-ஞானக்கவி தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -

தீபமொடு நன்னெறியும் திரும்ப வேண்டும்
தேசமொடும் மந்திரமும் சேர வேண்டு;ம்
கோபமின்றி மன்பதைகள் குலவ வேண்டும்
குடிசையொடும் வாழ்வியலும் கொடுக்க வேண்டும்
தூபமொடும் திருமறைகள் துலங்க வேண்டும்
தேவாரம் வாசகங்கள் செழிக்க வேண்டும்
சாபமின்றிச் சமவாழ்வுச் சால்பு வேண்டும்
சங்கமெனச் சத்தியமும் சாற்று வீரே !

தாமரையும் சண்பகமும் தழைக்க வேண்டும்
தக்காளி பயிர்வகைகள் தளிரும் கீரை
கோதுமையும் வெங்காயம் குவிய வேண்டும்
கூர்மரபுக் காய்கறிகள் கொழிக்க வேண்டும்
சேமமுறு நித்தியமாய்ச் சிறக்க வேண்;டும்
செகத்திலுறு வார்கலைகள் தெளிதல் வேண்டும்
தேமதுரப் பாவாறு தெளிவுங் கூட்டித்
தேம்மாங்குத் தமிழ்மரபு தேற்று வீpரே !

பாவமெலாம் போகட்டும் படிந்த நாட்கள்
பத்திரமாய் மாறட்டும் பருத்தும் நோய்கள்
காவலின்றிப் போகையிலே கதறும் பூமி
கட்டுக்குள் ஆகட்டும் கலிங்கம் கூடித்
தேவருல காகட்டும் தினமும் வாழ்வு
திரும்பட்டும் சுகாதாரம் சுவறல் வேண்டும்
ஆவலொடுந் தீபவளி ஆக்கும் நாளில்
அற்புதங்கள் பரவட்டும் அகில மாமே !

பொன்பாவைப் புத்துயிர்கள் பேசுங் காற்றுப்
பொடியெல்லாம் தமிழாக மாறல் வேண்டும்
தென்னாட்டுத் தமிழுலகம் துலங்கும் பாடல்
செந்தமிழும் சங்கமெனச் சேரல் வேண்டும்
நன்குறிஞ்சி அறநூறு நலுங்கும்; தென்றல்
நற்பரணி மனுக்காஞ்சி நற்தாய் மீண்டும்
இன்தமிழின் வலையாறாய் இயற்றல் வேண்டும்;
இளவேனிற் கவிஞருளம் என்றும் வேண்டும் !

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R