பதிவுகள் முகப்பு

நனவிடை தோய்தல் (1) - நினைத்தாலே இனிக்கும் நினைவுகள்: யாழ் இந்து மைதான வைரவர் -இந்து.லிங்கேஸ் (ஜேர்மனி) -

விவரங்கள்
-இந்து.லிங்கேஸ் (ஜேர்மனி) -
இலக்கியம்
03 டிசம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

யாழ்.இந்துக்கல்லூரிக்குள் 70களில் இளவட்டங்களாக காலடி எடுத்துவைத்த பொற்காலம்.இந்துவின் மைதானத்துடன் உறவாடியபடி பச்சைப்பசேலென முப்பெரும் மரங்களுடன் நாமும் ஒன்றிப்பிணைந்து,ஒட்டுண்டு கிடந்த காலமது.மரங்கள் பகிர்ந்த நிழல்களே எமக்கான இளைப்பாறும் கூடுகள்.நீட்டி நிமிர்ந்து சாய்ந்து சல்லாபிக்க தோள்தந்த மதில்கள்.காற்று அள்ளி வந்து மைதான மணலை எம்மில் தூவி,முகங்களை வருடிவிட்டுப்போன கணங்கள்கூட நினைவிலிருந்து அழியாத கோலங்கள் அவை.

கல்லூரி மணி அடித்து ஓயும்.வெள்ளியென்றால் அந்த மணியோசை மனசைப்பரவசப்படுத்தும்.2 நாட்கள் விடுமுறை என்ற சந்தோசமது.தவிர,அன்று மாலை எமது மைதானத்தில் கிரிக்கெட் மச்சென்றால் அந்தக்குதூகலம் இன்னும் ஒருபடி மேல. நல்ல இடம்பிடிக்க ஓடிவந்து,மதில்களில் பாய்ந்து ஏறியிருந்து ரசித்த அன்றைய துடுப்பாட்டப்போட்டிகளின் வெற்றிகள் மனத்திரைக்குள் கறுப்புவெள்ளைக்காட்சிப்படிமங்களாக ஓடிக்கொண்டேயிருக்கின்றன.வெள்ளி இருள,மச்சும் முடிய புத்தகங்களுடன் வீட்டுக்குச்சென்று அந்த இனிய நாளை அரங்கேற்றியதையும் இளம்பருவத்தை அனுபவித்த எவராலும் மறக்க முடியாது.

"சீக்கிரமா விடியாதா சனி?"

விடிந்தவுடன்;காலைச்சாப்பாட்டை முடித்துவிட்டு சைக்கிளை எடுத்து கால்கள் மிதிக்க,கிரவுண்ட் நோக்கி சைக்கிள் பறக்கும்.

மேலும் படிக்க ...

ஈழத்தின் சிறார் இலக்கியம் குறித்த மதிப்பீட்டில் கவிஞர் இக்பால் அலியின் வகிபாகம்: ஓர் ஆய்வு! - பேராசிரியர் ஜமாஹீர், பேராதனை பல்கலைக்கழகம் -

விவரங்கள்
- பேராசிரியர் ஜமாஹீர், பேராதனை பல்கலைக்கழகம் -
ஆய்வு
03 டிசம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                         - கவிஞர் இக்பால் அலி -

ஆய்வுச் சுருக்கம்

ஈழத்தின் சிறார் இலக்கியப் பரப்பில் கவிஞர் இக்பால் அலியின் வகிபாகத்தைப் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். ‘இக்பால் அலியின் சிறார் இலக்கியத்தின் பாடுபொருள் மற்றும் எடுத்துரைப்பு பிற சிறார் இலக்கியங்களிலிருந்து வேறுபடுகிறது.’ என்ற கருதுகோளினைக் கொன்டு இக் கட்டுரை அமைகிறது. இக்கட்டுரைக்கு இதுவரை வெளிவந்துள்ள இக்பால் அலியின் சிறார் பாடல்கள் கொண்ட நூல்களை முதன்மைத் தரவுகளாகவும் இப்பாடல் நூல்களுடன் தொடர்புடைய திறனாய்வுகள், கட்டுரைகள் மற்றும் ஆய்வேடுகள் துணைமைத் தரவுகளாகவும் அமைகின்றன. கட்டுரையானது விபரிப்பு மற்றும் உள்ளடக்கப் பகுப்பாய்வு முறையியல்களைப் பின்பற்றியும் விளக்கப்படுகின்றது. ஈழத்து சிறார் இலக்கியத்தின் வழி மனித குலத்தின் மேம்பாடுதான் இக்பால் அலியின் வலியுறுத்தல் என்பதே இக்கட்டுரையின் முடிவாகும்.

பிரதான சொற்கள்: சிறார் இலக்கியம், அன்பு பெருக, மூன்று சக்கரக்காரன், குரங்குத் தம்பி, செல்லக் குட்டி

அறிமுகம்

இக்பால் அலி 1984ஆம் ஆண்டு முதல் இலக்கிய படைப்பாக்க முயற்சிகளில் ஈடுபட்டு வரும் ஒரு கவிஞர், எழுத்தாளர்இ ஊடகவியலாளர், மானுட சமத்துவச் சிந்தனையை கலை இலக்கியங்களின் வழி முன்னெடுத்து வருபவர். இவர் இலங்கை சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகவும் தொழில் நிமித்தம் காரணமாக பறகஹதெனிய மற்றும் கண்டியை வாசிப்பிடமாகவும் கொண்டவர். இலக்கிய உலகிற்கு இக்பால் அலியை அறிமுகம் செய்தவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மேனாள் தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் துரைமனோகரன் ஆவார். குறிப்பாகஇ பேராசிரியர் துரைமனோகரன் எழுதிய ‘இலங்கையின் இலக்கிய வளர்ச்சி’ என்ற நூலிலும் இக்பால் அலி வெளிக்கொணர்ந்த பல நூல்களுக்கு அவர் எழுதிய அணிந்துரைகளிலும் இதனை அறியலாம்.

மேலும் படிக்க ...

கவிஞர் திருமாவளவனுடன் ஓர் உரையாடல்! - ஆதவன் கதிரேசர்பிள்ளை -

விவரங்கள்
- ஆதவன் கதிரேசர்பிள்ளை -
நேர்காணல்
02 டிசம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- எழுத்தாளர் ஆதவன் கதிரேசர்பிள்ளை கவிஞர் திருமாவளவனுடன் முகநூல் மெசஞ்சரில் நடத்திய உரையாடல்களின் தொகுப்பொன்றை இமேஜ் வடிவில் அனுப்பியிருந்தார். துண்டு துண்டுகளாக, தாறுமாறாக, குழம்பிக் கிடந்த துண்டுகளிலிருந்து ஓரளவுக்கு விளங்கும் வகையில் பொருத்தியுள்ளேன். பிழை , திருத்தம் எவற்றையும் செய்யவில்லை. அப்படியே வெளியாகின்றது. இதனை வாசித்து , ஒழுங்காக்கும் பொறுப்பு ஆதவனுடையது. எதிர்காலத்தில் இமேஜ் வடிவில் அனுப்பாமல் எழுத்து வடிவில் அனுப்புங்கள். அலைபேசியிலுள்ள மெசஞ்சர் செய்திகளை அப்படியே மின்னஞ்சலுக்கு அனுப்பலாம. அதன் மூலம் தட்டச்சு செய்யும் பணியில் நேரம் மிஞ்சும். கவனத்தில் ஆதவன் எடுப்பாராக. - வ.ந.கி , பதிவுகள்.காம் -


திருமாவளவன் - வணக்கம் ஆதவன்

ஆதவன் - எம் எப்படியுள்ளீர்கள்? கலைச்செல்வன் தான் போய்த் தொலைந்தான். என் அழகிய தோழன்.

திருமாவளவன் - நான் ஒரு தடவை அவனூடாக

ஆதவன் -

லாச்சப்பல் முன்றலில் நினைவிருக்கு

திருமாவளவன் - ஓம்.. எப்படியிருக்கிறீர்கள்?

ஆதவன் -

நிறையப் பயணம்
செய்கிறேன். நிறைய வாசிக்கிறேன்.

திருமாவளவன் -  எனது  தொகுப்புகள் பார்த்திருக்கிறீர்களா?


ஆதவன் -

இங்கே இருக்கிறது பழையவை. புதியவை படித்திலேன். அனுப்புக.

மேலும் படிக்க ...

