – கவிஞனின் லட்சியம். மறுபுறம், நடைமுறை யதார்த்தம்.


2

இரண்டு பேட்டிகளும், சொல்லி வைத்தாற்போல் ஜெனீவா கொண்டாட்டத்தின் இடைநடுவே வெளிவந்த போதிலும், இரண்டுமே அது குறித்து எந்த ஒரு அக்கறையும் காட்டி நில்லாது இருந்தமை பேட்டிகளின் இன்னுமொரு சிறப்பம்சம் என கருதலாம். வருடந்தோரும் வந்து போகும் சரஸ்வதி பூஜையை போல, இதுவும் கடந்த பல வருடங்களாய் வந்து போவதால் ஏற்பட்ட சலிப்பின் காரணமாகவும் இவ் அசட்டை தோன்றியிருக்க வாய்ப்புண்டு.  எனினும் ஜெனீவா முன்னெடுப்புக்கான நகர்வுகள் ஆரம்பிக்கப்பட்டு, அரங்கேற்றி கொண்டிருந்த போது ‘தினக்குரலில்’ அடுத்தடுத்து வந்த இரு செய்திகள் ஓரளவில் திகைப்பை தருவனவாக இருந்தன. ஒன்று ‘26 வருடங்களாய்  போராடிய இன்னொரு தாய் (விக்னேஸ்வரன் வாகீஸ்வரி) நீதி கிடைக்காது மரணமானார்’  என்பதும் ‘மனித உரிமை பேரவை தலைவரை பீரிஸ் சந்தித்தார்’ என கூறி பீரிஸ் அவர்கள், மனித உரிமை பேரவை தலைவருடன் கைகுலுக்கி கொண்டிருக்கும் காட்சி படத்துடன் வெளிவந்தது (17.06.2022).  இது, விடயங்களின் சாராம்சத்தை கூறுவதாய் அமைந்து போனது.

மேலும் படிக்க ...

தொடர்கதை - நவீன விக்கிரமாதித்தன் (3) - மனவெளி நண்பர்கள் - சதுரன் & வட்டநிலா தம்பதியினர்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
நாவல்
05 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அத்தியாயம் மூன்று - மனவெளி நண்பர்கள் -  சதுரன் & வட்டநிலா தம்பதியினர்!

தட்டையர்கள் என்  மனவெளி நண்பர்களில் முக்கியமானவர்கள். உண்மையில் இவர்கள் எம் படைப்புகள். அவர்களுடன் நான் அவ்வப்போது உரையாடுவதுண்டு. மனவெளி உரையாடல்கள்தாம். தட்டையர்கள் உலகுக்கு விஜயம் செய்வதென்றால் எனக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. பரிமாண வித்தியாசங்கள் எங்களுக்கிடையில் ஏற்படுத்திய வித்தியாசங்கள் எங்களுக்கு மிகவும் சாதகமாகவிருக்கின்றன. அதனால் தட்டையர்கள் உலகு எப்பொழுதும் எனக்கு உவப்பானதாகவே இருக்கின்றது. தட்டையர்கள் உலகில் நான் எப்போதுமே உவகையுறுவதற்கு முக்கிய காரணங்களிலொன்று என்னவென்று நினைக்கின்றீர்கள்? மானுடப் படைப்பிலுள்ள பலவீனங்களிலொன்றுதான். ஏனெனில் அங்கு நான் அவர்களைவிட எல்லாவகையிலும் உயர்ந்தவன். என்னை மீறி அங்கு எவையுமேயில்லை. இது போதாதா என் உவகைக்கு. அதனால்தான் என்னைச் சுற்றித் தட்டையர்கள் உலகங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இரவு வானத்துச் சுடர்களைப்போல் அவை என்னைச்சுற்றிக் கண்களைச் சிமிட்டுகின்றன. தட்டையர்கள் உலகத்து உயிர்களுக்கும் எம்முலகத்து உயிர்களுக்குமிடையில் தோற்றத்தில்  வேறுபாடுகள் பெரிதாக இல்லை. அவர்கள் எம்மைபோல் கனமானவர்கள் அல்லர். தட்டையர்கள்.   முக்கிய வேறுபாடு  மிகப்பெரிய வேறுபாடென்பேன். அந்த ஒரு வேறுபாடு போதும் அனைத்தையுமே மாற்றி வைப்பதற்கு. ஆம்! பரிமாணங்களில் எம்மை மிஞ்சிட அவற்றால் முடியவே முடியாது. அவர்களால் ஒருபோதுமே அவர்களது பரிமாணச்சுவர்களை மீறவே முடியாது. இப்படித்தான் பரிமாணம் மிகு உலகத்து உயிர்களெல்லாம் எம்மைப்பற்றியும் எண்ணக்கூடுமென்று நான் அவ்வப்போது எண்ணுவதுண்டு. உண்மையில் பரிமாண மிகு நண்பனொருவனும் என் மனவெளி நண்பர்களிலொருவனே. அவனுடனும் நான் அவ்வபோது தனிமையில் நேரம் கிடைக்கும்போது உரையாடுவதுண்டு. அதுபற்றி பின்னர் சந்தர்ப்பம் கிடைக்கையில் கூறுவேன்.

