பதிவுகள் முகப்பு

காலத்தால் அழியாத கானங்கள்: "ஒரு நாள் யாரோ? என்ன பாடல் சொல்லித் தந்தாரோ? - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
24 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நான் விஜய் தொலைக்காட்சியினரின் 'சுப்பர் சிங்கர்' நிகழ்ச்சியைத் தொடர்ச்சியாகப் பார்த்தவனல்லன். அவ்வப்போது பார்த்து வருபவன். 'சுப்பர் சிங்கர்' அறிமுகப்படுத்திய பாடகர்களில் இளம் பாடகி பிரியங்கா தனித்து ஒளிர்கின்றார். இவருக்குக் கலையுலகில் நீண்டதோர் எதிர்காலமுண்டு. இவரது குரல் தனித்துவமானது; இனிமையானது.

"மெல்லத் திறந்தது கதவு
என்னை வாவெனச் சொன்னது
உறவு
மெல்லத் திறந்தது கதவு
என்னை வாவெனச் சொன்னது
உறவு
நில்லடி என்றது நாணம்
விட்டு செல்லடி என்றது ஆசை" - கவிஞர் வாலி.


கவிஞர் வாலியின் சிறந்த பாடல்களிலொன்று. இடம் பெற்றுள்ள திரைப்படம் 'மேஜர் சந்திரகாந்த்'. இத்திரைப்படத்தின் மூலமே நடிகர் சுந்தர்ராஜன் மேஜர் சுந்தர்ராஜன் என்று அழைக்கப்படத் தொடங்கினார். இத்திரைப்படத்தில் நடிகர் நாகேசும், ஜெயலலிதாவும் சகோதர, சகோதரிகளாக வருவார்கள். மிகவும் சிறப்பாக நடித்திருப்பார்கள். பெண்களைத் தன் வலைக்குள் இழுத்து ஏமாற்றும் ரஜனிகாந்த் என்னும் பாத்திரத்தில் நடிகர் ஏ.வி.எம். ராஜன் நடித்திருப்பார். அவரிடம் ஏமாந்த பெண் விமலாவாக நடித்திருப்பார் ஜெயலலிதா. இறுதியில் தன் உயிரை மாய்த்துக்கொள்வார். பாடல்களுக்கு இசையமைத்திருப்பவர் இசையமைப்பாளர் வி.குமார்.

மேலும் படிக்க ...

காலமும் கணங்களும்: அக்னி வேள்வியில் வந்துதித்த கவிஞர் ஈழவாணன் நினைவுகள்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
24 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

-  கவிஞர் மேமன்கவி மார்ச் 23 ஆம் திகதி நடத்திய இணையவழி காணொளி அரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட உரை -


" கண்ணகி கால் சிலம்பை கழற்றினாள். சிலப்பதிகாரம் படித்தோம்
என்மனைவி கை வளையல்களை கழற்றினாள்
நீங்கள் கண்ணீர்ப்பூக்கள் படிக்கிறீர்கள்."

இந்தக் கவிதையைப் படித்திருப்பீர்கள். அல்லது அறிந்திருப்பீர்கள். கவிஞர் மேத்தா, தனது கண்ணீர் ப்பூக்கள் கவிதைத் தொகுப்பு முன்னுரையில் சேர்த்துக் கொண்ட கவிதை இது. சிறிது காலத்தில் மேத்தா, ஆனந்தவிகடன் பொன்விழா ஆண்டை முன்னிட்டு சோழநிலா நாவல் எழுதி, முப்பதாயிரம் ரூபா பரிசினைப் பெற்றபொழுது , ஈழத்தில் எழுத்தாளர் நந்தினி சேவியர், நண்பர் இளங்கோவன் யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட வாகை இலக்கிய ஏட்டில் இவ்வாறு பதில் கவிதை எழுதினார்,

“ அவர் மனைவி வளையல்களைத்
திருப்பிக்கேட்டாள்,
நீங்கள் 'சோழநிலா' வைப்
படிக்கிறீர்கள்.."

இப்படி ஒரு சுவாரஸ்யம் எங்கள் இலக்கிய உலகில் நிகழ்ந்தது. மனைவிமாரிடம் ஏச்சும் திட்டும் மாத்திரம் நாம் வாங்க வில்லை. எமக்கு அவசியம் நேர்ந்த சமயங்களில் அவர்களிடமிருந்து நகைகளும் வாங்கியுள்ளோம். இது தமிழ் எழுத்தாளர் பரம்பரையின் இலட்சணம். அவ்வாறு தனது அருமை மனைவியின் தாலிக்கொடியை ஈடுவைத்து கவிதைப் புத்தகம் வெளியிட்டவர் கவிஞர் ஈழவாணன். " உமக்கேனய்யா … இந்த வேலை? " என்று நண்பர்கள் சினந்தாலும் முகம் சுழிக்காத இலக்கிய உணர்வுமிக்க அருமையான பெண்மணி திருமதி. தர்மபுவனா ஈழவாணன். எனினும் கணவர் கேட்டாரே என்பதற்காக தாலிக்கொடியை அவர் கழற்றியிருக்கக்கூடாது என்று பேசினார்கள் நண்பர்கள். ஏனென்றால் கவிஞர் மேத்தாவுக்கும் மற்றும் பல தமிழக எழுத்தாளர்களுக்கும் கிடைத்தது போன்று பல்லாயிரக்கணக்கான ரூபாய் பரிசில்கள் ஈழத்து எழுத்தாளனுக்கு என்றைக்குமே கிடைத்ததும் இல்லை. கிடைக்கப் போவதுமில்லை. விற்ற நகையை மீட்பதற்கு.

மேலும் படிக்க ...

மு.தளையசிங்கத்தின் 'தியாக' மரணம்! - மு.நித்தியானந்தன் -

விவரங்கள்
- மு.நித்தியானந்தன் -
இலக்கியம்
23 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- மு.நித்தியானந்தன் -மு.தளையசிங்கத்தின் 'தியாக' மரணம் பற்றி இப்போது கேள்வி எழுந்துள்ளது.  சு.வில்வரத்தினம் மு.த.பற்றிய போலீஸ் தாக்குதலைப்பற்றிப் பேசினால் உணர்ச்சியின் எல்லைக்கே போய்விடுவார் என்பதெல்லாம் அவர் மு.த.பற்றி கொண்டிருந்த உணர்வுபூர்வமான ஈடுபாட்டைக் குறிப்பதாகும். அவர் புங்குடுதீவில் அஹிம்சை வழி  நின்று போராடிய நிகழ்வு வணக்கத்திற்குரியது. ஆனால், அவருடைய மரணம் குறித்து கேள்வி எழுந்ததும் சென்டிமென்டல் கூச்சல் போடவேண்டியதில்லை. புத்தர்பிரான் மறைவு குறித்தே அவர் food poisoning இல் இறந்தாரா, அவர் தானம் பெற்று உண்ட உணவு பற்றி இன்று ஆய்வுகள் நடக்கின்றன.புத்தர்  இலங்கை வந்தது எப்படி என்றால், பவுத்த பிக்குகள் உங்களை அறைவார்கள். அக்கேள்வியை எழுப்பினாலே அவர்கள் உணர்ச்சியின் எல்லைக்கே சென்று விடுவார்கள். உணர்ச்சியின் எல்லைக்கு போவது ரொம்ப லேசு.  அது புத்தி செயல்படும் நேரமில்லை. Anthony Burns என்ற கறுப்பின அடிமையானவர் தப்பிச்சென்று , பின் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் வைக்கப்பட்ட நிலையில் அவரைச் சிறையிலிருந்து மீட்க அடிமை முறையினை எதிர்த்தவர்கள் முயன்றபோது, அவருக்குக் காவலில் இருந்த James Batchhelder  சுட்டுக்கொல்லப்பட்டபோது, அவரின் autopsy மரணவிசாரணை அறிக்கை பற்றி இன்றும் பேசப்படுகிறது. இந்நிகழ்ச்சி நடந்தது 1854 ஆம் ஆண்டு.. இன்றைக்கு 167 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம். இந்த மருத்துவச் சான்றிதழ் முக்கியமானதுதான். பாரதியார் யானை தாக்கி மரணமுற்ற நிகழ்ச்சி பற்றி மு.புஷ்பராஜன் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.அந்த விளக்கத்திற்கு புஷ்பராஜனிடம் தான் மருத்துவச் சான்றிதழ் கேட்கவேண்டும். விஷயம் தெரியாதவன் கேள்வி கேட்டால், அவனிடம் போய் மரணமடைந்தவர் பற்றி நீ ஆதாரம் தா என்று கேட்பது எந்த ஊர் நியாயம் என்று தெரியவில்லை.    

மேலும் படிக்க ...

