பேராசிரியர் மெளனகுருவுடன் நோர்வே ஊடகவியலாளர் வசீகரன் நடாத்திய நேர்காணல்
பேராசிரியர் மெளனகுருவுடன் நோர்வே ஊடகவியலாளர் வசீகரன் நடாத்திய நேர்காணல். பல்வேறு கேள்விகளுக்கும் ஆணித்தரமாக, தெளிவாகப் பேராசிரியர் பதிலளிக்கின்றார்.

வசீகரன் அவர்கள் பேராசிரியரிடம் அவர் எதற்காக புராணப்பாத்திரங்களை வைத்து நாடகங்களை உருவாக்குகின்றார். அண்மைக்கால அழிவுகளை வைத்து ஏன் உருவாக்கவில்லை என்னும் அர்த்தப்படக் கேள்விகளை முன் வைத்தபோது பேராசிரியர் அவர் புராண பாத்திரங்களை முன் வைத்தாலும் சம கால நிகழ்வுகளின் குறியீடுகளாகத்தான் அவற்றைப் பாவிப்பதாகக் கூறினார். யாருக்காகவும் தன் பாணியை மாற்றப்போவதில்லையென்றும் கூறினார். அறுபதுகளில் தீண்டாமைப்பிரச்சினை பற்றியெரிந்துகொண்டிருக்கையில் தான் உருவாக்கிய சங்காரம் நாடகம் கூட அக்கால நிகழ்வுகளை மையமாக வைத்ததுதானென்றார். புராணப்பாத்திரங்களை உள்ளடக்கியதாகவிருந்த போதுமென்றார்.

புராணப்பாத்திரங்கள் இருப்பதால் , அவை குறியீடுகளாக இருக்கின்றன. இதனை நேர்காணல் கண்டவர் உணரவில்லையோ என்றும் தோன்றியது. புராணப்பாத்திரங்கள் என்பதால் அவை புராண காலக்கதைகளைக் கூறுகின்றன என்று வசீகரன் எண்ணிவிட்டார் போன்ற தோற்றத்தை அவர் அவ்வகைக் கேள்விகளை மீண்டும் மீண்டும் கேட்டது உருவாக்கியது. கலைஞர்களுக்கு எவ்விதம் தம் படைப்புகளை உருவாக்க வேண்டுமென்ற சுதந்திரமுண்டு. அச்சுதந்திரத்தில் யாருமே தலையிட முடியாது. அதனைத்தான் பேராசிரியர் தன் பதிலில் அடித்துக்கூறினார் அச்சுதந்திரத்தில் யாரும் தலையிட முடியாது என்று.

நல்லதொரு நேர்காணல் . கேட்டு மகிழுங்கள். சிந்தியுங்கள். அறியாதவற்றை அறிந்து கொள்ளுங்கள்.

https://www.youtube.com/watch?v=Eu_mYM7xgYE&feature=youtu.be&fbclid=IwAR31p-jYxrcwd-NHzwu_BIdki04Z2ub5buN5n5CFiXJJU-0ujiY82XFq5N4

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R