- சிறப்பான முகநூற் பதிவுகள் அவ்வபோது பதிவுகளில் மீள்பிரசுரமாகும். அவ்வகையான பதிவுகளிலொன்று இப்பதிவு. - பதிவுகள் -


Azadi: Freedom. Fascism. Fiction By Arundhati Roy

அமெரிக்காவில் தேர்தலில் தான் தோல்வியுற்றேன் என்பதனை ஏற்க டொனால்ட் ரம்ப் மறுக்கின்றார். சட்டரீதியாக போராடுவேன் என சபதம் எடுத்து களத்தில் இறங்கியுள்ளார். அங்கு ஒவ்வொரு மாநிலத்துக்குமென வாக்குகள் உள்ளன.; வாக்களிப்பின் பின்னர் தமது மாநிலத்தில் வெற்றி பெற்ற ஜனாதிபதி வேட்பாளரை மாநிலங்கள் உறுதிப்படுத்த வேண்டும். பின்னர் அதனை கொங்கிரஸ் உறுதிப்படுத்தும் Electoral votes முறையை சில தடவைகள் மாற்ற முற்பட்ட போது, தென் மாநிலங்கள் மறுத்து விட்டன. பல தேர்தல்களில் இந்த தென் மாநிலங்களே இறுதியாக ஜனாதிபதியை தீர்மானிக்கின்றன. ஆனால் இந்தியாவில் ஆவணி 2019ல் காஸ்மீர் மாநிலம் யூனியன் பிரதேசமாக மாற்றப்படுகின்றது. இவ்வாறான விடயத்தை அமெரிக்காவில் செய்ய முடியாது. கனடாவில் கியுபெக் மாநிலம் இரண்டு தடவைகள், பிரிந்து செல்வதற்காக வாக்கெடுப்பு நடாத்தியது. அதே போல் ஸ்கொற்லன்ட்டும் வாக்கெடுப்பு நடாத்தியது. 750 மொழிகளைக் கொண்ட ஒரு உப கண்டத்தில் இவையாவும் சாத்தியமற்றவை. ஐரோப்பாவில் பெரும்பாலும் ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு மொழி பேசும் மக்களைக் கொண்டுள்ளது. அப்படிப்பார்ப்பின் இந்தியாவும் ஒரு கண்டமாகும். ஆனால் ஒரு மொழி, ஒரு யாப்பு, ஒரு மதம், ஒரு நாடு என இந்தியா மாறிவருகின்றது. மாற்றப்படுகின்றது. இந்தியா உயர் சாதி இந்துக்களின் நாடாக மாற்றப்பட்டு வருகின்றது. மாநில சுதந்திரங்களும் படிப்படியாக பறிக்கப்படுகின்றன.

இவற்றை விமர்சித்து அருந்ததி றோய் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு அஷாடி (Azadi: Freedom. Fascism. Fiction) நூல் வெளிவந்துள்ளது. 2018லிருந்து 2020 வரையில் எழுதப்பட்ட மற்றும் உரைகளின் தொகுப்பே இந் நூல். நூல் பிரதானமாக காஸ்மீர் வன்முறைகளுடன், கொரோன உட்பட்ட அரசியல் பிரச்சினைகளை மையப்படுத்திய கட்டுரைகளைக் கொண்டுள்ளது. அஷாடி என்பது ஒரு உருதுச் சொல். அஷாடி என்றால் சுதந்திரம் என அர்த்தம்.

இன்று அருந்ததி றோயின் Walking with the Comrades என்ற நூலை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் தனது பட்டபின் படிப்பு பாடத்திட்டத்திலிருந்து நீக்கியுள்ளது. அருந்ததி றோய் தொடர்ச்சியாக இந்தியாவில் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றார். இதன் பின்னால் ஆர்.எஸ்.எஸ் ன் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி உள்ளது எனத் தெரிகின்றது.