எதிர்வினை: 'குறிஞ்சித்தேன் நாவலில் படகா் இன மக்களின் வாழ்வியல் நெறிகள்! '

விவரங்கள்
முனைவர் கோ.சுனில்ஜோகி -
வாசகர் கடிதங்கள்
22 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
- * முகநூலில் இக்கட்டுரைக்கான எதிர்வினை -
- வாசகர் கடிதங்கள் -
படகர்கள் திப்பு சுல்தான் காலத்தில் நீலகிரிக்கு வந்தனர் என்பது தவறான பதிவு. ராஜம் கிருஷ்ணன் அவர்களே தவறாக பதிந்துள்ளார். அவரே முழு ஆய்வின்றி எழுதியுள்ளார். படகர்கள் நீலகிரியில் இருந்ததை ஆய்வாளர் பினிசோ அவர்கள் 1602 லியே அவரது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார். இது மிகவும் தவறான பதிவு ஐயா. நிச்சயம் இந்தத் தகவல் திருத்தபட வேண்டும்.... படகர்கள் நீலகிரியின் பூர்வகுடிகள் ஐயா. இந்த நாவலில் இருப்பதாக இந்தக் கட்டுரையின் ஆய்வாளர் சொல்லியிருக்கலாம் ஆனால் அவர் முடிந்த முடிபாக சொல்வது தவறு.
 
படகர்கள் உலக பூர்வகுடிகள் என்பதற்கு யுனெஸ்கோவின் சர்வதேச அங்கீகாரம்:
https://www.badugaa.com/2014/11/united-nations-on-badagas.html?m=1&fbclid=IwAR36klt9FQDTya39sRjYvv6BRzb7WxyiBkd7JyE-W_-BxgOU71gE4rwwCqo
 
- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர். -

குறிஞ்சித்தேன் நாவலில் படகா் இன மக்களின் வாழ்வியல் நெறிகள்! - வெ. வளா்மதி, பகுதி நேர முனைவா் பட்ட ஆய்வாளா் -

விவரங்கள்
- வெ. வளா்மதி, பகுதி நேர முனைவா் பட்ட ஆய்வாளா், தமிழ்த்துறை இஸ்லாமியக்கல்லூரி (தன்னாட்சி), வாணியம்பாடி 635 752 -
ஆய்வு
22 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை
நீலகிரிமலையில் வாழும் மக்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே இந்நாவல். அங்கே வழிவழியாய் வாழ்ந்து வரும் படகா் என்ற இன மக்களின் வாழ்க்கைச் சிக்கல்களே உருவமெடுத்துள்ளன. இயற்கையோடு ஒட்டி வாழ்ந்து வந்த அம்மலைவாழ் மக்களின் வாழ்க்கைப் போக்குகளை, வெளியில் பெருகி வரும் நாகரிக மாற்றங்களும், வணிகமும், தொழில் வளா்ச்சியும் பாதிக்கின்றன. மலையில், காப்பி, தேயிலை பயிரிடும் தொழில்கள் ஏற்படுகின்றன. இவற்றால் பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட மலைக்கு வெளிப்புற மனிதா்கள் இயல்புகள் மலைவாழ் மனிதரிடையேயும் மெல்லப் பரவுகின்றன. இச்சமூகம், பொருளாதார மாற்றங்களால் படகா் குடும்பத்தில் சிக்கல்கள், அதனால் ஏற்படும் உணா்ச்சிப் போராட்டங்களும் இந்நாவலில் அடிப்படையாக அமைந்துள்ளன.

இக்கட்டுரையில் “குறிஞ்சித்தேன்” நாவல்வழி உதகமண்டலம்(ஊட்டி) வாழ் படகா் இன மக்களின் வாழ்வியல் நெறிகள் தொகுத்து ஆராயப்படுகின்றன.

படகா்
குறிஞ்சித்தேன் என்னும் நாவல் மலையில் வாழும் மக்களை மையமாக வைத்து எழுத்தப்பட்டது.  நீலகிரி மக்கள் என்றால் நம்மில் பலருக்கும் ஆதிக்குடிகளான தொதவரே நினைவுக்கு வருவார்கள். நீலகிரியைத் தாயமாகக் கொண்டு வாழும் மக்களின் இந்த மலையின் வரலாற்றிற்கும் வளத்திற்கும் பெருமைக்கும் காரணமாக இருப்பவா் இவா்களே எனலாம். பதினெட்டாவது நூற்றாண்டில் மைசூரை அரசாண்ட திப்பு சுல்தான் ஆட்சியின்போது படகா் மைசூரிலிருந்து பண்டியூா்க் காட்டின் வழியாக நீலகிரிக்கு வந்ததாக அறிகிறோம்.

மேலும் படிக்க ...

சைவமும் பாவை வழிபாடும்! - முனைவர் சி.சங்கீதா -

விவரங்கள்
- முனைவர் சி.சங்கீதா, உதவிப்பேராசிரியர் (தமிழ்), கலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ,(நிகர்நிலைப் பல்கலைக்கழகம்), ஆனந்த் நகர், கிருஷ்ணன் கோயில், விருதுநகர் மாவட்டம் - 626126. -
ஆய்வு
22 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை
தனுர் மாதம் என்று அழைக்கப்படும் மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து கன்னிப் பெண்கள், பிற கன்னிப் பெண்களைத் துயில் எழுப்பிக்கொண்டு நீராடி இறைவனை வழிபடுவர். இதனைப் பாவை நோன்பு என்பர். இப்பாவை வழிபாட்டைப் பரிபாடலில் தைந்நீராடல்1 என்று குறிப்பிடுகிறது. இதனுடைய தொடர்ச்சியாகச் சைவ சமயத்தில் மாணிக்கவாசகர் திருவெம்பாவையையும் வைணவ சமயத்தில் ஆண்டாள் திருப்பாவையையும் பாடியிருக்கிறார்கள். எனவே பாவை வழிபாடு என்பது தொன்றுதொட்டு ஒரு மரபாகவே இருந்து வருவதைக் காணலாம். தமிழர்கள் சைவத்தையும் வைணவத்தையும் தங்கள் இருகண்களாகப் போற்றினர். அவ்வகையில் திருவெம்பாவையில் இடம்பெறும் பாவை நோன்பு குறித்த கருத்துக்கள் “சைவமும் பாவை வழிபாடும்” என்னும் தலைப்பில் இக்கட்டுரையின் வழியாக எடுத்துரைக்கப்படுகிறது

திருவெம்பாவை உள்ளடக்கம்
சைவசமயக் குரவர்களுள் ஒருவர் மாணிக்கவாசகர். மாணிக்கவாசகர் பக்தியின் உச்சமாகக் கருதப்படுகிறார். அவர், திருவண்ணாமலையில் பாடிய பாடல்களே திருவெம்பாவை ஆகும். தன்னைப் பெண்ணாகப் பாவித்து மற்றப் பெண்களுடன் மார்கழி நீராடி அண்ணாமலையானையும் தில்லையம்பலத்தானையும் வழிபடுவதாக அமைந்துள்ளது திருவெம்பாவை. திருவெம்பாவையில் இருபது பாடல்களில் உள்ள செய்திகள் பகுத்தாயப்படுகின்றன.

மேலும் படிக்க ...

பணிப் பெண்களுக்கெதிரான வன்முறைகள்! - இராஜேஸ்வரி பாலசுப்பிரமயணியம் -

விவரங்கள்
- இராஜேஸ்வரி பாலசுப்பிரமயணியம் -
சமூகம்
22 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

-  அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அண்மையில் அனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு நடத்திய இணையவழி காணொளி அரங்கில் நிகழ்த்தப்பட்ட உரை -


பெண்களுக்கெதிரான,பலதரப்பட்ட வன்முறைகள,பல காரணங்களால்; காலம் காலமாக,அகில உலகின் மூலை முடுக்கெல்லாம்; தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன. இதை நான் எழுதிக் கொண்டிருக்கும்போது(17-3-2021) பிரித்தானிய தொலைக்காட்சியில்  பிரதமருடனான கேள்வி நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் ;திரு.கியர் ஸ்ராமர், 'பாலின வன்முறையால் பாதிக்கப்படும்; பெண்களில் 1;.-5 விகிதமானவர்கள் மட்டுமே சட்டத்தை நாடி உதவி பெறும் நிலை இன்றிருக்கிறது' என்று கூறிக்கொண்டிருக்கிறார். மிகவும் பணக்காரநாடுகளில் ஒன்றான பிரித்தானியாவிலேயே பாலினக் கொடுமையை எதிர்நோக்கும் பெண்களின் நிலை இதுவென்றால், சாதி, சமய, பொருளாதார ஒடுக்குமுறையால் அவதிப்படும் ஏழைநாடுகளில் பெண்கள் அனுபவிக்கும் பாலினக்கொடுமைகளைக் கற்பனை செய்ய முடியாமலிருக்கிறது.