அஞ்சலி : எழுத்தாளர் சாமக்கோடாங்கி ரவி ( வழக்கறிஞர் ரவி ). - சுப்ரபாரதிமணியன் -

விவரங்கள்
- சுப்ரபாரதிமணியன் -
சுப்ரபாரதிமணியன் பக்கம்
01 டிசம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சாமக்கோடாங்கி ரவி என்ற பெயரில்25 க்கும் மேற்பட்ட சிறுகதைகள்100 க்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியுள்ளார். திருப்பூர் இலக்கிய விருது நிகழ்வு ஒருங்கிணைப்பாளராக பல சாதனைகள் புரிந்தவர்.

மூத்த வழக்கறிஞர் திரு ரவி அவர்கள்  27/11/24 எதிர்பாராத விதமாக உடற்பயிற்சி மையத்தில் கீழே விழுந்ததனால் ஏற்பட்ட. தலைக்காயத்தின் காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் காலமாகிவிட்டார் எனும் துயர செய்தியை அறிந்து வேதனையுறுகின்றோம் .

திருப்பூர் இலக்கிய விருதுக்காக வந்த நூல்கள் அவர் முகவரியில் இருந்ததை சென்ற வாரம் பெற்று கொண்ட போது எல்லாம் கொடுத்து விட்டேன்.எல்லாம் முடிந்தது என்றார். எல்லாமுமாக முடித்து கொண்டார். கடைசி சந்திப்பு... அவை கடைசி வார்த்தைகள்

போய் விட்டாயா ரவி?  சமீபமாய் தங்கள் உடல் பரும்ன் குறைக்க ஜீம்முக்கு போவதாகச் சொன்னீர்கள்.வீட்டுக்கதவு அடைபட ஏமாற்றத்துடன் திரும்பினேன் பலதரம்.

இன்று பூட்டப்பட்ட கதவை பார்த்து கண்ணீர் வடித்தேன். ஓசோ..புதுமைப்பித்தன் முதல் பலரது படைப்புகள் பற்றிய பேச்சு... இசை...முதல் வீட்டு பிராணிகள் வளர்ப்பு வரை எல்லாம் பேசியிருக்கிறோம்... அனுபவ பேச்சு. ..

மேலும் படிக்க ...

சாகித்திய ரத்னா விருது பெற்ற பெண் ஆளுமை ' யாழ்நங்கை' அன்னலட்சுமி இராஜதுரை - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
29 நவம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கையில் அண்மைக்காலத்தில் சில அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. நீண்ட இடைவெளிக்குப்பின்னர் ஒரு பெண் பிரதமராகியிரு;க்கிறார். அவர்தான் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய. அத்துடன் இருபதிற்கும் மேற்பட்ட பெண்கள் இலங்கை நாடாளுமன்றத்திற்கு புதிதாக தெரிவாகியிருக்கிறார்கள். இச்செய்திகளின் பின்னணியில் தற்போது மற்றும் ஒரு இலக்கியச் செய்தி வெளியாகியிருக்கிறது.

நாம் அன்னக்கா என பாசமுடன் அழைக்கும் இலங்கையின் மூத்த படைப்பாளியும் பத்திரிகையாளருமான திருமதி அன்னலட்சுமி இராஜதுரை அவர்களுக்கு இம்முறை சாகித்திய ரத்னா விருது வழங்கப்பட்டிருக்கிறது. செய்தி அறிந்தவுடன், அவரைத் தொடர்புகொண்டு வாழ்த்தியதையடுத்து அவர் பற்றிய இந்தக்குறிப்புகளை எழுதுகின்றேன்.

இதற்கு முன்னர் இந்த உயரிய தேசிய விருது தமிழர் தரப்பில் ஆண்களுக்குத்தான் வழங்கப்பட்டிருக்கிறது. இம்முறை இந்த கௌரவத்திற்கு ஒரு தமிழ்ப்பெண் ஆளுமை தெரிவாகியிருக்கிறார். இவரை பரிந்துரைத்தவர்களுக்கும் எமது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றோம்.

ஒரு பெண் ஏழுதசாப்தங்களுக்கும் மேலாக தொடர்ந்தும் ஊடகத்துறையில் நிலைத்து நிற்கிறார் என்றால், அவர் யார்...? என்ற கேள்வியைத்தான் முன்னைய - இன்றைய தலைமுறை வாசகர்கள் விழியுயர்த்திக் கேட்பார்கள். அப்படி ஒருவர் தமிழ்ப் பெண்ணாக தமிழ் ஊடகத்துறையில் அமைதியாக பணிதொடருவதென்பது மிகப்பெரிய ஆச்சரியம். சாதனை.

மேலும் படிக்க ...

சு.சமுத்திரத்தின் நெருப்புத் தடயங்கள் - புதின உத்தியும் மொழிநடையும்! முனைவர் கோ.வெங்கடகிருஷ்ணன், இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை, இசுலாமியாக் கல்லூரி (தன்னாட்சி),வாணியம்பாடி -635 752 -

விவரங்கள்
- முனைவர் கோ.வெங்கடகிருஷ்ணன், இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை, இசுலாமியாக் கல்லூரி (தன்னாட்சி),வாணியம்பாடி -635 752 -
ஆய்வு
27 நவம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

இலக்கியங்கள் அவையவை தோன்றிய காலத்துச் சமுதாயத்தை வெளிக்கொணர்ந்து காட்டும் காலக்கண்ணாடிகள் எனலாம். இவ்வகையில் புதின இலக்கியமும் தான் தோன்றிய காலத்துச் சமுதாயத்தைப் படம்பிடித்துக் காட்டத் தவறவில்லை. இப்புதின இலக்கியம் தன் காலச் சமுதாயத்து நிகழ்ச்சிகளைக் கூறுவதன் வாயிலாக வருங்காலச் சமுதாயத்தைத் திருத்த அல்லது நல்வழிச் செலுத்த முனைகின்றது. தற்காலத்துப் புதின ஆசிரியர்கள் பலருள்ளும் சு.சமுத்திரம் சமுதாய சிக்கலை இலைமைறை காய்ப்போல் அல்லாமல், அங்கை நெல்லியெனப் பளிச்சிடக் கொணர்வதை அறிந்தேன். என் உணர்வுக்கு ஏற்றாற் போலவே அவருடய வேரில் பழுத்த பலாவும் சாகித்திய அகாடமி பரிசைப் பெற்றது. அவருடைய இன்னொரு நூலாகிய நெருப்புத் தடயங்கள் என் நினைவுக்கு வந்தது. நெருப்புத் தடயமும் வேரில்பழுத்த பலாவைப் போலவே சிறந்தது என எண்ணியதால், அப்புதினத்தின் சிறப்புக் கூறுகளான உரையாடல், மொழி நடை போன்றவை கதையில் எவ்வாறு அமைய வேண்டும் என்பதையும் அவ்வாறு அமைய வேண்டியதன் அவசியம் என்ன என்பதையும், அது ‘நெருப்புத் தடயங்கள்’ என்னும் புதினத்தில் எங்ஙனம் அமைந்துள்ளது என்பதையும் ஆராய்ந்து விளக்கிக் கூறுவதே இவ்வாய்வின் நோக்கம்.

உரையாடல்

உலகம் இன்று துடிப்புடன் இயங்குகிறது என்றால் அதன் முக்கியகாரணம் ஒருவர் ஒருவரோடு மேற்கொள்ளும் கருத்துப் பரிமாற்றமே ஆகும். இந்தக் கருத்துப் பரிமாற்றம் உரையாடல்கள் மூலந்தான் நடைபெறுகிறது. அன்றாட மனித வாழ்வில் எவ்வாறு உரையாடல் இன்றியமையாத ஒரு இடத்தைப் பெறுகிறதோ அதுபோல் மனிதனால் படைக்கப்படும் அனைத்து இலக்கி;யங்களிலும் உரையாடல் அவசியமாகிறது. ஏனென்றால் இலக்கியம் என்பது, தான் வாழும் சமுதாயச் சூழல்களால் பாதிக்கப்பட்ட மனிதனால் அச்சமுதாயத்திலுள்ள பிற மக்களுக்காக அச்சமுதாயத்தை உணர்ச்சி மிக்க வார்த்தகளால் படைத்துக் காட்டுவதாகும்.

இலக்கியங்களில் வரும் உரையாடல்கள் பல வகையாக இருக்கும். சில இடங்களில் பாத்திரங்கள் தங்களுக்குள் உரையாடுவதாக அமையும். வேறு சில இடங்களில் பாத்திரங்களோடு உரையாடுவதாய் அமையும். இன்னும் சில இடங்களில் பாத்திரங்களுக்கும் வாசகர்களுக்கும் இடையில் உரையாடல் அமைவதாய் இருக்கும். இப்படி அமையும் உரையாடல்கள் இலக்கியத்தின் சிறப்புக்குத் துணை செய்ய வேண்டும். புதினத்தில் இடம்பெறும் உரையாடல்,

மேலும் படிக்க ...

