தோழர் கே. ஏ. சுப்பிரமணியம் இலங்கை இடதுசாரி இயக்க வரலாற்றில் தனக்கென தனித்துவமான பங்களிப்பை வழங்கியர். மூத்த இடதுசாரி தோழர்களான மு கார்த்திகேசு, ந. சண்முகதாசன் என்ற வரிசையில் வைத்து நோக்கப்பட வேண்டியவர். ஒருவகையில் முன்னவர்களின் தொடர்ச்சியாகவும் அதன் அடுத்த கட்ட பரிமாணமாகவும் திகழ்ந்தவர் கே.ஏ. சுப்பிரமணியம். தோழர் கே. ஏ. சுப்பிரமணியம் இலங்கை இடதுசாரி இயக்க வரலாற்றில் தனக்கென தனித்துவமான பங்களிப்பை வழங்கியவர். மூத்த இடதுசாரி தோழர்களான மு கார்த்திகேசு, ந. சண்முகதாசன் என்ற வரிசையில் வைத்து நோக்கப்பட வேண்டியவர். ஒருவகையில் முன்னவர்களின் தொடர்ச்சியாகவும் அதன் அடுத்த கட்ட பரிமாணமாகவும் திகழ்ந்தவர் கே.ஏ. சுப்பிரமணியம்.  ஆதிகார பீடத்தில் அமர்ந்திருக்கும் ஆதிக்க வர்க்கத்தினருக்கும் ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராக ஓர் ஆர்ப்பரிப்பில் உண்மையின்-உழைக்கும் மக்களின் பக்கத்தில் நின்று போராடிய இத்தோழரின் கருத்துக்கள் சிந்தனைகள் செயற்பாடுகள் என்பன இன்று வரை பல விதங்களில் தாக்கம் செலுத்தி வருகின்றன. இருப்பினும் இவர் பற்றி வெளிவந்த நினைவு மலரைத் தவிர அவர் பற்றி காத்திரமான ஆய்வுகள் ஏதும் வந்ததாகத் தெரியவில்லை. என்னைப் பொறுத்த மட்டில் அத் தோழரோடு நேரடியாக பழக கூடிய சந்தர்ப்பங்கள் ஏதும் கிடைக்காத போதினும் அவரால் எழுதப்பட்டு ,செம்மைப்படுத்தப்பட்ட  "தாயகம்"",செம்பதாகை", புதியபூமி" போன்றவற்றின் ஆசிரிய  தலையங்கங்களும் ,சில கடிதங்களும் பார்வைக்கு கிட்டின. மேலும் அவரால் வளர்த்தெடுக்கப்பட்ட இடதுசாரி தோழர்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது ஆளுமையின் செல்வாக்குட்பட்டவர்கள் என்போரின் கருத்துக்களைக் கொண்டு அவரை அறிய முடிந்தது.

 பழமைவாத சமூக புனிதங்களிலிருந்து வழியும் சீழினை நக்கிப் பிழைப்போட்டும் நிலைமைகளே யதார்த்தமாகிவிட்டதோர் சூழலில் அவற்றினை மீறி கலப்பு திருமணம் செய்துகொண்டமை அவரது நேர்மையையும் தன்முனைப்பற்ற நாகரிகத்தினையும் எடுத்துக் காட்டுகின்றது.    கூடவே  தனது இறுதி மூச்சு வரையிலும் அத்தகைய நாகரிகமான வாழ்வை தமதாக்கி கொண்ட அவர் மரண வாயிலில் நின்றுக் கொண்டு கூட தம் தோழர்களுக்கும் அடுத்த தலைமுறையிருக்கும்  "விடை பெறுகிறேன்" கூற முற்பட்ட அவரது செயல் நம்பிக்கையூட்டுவதாக மட்டுமன்று ஒர் உண்மையான இடதுசாரிக்கு இருக்க கூடிய ஆன்ம பலத்தை எடுத்துக் கூறுவதாகவும் அமைத்துள்ளது. அவரது மரணச் சடங்கில் எந்த விதமான மத சம்பிரதாயங்களுக்கும் இடம் கொடுக்கக் கூடாது என்பதிலும் உறுதியாக இருந்துள்ளார். இன்றுவரை அவரது துணைவியாரின் கழுத்தில் தொங்கும் "அரிவாளும் , சம்மட்டியும்" தான் அவர் கட்டிய தாலி.அவரது இல்லமான அந்தச் சிறிய  "சத்தியமனை"  கதவுகள் அற்று "அடையா நெடுங்கதவும், அஞ்சேல் என்ற சொல்லும் வேண்டும் " என்று  சொல்லி திறந்தே இருந்திருகிறது.