 பெண்களின் துயர்நிலை அவள் பிறந்த வீடு, புகுந்தவீடு, படித்த இடம், பதவி வகிக்குமிடம், அரசியல் காரணங்கள், அகதிநிலை என்பவற்றுடன் மட்டுமல்லாமல், ஒரு பெண் தனது, வாழ்க்கையின் உணவுக்கும் உடைக்கும், அத்துடன் தனது ஏழ்மையான குடும்பத்தின் வாழ்க்கைக்கும் வழிதேடி பணிப் பெண்ணாக முன்பின் தெரியாத அன்னிய இடங்களுக்கு உழைக்கச் செல்லும்போதும் பன்முகத் தன்மையான வன்முறைகளுக்க முகம் கொடுக்கிறாள்.

 பணிப் பெண்களுக்கான கொடுமைகள் அவள் வீட்டுவேலை செய்யும் இடத்தில், அவள் வேலை செய்யும் வீட்டாரால் மட்டும் கொடுபடுவதில்லை. அவர்களின் வீட்டுக்கு வருபவர்களாலும் நடக்கிறது. அந்தப் பாலினக் கொடுமையைப்;; பல பெண்கள் அனுபவித்திருக்கிறார்கள் என்பதை எனது சொக்கலேட் மாமா என்ற கதையொன்றில் பதிவிட்டிருக்கிறேன். (மனிதன் - ;பத்திரிகை-1992)
 
இன்றைய கால கட்டத்தில், ஆண்கள்,பெண்கள் என்று கிட்டத்தட்ட 232 கோடி மக்கள் பல்விடங்களுக்கும் சென்று அடிமட்ட ஊதிய வேலைகளான, சாரதி, தோட்டக்காரன், பணிப்பெண்கள் போன்ற பல்விதமான வேலைகளையும் அகில உலக ரீதியாகச் செய்கிறார்கள்.

 குறிப்பாக, வெளிநாட்டு பணிப் பெண்களை மட்டுமல்லாமல் மற்ற வேலையாளர்களையும் மனித நேயமின்றி நடத்தும் மத்திய தரைக்கடல் நாடுகளில், மூன்றில் ஒருத்தர் பணிப் பெண்களாகத் துன்பப் படுகிறார்கள் (செல்வி.பிலேஸா வீரரத்தினா 2014. ஐ.பி.எஸ் அறிக்கை).

மேலும் படிக்க ...

கவிதை: சுனாமியின் மகள்! - வ.ஐ.ச.ஜெயபாலன் -

விவரங்கள்
- வ.ஐ.ச.ஜெயபாலன் -
கவிதை
21 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கடலும் தாமிரபரணியும்
வெகுண்ட இரண்டு ஆதிசேடன்கள்போல
மோதிய பண்டை நாட்கள் போலாயிற்று
என் ஹைக்கூ காதல் வாழ்வு.
*
உண்மையில் ஆரி மக்சிமோட்டோ
கடலைப்போல பொறுமையானவள்தான்.
காதலில் மட்டும் சுனாமி என்றிருந்தேன்.
எனினும் எனினும் அமைதிக்கடல்  
ஊழிப் பேரலையாய் எழுகிறதல்லவா?
வரலாற்றில் ஒருநாள்
காலைத்தூக்கி மூன்று தடவைகள்
காயல்களின் மணல்பற்கள் உடைய
தாமிரபரணி ஆற்றை உதைத்ததல்லவா?

மேலும் படிக்க ...

மு.புஷ்பராஜன்: குருநகரின் முகவரி! - மு.நித்தியானந்தன் -

விவரங்கள்
- மு.நித்தியானந்தன் -
இலக்கியம்
21 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

யாழ்ப்பாணத்தில் நான் பழகக் கிடைத்த நண்பர்களில் புஷ்பராஜன் அபூர்வமானவர். அழகான இளைஞனாக - அமைதியும் தேட லும் வாசிப்பும் மிக்க இலக்கிய ரசிகனாக  புஷ்பராஜனும் நானும் ஏ.ஜே.யுமாக யாழ் ரீகர் தியேட்டருக்கு முன்னால் உள்ள தேநீர்க்கடையில் உரையாடிக் கொண்ட நாட்கள் என் மன அடுக்கில் என்றும் தேங்கிக்கிடப்பவை.

லண்டன் வந்த பிறகும் அந்த நல்ல நண்பரின் இனிய நட்பு நீடித்தது.  விமர்சனக்கூட் டங்களில், கலந்துரையாடல்களில், கருத் தரங்குகளில், திரைப்பட நிகழ்வுகளில், ஒன்றுகூடல்களில்,  கடற்கரைச் சுற்றுலாக்களில், குடும்ப நிகழ்வு களில் எல்லாம் நண்பராய் - நல்ல சகோதரனாய் பழகிய புஷ்பராஜன், லண்டனைவிட்டு, தன் குடும்பத்துடன் இணைந்து வாழ கனடா சென்றபோது, அந்தப் பிரிவினைத் தாங்க முடியாதவன் நான் மட்டுமல்ல, மிகப்பல லண்டன் இலக்கிய நண்பர்களும்தான்.  இருந்தாலும், கனடாவில் இன்றும் அவருடன் தொலைபேசியில் உரையாடிக்கொள்ள முடிவது திருப்தி தருவது.

புஷ்பராஜன் மென்மையான சுபாவம் கொண்டவர்.  மாமரத்து நிழலின் கீழ், மருந்துக்கு நிற்கையிலே, அருகில் இருந்த பெர்ணபேத் என்னும் தன் சின்னப்பெரியம்மாவை| நினைவுகூரும் மென்மை அது. மு.தளையசிங்கம், ஏ.ஜே.கனகரட்ன போன்ற ஆளுமைகளின் சிந்தனைகளால், பழக்கத்தால் வார்க்கப்பட்ட மென்மை அது. தன் முடிவுகளில் உறுதியாக இருந்தாலும், கூட்டங்களில் தன் குரலை உயர்த்தாத மென்மை. 'அலை' ஆசிரியர் குழுவில் இருந்தாலும், அலை பற்றி நீட்டி முழக்கி, டமாரம் அடிக்காமல் மௌனமாய் விலகும் மென்மை.  அயலவரை,  ஊரவரை அணைத்துக்கொள்ளும் மென்மை.

கலகக்காரன் போன்ற tagகளை அவர் குத்திக் கொள்வதில்லை.  நாலு பரப்புக்காணியைத் திரும்பத் திரும்ப உழுத கதையாய் - மாய்ந்து மாய்ந்து பேட்டி கொடுக்கும் அவஸ்தை அவரிடம் இல்லை.  ஆரவார இலக்கியச் சந்தையில், ஙொய் ஙொய் என்று ரீங்காரமிடும் ஈக்களின் தொல்லைகளிலிருந்து வெகுதூரம் விலகி இருப்பவர்.

மேலும் படிக்க ...

சாதியத்தின் இயல்பாக்கமும் டொமினிக் ஜீவாவின் ‘அச்சமும்’ - ராகவன், லண்டன் -

விவரங்கள்
- ராகவன், லண்டன் -
இலக்கியம்
20 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பதிவுகள் இணைய இதழ் மற்றும் முகநூலில் தொடரும் எழுத்தாளர் மு.தளையசிங்கம் பற்றிய விவாதங்களில் ,தன் கருத்துகளை இங்கு பகிர்ந்துகொள்கின்றார் இலண்டனில் வசிக்கும் சமூக, அரசியற் செயற்பாட்டாளரான ராகவன்.


சாதியச் சிந்தனையும் நடைமுறையும் மொழி , பண்பாட்டு வாழ்வுடன் பின்னிப் பிணைந்துள்ளது. அது அனைத்து தளங்களிலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொழிற்படுகிறது. இந்தத் தொழிற்பாட்டின் பின்னணியில் சாதிய அதிகாரக் கட்டமைப்பு இயங்குகிறது. சாதிய அமைப்புக் கொண்ட சமூகங்களில் சாதிய சிந்தனை எவ்வாறு தொழிற்படுகிறது? அது எவ்வாறு இயல்பாக்கம் அடைந்திருக்கிறது? என்பதை அவதானிப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கு.

"சாதியம் என்பது வெறும் பாகுபாடு காட்டுதல் அல்ல. பாகுபாடு என்பது சாதியத்தைச் சட்டரீதியாக அணுகும் பக்கம் மட்டுமே. பாகுபாடு காட்டுதல், தீண்டாமை, மனிதவுரிமை மீறல்கள் போன்றவைக்கு அப்பால், மேலோட்டமாகப் பார்க்கையில் இயல்பாக்கம் அடைந்த சாதிய நடைமுறைகள் ஆபத்தற்றவை என்ற தோற்றப்பாட்டை அளிக்கின்றன" என்கிறார் பாலமுரளி நடராஜன் என்ற ஆய்வாளர்.