மேலும் படிக்க ...

சிறுகதை :காலமும் கனியும் - விமல் பரம். -

விவரங்கள்
- விமல் பரம். -
சிறுகதை
05 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அப்பாவை இழந்து ஒரு வருடமாகி விட்டது. அதன் தாக்கம் இன்னும் எங்களை விட்டுப் போகவில்லை. அன்று நடந்த விபத்திலிருந்து அம்மா மீண்டு வந்ததே அதிசயம். அவளின் உடல்நிலை முழுமையாக குணமாகவில்லை பெரும்பொழுது படுக்கையிலேயே கழிகிறது.

“படிப்பை விட்டிடாதை ஒ எல் சோதினையை எடுத்து பாஸ் பண்ணுடா”

அப்பா போனதில் இருந்து இதையே சொல்லிக் கொண்டிருக்கிறாள். தம்பியைப் படிக்க அனுப்பினேன்.

“நானும் படிக்கப் போனால் குடும்பத்தை ஆரம்மா பாக்கிறது. படிக்கிறதுக்கு உதவி கிடைச்சாலும் நாளாந்த செலவுக்கு நான்தானே உழைக்கவேணும்”

“பதினெழு வயசு படிக்கிற வயசடா. நீயும் படிக்கவேணும் எண்டு அப்பா ஆசைப்பட்டாரே.. படிக்கிற வயசில எந்த வேலைக்குப் போவாய். அப்பா மாதிரி கூலி வேலைக்குத்தான் போகவேணும். வேண்டாமடா அப்பா ஏமாந்ததும் துன்பப்பட்டதும் போதும் நீ படிக்கப் போடா” அம்மா கெஞ்சினாள்.

வருமானம் இல்லாமல் எப்படிப் படிக்கமுடியும். அப்பாவின் இடத்திலிருந்து இனி இவர்களை நான்தானே பார்க்கவேணும் அப்பா இருந்திருந்தால் இந்த நிலைமை வருமா. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தேன் அன்று நடந்ததை இன்றும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

மேலும் படிக்க ...

ஓவியர் வினுவின் பொன்னியின் செல்வன் ஓவியங்கள் சில! - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
இலக்கியம்
04 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1. அண்ணலும் நோக்கினாள்! அவளும் நோக்கினாள்!

வந்தியத்தேவன், குந்தவைப்பிராட்டியார் & பெரிய பழுவேட்டரையர். ஓவியர் வினுவின் கைவண்ணம். வந்தியத்தேவன், குந்தவை இருவரும் ஒருவரை ஒருவர் உற்று நோக்குவதாக வரைந்திருக்கும் ஓவியர் வினுவின் ஓவியத்திலிருக்கும் உயிர்த்துடிப்பு அனைவரையும் கவருமொன்று. 'கண்ணொடு கண் இணை கவ்வி. ஒன்றை ஒன்று உண்ணவும். நிலைபெறாது உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான். அவளும் நோக்கினாள்' என்னும் கம்பரின் வரிகள் நினைவுக்கு வருகின்றன.

'எண்ணரு நலத்தினாள் இணையள் நின்றுழி,
கண்ணொடு கண் இணை கவ்வி ஒன்றை ஒன்று
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்.' - கம்பர்

மேலும் படிக்க ...