அத்தகைய சிறப்புமிக்க இத்தோழரின் அரசியல் தெளிவுக்கும் வெற்றிக்கும் அடிப்படையான காரணம், விஞ்ஞானபூர்வமான இயக்கவியல் பார்வையைக் கொண்ட அவரது செயற்பாடு ஆகும். அவருடைய ஆளுமை பல்துறைசார்பானது. அவரில வெளிப்பட்ட அரசியல்   பார்வையும் நடைமுறைசார்ந்த போராட்டமும்  சிரமப்படாமல் எளிதானதொரு இயல்பாகக் காணப்படுகின்றது. இது சாத்தியப்படுவதற்கு முக்கிய காரணம் அவரது மார்க்சிய சார்புநிலையாகும். அவ்வகையில் மார்க்சியத்தை ஏற்றுக் கொண்ட அவர் அதனை மாறிவருகின்ற எமது சூழலுக்கு ஏற்றவகையில் பிரயோகித்து அதற்கான நடைமுறையை முன் வைத்தார். இலங்கை இந்திய இடதுசாரிகள் பலர்  தமிழ்ச் சூழலில் ஐரோப்பிய வர்க்க சிந்தனை மரபை அப்படியே பிரயோகித்து கண்ட முடிவுகள் நமது சூழலில் விரக்திக்கும் பின்னடைவிற்குமே இட்டுச் சென்றது. தமிழ்ச் சமூகத்தில்  சாதி, மதம், இனம், மொழி அடையாளங்கள் எல்லாம் இருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்வதன் மூலமே அம்மக்களை அணிதிரட்டுவதற்கான மார்க்கத்தைக் கண்டடைய முடியும். தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் இதனைப் புரிந்து கொண்டு தமது ஸ்தாபன செயற்பாடுகளை முன்னெடுத்தார். அந்தவகையில் அவர் முன்னின்று முன்னெடுத்த போராட்டங்களில் மிக முக்கியமானது தீண்டாமைக்கும் சாதிக்கும் எதிரான போராட்டமாகும். இந்தியாவிலே ஏ. கே. கோபாலன்  முதலானோர் தாழ்த்தப்பட்ட மக்கள் சார்பில் முன்னெடுத்த கோயில் நுழைவுப் போராட்டத்தை தமக்கு ஆதர்சனமாக கொண்டு நமது சூழலுக்கு ஏற்றவகையில் அவ்வனுபவங்களை முன் வைத்து போராட்டங்களை முன்னெடுத்தார்.