பண்பாட்டுத் தளத்தில் பார்க்கும் போது, மத ஆசாரங்கள் தொடங்கி கல்வி, இசை , நாடகம், வழிபாடு, சடங்குகள், அரசியல் , மொழி போன்ற பல்வேறு தளங்களிலும் தினசரி வாழ்க்கை நடைமுறைகளிலும் சாதியம் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொழிற்படுகிறது. சாதியம் என்பது வாழ்முறையின் பிரிக்க முடியாத அங்கமாகி அரூபமாகத் தொழிற்படும் ஒரு நச்சுக்கிருமி. அத்துடன் ஆதிக்கசாதியைச் சேர்ந்தவரின் சாதி அந்தஸ்து ( caste privilege) என்பதும் முக்கிய பாத்திரத்தை வகிக்கிறது. தீண்டாமை, அக மணம், சாதிய வன்முறை போன்ற நேரடியான அடக்குமுறைகள் இலகுவாக அடையாளப்படுத்தக்கூடியவை. எனவே இயல்பாக்கம் பற்றியே இந்த கட்டுரை பேசுகிறது.

மேலும் படிக்க ...

'தாய் மொழிக் மொழிக் கல்வியும் இளம் தலைமுறையினரின் மன வளர்ச்சியும்'! - இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -

விவரங்கள்
- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -ஓய்வுபெற்ற குழந்தை நல அதிகாரி.-லண்டன்
சமூகம்
20 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 - லண்டன் வொல்த்தம்ஸ்ரோவ் தமிழ்பபாடசாலைப் பெற்றோருக்கு,13.3.21ல் கொடுத்த சொற்பொழிவின் விளக்கவுரை -


எங்கள் தெய்வத் தமிழ் மொழிக்; கல்வியை லண்டன் மாநகரில்,எங்கள் இளம்தமிழ்ச் சிறார்களுக்கு முன்னெடுக்கும் உங்களுக்கு எனது அன்பான வணக்கம். எங்கள் தமிழ் மொழி மிகவும் நீண்டகால வரலாற்றைக் கொண்ட முதுமொழி.இன்று உலகில் பேசப்படும் கிட்டத்தட்ட 7000 மொழிகளில் முதல் வழிவந்த மூத்த மொழி.மனித இனத்தின் மேன்மைக்குப் பற்பல நூல்களை உலகுக்குத் தந்த மொழி.'எம்மதமுமு; சம்மதமே' என்ற உயரிய தத்துவத்தைக் கொண்டது'.'யாதும் உரோ யாரும் கேளீர்' என்ற அற்புதமான நான்கு வரிகளில் உலகில் நான்கு திசைகளிலுமுள்ளவர்களையும் ஒன்றாய் அணைக்கும் மொழி எங்கள் மொழி.

'அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்'; என்றுரைத்து ஒரு குழந்தைக்குத் தன் தாய் தந்தையரின் சொற்களை மனதில் உறுத்தி எதிர்கால வாழ்க்கைக்கு வழிகாட்டுவது எங்கள் தமிழ். 'ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்று இறையுணர்வை மனதில் பதிப்பது எங்கள் பக்தித் தமிழ். 'தாயைச் சிறந்த ஒரு கோயிலுமில்லை,தந்தை சொல் மிக்க மந்திரமில்லை' என்று தாரக மந்திரத்தைக் குழந்தையின் மனதில் பதிக்கும் தெய்வீக் மொழி; எங்கள் அருமைத் தாய்மொழயான தமிழ் மொழி. ஓரு மனிதனின் வாழக்கையில் 'எண்ணும் எழுத்தும் இரு கண்ணாகும்'; என்றும்இளமையிற் கல்வி சிலையில் எழுத்து' என்றுரைத்துக் கல்வியின் மகத்துவத்தை இளம்மனதில் வித்திட்டவர்கள் எங்கள் தமிழ்; மூதாதையர்கள். 'பெற்றதாயும் பிறந்தபொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தனவே' என்றுரைத்து ஒரு குழந்தையின்,தன்னைப் பெற்ற தாயையும் தன்னைத் தாங்கிய பிறந்த நாட்டைப் போற்றவும் மனதில் கடமையுணர்சி;சியைப் பதிப்பது எங்கள் தனித்தமிழ். 'அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்கேயுலகு' என்று எங்கள் வாழ்க்கையை எங்கள் மொழியுடன் இணைக்கும் மனத்திடத்தைத் தந்தது எங்கள் தெய்வத் தமிழ்.

மேலும் படிக்க ...

உண்மையை உரைப்பேன்! - நந்தினி சேவியர் -

விவரங்கள்
- நந்தினி சேவியர் -
இலக்கியம்
20 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- தற்போது முகநூலில், பதிவுகளில் இடம் பெறும் எழுத்தாளர் மு.தளையசிங்கம் பற்றிய விவாதங்களில் இடம் பெறும் கருத்துகளையிட்டு , எழுத்தாளர் நந்தினி சேவியர் தனது கருத்துகளை அனுப்பி வைத்துள்ளார். அவற்றையும் இங்கு பகிர்கின்றோம். - பதிவுகள் -


1966 அக். 21 ல் சாதி அமைப்பு தகரட்டும் சமத்துவ நீதி ஓங்கட்டும் எனும் கோசத்துடன் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஆர்த்தெழுந்த மக்கள் பேரணி தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கமாக சகல விளிம்பு நிலை மக்களுடைய இயக்கமாக பரிணமித்தது. அதன் பின்னணியில் சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சி. சாதி ஆணவத்திற்கு எதிரராக நின்றமையால் ஆதிக்க சாதிவெறியர்களாலும், அவர்களது காவல் நாய்களாலும் தாக்கப்பட்ட, அடைக்கப் பட்ட எண்ணிறைந்தவர்களை என்னால் அடையாளப்படுத்தப்பட முடியும். நான் மு.தளையசிங்கத்தை கொச்சைப்படுத்த இதனை எழுதவில்லை அவரது பணியை வரவேற்கிறேன். ஆனால்  அவரை அவரது செயலை விதந்து பேசுவோர்களது அரசியல் உள் நோக்கம் என்ன.? நான் கூறப்போகும் இரண்டு விசயங்கள் உங்களுக்கு தெரியாதது என சாட்டுச் சொன்னாலும். மு.தளையசிங்கம் இதனை கண்டு கொள்ளவில்லை என்பது எனது குற்றச்சாட்டு.

1.  நிச்சாமப் போராட்டம் பற்றி  உலகமே அறியும். மாவிட்டபுரம், பன்றித்தலைச்சி   ஆலயப்பிரவேசப் போராட்டம் பற்றி    மட்டுவில், மந்துவில், கன்பொல்லை சாதி  எதிர்ப்பு நடவடிக்கைககள்பற்றி  தளையசிங்கம் அறியாததல்ல.  அதுபற்றி அவர் ஏன் எழுதவில்லை..?

2.  மான் முத்தையா எனும் சங்கானையைச் சேர்ந்தவர். ஒருகாலம் சங்கானை நகரசபைச் சேர்மனாக இருந்தவர். பஞ்சமர்  சமுகத்தைச் சேராதவர்.  நிச்சாம.  ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக நின்றமையால் தனது சமுகத்தவர்களால் பொலிசில்  காட்டிக்கொடுக்கப்பட்டு  சித்திரவதை செய்யப்பட்டு, சிறுநீர் பருக்கப்பட்டு கொடூரத்தை அனுபவித்த வரலாறு உண்டு. இதனை இந்தப் பிரபஞ்சயதார்த்தவாதியை சிலாகிக்கும்  பிரமுகர்கள் அறியவில்லையா, மு.த கூட அறியவில்லையா.?

மேலும் படிக்க ...

வ.ந.கிரிதரனின் 'கணவன்' (Husband Short Story by V.N.Giritharan Summary)

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
19 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Witty Gardedn என்னும் யு டியூப் சானலில் எனது சிறுகதைகளிலொன்றான 'கணவன்'சிறுகதையைச் சுவையாக அறிமுகப்படுத்தியுள்ளார்கள். அதற்கான காணொளியைப்  பார்த்து,கேட்டு இரசிக்க: https://www.youtube.com/watch?v=1I-_WztAltM

Witty Gardedn என்னும் யு டியூப் சானலில் வ.ந.கிரிதரனது சிறுகதைகளிலொன்றான 'கணவன்'சிறுகதையைச் சுவையாக அறிமுகப்படுத்தியுள்ளார்கள். அதற்கான காணொளியைப்  பார்த்து,கேட்டு இரசிக்க: https://www.youtube.com/watch?v=1I-_WztAltM

மேலும் படிக்க ...

ரொறன்ரோ தமிழ்ச் சங்க இணைய வெளிக் கலந்துரையாடல்: மணிமேகலையும் மஹாவம்சமும்!