திருப்பூர் இலக்கிய விருதுகள் 2024 : 1/12/24

விவரங்கள்
- தகவல்: சுப்ரபாரதிமணியன் -
சுப்ரபாரதிமணியன் பக்கம்
27 நவம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

16வது ஆண்டில்.. இதுவரை சுமார் 350 படைப்பாளிகளுக்கு எளிமையாக இந்த திருப்பூர் இலக்கிய விருது கடந்த 16 ஆண்டுகளில் வழங்கப்பட்டு இருக்கிறது. அவர் இல்லை இவர் இல்லை என்று சொல்பவர்கள் அவர்களும் இவர்களும் முன்பே இடம்பெற்றிருக்கிறார்கள் என்பதை மனதில் கொள்ளலாம்

இந்த ஆண்டும் வழக்கமாக எளிமையாக ஒரு நூலகத்தில் நடைபெறுகிறது. 50 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலவாணி தரும் நகரத்தில் பின்னலாடை மூலம் வருமானம் கிடைக்கும் நகரத்தில் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஸ்பான்சர்கள் கிடைப்பதில்லை. இந்த முறையும் முயன்றோம். நகரத்தின் முக்கிய 8 பிரமுகர்களுக்கு ( ஓரளவு அறிமுகமானவர்கள் ) கடிதங்கள் அனுப்பினோம் .யாரும் பதில் அளிக்கவில்லை எளிமையாக வழக்கம் போல் நடத்துகிறோம்.

 இதை இதைப் பற்றி விமர்சிப்பவர்கள், அவதூறாய் பேசுபவர்கள் அதிகம் இருக்கிறார்கள் ஆதரவு தருவார்கள் அதிகம் இல்லை கூட இருப்பவர்களுக்கு கூட உதவி செய்ய மனவருவதில்லை இவர்களெல்லாம் கால வெள்ளத்தில் சாதாரண குப்பைகளாக கால வெள்ளத்தில் ஒதுக்கி வைக்கப்படுவார்கள்

 நகரத்தின் வியாபார வளர்ச்சியுடன் கலை இலக்கிய வளர்ச்சியும் இருந்தால் தான நகரத்தின் முழு வளர்ச்சியும் வெளியே தெரியும் அந்த வகையில் தமிழ் இலக்கிய பரப்பில் உள்ள சில எளிமையான படைப்பாளிகளை கௌரவம் படுத்தும் இந்த விழா எளிமையானது.சாதாரண  எழுத்தாளர்களின் எழுத்துக்களைப் போலவே ஆடம்பரமான எழுத்துக்கள் வரிசையாக எழுத்தாளர்கள் உள்ளார்கள். அவர்கள் மத்தியில் எளிமையான எழுத்துக்களுக்கு கவுரவமாக  கடந்த 16 ஆண்டுகளாய் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது

 இதைத் தவிர 20 ஆண்டுகளாய் பெண் எழுத்தாளர்களுக்கான சக்தி விருது மற்றும் குறும்பட கலைஞர்களுக்கான குறும்பட விருது ஆகியவையும் நடந்து வருகின்றன என்பதையும் கவனத்தில் கொண்டு வருகிறோம். கனவு 38ம் ஆண்டில் தன் இலக்கிய இதழைக்கொண்டு வரும் நேரத்தில் இந்த நிகழ்வுகளையும் , மாதக் கூட்டங்கள் தவிர முன்னெடுத்து வருகிறது.  எளிமையானப் படைப்பாளிகளை எளிமையான விழாவில் வாழ்த்துவோம். வாருங்கள்.

மேலும் படிக்க ...

சிறுகதை; இழப்பு - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
சிறுகதை
27 நவம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                                         - ஓவியம் - AI -

சிகப்பு மஞ்சள் விளக்குகள் மின்னிக் கொண்டிருக்க, இராணுவ நோயாளர் காவுவண்டி ஒன்று அலறி அடித்துக் கொண்டு மருத்துவமனை வாசலில் வந்து நின்றது. என்னவோ ஏதோவென்று மருத்துவமனை ஊழியர்கள் எட்டிப் பார்த்தனர். நோயாளர் காவுவண்டிக்குப் பாதுகாப்பாய் வந்த இன்னுமொரு வண்டியில் இருந்து குதித்து இறங்கிய இராணுவத்தினர் ஆயுதங்களோடு தடதட என்று உள்ளே நுழைந்தனர். வெளிநோயாளர் பயந்துபோய் ஒதுங்கி நிற்க, வரவேற்பு மேசையில் இருந்த பெண் பதட்டத்தில் தன்னை அறியாமலே சட்டென்று எழுந்து நின்றாள்.

‘டாக்டர் எங்கே..?’ அதிகாரக்குரலில் மிரட்டினான் துப்பாக்கியோடு உள்ளே நுழைந்த இராணுவ சிப்பாய்.

பயத்தில் வார்த்தைகள் வெளிவர மறுக்கவே, அவள் மருத்துவரின் அறையை நோக்கிக் கையை நீட்டிக் காட்டினாள். எந்தவித தயக்கமும் இல்லாமல் அவன் கதவைத் தள்ளித் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்.

‘டாக்டர் ரொம்ப அவசரம், உடனே வாங்க, எங்க காப்டனுக்கு உடனே சத்திர சிகிச்;சை செய்யணும்.’ என்றான்.

‘என்னாச்சு..?’ வைத்திய கலாநிதி சிவகுமாரன் பதட்டப்பட்டார்.

‘கிளைமோர் குண்டு வெடிச்சதாலே எங்க காப்டன் ஆபத்தான நிலையில இருக்கிறார். உடனே வாங்க..!’ என்றான் சிப்பாய்.

கடமை அழைத்த வேகத்தைவிட, துப்பாக்கி முனையின் அழைப்பு அவரை உடனே எழுந்திருக்க வைத்தது.

இப்படியான நேரங்களில் பாதிக்கப் பட்டவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை அவர் நன்கு புரிந்து வைத்திருந்தார். எனவே அதிகம் அலட்டிக் கொள்ளாது, சத்திர சிகிச்சை அறைக்குள் சென்றபோது அவரது உதவியாளர்கள் இராணுவ அதிகாரிக்கு செலைன் கொடுத்து, அவசரமாக செய்யவேண்டிய உதவியை செய்து கொண்டிருந்தார்கள்.

மேலும் படிக்க ...

குருவிக்கூடு நாவல் பற்றிய பார்வை - திருமதி. ஜெகதீஸ்வரி மகேந்திரன், ஜெர்மனி -

விவரங்கள்
- திருமதி. ஜெகதீஸ்வரி மகேந்திரன், ஜெர்மனி -
நூல் அறிமுகம்
27 நவம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நூல் விபரம்: பதிப்பு: வசந்தா பதிப்பகம், சென்னை, பக்கம்: 344, ஆசிரியர்: கௌசி, ஜெர்மனி, விலை: 400 இந்திய ரூபாய்


மொழி மனிதனால் உருவாக்கப்பட்டதாயினும் அம்மொழியாலே தான் மனிதன் உயர்வடைகின்றான்.எல்லா மொழிகளிலும் எழுத்துக்கும், சொல்லுக்கும் மட்டுமே இலக்கணம் உண்டு. ஆனால், தமிழ்மொழிக்கு மட்டுமே இவற்றோடு பொருளுக்கும் இலக்கணம் உண்டு. ஒரு மொழியின் உயர்வுக்குக் காரணம் இதன் கண் காணப்படுகின்ற இலக்கியமே. இவ் இலக்கியத்திற்கு இலக்கணம் அமைத்து மொழி செம்மைப்படுத்தப்படுகிறது. அவ்வாறு செம்மைப்படுத்தப்பட்ட ஒரு இலக்கியப் படைப்பாக மிளிர்கிறது இந்த குருவிக்கூடு என்னும் நாவல்.

