- ’ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -1. அவள் அழுதுகொண்டிருக்கிறாள்


அந்த நள்ளிரவில்
அவள் அழும் விசும்பலொலி கேட்டு
கூட்டம் கூடிவிட்டது.

ஆச்சரியத்துடன் சிலர்;
அனுதாபத்துடன் சிலர்;
அக்கறையுடன் சிலர்;
சுடச்சுடச் செய்தி சேகரிக்கும்
ஆர்வத்தில் சிலர்;
தேர் சரிந்த பீதியில் சிலர்;
பாதி புரிந்தும் புரியாமலுமாய் சிலர்;
பெருங்குரலெடுத்து அட்டகாசமாய்
இளக்காரத்தோடு சிரித்தபடி சிலர்;
‘இதென்ன புதுக்கதை' என்று
வரிந்துகட்டிக்கொண்டு
களத்திலிறங்கியவர்கள் சிலர்….

;அங்கிங்கெனாதபடியானவள்
ஆற்றொணாத் துயரத்தில்
பொங்கியழக் காரணமென்ன? ஆளாளுக்குக் கேட்க ஆரம்பித்தனர்;

”இவர் அவரின் அன்னையை
தாசியென்று பேச
பதிலுக்கு
அவர் இவரின் அன்னையை
வேசியென்று ஏச’
ஆராரோ பாடி ஊட்டிவளர்த்த
அன்னையரெல்லாம்
யாராராலோ இப்படித் தம்
அந்திமக் காலத்தில்
தீராப் பழிசுமக்கும்
கோராமையை என்ணியெண்ணி
ஆறவில்லையே எம் மனது”
என்று கூறியவள்
அழுகை
நின்றபாடில்லை.


2. ஆமையின் பெயர்மாற்றம்

ஆமை என்ற ஒன்று
இல்லவேயில்லை யெனச்
சொல்லியவாறே
ஆமை என்றாவது பேசுமா என்றும்
சீமைப்புறங்களிலிருந்தும் சுற்றுவட்டாரங்களிருந்தும்
கேட்டுக்கொண்டிருப்பவர்களை
ஊமைவலியோடு பார்த்துக்கொண்டிருந்த
ஆமை மிகவும் மனம் சோர்ந்துபோனது.

முன்பெல்லாம்
ஆமை – முயல் கதையை
அடிக்கடி கேட்க முடிந்தது…..

முயலை ஆமை ஜெயித்ததைச்
சொன்ன விதம்
முயலின் கர்வத்தையன்றி
முயலை வெறுக்கச் செய்யவில்லை
யொருபோதும்.

[முசுமுசு முயலை
யாரால் வெறுக்க இயலும்!]

ஆமை தன்னம்பிக்கைக்கு
முன்மாதிரியாயிற்று.

ஆனால் தீமையல்ல முயல்
தோற்ற ஆங்காரத்தில் தன்
வாலில் மறைத்துவைத்திருந்த
வாளால்
ஆமையை வெட்டிவிடவில்லை.
தன் தவறை உணரும் ஆற்றலிருந்தது
அதற்கு.

ஆமையோட்டைத்
தங்கள் கனவுகளின் கருவூலமாகக்
கொண்டாடிய சிறுவர்சிறுமியரும்
தற்காப்புப் பதுங்குகுழியாக விவரித்த
பெரியவர்களுமாய்
ஆமையைத் தங்களில் ஒருவராக
அங்கீகரித்திருந்தனர்.

ஆமையும் அழகுதான் என்று புரிந்தது.

இன்று நிலைமை வேறு
ஆமையைச் சீந்துவார் யாருமில்லை
அதன் குந்துமணிக்கண்களை
உற்று நோக்கிப்
புன்னகைக்க
முற்றிலும் மறந்துவிட்டனர் மிகப் பலர்.

அநாதரவாய்க் கிடந்த ஆமையைப்
பார்க்கவந்தது புறா.

அதன் காலில் கட்டியிருந்த
முயலின் மடலில்
பரிவுமிக்க பரிந்துரையொன்று
இடம்பெற்றிருந்தது:

பெயரிலுள்ள ’ஆ’வை ’தூ’வாக
மாற்றிக்கொள்வது
மிகவும் நல்லது.”

3. அலுவல்

எதிரே தெரிந்த சுவரொட்டியில்
பதவிசாய் சிரித்துக்கொண்டிருந்த
பெண்ணைச் சுட்டிக்காட்டி
பாவம் பிரசவத்தின்போது வீங்கியிருந்த
இவள் வயிறு
எத்தனை பாரமாயிருந்திருக்கும்
என்றார் அடுத்திருந்தவர்.

எதற்கு வம்பென்று ஆமாமாம் என்று
சொல்லியபடியே
அடுத்துவரும் பேருந்து
என்ன வழித்தடம் என்று
கண்களை உருப்பெருக்கிக்
கண்ணாடியாக்கப்
பிரயத்தனப்பட்டார் இவர்.

வாழ்வுப் பிரயத்தனத்தில்
ஒருவேளை இவள்
சோரம்போயிருந்திருப்பாளோ,
என்று மேலும் கேட்டார்
முதலாமவர்.

போயிருக்காவிட்டாலென்ன,
போனதாகச் சொல்வது
வெல்லமல்லவா உமக்கு
என்று தன்னையும் மீறிச்
சொல்லியவண்ணம்
வண்டியில் முண்டியடித்துக்கொண்டு
ஏறினார் இவர்.

4. ஆன் - லைன் வர்த்தகம்

அவரவர் வீட்டிலெல்லாம் அவள் உண்டு
பல உருவில்…..
ஆனாலும்
அப்பிராணியென்ற தெரிவிலோ என்னவோ
அப்போதைக்கப்போது அவளைத்
தப்புத்தப்பாகப் பேசிச் சிரிப்பதில்
அவர்களுக்குள் குதூகலம் கொப்பளிப்பதை
சரியென்று சொல்லாதார்
கரிபூசத்தக்கவர்கள் என்றுரைக்க
நிறைய பேர்.......

அவள் என்று எதுவும் இல்லையென்று
அடித்துச்சொல்பவர்கள்
அவளுக்குக் காதுகேட்காது என்றும்
சிரித்தபடி சொல்லிக்
கொண்டிருப்பதிலுள்ள
முரணை எண்ணிப்பார்க்கும்
சுரணையுள்ளவர்களும் இருக்கத்தான்
செய்கிறார்கள்.
என்றாலும் காலைமுதல் மாலைவரை
நாளொன்றுக்கு எட்டு மணிநேரத்திற்குமேல்
வேலைசெய்தால்தான்
மாதம் ஒருமாரியாவது பொழியும் வீட்டில்
என்ற நிலை.

உலை பொங்க
கலை உதவிசெய்வதில்லை சிலருக்கு
என்றாலும் அவர்கள்
கலையின் விலை சில தலைகள் என்று
மனிதநேயத்தைத் துணைக்கழைத்து
மலைப்பிரசங்கம் செய்வதில்லை.

வேறு சிலரோ
கையில் சில காரியார்த்த இலக்குகளோடு
காய்நகர்த்தலாக அவளைக் கவிதையில்
கடைவிரித்தபடி…

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R