விவரங்கள்
- ரொறன்ரொ தமிழ்ச் சங்கம் -
நிகழ்வுகள்
18 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மு.த: அவசரக் குறிப்புகள் அல்ல - மு. நித்தியானந்தன் -

விவரங்கள்
- மு. நித்தியானந்தன் -
இலக்கியம்
18 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மு. தளையசிங்கத்தின் 'ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி' கட்டுரைத்தொடர் கண்டியிலிருந்து வெளியான 'செய்தி' பத்திரிகையில், 1964/65 காலப்பகுதியில் வெளியான தொடராகும். மு.த. அவர்கள் இத்தொடருக்கு, 'ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி: அவசரக் குறிப்புகள்' என்றுதான் தலைப்பிட்டிருந்தார். இத்தொடர் வெளிவந்துகொண்டிருந்தபோதே, 'என்ன அவசரம்?' என்ற தலைப்பில், ப.வயிரவன் 2, 3 இதழ்களில் இக்கட்டுரைத்தொடரை விமர்சித்து எழுதியிருந்தார். கே.எஸ்.சிவகுமாரன், 'ஒரு விமர்சகரின் இலக்கியப் பார்வை' என்ற தனது நூலில், மெய்யியலாளர் காசிநாதன் அவர்களே வயிரவன் என்ற பெயரில் விமர்சனங்கள் எழுதிவந்தார் என்று குறிப்பிடுகிறார்.

இந்நூல் ‘க்ரியா’ வெளியீடாக வெளிவருவதற்கான இறுதி வேலைகள் முற்றுப்பெற்றுவிட்ட நிலையில், 'ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி என்று போட்டிருக்கிறீர்கள். எந்த ஏழாண்டுகள்?' என்று ராமகிருஷ்ணனிடம் கேட்டபோதுதான், அவர் அந்நூலின் உட்பக்கத்  தலைப்பில், 1956-1963 என்ற ஆண்டு விபரத்தைச் சேர்த்து, முக்கிய அம்சமொன்றினைச் சுட்டிக்காட்டியதற்கு எனக்கு நன்றியும் தெரிவித்தார்.

மு.த.வின் 'போர்ப்பறை', ‘புதுயுகம் பிறக்கிறது', ‘கலைஞனின் தாகம்', 'மெய்யுள்', 'ஒரு தனி வீடு' ஆகிய நூல்களையும் கோவை சமுதாயம் பிரசுராலயம் மூலமாகத் தமிழகத்தில் வெளியிட்டுவைத்த பெருமை பத்மநாப ஐயரையே  சாரும்.  பத்மநாப ஐயரின் தன்னலமற்ற முயற்சிகள் பெரும் பாராட்டிற்குரியன.

'ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி’ நூலில் தன்னைப் பற்றித் தவறாக மு.த. எழுதியிருப்பதாகவும், இந்நூலைப் பிரசுரித்தால், ‘க்ரியா’மீது தான் வழக்குப்போடுவேன் என்று தர்மு சிவராமு அவர்கள் க்ரியா ராமகிருஷ்ணனுக்கு எழுதிய கடிதத்தை, ராமகிருஷ்ணன் பொருட்படுத்தவில்லை.     .  

மு.த.வின் இந்த இலக்கியத்தொடரின் பெருமளவு கட்டுரைச் சேகரங்களை உதவிய மு.புஷ்பராஜனைப் பற்றி இந்நூலில் ஒரு குறிப்பும் இல்லை. சில இதழ்களைத்  தேடி உதவிய விக்னேஸ்வரனுக்கும், நான்கு நாட்கள் மூலப் பிரதியைப் பார்வையிட்டு உதவிய ஜீவகாருண்யத்திற்கும் நன்றி தெரிவித்த பெருந்தன்மை, புஷ்பராஜன் விஷயத்தில் ஏன் காட்டப்படவில்லை என்று தெரியவில்லை.  மூலப் பிரதியிலிருந்து இந்நூல் தொகுக்கப்பட்டபோது, மூலப் பிரதியின் சில குறிப்புகள் நீக்கப்பட்டிருக்கின்றன.

மேலும் படிக்க ...

வாசிப்பும், யோசிப்பும் 371: மு.தளையசிங்கத்தின் 'போர்ப்பறை'!

விவரங்கள்
Administrator
வ.ந.கிரிதரன் பக்கம்
17 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் மு.தளையசிங்கத்துக்கு முக்கிய பங்குண்டு. எழுத்தாளராக, சமூக, அரசியற் செயற்பாட்டாளராகச் செயற்பட்டவர்களில் அவருமொருவர். டானியல், அ.ந.கந்தசாமி, மு.தளையசிங்கம் போன்றவர்கள் எழுத்தாளர்களாக இருந்த அதே சமயம் தாம் நம்பிய அரசியல் கோட்பாடுகளுக்காக மக்கள் மத்தியில் இறங்கிச் செயற்பட்டவர்களும் கூட.

மு.தளையசிங்கம் என்னும் ஆளுமையை அறிவதற்கு அவரது நூல்கள் பெரிதும் உதவும். 'பிரபஞ்ச யதார்த்தவாதம்' என்னும் சிந்தனையைத் தனது மானுட விடுதலைக்கான தீர்வாக உருவாக்கியவர் மு.பொ.  கருத்துமுதல்வாதியான ஹெகலின் சிந்தனைகளை உள்வாங்கி மார்க்சியத்தை உருவாக்கினார் கார்ல் மார்க்ஸ். கார்ல் மார்க்ஸின் சிந்தனைகளின் நல்ல அம்சங்கள் என்று தான் கருதியவற்றை உள்வாங்கி, அவற்றை ஏற்று , மீண்டும் மார்க்ஸ் ஏற்காத கருத்து முதல்வாதத்தை ஏற்று, ஹெகலியக்கருத்து முதல்வாதச் சிந்தனையை அதிலேற்றி, மானுட விடுதலைக்கு மார்க்சின் புறவிடுதலை  மட்டும் போதாது , அக விடுதலையும் அவசியம் என்று தனது பிரபஞ்ச யதார்த்த வாதச் சிந்தனையை உருவாக்கியவர் மு.த.

அவரது போர்ப்பறை நூலிலுள்ள 'புதிய வார்ப்புகள்' கட்டுரையில் வரும் பின்வரும் பகுதி அதனை  ஆணித்தரமாக எடுத்துரைக்கும்.

மேலும் படிக்க ...

கவிதை: நவீன செங்கோல் - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -

விவரங்கள்
- நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -
கவிதை
17 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

     

மர்மங்கள் நிறைந்த மானிடத்தில்
      என் உடல் ஆயுதமாகிறதே!
      புரட்சிக்குரல் எழுப்பி
      கறுப்புக் கவசம் அணிந்து  
      கட்டுப்பாட்டை உடைத்தெறிந்து
      என் சுய விருப்பத்தை - பெண்
      அரசியல் போராட்டம் போல்      
      பேசுகிறேன்!

மேலும் படிக்க ...

வ.ந.கிரிதரனின் 'எழுத்தாளர் மு.தளையசிங்கம் பற்றிய கருத்தரங்கும், மல்லிகை ஆசிரியர் மீதான குற்றச்சாட்டும் பற்றி.' என்னும் கட்டுரைக்கு முகநூலில் கிடைத்த எதிர்வினைகள்!

விவரங்கள்
-முகநூல் எதிர்வினைகள் -
முகநூல் குறிப்புகள்
17 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- வ.ந.கிரிதரனின் 'எழுத்தாளர் மு.தளையசிங்கம் பற்றிய கருத்தரங்கும், மல்லிகை ஆசிரியர் மீதான குற்றச்சாட்டும் பற்றி.' என்னும் கட்டுரைக்கு முகநூலில் கிடைத்த எதிர்வினைகள்! எதிர்வினைகளில் சிலவற்றில் பதிவுகள் இணைய இதழ் ஏற்கமுடியாத சொற்பதங்களுள்ளன. அவை தவிர்க்கப்பட்டுள்ளன. - பதிவுகள் -


Arun Ambalavanar: அனோஜன் இதில் பொய்யான தகவல் எதுவும் எழுதவில்லை. N.K. மஹாலிங்கம், மு. பொ ஆகியோர் அனோஜன் சொன்ன விடயத்தை ஏற்கெனவே சொல்லியுள்ளார்கள். தயவு செய்து விடயத்தை முழுமையாக ஆராயாமல் சோபாசக்திக்கு வக்காலத்து வாங்குவதை கைவிடுங்கள்.