ஒரு எழுத்தாளன் என்றால் எழுத்துக்களை எழுதிவிடுவது மட்டுமல்ல, அவரின் எழுத்துக்கள் ஆளுமையுடன் நடைபயில வேண்டும். அதனால் தான் வாசிப்பு அறிவைப் பெருக்கும், எழுத்து திறமையை வெளிப்படுத்தும் என்பார்கள். இவையிரண்டும் கௌசி அவர்களுக்கு நிறையவே இருப்பதனால் தான் இக்குருவிக்கூட்டை இவ்வளவு இலக்கியச்சுவை சொட்டச் சொட்ட அவரால் படைக்கமுடிந்திருக்கிறது என்றுகூறின் மிகையாகாது. வாசித்துப்பாருங்கள் மண்வாசனை முதல் விண்னைத்தொடும் அறிவியல்வரை அவர் கற்பனைவளமும் செழுமை மாறாச் சொல்வளமும் இலக்கிய இலகுநடையுடன் உணர்வுகளுக்கு உயிரூட்டி எழுத்துக்களால் வாசகர்களை கைபிடித்துக்கூட்டிச்சென்று நேரில்காண்பிப்பது போன்று காட்சிப்படுத்தியிருக்கின்றார். அது நன்கு சிறப்பாகவே இப்புத்தகத்தில் சில இடங்களில் துல்லியமாக காணமுடிகிறது.

மேலும் படிக்க ...

வரலாற்று ஆவணம்: எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் மறைவைத் தெரிவிக்கும் தினகரன், வீரகேசரி பத்திரிகைச் செய்திகள்!

விவரங்கள்
- வ.ந.கி -
அரசியல்
26 நவம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
 
எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் மறைவுச் செய்தியைத் தெரிவிக்கும் தினகரனின் 15.2.1968 பதிப்பு. நன்றி; சுவடிகள் திணக்களம் , இலங்கை
 
மேலும் படிக்க ...

அறிஞர் அ.ந.கந்தசாமியின் (A.N.Kandasamy) டிரிபியூன் ஆங்கிலக் கட்டுரைகள்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
26 நவம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அறிஞர் அ.ந.கந்தசாமி என அவரது பன்முகப் புலமை காரணமாக அழைக்கப்பட்ட எழுத்தாளர் அ.ந.கந்தசாமி ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்புகள் செய்துள்ளார். அவரது  மொழிபெயர்ப்பில் எமிலி சோலாவின் நானா ஐம்பதுகளின் ஆரம்பத்தில் சுதந்திரனில் தொடராக வெளியானது. பேராசிரியர் பேட்ரண்ட் ரஸ்ஸலின் 'யூத - அராபிய உறவுகள்' பற்றிய கட்டுரையின் கருத்துகளைத் தமிழில் விளக்கும் வகையில் இன்ஸான் பத்திரிகையில் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

1965 - 1966 காலகட்டத்தில் இலங்கையிலிருந்து  வெளியான டிரிபியூன் ஆங்கிலச் சஞ்சிகையில் அர்த்தசாஸ்த்திரம் பற்றிய, வள்ளுவர் பற்றிய கட்டுரைகளுடன் மேலும் சில கட்டுரைகளை அ.ந.கந்தசாமி எழுதியுள்ளார். அவற்றின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து வெளியான வேறு பல ஆங்கில பத்திரிகை, சஞ்சிகைகளில் அவரது ஆங்கிலக் கட்டுரைகள் வெளியாகியிருந்திருக்கக் கூடும். அவை பற்றிய விபரங்கள் மேலதிக ஆய்வுகள் மூலம் பெறப்பட வேண்டும்.

மேலும் படிக்க ...

பதிப்பாளர் 'ஜீவநதி' பரணீதரனின் ஓர் அனுபவம்: ஈழத்து எழுத்தாளர்கள், புத்தகம் போட்டவர்கள், போட இருப்பவர்கள் அனைவரும் படிக்கவேண்டிய குறிப்பு! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
அரசியல்
24 நவம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளரும், ஜீவசஞ்சிகை ஆசிரியரும், பதிப்பாளருமான  க.பரணீதரன் யாழ் நகரிலுள்ள ஒரு புகழ்பெற்ற புத்தகக் கடையில் தனக்கேற்பட்ட அனுபவத்தை விபரித்திருந்தார். மிகுந்த அதிர்ச்சியைத் தந்த அனுபவமாக அதனை  வாசிக்கையில் நானும் உணர்ந்தேன். அவர் அங்கு எழுத்தாளர்களின் நூல்களை விற்பனைக்காகப் பத்துப் பிரதிகள் கொடுப்பது வழக்கம். பின்னர் ஒரு வருடம் கழித்துச் சென்று விற்கும் நூல்களின் பணத்தைப் பெறுவது வழக்கம். விற்காதவற்றை அங்கு தொடர்ந்து விற்க வைப்பது வழக்கம். வழக்கம் போல் இவ்விதம் அங்கு விற்பனைக்கு வைத்து அவர் , மூன்று வருடங்கள் பின்னர் அங்கு சென்றபோது அங்கு அவர் கொடுத்திருந்த நூல்களின் நிலைகண்டு அதிர்ச்சி அடைந்தார். நூல்கள் மீண்டும் பாவிக்கவே முடியாத அளவுக்கு அழுக்கான சூழலில் வைக்கப்பட்டிருந்தன.

அத்துடன் அப்புத்தக்கடையில் விற்கப்படும் நூல்களுக்கான பணத்தைப்  பெறுவதிலுள்ள சிரமங்களையும், அங்கு பணியாற்றுபவர்கள் நடந்துகொள்ளும் முறையினையும் கவலையுடன் விபரித்திருந்தார். தான் இவ்விதம் இப்பிரச்சினையை வெளிப்படுத்துவதற்குக் காரணம் அப்புத்தக்கடை நல்ல முறையில் தவறுகளைக் களைந்து இயங்க வேண்டும் என்பதற்காகவே என்றும் அவர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

ஜீவநதி ஆசிரியர் பரணீதரனுக்கு ஒரு தாழ்வான வேண்டுகோள். இப்புத்தக்கடை தன்னைச் சீரமைத்துக்கொள்ளாதவரை, எதிர்காலத்தில், உங்கள் பதிப்பகம் மூலம் என் நூல்கள் வெளியிடும் சந்தர்ப்பம் ஏற்பட்டால், என் நூல்களை அப்புத்தக்கடைக்குக் கொடுக்காதீர்கள்.

பரணீதரன் தனது பதிவில் புத்தகக் கடையின் பெயரைக்குறிப்பிடவில்லை. ஆனால் வேம்படி சந்தியிலுள்ள கடை என்று மட்டும் குறிப்பிட்டிருந்தார். கூகுள் வரைப்படத்தின் 'வீதிப்பார்வை' மூலம் அச்சந்தியை அவதானித்தபோது அதிலிருந்த ஒரேயொரு புத்தக்கடை பூபாலசிங்கம் புத்தகக் கடை என்பதை அறிந்து உண்மையில் அதிர்ச்சியடைந்தேன். பரணீதரனின் அக்கடையின் படத்தைக்காட்டி அதுவா கடை என்று கேட்டபோது அவர் ஆமென்றார்.

பூபாலசிங்கம் புத்தக்கடைக்கு இலங்கைத் தமிழ் இலக்கியச் சூழலில் முக்கியமானதோர் இடமுண்டு. குறிப்பாக எழுத்தாளர்கள் சந்திக்கும் இடமாக, நூல்கள் வாங்கும் இடமாக அது விளங்கியுள்ளது. குறிப்பாக இலங்கை முற்போக்குத் தமிழ் எழுத்தாளர்கள் பலரின் நனவிடை தோய்தல்களில் அது  நிச்சயம் இடம் பெற்றிருக்கும். அண்மையில் கனடாவில் மறைந்த எழுத்தாளர் இராஜகோபாலன் மாஸ்டர் கூட அங்குதான் பலரை எஸ்.பொ. , டொமினிக் ஜீவா என்று சந்தித்திருக்கின்றார். அது பற்றி டொமினிக் ஜீவா நனவிடை தோய்ந்திருக்கின்றார். வாசித்திருக்கின்றேன். இவ்விதமானதொரு முக்கியமான புத்தகக் கடையில் புத்தகங்கள் இவ்விதம் அழுக்கான சூழலில், மீள்பாவனைக்குரியதல்லாத நிலையில் பேணப்படுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதொன்றல்ல.  விற்பனையான நூல்களுக்கான பணத்தைப் பெறுவதில் இவ்வளவு சிரமங்களைப் பதிப்பாளர்கள் எதிர்கொள்வதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. பூபாலசிங்கம் பதிப்பகத்தார் இது விடயத்தில் கவனம் எடுப்பார்களென்று நிச்சயம் நம்புகின்றேன்.

மேலும் படிக்க ...