அஷாடி நூலில் அருந்ததி றோய், பி.ஜே.பி யையும் அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் யையும் கடுமையாக விமர்சிக்கின்றார். உலகெங்கும் அகதிகளை எவ்வாறு கவனிப்பது, உதவுவது என ஆலோசித்து வருகையில், இந்தியா தனது சுதந்திர பிரசைகளை அகதிகளாக உருவாக்கி வருவதாக விமர்சிக்கின்றார். இது புதிய இந்திய பிரசைகளுக்கான சட்ட மாற்றத்தின் விளைவு The Graveyard Talks Back :Fiction in the time of fake news என்ற கட்டுரை இத் தொகுப்பில் மிக முக்கிய கட்டுரை. இந்திய சிறுபான்மையினமான முஸ்லீம்கள் மீது, ஆளும் கட்சியின் வன்முறைகளின் கோரமுகத்தை தனக்கேயுரிய கோபத்துடன் வெளிப்படுத்தியுள்ளார்.

அருந்ததி றோய் இன்றைய அரசின் அதிகார வன்முறைகளுக்கான காரணங்களை தனியாக இந்துத் தேசியம் என்ற ஒன்றினூடாக மட்டும் பார்க்கவில்லை. Capitalism’s gratuitous wars and sanctioned greed have jeopardized the planet and filled it with refugees. (page 73)   முதலாளித்துவம், சாதியம், வர்க்கம் போன்றவற்றின் விளைவுகளையும், இவற்றால் தோற்றுவிக்கப்படும் வன்முறைகளையும் சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு அரச இயந்திரம் அதிகார வன்முறையில் இறங்கவும், சிறுபான்மையினர் மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களை ஒடுக்கவும், இவை எவ்வாறு துணை போகின்றன என்பதனையும் விமர்சித்துள்ளார்.

மிகப் பெரிய தனியார் நிறுவனங்கள், மத நிறுவனங்கள் அதிகார வன்முறையில் செயல்படும் அரசுக்கு உதவுகின்றன. இவை ஒரு சுதந்திர, சமத்துவ சமூக உருவாக்கலை கட்டுடைக்கின்றன. எனவே இவற்றின் அழிவில் அல்லது மாற்றத்திலேயே புதிய சமூக உருவாக்கம் சாத்தியம் என அருந்ததி றோய் கருதுகின்றார்.

மோடியின் அரசை, ஜேர்மனியின் நாசி அமைப்புக்கு ஒத்ததாக கருதுகின்றார்.

இறுதிக் கட்டுரையில் கொரோனாவால் எவ்வாறு வறிய மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்பதனை தெரிவிக்கின்றார். இவ் விடயத்தில் டொனால்ட் ரம்ப்பையும் விமர்சிக்கின்றார் Hospital doors have too often been closed to the less fortunate citizens of the United States. It hasn’t mattered how sick they’ve been, or how much they’ve suffered. At least not until now-because now, in the era of “The Virus”, a poor person’s sickness can affect a wealthy society’s health.. அமெரிக்காவும், மோடியின் அரசும் கொரோனா விடயத்தை கையாளும் முறையை விமர்சிக்கின்றார்.

2020 ஆரம்பத்தில் டொனால்ட் ரம்ப் டெல்லியில் தங்கியிருந்த போது, டெல்லியில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. பலர் கொல்லப்படுகின்றனர். ரம்ப் இறுதி வரை ஏன், என்னத்துக்காக எனக் கேட்கவுமில்லை, கண்டிக்கவுமில்லை. அமெரிக்க மக்களை அனுதாபத்துடன் நோக்கும் அருந்ததி றோய், ஆட்சி மாற்றம் மாற்றத்தைக் கொண்டுவரும் எனக் கருதவில்லை. ஒரு நூலில் கூறப்பட்ட விடயங்கள் அனைத்தையும், ஒரு சிறிய கட்டுரையில் கொண்டுவரமுடியாது. இன்றைய கால கட்டத்தில் அனைவரும் வாசிக்க வேண்டிய முக்கியமான நூல் அஷாடி.

My Seditious Heart: Collected Non-Fiction.என்ற நூலின் தொடர்ச்சியாக இந்நூலை கருதலாம்


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R