Annogen Balakrishnan: நீங்கள் புரிதல் இன்றி விவாதத்தை வேறுபக்கம் கொண்டு செல்கிறீர்கள். //ஜீவா மீது மல்லிகையில் மு.த கலந்துகொண்ட ஒரு சமூக, அரசியல் போராட்டம் பற்றிய செய்தியொன்றைப் போடவில்லையென்பதை எவ்விதம் முக்கியதொரு குற்றச்சாட்டாகக் கூறலாம்?// என்று வினவுகிறீர்கள், மு.தளையசிங்கம் என்ற இலக்கியவாதி ஈடுபட்ட முற்போக்கு நடவடிக்கைக்காகக் கைது செய்யப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டார் என்பது, வெறுமே சமூக, அரசியல் போராட்டம் என்று சுருக்கி, அதனை மல்லிகை செய்தியாகப் போடவில்லை என்று சொல்வது, பிரச்சினையை விளங்கிக்கொள்ளும் திறன் போதாமையால் வருவது. சாதி ஒழிப்புப் போராட்டம் காரணமாகத் தாக்கப்பட்ட தளையசிங்கம் நோய்வாய்ப்பட்டிருந்தபோது, அந்தச் செய்தியை மல்லிகை பிரசுரிக்கவில்லை என்பதற்குக் காரணம் க.கைலாசபதி மீதிருந்த அச்சம். இது திண்ணை உரையாடலில் பதிவாகியுள்ளது. இதனைச் சுட்டிக்காட்டக் காரணம், கைலாசபதியின் சர்வாதிகாரப் போக்கு எப்படி இலக்கிய உலகைக் கட்டுப்படுத்தியது என்று காட்டத்தானே தவிர, ஜீவாவை சிறுமை செய்ய அல்ல. முதலில் அதனை நீங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். இலக்கிய, சமூகச் செயற்பாட்டாளர் ஒருவர் முற்போக்குப் போராட்டம் காரணமாக மிலேச்சத்தனமான வன்முறைக்கு உள்ளாகியபோது, அது சார்ந்த விடயங்களை பேசாமல் கடந்தமை சாதரணவிடயமல்ல. முற்போக்கு பத்திரிக்கை ஒன்று காரணம் இன்றி இதனைச் செய்யாது. பொது அறிவு இருந்தாலே இதனை விளங்கிக்கொள்ளலாம்.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் முருகபூபதியின் 'செங்கோடா செருப்போடு நில்! ' என்னும் கட்டுரைக்கு முகநூலில் கிடைத்த எதிர்வினைகள்:

விவரங்கள்
- முகநூல் எதிர்வினைகள் -
முகநூல் குறிப்புகள்
17 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் முருகபூபதியின் 'செங்கோடா செருப்போடு நில்! '  என்னும் கட்டுரைக்கு முகநூலில் கிடைத்த எதிர்வினைகள்:


Ambikaipahan Gulaveerasingam: சிறப்பான பதிவு. சிறிது இடம் கிடைத்துவிட்டால் இப்படித்தான் பல பிதற்றல்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. மாமியாருடைய சீலை விலகிய கதை. சொல்லவும் முடியவில்லை, பார்த்துக்கொண்டிருக்கவும் முடியவில்லை.

Memon Kavi: இக்காலகட்டத்தில் தேவையான பதிவு. ஜீவா மறைந்ததால் அவரது மீதான அவதூறுகளுக்கான எதிர்வினைகள் வராது என்று நினைப்பவர்களுக்கு ஒரு குறிப்பு. ஜீவா மறைந்தாலும் அவருடன் வாழ்ந்தவர்கள், அவரை புரிந்து கொண்டவர்கள் கணிசமானவர்கள் இயலுமானவர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள் என்பதை மறந்து விட கூடாது.

Tam Sivathasan: மதிப்பிற்குரிய முருகபூபதி அவர்களுக்கு: அனோஜன் பாலகிருஷ்ணன் எந்த ஆதாரத்தை வைத்துக்கொண்டு ஜீவாவை விமர்சிக்கிறார் என்று கேட்டிருந்தீர்கள். உங்கள் கேள்விக்கான பதில்: பெப்ரவரி 14 அன்று நடந்த கருத்தரங்கில் தேவகாந்தன் குறிப்பிட்ட, 2002 இல் ஊட்டியில் நடந்த சந்திப்பில் ஜெயமோகன் கூறிய கருத்தில் இவ் விடயம் பதிவாக இருக்கிறது. ஜெ.மோ: "மல்லிகை ஆசிரியரான டொமினிக் ஜீவா பற்றி மு.தளையசிங்கம் இப்படிச் சொன்னதாக என்.கே.மகாலிங்கம் என்னிடம் சொன்னார். அவர் தலித்தாக இருந்த போதிலும் தளையசிங்கம் போராடிய செய்தியையோ, அடிபட்டு மரணப்படுக்கையில் இருந்த செய்தியையோ தன் இதழில் போடவில்லை. கைலாசபதி மீதான பயம்தான் காரணம்". இதில் எல்லோரும் 'அவர் சொன்னார்' கேஸ்கள் தான். மூத்த எழுத்தாளர் என்ற வகையில் இவை எல்லாவற்றையும் தெரிந்திருக்கக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு உண்டு. எனக்கு மட்டும் இது எப்படித் தெரியும் என்று தயவுசெய்து கேட்டுவிடாதீர்கள். நானும் உங்கள் காலத்தன்தான். 1992 இல் பிறந்தது அனோஜனின் குற்றமில்லை. ஜெயமோகனின் குறிப்பை அவர் வாசித்திருக்கிறார், நீங்கள் வாசிக்கவில்லை என்பதை அறிய ஒருவர் எரிகணை விஞ்ஞானியாக இருக்கவேண்டுமென்பதில்லை. ஜீவாவுக்கு நெருக்கமாக இருப்பதால் அவர் குறைகளுக்கு அப்பாற்பட்டவர் எனக்கூற வருகிறீர்களா? அல்லது வயது குறைந்தவர் என்பதனால் அனோஜன் அவரை விமர்சிக்கக்கூடாது என்கிறீர்களா? அனோஜனின் கருத்தின்மீது உங்களுக்கு கேள்வி இருப்பதில் தப்பில்லை. ஆனால் அதை அவரது வயதுடனும் அனுபவத்துடனும் இணைத்து எழுதுவதில் எனக்கு உவப்பில்லை. மார்க்ஸை, ஏங்கெல்ஸை, ஃபிராய்டை, ஹெமிங்வேயைப் பற்றி விமர்சிப்பவர்கள் அவர்கள் காலத்தில் பிறந்தவர்களோ வாழ்ந்தவர்களோ அல்ல. ஒரு இலக்கிய ஆளுமையின் தனிப்பட்ட வாழ்க்கை படைப்பில் தெரியவேண்டுமென்று சிலர் கூறுவார்கள். அப்படியானால் ஞானி ஏன் கோவிலில் சாமி கும்பிட்டார் என்று கேட்பவர்களுக்கோ, பிரித்தானிய இலக்கிய வட்டத்தில் இருந்த ஒரே ஒரு தமிழ் ஆளுமையான அழகு சுப்பிரமணியம் ஏன் யாழ்ப்பாணம் நீதிமன்ற வீதிகளில் வெறியில் விழுந்துகிடந்தார் என்று கேட்பவர்களுக்கோ பதில் இல்லை. அது விவாதத்துக்குரிய விடயம். உங்கள் ஆதங்கம் புரிகிறது ஆனால் அதை முன்வைத்த பாங்கில் எனக்கு உவப்பில்லை. எல்லா இலக்கியவாதிகளிலும் செங்கோடர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு அதுவே நல்லதொரு உதாரணம். அனோஜன் கூறியதற்கான ஆதாரம் ஜெயமோகன் பதிவாக 'திண்ணை' யில் வெளிவந்தது. Hard copy (6/11/2002) யாக
என்னிடம் உள்ளது. வேண்டுமானால் அனுப்புகிறேன். ஜெ.மோ. எழுதியதற்காக அது உண்மையாக இருக்கவேண்டுமில்லை எனக் கேள்வி எழுப்புபவர்கள் என்.கே. மகாலிங்கத்திடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளலாம். யாருக்காகவும் வாதிடுவதற்காக
இதை நான் எழுதவில்லை. இரண்டாவது செருப்பின்மீது எனக்கு அக்கறையுமில்லை. நன்றி

மேலும் படிக்க ...

சிறுகதை: வெந்து தணிந்தது காடு – கே.எஸ்.சுதாகர் -

விவரங்கள்
– கே.எஸ்.சுதாகர் -
அரசியல்
16 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அகிலன் வேலைக்கு அவசரமாகப் புறப்பட்டுக் கொண்டிருந்தான். அவன் மெல்பேர்ண் நகரத்திலுள்ள வைத்தியசாலையில் வைத்தியராகப் பணி புரிகின்றான். வழக்கமாக காலை ஆறுமணிக்கெல்லாம் கிழம்பிவிடுவான்.

“கொரோனா காற்றாலை பரவுமா அப்பா?” உறங்கிக் கொண்டிருந்த அக்சரா, விழித்தெழுந்து திடீரெனக் கேட்டாள்.