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணைய வழிக் கலந்துரையாடல்

விவரங்கள்
- தகவல்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
03 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

தொடரும் யாழ் நூலக எரிப்பு பற்றிய சர்ச்சை! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
சமூகம்
03 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- எழுத்தாளர் என்.செல்வராஜா -

'நூலகர் திருமதி ரூபவதி நடராஜா' என்னும் அக்டோபர் 2022 'தாய்வீடு' பத்திரிகையில் வெளியான தனது கட்டுரையில் எழுத்தாளர் என்.செல்வராஜா பின்வருமாறு கூறுகின்றார்:

'இந்நிலையில் யாழ்ப்பாண நூலகம் 1981 மே மாதம் 31ம் திகதி பின்னிரவில் அரச கூலிப்படையினரால்  தீ வைக்கப்பட்டது. 97 ஆயிரம் புத்தகங்களும்  தளபாடங்களும் ஒரு சில மணி நேரத்தில் எரிந்து தணியக் கூடியவையா என்ன? மே 31 பின்னிரவில் தொடங்கி, ஜூன் மாதம் 1ம் திகதியும் சுற்றாடலில் பிரகடனப்படுத்தப்படாத ஊரடங்கை துப்பாக்கி முனையில் பிறப்பித்து விட்டு, தீயணைப்புப் படையினரையும் நுழையவிடாது ஒட்டுமொத்த நூலகத்தையும் எரித்துச் சாம்பலாக்கிவிட்டே அந்தக் கயவர்கள் அங்கிருந்து விலகிச் சென்றார்கள்.'

மேலும் படிக்க ...

தொடர் கதை - நவீன விக்கிரமாதித்தன் (பாகம் ஒன்று - ஆளுமை) - அத்தியாயம் இரண்டு - மாநகரத்து மாமழையும், மனோரஞ்சிதமும்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
நாவல்
02 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அத்தியாயம் இரண்டு: மாநகரத்து மாமழையும், மனோரஞ்சிதமும்!

இருண்டிருக்கும் மாநகரத்திரவு.
இருளைக்கிழித்தொரு மின்னலின் கோடிழுப்பு.
இடியின் பேரொலி.
யன்னலினூடு  பேசாத்திரைப்படமாய்
மழைக்காட்சி விரிகிறதெதிரே.

கட்டடக்காட்டு விருட்சமொன்றின் பொந்துக்குள்ளிருந்து பெய்யும் மாநகரத்து மழையைப் பார்த்துக்கொண்டிருக்கின்றேன். சலனப்படமொன்றின் நிகழ்வுகளைப் பார்த்துக்கொண்டிருப்பதைப்ப் போல் வானம் பொத்துக்கொண்டு பெய்துகொண்டிருக்கின்றது. இயற்கை நிகழ்வுகளில் எனக்குப் பிடித்த நிகழ்வு பொழியும் மழை. பெய்யும் மழையை இரசிப்பதிலுள்ள சுகமே தனி. பால்ய பருவத்தில் 'மழையே வா' என்று வரவேற்று பாடியது தொடக்கம், காகிதக் கப்பலை பீலியால் வீழ்ந்து ஓடும் நீரில் விடுவது தொடக்கம் ஆரம்பித்த தொடர்பு. பின்னர் பதின்ம வயதுகளிலும் தொடர்ந்தது. இரவு மழை, வயற்புறத்து மண்டூகங்களின் இசைக்கச்சேரி, சடசடக்கும் ஓட்டுக்கூரைகளில் பட்டுத்தெறிக்கும் நீரொலி, இடையிடையே மின்னும் மின்னல் நங்கையரின் ஒளியழகு, தொடரும் உருண்டோடும் பேரிடியோசை. இவற்றைப் படுக்கையில் படுத்திருந்தபடி இரசிப்பதிலுள்ள சுகம் தனித்துவம் மிக்கது. சில சமயங்களில் பகல் மழைகளில் .நாற்சாரப் பீலிகளிலிருந்து நீர் வீழ்ச்சியெனப் பாயும் நீரில் குளித்து மகிழ்வதிலென்னை மறந்திருக்கின்றேன்.

எழுத்துகள் எவ்வகையியாயினும் , கவிதை, கதை, கட்டுரை எவ்வகையினதாயினும் அவற்றில் விபரிக்கப்படும் மழைக்காட்சிகள் என் வாசிப்பனுபவங்களுக்கு இன்பத்தைத் தந்தன. எத்தனை மழைக்காட்சிகளில் என்னை நான் பறி கொடுத்திருக்கின்றேன்.

மேலும் படிக்க ...