மனப்பிறழ்வு (Schizophrenia) - ஶ்ரீரஞ்சனி -

விவரங்கள்
- ஶ்ரீரஞ்சனி -
ஶ்ரீரஞ்சனி
24 நவம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கொடூரமான கொலை ஒன்றைப் பற்றிக் கேள்விப்படும்போது, அந்தக் கொலையாளி மனச்சோர்வால் (depression) பாதிக்கப்பட்டிருந்ததால்தான் அந்தக் கொலை நிகழ்ந்ததெனப் பொதுவில் பேசிக்கொள்கிறார்கள். நாங்கள் அதிகமாகக் கேள்விப்படும் ஒரு மனநல ஒழுங்கீனமாக மனச்சோர்வு இருப்பது அதற்கான காரணமாக இருக்கலாம். ஆனால், மனச்சோர்வு என்பது ஒருவரின் மனநிலையில்/உணர்ச்சிகளில் ஏற்படும் ஓர் ஒழுங்கீனம் ஆகும். அதன்போது, மனச்சோர்வடைந்திருக்கும் நபரே அதிகமாகப் பாதிக்கப்படுகின்றார். மனச்சோர்வைத் தாங்கிக்கொள்ள முடியாத ஒரு நிலையை ஒருவர் அடையும்போது, அவர் தற்கொலை செய்துகொள்ளக்கூடும். ஆனால், எழுந்தமானமாக நிகழும் திடீர்க் கொலைகளுக்கு மனச்சோர்வு காரணமாக இருப்பதில்லை. அதேவேளையில், இன்னொரு வகையான மனநல ஒழுங்கீனமாக இருக்கும் schizophrenia (மனப்பிறழ்வு) என்ற நோ ய் இவ்வகையான திடீர் கொலைகளுக்குக் காரணமாக இருக்கக்கூடும்.

Schizophrenia என்பது யதார்த்தம் எது, பிரமை எது என்ற வித்தியாசம் தெரியாத சவால்கள் நிறைந்த ஒரு மனநிலையாகும். அந்த நிலையில் ஒருவரால் தெளிவாகச் சிந்திக்கவோ, தன் உணர்சிகளைக் கட்டுப்படுத்தவோ, சரியான தீர்மானங்களை எடுக்கவோ, உறவுகளைக் கையாளவோ முடியாதிருக்கும். சிலநேரங்களில் இந்த நோயின் அறிகுறிகள் மோசமாகலாம். Schizophrenia உள்ளவர்கள் எல்லோரும் வன்முறையாளர்களாகவோ, கொலைசெய்பவர்களாகவோ இருப்பதில்லை, எனினும், அந்த நோய்க்கு ஏற்ற சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளாதவர்களை அந்த நோய் வன்முறையாளர்களாக மாற்றலாம். அத்துடன், மதுபானம், போதைப்பொருள் போன்ற பொருள்களை அந்த நோயாளர் அதிகமாகப் பயன்படுத்துவதும் அவரை மேலும் ஆக்ரோஷமானவராக மாற்றக்கூடும்.

மேலும் படிக்க ...

காவிரி டெல்டா திருவாரூரும் பாலஸ்தீனமும்! தமுஎகச திருவாரூர் திரைப்பட விழா 2024! - சுப்ரபாரதிமணியன் -

விவரங்கள்
- சுப்ரபாரதிமணியன் -
சுப்ரபாரதிமணியன் பக்கம்
23 நவம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ஆண்டுதோறும் ஒரு மாவட்ட தலைநகரில் உலகத் திரைப்பட விழாவை நடத்துகிறது இவ்வாண்டு கோவையில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் தாமதமாக திருவாரூரில் செப்டம்பர் மாதம் நடந்தது.. 15 நாடுகளைச் சேர்ந்த 22 படங்கள் திரையிடப்பட்டன. அவற்றில் இந்தியப் படங்களும் இருந்தன

இந்த வருட உலகத் திரைப்பட விழாவில் பல்வேறு மையங்கள் இருந்தாலும் பாலஸ்தீனம் நாட்டுப் படங்கள் அதிகம் இடம் பெற்று கவனம் பெற்றன.. ஒவ்வொரு ஆண்டும் சிறப்புத் திரைப்படங்களாய் சிலவை கவனம் பெறும் . இந்தாண்டு பாலஸ்தீனப்படங்கள்.  

இன்றைக்கு இஸ்ரேல் பாலஸ்தீனமும்  சார்ந்து நடைபெறும் போர் மனதில் இருந்து கொண்டே இருந்தது. இஸ்ரேல் பாலஸ்தீனம்  போர் என்பது இஸ்ரேல் பாலஸ்தீனமும்  எல்லையில் அதன் நிலம் சார்ந்த எதிர்ப்பு  வெளிப்பாடாகும் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல்  குடியேற்றங்கள் பல ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்டதிலிருந்து இந்த மோதல் வெறிபிடித்துக் கொண்டிருக்கிறது. பல சமயங்களில் பல்வேறு நாடுகளும் இந்த மோதலில் கருத்து தெரிவிக்கின்றன. போரில் இறங்குகின்றன இஸ்ரேலை படைகளின் ஆக்கிரமிப்பு மற்றும் வெளியேற்றம் போன்றவை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நீண்ட காலம் இஸ்ரேல் ராணுவ ஆக்கிரமிப்பில் பாலஸ்தீனம் இருந்து கொண்டிருக்கிறது. இது சார்ந்த மனித உரிமைகள் பல கேள்விகளை எழுப்புகிறது. அதற்கானத் தீர்வுகள் அவ்வப்போது பேசப்பட்டு ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன. பாலஸ்தீனத்தை தனிமைப்படுத்தும் முயற்சிகளும் அதன் பலவீனங்களும் தொடர்ந்து கொண்டிருக்கிறன.

மேலும் படிக்க ...

ரவி அல்லது கவிதைகள் இரண்டு!

விவரங்கள்
- ரவி அல்லது -
கவிதை
23 நவம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1. அதன் பொருட்டான அறம்

குலவையிடும்
குளவிகளின்
பறத்தலுக்கு
காரணங்கள்
அநேகமிருந்தன.

அன்றைய
உணவு தேடலும்
அதன் பிறகான
கூடமைத்தலும்
கொஞ்சலில்
கூடி மகிழ்வதுமென.
கொத்த வேண்டுமென்ற
குறிப்புகளெவையும்
இல்லைதான்
கடுக்கிறதென
கதறும்
மனிதனின்
இடை புகுதலின்
இன்னல் வரை.

மேலும் படிக்க ...

அசோகமித்திரனின் 18வது அட்சக்கோடு - ஒரு கலைத் தரிசனம்! (பகுதி 3) - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
23 நவம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

VI

“நடு இரவில் (?) விழிக்கும் இவன்! குறைமேகங்களுக்கு மத்தியிலிருந்து இறங்கிய மங்கிய நிலவு பூமி பரப்பின் மீதிருந்த பொருள்களின்; வெளிஉருவத்தை மட்டும் பிரித்துக்காட்டுவதாக இருந்தது… எதிரே ஒரு அரசமரம்… ஓர் அசைவும் காணப்படவில்லை சப்தமே போடாமல் ஃபோட்டோ சிந்தஸிஸ் நடந்துக்கொண்டிருந்தது” (பக்கம் 89-92). போட்டோ சிந்தஸிஸ் என்பது ஒளித்தொகுப்பு என விஞ்ஞானம் கூறுகின்றது. இதற்கு இத்தொகுப்பு நடக்க ஒளி ஓர் முக்கிய அவசியப்பொருள் எனக்கூறப்படுகின்றது.

மறுபுறத்தில், இஸ்லாமிய முரடர்களால், தாக்கப்பட்ட பின் சந்திரசேகரன் சைக்கிளைத்தள்ளிக்கொண்டு அநாதாரவாய் தனித்து நடந்து வருகின்றான். “அந்நேரத்தில் ஒரு மனித பிறவியையும் காண முடியவில்லை. சந்திரசேகரனைத் தடுத்து மூன்ற மாடுகள் குறுக்கே நின்றன”. சந்திரசேகரன் சைக்கிளைப் பிடித்துக்கொண்டே ஒரு மாட்டின் நெற்றியைச் சொறிந்துதர ஆரம்பித்தான். அந்தமாடு அப்படியே முகத்தை நீட்டி அதன் கழுத்தைக் சொறிவதற்கு காண்பித்தது. அந்த மாட்டைப் பார்த்து மற்ற மாடுகளும் சொறிய காத்து நின்றன. சந்திரசேகரனுக்கு விரல்கள் வலித்தன (பக்கம் -69).

