1. பொலிந்துவிட வா !

புத்தாண்டே! வருக!

- எம் . ஜெயராமன், மெல்பேண், அவுஸ்திரேலியா -

இரண்டாயிரத்துப் பதினேழே
இன்முகத்துடனே எழுந்தோடிவா
இயலாமைபோக்கிட எழுச்சியொடுவா
வறுமையொடு பிணியகல
வரம்கொண்டு வா
வளங்கொளிக்கும் வாழ்வுவர
மனங்கொண்டு வா
அறியாமை இருளகல
அறிவொளியாய் வா
அரக்ககுணம் அழித்துவிட
அஸ்த்திரமாய் வா
நிலையாக தர்மெங்கும்
நிறுத்திவிட வா
நிம்மதியாய் வாழ்வுவர
நீநினைந்து  வா ! சாதிமதச் சண்டையினை
சம்கரிக்க வா
சமாதானம் குலைப்பார்க்கு
சவுக்காக வா
நீதியொடு சமாதானம்
நிலைநிறுத்த வா
நிட்டூரம் செய்வாரை
குட்டிவிட வா
வாதமிட்டு வம்புசெய்வார்
வாயொடுக்க வா
வாழ்வென்றும் வசந்தம்வர
மனம்சிரித்து வா !

சாந்தியுடன் சமாதானம்
கொண்டுநீ வா
சச்சரவு ஒழித்துவிடும்
தீர்வுடனே வா
காந்திபோல பலமனிதர்
பிறக்கவெண்ணி வா
கசடெல்லாம் கழன்றோட
காத்திரமாய் வா
பூந்தோட்டமாய் உலகு
பொலிந்துவிட வா
புதும்தெம்பு வாழ்வெல்லாம்
புறப்படநீ வா !

ஆட்சிபுரி உள்ளங்கள் மாறவேண்டும்
அவர்மனதில் அறவுணர்வு தோன்றவேண்டும்
அதிகாரம் காட்டுவார் திருந்தவேண்டும்
அமைதிபற்றி அவர்மனது நினைக்கவேண்டும்
காட்டுத்தனம் நாட்டைவிட்டு நீங்கவேண்டும்
கருணைபற்றி யாவருமே எண்ணல் வேண்டும்
நாட்டினிலே நலன்கள்பல பெருகுதற்கு
நன்மைதரும் ஆண்டாக வரவாய்நீயும் !

உன்னைவரவேற்க உவப்புடனே இருக்கின்றோம்
முன்னைக் கவலையெலாம் முழுதாகபோக்கிவிடு
அன்னை எனநினைத்து ஆவலுடனிருக்கின்றோம்
அரவணைத்து ஆதரிக்கும் ஆண்டாகநீவருக !


2. இன்புடன் வாழலாம் !

நடந்துநீ திரிந்தால் நலனுன்னைச் சேரும்
கிடந்துநீ இருந்தால் கிழடுன்னை நாடும்
பழங்களை உண்டால் பலனுன்னை சேரும்
இழப்புகழ் தவிர்க்க இயற்கையை நாடு !

பயிர்ச்சிகள் செய்தால் உயர்ச்சியைத் தொடுவாய்
அயர்ச்சிநீ அடைந்தால் முயர்ச்சிகள் விடுவாய்
தளர்ச்சியை தவிர்த்தால் தலை உயர்ந்திடுவாய்
வளர்ச்சியை  நினைத்து வாழ்வினை அமைப்பாய் !

போதனை கேட்டிடல் சாதனை ஆகுமே
வேதனை போக்கிட விரும்பிடு நீயுமே
மாதினை மயக்கத்தை வரையறை செய்திட்டால்
காசினி மீதிலே மாசின்றி வாழுவாய் !

இறைவனை எண்ணினால்
இன்புடன் வாழலாம்
குறையெலாம் அகன்றுநீ
நிறைவுடன் வாழலாம்
கறையுடை மனத்தினை
காணாமல் செய்திடில்
உலகினில் உன்னதம்
உன்னுளே உதித்திடும் !

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R