பொன்னியின் செல்வன் : படித்தது அல்ல , பார்த்தது ! தலைமுறை தாண்டியும் பேசப்படும் வரலாற்றுப் புனைவு !! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
02 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சில மாதங்களுக்கு முன்னர்,  நியூசிலாந்திலிருந்து  ஊடக நண்பர் சத்தார், மெய்நிகரில் என்னை பேட்டி கண்டபோது,  “கல்கியின் பொன்னியின் செல்வனை நான் இதுவரையில் படித்ததில்லை  “ என்று சொன்னதும், அவர் ஆச்சரியமுற்றார். அதன்பிறகு, எனது மனைவி மாலதி,  “ பொன்னியின் செல்வனை படிக்காத நீங்களும் எழுத்தாளரா..?   “ எனக்கேட்டார்.  “ ஆம், பொன்னியின் செல்வனைப் படிக்காதமையால்தான் நான் எழுத்தாளனாக இருக்கின்றேன். அந்தத்  தொடர்கதையை கல்கியில் படித்தவர்கள் பல ஆயிரம்பேர் இருக்கலாம். அவர்கள் எல்லோரும் எழுத்தாளர்களாகிவிட்டார்களா.. ?  “ எனக்கேட்டேன்.  “ இது குதர்க்க வாதம்  “ என்றார் மனைவி.

மணிரத்தினத்தின் இயக்கத்தில் ஜெயமோகனின் வசனத்தில் கல்கியின் பொன்னியின் செல்வன், நான் வதியும் ஆஸ்திரேலியாவில் மெல்பன் திரையரங்கிற்கு  இம்மாதம் 30 ஆம் திகதி வந்ததும்,  அதனை கதையாக இதுவரையில் படித்திராத, அதனை எழுதிய எழுத்தாளர் கல்கி பற்றி எதுவித குறிப்புகளும் அறியாத 1980 இற்குப்பின்னர் பிறந்த எனது இரண்டு  மகள்மாரும் மற்றும் இரண்டு பெறாமகள்மாரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்ப்பதற்காக என்னை தனித்தனியாக அழைத்தனர். இதில் என்ன ஆச்சரியம் என்றால், நான் மெல்பனில் வசிக்கும் புறநகரமான மோர்வெல் பிரதேச  திரையரங்கில், இதற்கு முன்னர் எந்தவொரு தமிழ்த் திரைப்படமும் காண்பிக்கப்படவில்லை.  அந்தப்பிரதேசத்தில் வசிக்கும் மருத்துவரான ஒரு பெறாமகள்,  “ அங்கிள், பொன்னியின் செல்வன் பார்ப்போம் வாருங்கள்  “ என்றார். “ மெல்பன் நகருக்குள் வசிக்கும் எனது மூத்த மகள் அழைத்துவிட்டாள்,  அவளுடன் மெல்பனில் பார்க்கச்செல்கிறேன் “  என்றேன். இவ்வாறு பொன்னியின் செல்வன் திரைப்படம் எங்கள் குடும்பத்திற்குள் கொண்டாடப்பட்டது.

மேலும் படிக்க ...

பண்ணையில் ஒரு மிருகம் - நூல் விமர்சனம் - கிறிஸ்டி நல்லரெத்தினம் -

விவரங்கள்
- கிறிஸ்டி நல்லரெத்தினம் -
கிறிஸ்டி நல்லரெத்தினம்
02 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சரி, இந்த குன்றின் மேல் ஏறிக்கொள்ளுங்கள். அதோ தெரிகிறதே..பார்த்தீர்களா?...அந்த அயனாவரம் கிராமம்தான் எமது கதைக்களம். அதற்கு அடுத்துள்ள கிராமம் பண்டூர். சாதியால் பிரிந்து கிடக்கும் இரு கிராமங்களை காண்கிறோம். அதோ தெரியும் நான்கு ஓட்டுவீடுகளும் அதைச்சுற்றியுள்ள நாற்பது ஓலைக்குடிசைகளும் அவற்றை ஒட்டி ஓடும் அந்த குளக்கரையுமே நீங்கள் சஞ்சரிக்கப்போகும் தளங்கள். தளம் என்றா சொன்னேன்? வெவ்வேறு மட்டங்களில் ஓலை, ஓடு என பிரிந்து கிடக்கும் இந்த சமுதாய கட்டமைப்பை வேறு என்னவென்று கூறுவதாம்?