இது ஜீவகாருண்யம்தான். ஆனால், இதே காருண்யத்தை வைத்துக்கொண்டுதான், காந்தி, டாடா பிர்லாவின் நெற்றியையும் கழுத்தையும் ஆறுதலாக சொறிந்து கொடுத்தார் என்பது பதிவு. (காந்தியின் பீனிக்ஸ் ஆசிரமத்துக்காக ரூபா 25000 டாடா வால் வழங்கப்பட்டது என்பதும், இந்தியாவில் காந்தி தனது சத்தியhகிரகத்தை நடாத்த ரூபாய் 125000 அந்நாட்களில் டாடா வால், காந்திக்கு வழங்கப்பட்டது என்பதும் பதிவு. இதே போன்று பிர்லாவும், நன்கொடைகள் மாத்திரமின்றி, 1930ல் காந்தியை வட்டமேசை மகாநாட்டில் பங்கேற்கும்படி வற்புறுத்தியதாகவும் (1930) தீவிரவாதிகளான ஸ்வராஜ் கட்சியினருக்குக் காந்தி தரக்கூடியதாய் இருந்த ஆதரவை கேள்விக்கு உட்படுத்தியதாகவும் (1931) இரண்டாம் சட்டமறுப்பு இயக்கத்துக்கு எதிராகக் காந்திக்கு யோசனை கூறியதாகவும் (1932) மாகாண தேர்தலில் காந்தியைப் பங்கேற்கும்படி வற்புறுத்தியதாகவும் (1935) பதிவுகள் உண்டு). 18வது அட்சக்கோட்டில் மிளிரும் காருண்யம் யாரை சொறிவதற்கு உபயோகப்படும் என்பது தெளிவு. “ஒருவேளை இந்தக் காருண்யத்தின், இந்தக் கொடைகளின், இந்த அரசியலின் மறுபக்கமே, ஜெயமோகன்-அசோகமித்திரன்-பாலகுமாரன் ஆகியோரின் எழுத்துக்களின் தாண்டவமாடும் அகோரங்களான, மூத்திரவாடை அல்லது எச்சில் அல்லது அழுகல்கள் அல்லது அடக்குமுறைகள் – என்பதற்கான பின்புலமும் இவற்றாலேயே தோற்றவிக்கப்படுகிறது என்ற எண்ணப்பாடுகளும் இங்கே தோன்றாமல் இல்லை.”

மேலும் படிக்க ...

அமேசன் - கிண்டில் பதிப்பாக வ.ந.கிரிதரனின் 'அழியாத கோலங்கள்' & 'என்னை ஆட்கொண்ட மகாகவி'

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
22 நவம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வ.ந.கிரிதரனின் 'என்னை ஆட்கொண்ட மகாகவி'

எனது பாரதியார் பற்றிய கட்டுரைத் தொகுதி 'என்னை ஆட்கொண்ட மகாகவி' தற்போது அமேசன் -  கிண்டில் மின்னூலாக வெளியாகியுள்ளது - https://www.amazon.com/dp/B0DNRLX984

நூலிலுள்ள கட்டுரைகள் வருமாறு:

'1. மகாகவி பாரதியார் நினைவாக. 4
2,  பாரதி ஒரு மார்க்ஸியவாதியா? 6
3. பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு! 12
4. பாரதியும், ஐரோப்பிய  பெண்களும், கட்டுப்பாடற்ற காதலும் 15
5. பாரதியாரின் சுயசரிதை, மற்றும் அவரது முதற் காதல் பற்றி.... 18
6. எழுத்தாளர் அருண்மொழிவர்மனின் 'தாய்வீடு'க் கட்டுரையான ‘வ.ந.கிரிதரனின் கட்டுரைகள்  நூலை முன்வைத்துச் சில குறிப்புகள்’  பற்றி...... 22
7. எழுத்தாளர் அருண்மொழிவர்மனின் எதிர்வினையும் அதற்கான என் பதிலும்... 28
8. என்னை ஆட்கொண்ட மகாகவி! 31
9. பாரதியை நினைவு கூர்வோம்! 33
10.பாரதியார் நினைவாக: பாரதியாரின் 'திக்குகள் எட்டும் சிதறி' மழைக்கவிதை!

மேலும் படிக்க ...

அசோகமித்திரனின் 18வது அட்சக்கோடு - ஒரு கலைத் தரிசனம்! (பகுதி 2) - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
21 நவம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

III

இன முறுகலை நாவல் கையாளும் முறைமை

பாரதி முதல் கார்க்கி வரை இனமுறுகலின் பாதிப்புக்களை ஆழ உணர்ந்திருந்தனர். பாரதி அல்லா அல்லா என்ற பாடலை (1920) எழுத நேர்ந்ததின் பின்னணி அன்றைய இந்தியாவின் யதார்த்தமாக இருக்கலாம்.

ஆங்கில ஆட்சியில், அவர்களது மறைகரத்தின், செயற்பாடுகள் அச்சம்தரும் விளைவுகளை அன்றைய இந்தியாவில் ஏற்படுத்தின.

1915ல் ரஷ்யப் புரட்சி சூழ்கொண்டு இயங்கியப்போது, யூதர்களுக்கு எதிரான இனவாத அலையைக் களமிறக்கி அதற்கூடு புரட்சிகர அலைகளைத் திசைதிருப்பிவிடலாம் என்னும் நப்பாசை ஆதிக்கச் சக்தியினரிடம் காணப்பட்டது. ஆக இனவாதம் என்பது ஆதிக்கச் சக்திகள் கையாளக்கூடிய பிரதானமான ஆயுதங்களில் ஒன்றாகக் காலம் காலமாக இருந்துள்ளது. இது மக்களைத் தூண்டி, வெறியர்களாக மாற்றி, எச்சில் வடிய ஒருவரை ஒருவர் கடித்து குதறித்தள்ளும் நிகழ்ச்சி நிரல்களுக்கு இட்டுச்செல்கின்றது.

கார்க்கியின் இறுதி நாவலான, “கிளிம்மின் வரலாறு” என்ற பிரமாண்டமான படைப்பில் இவ் இனமுரண்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்ட பக்கங்கள் ஏராளம்.

இதே போன்று இந்தியாவில் இனவாத ஆயுதமானது ஆதிக்கச் சக்திகளால் மிக நன்றாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது உருவாக்கக்கூடிய பாதகங்களைப் பாரதி போன்ற கலைஞர்கள் மிக நுணுக்கமாக உள்வாங்கி இருந்தனர் என்பதனையே அவர்களது படைப்புகள் காட்டுவதாய் உள்ளன.

ஆனால், 1947ல் ஜின்னா-காந்தி தலைமையில் இந்தியா-பாகிஸ்தான் என இந்தியா பிரிப்பட்டபோது பத்து லட்சம் மக்கள் கோரமாய்க் கொல்லப்பட்டனர். கிட்டத்தட்ட பத்து இருபது லட்சம் மக்கள் நிரந்தரமாய் அகதிகளாயினர். இப்பிரளயம் விளைவித்த நன்மைகளை ஆதிக்கச் சக்தியினர் வாய்வுறிஞ்சிட குடித்தப்படி இருக்கின்றனர், இன்றுவரை.

மேலும் படிக்க ...

அசோகமித்திரனின் 18வது அட்சக்கோடு - ஒரு கலைத் தரிசனம்! (பகுதி 1) - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
21 நவம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கிட்டத்தட்ட தனது 46வது வயதில் அசோகமித்திரன், இந்நாவலை எழுதியுள்ளார் (1977). இந்நாவலானது, வண்ணதாசன் முதல் பல்வேறு இலக்கிய கர்த்தாக்களாலாலும், விதந்துரைக்கப்பட்டு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இந்நாவல் பொறுத்து வண்ணதாசன் கூறுவார்: ‘இப்போது நினைத்தாலும் இதனை அசோகமித்திரனால் எழுதமுடியாது’.

நாவல் முகிழ்த்த காலப்பகுதி

இந்தியா சுதந்திரமடைந்து, ஆங்கிலேய ஆசிர்வாதங்களுடனும், பாகிஸ்தானின் ரகசிய உறவுகளுடனும் ஆட்சிப்புரிந்துவரும் நிசாம் மன்னருக்கு எதிராக, இந்திய துருப்புகள் ஐதராபாத்துக்குள் நுழைவது வரையிலான காலப்பகுதியில், மக்கள் அனுபவிக்கும் சிக்கல்களைத் தனது பார்வையில், பரிசீலிக்கும் விதமாக, இந்நாவலை அசோகமித்திரன் கட்டமைத்துள்ளார். இதன்போது, இரண்டாம் உலகப்போர் நடக்கின்றது என்பதும், அதன் தாக்கமானது உலகம் முழுவதும் அனுபவிக்கப்படுகின்றது என்பதும் இணைந்த விடயம்தான் - இவையும், நாவலில் இரண்டொரு வரிகளில் வந்துபோகின்றன.