அக்சரா ஏழாம்வகுப்புப் படிக்கின்றாள். கொரோனா தொடர்பான `கிறியேற்றிவ்’ படைப்பொன்றை எழுதுமாறு பாடசாலையில் கேட்டிருந்தார்கள். அக்சரா தற்போதைய சூழ்நிலையில் பள்ளிக்குப் போவதில்லை. சூம் கல்வித்திட்டத்தின் (Zoom education) மூலம்--- ஆசிரியருக்கும் மாணவருக்குமிடையேயான வீடியோ தொடர்பாடல்--- வீட்டில் இருந்தபடியே கல்வி பயின்று வருகின்றாள். அக்சராவின் கேள்விக்கு விரிவான விளக்கம் குடுக்கப் போனால், வேலைக்குப் பிந்த நேரிடலாம என்பதை உணர்ந்தான் அகிலன்.

“பின்னேரம் வந்து சொல்கின்றேனே!” என்றபடி வாசலை நோக்கிச் சென்றான்.

“நான் கதவை மூடுகின்றேன்” எழுந்து வந்த அப்பா, பின்னாலே நின்று சொன்னார். அப்பாவுக்குப் பின்னால் அம்மா மறைந்து நின்று எட்டிப் பார்த்தார்.

“கவனம்…. அகிலன்…”

அம்மா `கவனம்’ என்று சொன்னது `ஆட்கொல்லி’ கொரோனாவைத் தான். அந்தக் `கவனம்’ அகிலனுக்கு சலிப்பைத் தந்தது.

“அம்மா…. நான் சேவை செய்வதற்காகத்தானே படித்தேன். எல்லாவிதமான முன் எச்சரிக்கைகளோடுதான் நாங்கள் எல்லாரும் வைத்தியசாலையில் வேலை செய்கின்றோம்.”

மேலும் படிக்க ...

செங்கோடா செருப்போடு நில்! - முருகபூபதி -

விவரங்கள்
-முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
16 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- பதிவுகள் இணைய இதழில் வெளியான 'எழுத்தாளர் மு.தளையசிங்கம் பற்றிய கருத்தரங்கும், மல்லிகை ஆசிரியர் மீதான குற்றச்சாட்டும் பற்றி.. - வ.ந.கிரிதரன் -' என்னும் கட்டுரைக்கான எழுத்தாளர் முருகபூபதியின் எதிர்வினை - பதிவுகள் -


ஒரு நகரத்தில் ஓவியக்கண்காட்சி நடைபெற்றது. சிறந்த ஓவியங்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. ஓவியங்களை பரிசுக்குத் தெரிவுசெய்வதற்காக புள்ளிகள் இடும் நடுவர்களும் அங்கு குழுமியிருந்தார்கள். அந்த நடுவர்களில் நீதிபதிகள், கல்விமான்கள், அறிஞர்கள், ஓவியர்கள், கலைஞர்களும் இடம்பெற்றிருந்தனர். ஒரு அழகிய பெண்ணின் ஓவியம் முதல்பரிசுக்குத் தெரிவாகியிருந்தது. அக்கண்காட்சி நடக்கும் வீதியில் செருப்பு தைக்கும் செங்கோடன் என்பவனும், அதனை பார்த்து ரசிக்க அங்கே வந்தான்.
முதல்பரிசுக்குத் தெரிவான பெண்ணின் ஓவியத்தை கூர்ந்து பார்த்தான். அந்தப்பெண்ணின் பாதத்திற்கு ஏற்ப அணியப்பட்ட செருப்பின் வடிவம் ஓவியத்திற்கு பொருத்தமில்லாமல் இருந்ததை கண்டான். தான் கண்டுபிடித்த தவறை அங்கிருந்த நடுவர்களிடம் சொல்லி, இந்த ஓவியம் பரிசுக்கு தகுதியானது அல்ல என்று சுட்டிக்காண்பித்தான்.

மேலும் படிக்க ...

பாலின பேத வன்முறை : பெண்குரல்கள் - சுப்ரபாரதி மணியன் -

விவரங்கள்
-- சுப்ரபாரதி மணியன் -
சுப்ரபாரதிமணியன் பக்கம்
16 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நான் ஒருத்திதான்
ஆனால் எனக்கு நூறு முகங்கள்
ராவணனின் முகங்களை விட எனக்கு அதிக முகம்
ஆறுமுகத்தின் முகங்களைவிட அதிகம்
 என் நூறும் உங்களை கொஞ்சம் பார்க்கச் செய்யும்.
 நான் திருமணமாகாதவர்,
 திருமணம் செய்துகொள்ள தேவையான காசும் பணமும் என்னிடம் இல்லை
 நான் சம்பாதிப்பதினை வைத்து
 வாழ்க்கையை வயிற்று நடத்துகிற எனக்கு
 எப்போது சீமந்தம் என்று என்னைப் பார்க்கிற போதெல்லாம்
ஒரு சக பின்னலாடைத் தொழிலாளி கேட்டுக்கொண்டே இருக்கிறார்
கேட்பது மட்டுமில்லை
 கைகளை நீட்டி தொடவும் செய்கிறார்,
 சீமந்ததிற்கு அவர் காரணமாக விரும்புவது  போல பேசுகிறார்
 எனக்கு பல புகைப்படங்களும் பாலியில் விஷயங்களும்
கைபேசியில் வந்து குவிந்து கொண்டே இருக்கின்றன
அனுப்புவர் அவர்தான் என்று தெரியும் ..
ஆனால் எதற்காக, யாரிடம்  கேட்பது, சொல்வது  என்று தெரியவில்லை
 எங்கள் அலுவலகத்தின் கழிப்பறையின் கதவுகளில் உள்புறத்தில்
எழுதப்பட்டிருக்கும்  வார்த்தைகள் ,
பாலியல் உறுப்புகள் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள்
இவையெல்லாம் இன்னொரு வகையான தாக்குதலாக இருக்கிறது.
 என் சூப்பர்வைசர் என்னை அழைத்து
 பாராட்டுகிறார்.. முதுகில் தட்டுகிறார்
 வார்த்தையில் கூட அவர் பாராட்டை தெரிவிக்கலாம் .
கம்பெனி நிர்வாகி அடிக்கடி கூப்பிடுறார்
என் மேல் விழும் மழை துளி  சந்தோசப்படுத்தும்
அவரின் அச்சில் தெறிப்பு எரிச்சலூட்டுகிறது.
 அவரும் என்னை வேறு மாடிக்கு அழைக்கிறார் .
ஒருநாள் தண்ணீர் அருந்திக் கொண்டிருக்கும்போது
மார்பகத்தைத் தொட்டு விட்டு சென்றவர் யார் என்று தெரியவில்லை

மேலும் படிக்க ...

எழுத்தாளர் மு.தளையசிங்கம் பற்றிய கருத்தரங்கும், மல்லிகை ஆசிரியர் மீதான குற்றச்சாட்டும் பற்றி.. - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
15 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தமிழ் மொழிச் செயற்பாட்டகம் இன்று இலண்டனில் நடாத்திய எழுத்தாளர் மு,தளையசிங்கம் பற்றிய  Zoom வழி இணையவெளிக்  கருத்தரங்கில் நான் கலந்துகொள்ளவில்லை, ஆனால் இக்கருத்தரங்கில் இளம் எழுத்தாளர் அனோஜன் பாலகிருஷ்ணன் கூறிய கருத்தொன்றினைப் பற்றி, எழுத்தாளர் ஷோபா சக்தி  முகநூற் பதிவொன்றினை இட்டிருந்ததை வாசிக்கும் சந்தர்ப்பமேற்பட்டது. அப்பதிவில் ஷோபாசக்தி பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:

"டொமினிக் ஜீவா போன்ற வாழ்நாள் போராளி மீது விமர்சனம் வைக்கும்போது, ஒன்றுக்கு நான்கு தடவைகள் யோசித்துப் பேசுவதே நல்லது. அனோஜன் பாலகிருஷ்ணன் இன்றைய நிகழ்வில் 'டொமினிக் ஜீவாவுக்கு கைலாசபதி மீது அச்சம் இருந்தது' என்று சொன்னது தவறு. 'தமிழ் மொழிச் செயற்பாட்டகம்' மு.தளையசிங்கம் குறித்து நடத்திய இணையவழிக் கருத்தரங்கில் உரையாற்றிய அனோஜன் 'தளையசிங்கம் சாதியொழிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டதால் தாக்குதலுக்குள்ளாகிய செய்தியை, ஜீவாவுக்கு கைலாசபதி மீதிருந்த அச்சம் காரணமாகவே மல்லிகை இதழில் வெளியிடவில்லை' எனச் சொன்னார். மு.தளையசிங்கத்தை மதிப்புறப் பேசுவதற்காக, ஜீவாவை மதிப்பிறக்கிப் பேச வேண்டிய அவசியம் கிடையாது. இது ஜீவா மீதான கடுமையான பழிச் சொல்! மல்லிகை இதழில் அப்போது ஏன் செய்தி வெளியிடவில்லை எனப் பதில் சொல்ல இப்போது நம்மிடையே ஜீவா இல்லை. "

இதில் அவர் அனோஜன் பாலகிருஷ்ணன் மல்லிகை ஆசிரியரான அமரர் டொமினிக் ஜீவா மீது பாரதூரமான குற்றச்சாட்டொன்றை வைத்திருந்ததைக் குறிப்பிட்டிருந்தார். அது: "அனோஜன் 'தளையசிங்கம் சாதியொழிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டதால் தாக்குதலுக்குள்ளாகிய செய்தியை, ஜீவாவுக்கு கைலாசபதி மீதிருந்த அச்சம் காரணமாகவே மல்லிகை இதழில் வெளியிடவில்லை' எனச் சொன்னார்".