செங்கல்பட்டிற்கு அருகே உள்ள இந்த 150 ஏக்கர் பண்ணைக்குள் ஆசிரியர் பல பாத்திரங்களை தன் எண்ணக்கூடையில நிரப்பிவந்து இங்கே கொட்டுகிறார். எண்ணிக்கொள்ளுங்கள்: கதைசொல்லி இலங்கை கால்நடை வைத்தியர், பண்ணை மனேஜர் கறுப்பையா, முதலாளி நீலமேகம், பண்ணை வாசிகள்: மாணிக்கம், கிருஷ்ணன், வீரராகவன், பால்காரர் ராமசாமி, மேஸ்திரி, நாயகி: கமலம், பார்வதி, சுமதி, சிறுவர்கள் : ராசு, ராமு, சுப்பு, அறுபது மாடுகள் : சிவப்பி, பொன்னி, மூக்கன் கடா. ஆடுகள்: வேலன். பயிர்கள்: நிலக்கடலை, காய்கறி போதுமா? இல்லையென்றால் அமானுஷ்ய பாத்திரமான கற்பகத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

மேலும் படிக்க ...

அறிவித்தல் : தேனருவி ரேடியோ - தகவல் - பிரபா சங்கவி -

விவரங்கள்
- பிரபா சங்கவி -
நிகழ்வுகள்
29 செப்டம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

முருகபூபதியின் பாரதி தரிசனம் நூல் வெளியீடு. - தகவல் - முருகபூபதி -

விவரங்கள்
- தகவல் - முருகபூபதி -
நிகழ்வுகள்
29 செப்டம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மெய்நிகர் அரங்கு ( 11-09-2022 )  காணொளி - https://youtu.be/9XKG3bJ-77I

மேலும் படிக்க ...

தொடர்நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (பாகம் ஒன்று - ஆளுமை) - அத்தியாயம் ஒன்று - நான் விக்கிரமாதித்தன் பேசுகின்றேன்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
நாவல்
29 செப்டம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அத்தியாயம் ஒன்று -  நான் விக்கிரமாதித்தன் பேசுகின்றேன்!

என் பெயர் விக்கிரமாதித்தன்.  என்னை நன்கு அறிந்த சிலர் என்னை நவீன விக்கிரமாதித்தனென்றும் கூறுவார்கள். முற்றும் தளராத விக்கிரமன் - விக்கிரமாதித்தன் - எவ்விதம் மீண்டும் மீண்டும்  முருங்கை மரத்திலேறி வேதாளம் குடியிருக்கும் தொங்குமுடலைத்  தூக்கி வருவானோ அவனைப்போன்றவனே நானும். முயற்சி செய்வதில் எனக்குச் சலிப்பில்லை.மீண்டும் மீண்டும் முயற்சி செய்வதில் எனக்குப் பெருங்களிப்பு என்று வேண்டுமானால் நீங்கள் கருதலாம். அதிலெனக்கு எவ்விதம் ஆட்சேபணையுமில்லை.

அட்டா, வித்தியாசமானவனாக இருக்கின்றானே இவன் என்று நீங்கள் எண்ணுவதை என்னால் நன்றாகவே உணர்ந்துகொள்ள முடிகின்றது. இங்கு நான் கூறப்போவது என்னைப்பற்றி. எனது எண்ணங்கள், என் வாழ்க்கைச் சம்பவங்கள் இவற்றைப்பற்றி. என் குறிப்பேடுகள் பலவற்றையும் இங்கு நான் உங்களுடன் அவ்வப்போது பகிர்ந்துகொள்வேன். அவை என்னைப்பற்றிய சரியானதொரு சித்திரத்தை உங்களுக்கு அறியத்தரலாம். கோடியிலொருவனான ஒரு சாதாரண மானுடன் இவனைப்பற்றி அறிவதிலென்ன சுவாரசியமிருக்க முடியுமென்று நீங்கள் கேட்பது என் காதுகளில் விழுகின்றது. இதற்கு நான் கூறப்போகும் பதிலிதுதான்: 'மகா காலக்சிகளை உள்ளடக்கியுள்ள மிகச்சாதாரணமான சுடரொன்றின் கோள்களிலொன்றில்தான் நாம் , மானுடர்கள் வாழ்கின்றோம். அவ்வகையில் ஒவ்வோருயிரும் இங்கு முக்கியத்துவம் மிக்கதுதான்.அவ்வகையில் நானும் முக்கியத்துவம் மிக்கவனே என்பது என் தீர்க்கமான நம்பிக்கை.