ஐதரபாத்தின் முக்கியத்துவம்

நிசாம் மன்னரின் ஆட்சி, பாகிஸ்தானின் ஆட்சியைப்போலவே ஆங்கிலேய பின்னணியால் ஆசிர்வதிக்கப்படுகிறது.  இதன்போது நாவலின் கதாநாயகனான, சந்திரசேகரின் தந்தையும் ஒரு வெள்ளைக் குமாஸ்தாவாக ரயில்வே சேவையில் பணிபுரிகின்றார். ஆங்கிலேயரைப் பொருத்தமட்டில் அக்குமாஸ்தா, பறங்கியராக இருந்தால் என்ன, தமிழராக இருந்தால் என்ன, இஸ்லாமியராக இருந்தால் என்ன - லாபத்தை ஈட்டித்தந்தால் சரி. ஆனால், இக்காலப்பகுதியிலேதான் ஒரு மத்தியதர வர்க்கத்தினரின் எழுச்சியும் இந்தியாவில் கிரமமாக நடந்தேறுகின்றது என்பதும் இதன் வளர்ச்சியும் செயற்பாடுகளும் இந்தியாவைச் சுதந்திரம்வரை இட்டுச்செல்கின்றன (ஏனைய சக்திகளுடன்) என்பதும் வேறு கதை. ஆனால், நாவல் முன்வைக்கும் கதையானது வித்தியாசமானது. இக்காலப்பகுதியில் இவ்விடயங்களின் மத்தியில், இங்கே வாழக்கூடிய ஒரு வித்தியாசமான இளைஞனை, இது எவ்வாறு பாதிக்கிறது என்பதுதான் அது. அவனில் எத்தகைய விளைவினை இது உண்டு பண்ணுகிறது என்பதுதான் கதையாகின்றது.

மேலும் படிக்க ...

வரலாறு காடுகளை பூக்க வைக்கும்! பாடா அஞ்சலி! - வ.ஐ.ச.ஜெயபாலன் -

விவரங்கள்
- வ.ஐ.ச.ஜெயபாலன் -
கவிதை
20 நவம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கைத் தமிழர் தேசிய விடுதலைப் போராட்டம் ஆயுதரீதியில் பரிணாமமடைந்தபோது பல்வேறு அமைப்புகளையும் சேர்ந்த போராளிகள், பொதுமக்கள், தமிழ் அரசியல்வாதிகள் எனப்பலர் தம் உயிரிழந்தனர். அவர்கள் அனைவரையும் நினைவு கூர்வோம். இது பற்றிய தனது கவிதையை முகநூலில் பகிர்ந்துகொண்ட  கவிஞர் வ.ஐ,ச,ஜெயபாலன் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

"எங்கள் விடுதலைக்காகப் போராடி வீழ்ந்த அனைத்து அணிகளையும் சேர்ந்த ஈழத் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ்,  மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த  மாவீரர்களது நினைவாக, போர்க்களத்தில் வீழ்ந்த விடுதலைப்புலிகள் உட்பட அனைத்து இயக்கங்களையும் சேர்ந்த அத்தனை மாவீரர்களையும் என் மாகவிதைகளால் அஞ்சலிக்கிறேன்." - கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் -

அமைப்புகளின் போராளிகளுடன்  யுத்தக்காலகட்டத்தில் பலியான பொதுமக்கள், உட்பகையால் மடிந்த போராளிகள், பலியான மனித உரிமைப்போராளிகள், எழுத்தாளர்கள், சமூக, அரசியற் செயற்பாட்டாளர்கள், தமிழ் அரசியல்வாதிகள், பல்துறை அறிஞர்கள் அனைவரையும் நினைவு கூர்வது அவசியம். இவர்கள் எல்லோரும் போராட்டம் காரணமாகப் பலியானவர்கள் என்பதை மறந்து விடக்கூடாது. போராட்டம் மக்களுக்கானது என்பதை நினைவில் வைப்போம்.
.
வரலாறு காடுகளை பூக்க வைக்கும்! பாடா அஞ்சலி! - வ.ஐ.ச.ஜெயபாலன் -
.
உதிர்கிற காட்டில்
எந்த இலைக்கு நான் அஞ்சலி பாடுவேன்?
.
சுனாமி எச்சரிக்கை கேட்டு
மலைக் காடுகளால் இறங்கி
கடற்கரைக்குத் தப்பிச் சென்றவர்களின்
கவிஞன் நான்.
பிணக்காடான இந்த மணல் வெளியில்
எந்த புதைகுழியில் எனது மலர்களைத் தூவ
யாருக்கு எனது அஞ்சலிகளைப் பாட.
.
வென்றவரும் தோற்றவரும் புதைகிற உலகோ
ஒரு முதுகாடாய் உதிர்க்கிறது.
எந்தப் புதைகுழியில் என் மலர்களைச் சூட
எந்த இலையில் என் அஞ்சலிகளை எழுத...

மேலும் படிக்க ...

கவிதை: நான் நானாக.. - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கவிதை
18 நவம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


எல்லைகளற்று பரந்திருக்கும் விரிவெளியில்
அகதிமேகங்கள் அலைகின்றன.
அலைச்சல் தாளாமல் அவை
அழுதுபொழிகின்றன.
இருப்பைத் தப்ப வைப்பதற்காய்ப்
புள்ளொன்று சிறகடிக்கின்றது.
அதனை விரைவை மீறித்
தொடர்கிறது பெரும்புள்.
பகல் இப்படியென்றால்...
இரவு வானை நோக்குகின்றேன்.
தொலைவில்
ஒளியாண்டுத் தொலைவுகளில்
மலர்ந்து உதிர்ந்து விட்ட
நாகரிகங்களின் பெருமூச்சுகளை
தனிமைகளில் பயணிக்கும் ஒளிச்சுடர்களில்
உணர்கின்றேன்.
இன்று எனக்கு என்ன நடந்தது?
எப்பொழுதும் இருப்பில்
அர்த்தம் கண்டு மகிழ்பவன் நான்.
இன்பம் கண்டு உவகையில் ஊறுபவன் நான்.
இன்று எனக்கு என்ன நடந்தது?
'இன்று உனக்கு என்ன நடந்தது?'
அதுதான் தெரியவில்லையடி கண்ணம்மா
என்றேன்.
வழக்கமான  நான் அல்லன்
இன்றுள்ள நான் என்பது மட்டும் புரிகிறது.

மேலும் படிக்க ...

வாசிப்பு அனுபவம்: பவானி சற்குணசெல்வத்தின் 'மனச்சோலை'கட்டுரைத் தொகுதி! (பகுதி 1:) - ரஞ்ஜனி சுப்ரமணியம் -

விவரங்கள்
- ரஞ்ஜனி சுப்ரமணியம் -
ரஞ்ஜனி சுப்ரமணியம்
18 நவம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
பூஞ்சோலைகள் மனதுக்கு ரம்மியமும் மகிழ்வும் தருவதை அனைவரும் அனுபவத்தில் உணர்ந்திருப்போம். புறத்தில் இருக்கும் சோலைகளை விட அகம் என்ற மனதினையே நறுமணம் கமழும் சோலையாக்கி விட்டால் வாழ்வு எத்தகைய இன்ப நுகர்வைத் தரும் என்பதை நம்மில் எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம்?  

நாம் எண்ணங்களால் கட்டமைக்கப்படுகிறோம். எதுவாக நினைக்கிறோமோ அதுவாகவே மாறுகிறோம். நம் எண்ணம் தூய்மையடையும் போதுதான் மகிழ்ச்சியும் நிழலைப் போல விலகாமல் நம்மைத் தொடர்ந்து கொண்டிருக்கும் என்பதும் ஞானிகள்,  அறிஞர்கள் கூற்றாக நாம் அறிந்ததுதான்.

"மெய்யறிவு நற்பண்பினால் தூய்மையடைகிறது. நற்பண்பு மெய்யறிவினால் தூய்மைபெறுகிறது. எப்போதும் ஒன்றிருக்கும் இடத்தில் மற்றதும் இருக்கும். பண்புடையவன் மெய்யறிவு உள்ளவனாக இருக்கின்றான். மெய்யறிவுடையவன் பண்புடையவனாக இருக்கின்றான். இரண்டும் சேர்ந்திருப்பது உலகிலேயே மிக மேன்மையானது". - கெளதம புத்தர் பொன்மொழி

மெய்யறிவும் நற்பண்புகளும் அனைத்து மானுடர்களுக்கும் தானாக அமைந்து , அகம் என்பது அழகான சோலையாக  உருவாகி விடாது. அதற்கான சில வழிமுறைகள் பயிற்சிகள் வீட்டில் தொடங்கி நாடாளாவிய, தேசமளாவிய கல்வி முறைமைகளில் இருந்தும் பயிற்சிகளில் இருந்தும் உருவாக்கப்பட வேண்டும்.
மேலும் படிக்க ...