மேலும் படிக்க ...

தொடர் நாவல்: கலிங்கு (2006 - 7) - தேவகாந்தன் -

விவரங்கள்
- தேவகாந்தன் -
தேவகாந்தன் பக்கம்
13 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர்  தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி  பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது.  'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com


அத்தியாயம் ஏழு!

கண்டி-கொழும்பு பெருவீதியில் பயணித்திருக்கக் கூடியவர்களுக்கு, கேகாலை தென்பட்டிருக்க முடியுமாயினும், நகரத்திலிருந்து உள்ளே சுமார் பதினைந்து கிமீ தொலைவிலிருந்த அரநாயக்க கிராமம் அந்தச் சாத்தியமும் அற்றிருந்தது. அதுவே ஒரு சிற்றரசாயிருந்த சரித்திரத்தைக் கொண்டிருந்தது. மண்படையும், அதன் மேல் கல் படையும், அதற்கு மேலே இன்னொரு மண்படையுமாய் அந்த மேட்டுப் பூமியின் நிலவியல் அமைந்திருந்ததில்,  சமாந்தரத்தில் அமைந்திருக்காத வீடுகளைக் கொண்டிருந்தது அது. அது ஒரு கூம்பு வடிவ அடுக்கு வீட்டுத் திட்ட குடியிருப்புப்போல தூரத்திய பார்வைக்குத் தென்பட்டது. நடுப்பகுதியிலிருந்த ஒரு வீட்டிலிருந்து பார்த்தால் பின்னாலிருந்த வீடுகள் மேலேயாய்த் தெரிய, முன்புறத்திலுள்ள வீடுகள் பள்ளத்தில் கிடப்பனவாய்த் தோன்றின. அவற்றின் கூரைகளும், முற்றத்தில் நடமாடும் மனிதர்களின் உருவங்களும்கூட துல்லியமாக காட்சிப்பட்டன. மேலேயுள்ள வீடுகளுக்குச் செல்ல அதற்கென அமைந்த  வட்டப் பாதையிருந்தது. அப்பாதையில் அரை மணி நேரத்தில் செல்லும் ஒரு தூரத்தை, குறுக்கு வழியில்  பத்தே நிமிஷங்களில் அடைந்துவிட முடியும். மழை பெய்யாத காலங்களில்தான் அது சாத்தியமாயிருந்தது. எங்கேயிருந்து வருகிறதெனத் தெரியாதபடி மழைகாலம் சகல இடங்களிலும் சிற்றாறுகளைத் தோற்றுவித்து, சேற்றுக் குட்டைகளை உண்டாக்கி குறுக்குப் பாதைகளை அழித்துவிடும். அப்போது அவை செந்நிற ஓடைகளாய் ஓடிக்கொண்டிருக்கும். அரநாயக்கவிலிருந்து அசுபினி நீர்வீழ்ச்சியைக் காணமுடியும். அது அரநாயக்க விரித்த காட்சிப் புலத்தின் இன்னொரு அழகு.

அருவிகளும், சிற்றோடைகளுமாய் அப்பிரதேசம் வளப்பமாக இருந்தது. வீதிகளின் ஓரமெங்கும் மரங்களின் சாமரை வீச்சு. நிலம் படர்ந்து கொழுத்த புல்லினம். நீர்க் குழிகளில் மதர்த்து வளர்ந்து மேலெழத் துடித்துநிற்கும் நீர்த் தாவரங்கள். கல்வேலிகளுள் குட்டி வேலிகளாய் பூஞ்செடிகள். மல்லிகை, நந்தியாவெட்டை, தேமா, சூரியகாந்தி என அச்செடிகளில் வாசம் தெறிக்கும் பூக்களின் சிரிப்பு. இடையிடை உயர்ந்து வளர்ந்த ரப்பர் மரக் காடுகள். இன்னும் தொட்டம் தொட்டமாய் பாகினி, கித்துல், புருத்தை ஆதிய மரங்களின் செறிவு.  நீரும் நிலமும் செழிப்பின் ஆழத்தையும், காற்றும் வானும் பூக்களின் வாசத்தையும் அங்கே சுமந்திருந்தன.
அந்த அழகுகளின் பின்னாலேதான் அதன் அழுகுரல் இருந்தது.

மேலும் படிக்க ...

ஆ(ஒ)க்ஸ்ஃபோர்ட்- அஸ்ட்ரா செனெகாவே நீ வா! வா! வா! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
13 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நேற்றுக் காலை எனது ஆ(ஒ)க்ஸ்ஃபோர்ட் - அஸ்ட்ராசெனகா கோவிட் -19  தடுப்பூசியினைப்பெற்றுக்கொண்டேன். கடந்த இருபது வருடங்களாக வருடா வருடம் 'புளூ'வுகான தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டு வருகின்றேன். அவை எவ்வித எதிர்விளைவுகளையும் தந்ததில்லை. இதுவும் அவ்விதமே அமையுமென்ற நம்பிக்கையுண்டு.  இதுவரையில் எவ்வித எதிர்விளைவுகளும் ஏற்படவில்லை.

தற்போது ஐரோப்பாவின் சில பகுதிகளில் இந்தத்தடுப்பூசி தற்காலிகமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அறிகின்றேன். அதே நேரத்தில் ஏற்கனவே இந்தத்தடுப்பூசி ஐரோப்பாவில் மில்லியன் கணக்கில் மக்களுக்குப் போடப்பட்டுள்ளதாக அறிகின்றேன். அங்கு பாவிக்கப்பட்ட இத்தடுப்பூசியை அப்பிரதேசத்திலுள்ள நிறுவனமொன்று தயாரித்ததாகவும் அறிகின்றேன்.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. மு.தளையசிங்கத்தினை தெரிந்து கொள்ள...... 14ம் திகதிய உரையாடலுக்கான தொகுப்பு- 03 - பெளசர் -
  2. ' கோவிட் 19 உலகில் பெண்களின் தலைமைத்துவம்: மற்றும் சமத்துவ எதிர்காலத்தைச் சாதித்தல்.' ('Women in leadership: Achieving an equal future in a covid-19 world') - இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -
  3. எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் - “ அந்நியர்கள் “ என்ற நாவலுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசு!
  4. சிந்தனைக் களம்: இணைய வெளி உரை நிகழ்வு - பரதக்கலை (தோற்றம் , தொடர்ச்சி & வளர்ச்சி)
  5. ஆய்வு: சிலம்பு சுட்டும் குறிஞ்சி மக்களின் வாழ்க்கை - முனைவர் மூ.சிந்து -
  6. ஈழத்து மூத்த படைப்பாளி செ. கணேசலிங்கனுக்கு இன்று 93 ஆவது பிறந்த தினம்! முற்போக்கு இலக்கிய உலகில் சிறந்த மனிதநேயவாதி! - முருகபூபதி -
  7. புகலிடத் தமிழ் சினிமா – ஒரு தொடர்ச்சியற்ற பயணத்தில் - ‘புகலிடத் தமிழ் சினிமா’ நூல் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்! - வாசன் -
  8. மேனாட்டுப்பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை பற்றி... - வ.ந.கிரிதரன் -
  9. கவிதை: சவாலைத் தெரிவு செய்! - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -
  10. பெண்மையின் பெருமையை கண்ணெனப் போற்றுவோம்! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா -
  11. மாலு : புலம்பெயர்தல் எனினும் துவக்கத்திலேயே தீர்ந்துவிடும் லட்சியம்! - பேராசிரியர் .பாலகிருஷ்ணன் -
  12. கவிதையும் திரைப்படப் பாடல்களும் அன்றும் இன்றும் - முருகபூபதி -
  13. மறக்க முடியாத சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரம் அவர்கள் (சுந்தர்)! - வ.ந.கிரிதரன் -
  14. கீழடி அகழாய்வு : பதிப்பும் பதிப்புச் சிக்கலும் - முனைவர் ம இராமச்சந்திரன் -
பக்கம் 101 / 104
  • முதல்
  • முந்தைய
  • 95
  • 96
  • 97
  • 98
  • 99
  • 100
  • 101
  • 102
  • 103
  • 104
  • அடுத்த
  • கடைசி