மேலும் படிக்க ...

'பொன்னியின் செல்வன்' நாவல் பற்றிய நினைவுக் குறிப்புகள்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
28 செப்டம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 பொன்னியின் செல்வன் நாவல் பற்றி அவ்வப்போது எழுதிய குறிப்ப்புகளிவை. பெரும்பாலும் எனது முகநூற்  பக்கத்தில் வெளியானவை. அனைத்தையும் தொகுத்து இங்கு தந்திருக்கின்றேன். இக்குறிப்புகள் ஏற்கனவே பதிவுகள் இணைய இதழிலிலும்  அவ்வப்போது துண்டு துண்டாக வெளியானவைதாம். 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வெளியாகவுள்ள இத்தருணத்தில் இக்குறிப்புகளை வாசிப்பதும் இனிமையானதுதான். - வ.ந.கி - -


அழியாத கோலங்கள்: பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவனும்,, நந்தினியும் (ஓவியர் வினுவின் கை வண்ணத்தில்)

மானுடராகிய நாம் பல்வகை உணர்வுகளுக்கும் உட்பட்டவர்கள். எப்பொழுதுமே தீவிரமாக சிந்தித்துக்கொண்டிருப்பவர்கள் அல்லர். நகைச்சுவையைக் கேட்டுச் சிரிப்பவர்கள்; நல்ல கலையை இரசிப்பவர்கள். நல்ல நூல்களைச் சுவைப்பவர்கள்.

நல்ல நூல்கள், நல்ல கலைகள் என்னும்போது அவற்றிலும் பல பிரிவுகளுள்ளன. உதாரணத்துக்கு நூல்களை எடுத்துக்கொள்வோம். ஆரம்பத்தில் அம்மா தூக்கி வைத்து, சந்திரனைக் காட்டிக் கதை கூறிச் சாப்பிட வைத்ததிலிருந்து கதைகளுடனான எம் தொடர்பு ஆரம்பமாகின்றது. பின்னர் குழந்தை இலக்கியப்படைப்புகள் (அம்புலிமாமா, கண்ணன் போன்ற சஞ்சிகைகள் , சிறுவர் பகுதிகள், குழந்தைப்பாடல்கள் போன்ற) , வெகுசன இலக்கியப்படைப்புகள் என்று வளர்ச்சியடைந்து பின்னர் பல்வகை தீவிர இலக்கியப்போக்குகளை உள்ளடக்கிய தீவிர வாசிப்புக்கு வந்தடைகின்றோம். இதனால்தான் எல்லாவகை இலக்கியங்களுக்கும் மானுட வாழ்வின் வளர்ச்சிப்படியில் , வாசிப்பின் வளர்ச்சிப்படியில் இடமுண்டு.

ஒரு காலத்தில் எம் பால்ய, பதின்மப் பருவங்களில் நாம் வாசித்த படைப்புகள் (வெகுசன, குழந்தை இலக்கிய) எல்லாம் பின்னர் எம் வாழ்வின் அழியாத கோலங்களாகி நிரந்தரமாக எம் ஆழ் மனத்தில் தங்கி விடுகின்றன. அவற்றை மீண்டுக் காண்கையில் இன்பம் கொப்பளிக்கின்றது. மகிழ்ச்சியால் பூரித்துப்போய் விடுகின்றோம். அவை எம்மை வாசித்த அப்பருவங்களுக்கே தூக்கிச் சென்று விடுகின்றன. அவற்றையெல்லாம் அழகாக ஓவியங்களுடன் வெளியான அத்தியாயங்களுடன் 'பைண்டு' செய்து வைத்திருந்தோம்; தொலைத்து விட்டோம். அவ்விதமான பல்வகைப்படைப்புகளை நாட்டில் நிலவிய போர்ச்சூழலில் என்னைப்போல் பலர் இழந்திருப்பார்கள். ஆனால் இன்று இணையம் ஓரளவுக்கு அவ்விதம் இழந்ததையெல்லாம் மீண்டும் கண்டு அனுபவிக்க இடமேற்படுத்தித் தந்துள்ளது. நான் வாசிப்பின் ஆரம்பப்படிக்கட்டில் வாசித்துக்குவித்த கல்கி சஞ்சிகையின் படைப்புகளை அக்கல்கி இதழ்களினூடே மீண்டும் வாசிப்பதற்கு இணையம் வழியேற்படுத்தித் தந்துள்ளது. நூல்கள் பலவற்றைப் பழைய புத்தகக் கடைகளில் தேடிக்கண்டுபிடிக்க இணையம் உதவுகின்றது.