எழுத்தாளர் பா.அ.ஜயகரன் நூல்கள் வெளியீடு! - தகவல்: பா.அ.ஜயகரன் -

விவரங்கள்
- தகவல்: பா.அ.ஜயகரன் -
நிகழ்வுகள்
17 நவம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

இலங்கையின் ஒற்றையாட்சியும், தமிழ் அரசியல்வாதிகளும் , தமிழ்த்தேசியமும் பற்றி... - நந்திவர்மப்பல்லவன் -

விவரங்கள்
- நந்திவர்மப்பல்லவன் -
அரசியல்
17 நவம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க 2021.05.21 அன்று இளைப்பாறிய முப்படையினர் கூட்டமைவின் குருநாகல் மாவட்ட மாநாட்டில் நிகழ்த்திய உரை. இனவாதம், மதவாதத்துக்கெதிராக அவர் தெரிவித்திருந்த கருத்துகள் என் கவனத்தை ஈர்த்தன. இவ்விதமாகத் தேசிய  மக்கள் சக்தி கடந்த ஐந்து வருடங்களாகத் (தேசிய மக்கள் சக்தி 2019இல் ஆரம்பிக்கப்பட்டது) தென்னிலங்கை மக்கள் மத்தியில் நாட்டு அரசியலைப்பற்றி விமர்சித்து வந்துள்ளது. அதனை ஏற்றுக்கொண்டு நாட்டு மக்கள் ஜனாதிபதித் தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலிலும் பேராதவரவு அளித்திருக்கின்றோர்கள். ஆனால் இதுவரையில் எம் மக்கள் மத்தியில் எம் அரசியல் பற்றி எம் அரசியல்வாதிகள் எவரும்  சுயவிமர்சனம் செய்யவில்லை. தொடர்ந்தும் எதற்கெடுத்தாலும் ஜேவிபியைப் பற்றி எமக்குத்  தெரியும் என்பார்கள். தமிழ்த்தேசியம் தேசியம் என்று கூச்சலிடுவார்கள்.

முதலில் தமிழ்த்தேசியம் என்று கூறி வாக்குகள் கேட்டுவரும் தமிழ் அரசியல்வாதிகள் தமிழர்களைத் தம் அரசியல்நலன்களுக்காக ஏமாற்றி வருகின்றார்கள். தமிழ்த் தேசியம் என்றால் தமிழ்த்தேசத்துக்கான உரிமை பற்றியது. தமிழீழ விடுதலைப்புலிகள் தனிநாட்டுக்காகப் போராடினார்கள்.இறுதிவரை போராடி மடிந்தார்கள். அப்போராட்டம் தமிழ்த்தேசியப் போராட்டம். ஆனால் தமிழ் அரசியல்வாதிகள் தமிழ்த்தேசியம் பேசுவது ஏமாற்று வேலை. தமிழர்கள் பலருக்குத் தமிழ்த்தேசியம் என்றால் என்ன என்று தெரியவில்லை. தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்கள்  ஒற்றையாட்சி முறையைக்கொண்டுள்ள இலங்கையின் அரசியல் அமைப்பை ஏற்பதாகச் சபதம் எடுத்துக்கொண்டே பதவியை ஏற்கின்றார்கள். அதனால் வரும் பயன்களை அனுபவிக்கின்றார்கள். இவர்களால் ஒருபோதும் தனிநாடு கோரிக்கையை முன் வைக்க முடியாது. இவர்கள் ஒற்றையாட்சி முறையை ஏற்றுக்கொண்டவர்கள்.  பிரிவினை கேட்பது தேசத்துரோகம்.

மேலும் படிக்க ...

தமிழ்க்கட்சிகளுக்கு மத்தியில் தொகுதிப்பங்கீட்டுடன் கூடிய கூட்டணியொன்றின் அவசியம்! - நந்திவர்மப்பல்லவன் -

விவரங்கள்
- நந்திவர்மப்பல்லவன் -
அரசியல்
17 நவம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கைத் தமிழர்களின் தனிநாட்டுக் கோரிக்கை ஏற்படும் வரையில் தமிழர்கள் மத்தியில் தமிழரசு, தமிழ்க் காங்கிரஸ், ஏனைய தேசியக் கட்சிகள் எனப் பல கட்சிகள் தேர்தல்களைச் சந்தித்து வந்தன. தனிநாட்டுக் கோரிக்கையடுத்து தமிழ்கட்சிகள் தமிழர் விடுதலைக் கூட்டணியாக ஒன்றுபட்டுத் தேர்தல்களைச் சந்தித்து வந்தன. தற்போது மீண்டும் தனித்தனிக் கட்சிகளாகத் தேர்தல்களைச் சந்தித்து வருகின்றன. இது தவிர்க்க  முடியாத நிகழ்வு. நாட்டில் மீண்டுமொரு தமிழர்களின் இருப்பு கேள்விக்குரியதாக மாறினால் ஒழிய இந்நிலை மாறப்போவதில்லை.

அதே சமயம் தமிழ்க் கட்சிகள் பலவும் தம் தனித்துவத்தை இழக்காமல், தம் வாக்கு வங்கிகளுக்கேற்பத் தொகுதிகளைப் பிரித்து கூட்டணி வைத்துக்கொண்டால் (தமிழகத்தில் கட்சிகள் செய்வதைப்போல்) நடந்து முடிந்த தேர்தலில் தமிழ்க் கட்சிகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் பெரு வெற்றி அடையும் சாத்தியமுண்டு.

இவ்விதம் பல கட்சிகள் இருப்பதை நான் எதிர்மறையாகப் பார்க்கவில்லை. ஜனநாயகச் சூழலில் இதனை ஆரோக்கியமாகவே பார்க்கின்றேன். எல்லாக் கட்சிகளுக்கும் மக்கள் மத்தியில் தம் செயற்பாடுகளை, நோக்கங்களைக்  கூறுவதற்குப் பூரண உரிமையும், வசதிகளும் உள்ளன. இவற்றைப்பயன்படுத்தி மக்களைத் தம் பக்கம் திரும்ப வைப்பதில்தான் அவற்றின் திறமை தங்கியுள்ளது.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. 'கரையில் மோதும் நினைவலைகள்' - தர்மினி -
  2. நடந்து முடிந்த இலங்கைப் பாராளுமன்றத் தேர்தல் பற்றி ... - நந்திவர்மப்பல்லவன்-
  3. இயற்கை எழிலும், தொழில்நுட்ப மேம்பாடும் ஒன்றையொன்று விஞ்சும் San Francisco - 3 - ஶ்ரீரஞ்சனி -
  4. தமிழ்ப்பண்பாட்டு ஆய்வாளரும், தலித்தியச் சிந்தனையாளருமான பேராசிரியர் ராஜ் கெளதமன் மறைந்தார்!
  5. காலமும் மனிதனும் - முனைவர் சி. இரகு, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இலொயோலா கல்லூரி, மெட்டாலா, நாமக்கல் மாவட்டம். -
  6. கனடாவில் கார்த்திகைக் காந்தளும் பாப்பி மலரும் கனடாவில் கார்த்திகைக் காந்தளும் பாப்பி மலரும் - குரு அரவிந்தன் -
  7. ஓராயம் அனுசரணையுடன் கிளிநொச்சியில் விதைப்பந்து வீசும் நிகழ்வு!
  8. கம்பராமாயணத்தில் வாழ்த்து அணி! - முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061, -
  9. கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் விருதுவிழா-2024 - குரு அரவிந்தன் -
  10. வ.ந.கிரிதரன் பாடல் - இருப்பு பற்றிச் சிந்திப்பது என்றால்
  11. ஐ.நா. தொடக்கம் அறுகம்பே வரை : அய்னாவின் கட்டுரையை முன்னிறுத்தி! - ஜோதிகுமார் -
  12. முதுபெரும் எழுத்தாளர் மு.பொன்னம்பலம் மறைந்தார்!
  13. புலம்பெயர் தமிழ் இலக்கியத்தில் கனடாச் சிறுகதைகளின் வகிபாகம் குறித்து.- வ.ந.கிரிதரன் -
  14. இயற்கை எழிலும், தொழில்நுட்ப மேம்பாடும் ஒன்றையொன்று விஞ்சும் San Francisco - 2 - ஶ்ரீரஞ்சனி -
பக்கம் 13 / 104
  • முதல்
  • முந்தைய
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • அடுத்த
  • கடைசி