மேலும் படிக்க ...

கவிதை: வ.ந.கிரிதரனின் கண்ணம்மாக் கவிதைகள் (7): நாற்பரிமாண ஓவியக் கூறுகள் நாம் கண்ணம்மா! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கவிதை
27 செப்டம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

விரிபெருவெளி!
நாற்பரிமாண ஓவியத்தை இங்கு
வரைந்தவர் யார் கண்ணம்மா!
மேற்பரிமாண ஓவியங்கள்
மேலுமுண்டா கண்ணம்மா!
பற்பலப் பரிமாண ஓவியங்கள்
பல இருப்பின் கண்ணம்மா,
சமாந்தர ஓவியங்களுக்குள்
செல்லும் வழிகள்தாமுண்டா
கண்ணம்மா!
பயணிப்பதற்கு வழிகள்தாமுண்டா
கண்ணம்மா! சொல்லம்மா!
என் கண்ணம்மா!

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. வாசிப்பும், யோசிப்பும் 383 - எழுத்தாளர் கு.அழகிரிசாமியின் புதல்வர் ராமச்சந்திரன் மறைவு பற்றி எழுத்தாளர் அழகியசிங்கர்! - வ.ந.கிரிதரன் -
  2. சீமான் பத்திநாதனின் மூன்று நாவல்களை முன்வைத்தொரு பார்வை - ரஞ்ஜனி சுப்ரமணியம் -
  3. விக்ரமாதித்யன் கவிதைகள் - சித்திரவீதிக்காரன் -
  4. கலை, இலக்கியத் திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரனின் இறுதி அஞ்சலி! - வ.ந.கிரிதரன் -
  5. ஆய்வு: கவிஞர் மு. மேத்தா கவிதைகளில் பெண்களின் சிக்கல் - முனைவா் பெ.கி.கோவிந்தராஜ், உதவிப்பேராசிரியா், தமிழ்த்துறை, மஜ்ஹருல் உலூம் கல்லூரி, ஆம்பூா் 635 802, திருப்பத்தூா் மாவட்டம் -
  6. நினைவுகளின் தடத்தில் - (25 & 26) - வெங்கட் சாமிநாதன் -
  7. வெற்றிச்சிகரத்தை நோக்கி (4) : மாற்றத்தை புரிந்து நட! எண்ணம் மற்றும் எழுத்து! - கி. ஷங்கர் (பெங்களூர்) -
  8. மன அழுத்த மேலாண்மை – 4 : குடும்பம் மன அழுத்தத்தை உண்டாக்கும் ஒரு காரணி! - டாக்டர். B. செல்வராஜ் Ph.D. (முதுநிலை உளவியல் விரிவுரையாளர், அரசு கலைக்கல்லூரி,கோவை) -
  9. கவிதை: ஆளுமை தவறேல்…? - முனைவர் சி. இரகு, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இலொயோலா கல்லூரி, வேட்டவலம். -
  10. 'தேசியம்' வழங்கும் 'பெருமயம்' - தகவல்: - இலங்காதாஸ் பத்மநாதன் -
  11. இலக்கியவெளி நடத்தும் இணைய வழி கலந்துரையாடல் - அரங்கு 23 - “பாமாவின் எழுத்துலகம்” - அகில் -
  12. நூல் அறிமுகம்: தமிழ்! பிள்ளைத்தமிழ்!! - தகவல்- மெ. சண்முகம் -
  13. நினைவு கூர்வோம்: மண்ணின் மகள் ராஜனி திரணகம! - வ.ந.கிரிதரன் -
  14. கலை, இலக்கிய விமர்சகர் கே.எஸ்.சிவகுமாரனின் மின்னஞ்சலொன்று! - வ.ந.கிரிதரன் -
பக்கம் 75 / 115
  • முதல்
  • முந்தைய
  • 70
  • 71
  • 72
  • 73
  • 74
  • 75
  • 76
  • 77
  • 78
  • 79
  • அடுத்த
  • கடைசி