யாழ்பாண சமூகவமைப்பில் நிலவிய சாதியத்திற்கு எதிரான போராட்டங்கள் ஆங்காங்கே இடம்பெற்று வந்துள்ளன என்ற போதிலும் அதன் ஆரம்பகாலப் போராட்டங்கள் யாவும் ஸ்தாபன மயமாக்கப்பட்டவையாக அமையவில்லை. 1910 ஆம் ஆண்டளவில் தோற்றம் பெற்ற வட இலங்கை தொழிலாளர்கள் சங்கம் இத்துறையில் தோன்றிய முதலாவது ஸ்தாபனமாகும். அவ்வாறே சிறுபான்மை தமிழர் மகாசபை நடத்திய சாதிய எதிர்ப்பு போராட்டங்களும் வரலாற்று முக்கியத்துவம் உடையவையாக காணப்படுகின்றன. இவை அடக்கியொடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கான போராட்டங்களை நடாத்தி சிறுசிறு வெற்றிகளை பெற்றிருந்தாலும் சாதிய ஒடுக்கு முறையின் ஆணிவேரை தொடமுடியாமல் போய்விட்டமை ரதிஸ்டவசமானதொன்றாகும். சிறுப்பாண்மை மாகாசபையின் ஊடாக சாதியெதிர்ப்பு தொடர்பான போராட்டங்களையும் நடைமுறைசார்ந்த செயற்பாடுகளையும் முன்னெடுத்ததில் எம்.சி. சுப்பிரமணியத்திற்கு முக்கிய இடமுண்டு என்பதில் இருநிலைப்பட்ட கருத்துகளுக்கு இடமில்லை. இருப்பினும் அவர் 1960களில் இடதுசாரி இயக்கத்தில் ஏற்பட்ட தத்துவார்த்த பிளவில் திரிபுவாதமாக திகழ்ந்த மொஸ்கோ சார்புக்குள் புதைந்து பாரளுமன்ற சந்தரப்பவாதத்திற்குள் முழ்கியது துரதிஸ்டவசமான நிகழ்வாகும். இவ்விடயம் இந்நூலிலும் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.  அன்றைய சூழலின் வீறு கொண்ட எழுச்சியடன் செயற்பட்ட இடதுசாரிகள் சீன சார்பை பின்பற்றியதுடன், தொடந்தும் புரட்சிகர பாதையில் தமது போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். இந்த பின்னணியில் உருவாகிய தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்க போராட்டமானது சகவிதமான தேசிய ஜனநாயக சக்திகளையும் அணித்திரட்டியிருந்தது. இப்போராட்டம் சீனசார்பு கொம்யூனிட்ஸ்டுகளாலயே முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டத்திற்கு வழிகாட்டி நின்ற முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் தோழர் கே. ஏ. சுபிரமணியம். சாதியத்திற்கு; தீண்டாமைக்கும் எதிரான வெகுஜன எழுச்சியை தொடர்ந்து சட்டத்திற்குட்பட்டதும் சட்டத்திற்கட்படாதுமான போராட்ட தத்திரோபாயங்களை கடைப்பிடித்து நிதானமான தலைமைத்துவத்தை வழங்கியதில் இத்தோழருக்கு முக்கிய பங்குண்டு. எமது மண்ணுக்கும், வாழ்வுக்கும் மாறான கோட்பாடுகளை முன்வைத்து- மார்க்சிய அணிகள், முன்னோடிகளது வசனங்களை கோசங்களை முன் வைத்து முன்னெடுக்கப்பட்ட சமூகமாற்ற செயற்பாடுகள் மலட்டுதனமாக முடங்கிபோனதை வரலாறு எண்பித்திருக்கின்றது.  இலங்கையின் இடதுசாரிகள் அவ்வாறின்றி எமது பிரயோக சூழலுக்கு அமைவாக மார்க்சியத்தை வளத்தெடுக்க முனைந்ததன் விளைவே தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்க போராட்டமாகும். அரசியல் அரங்கில் இந்த முரண்பாட்டை விளங்கிக் கொண்டு அமைபாக்க செயற்பாட்டில் ஈடுப்பட்டமை இவரது முக்கிய பங்களிப்பாகும். இவரது தன்னலமற்ற பங்களிப்பு பற்றி அன்னறய காலச் சூழலில் அவரோடு இயங்கிய சி. கா. செந்திவேல் அவர்களின் பின்வரும் கூற்று மக்கியமானதாகும்.

”தோழர் கே.ஏ.சுப்பிரமணியம் தமிழர்களின் சமூகப் பரப்பிலே தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட சமூக நீதிக்காகவும் உரிமைகளுக்காகவும் சமத்துவத்திற்காகவும் போராட்ட இயக்கங்களை முன்னெடுத்தவர்களின் வரிசையில் முன்னின்றவர். பொதுவுடைமைக் கட்சியின் தலைமைத்துவத்தில் தன்னை ஒருவராக்கிக் கொண்டவர். அதன் காரணமாக வடபுலத்தில் தொழிற்சங்க இயக்கத்தையும் சாதியத்திற்கு எதிரான 1966ம் ஆண்டு ஒக்ரோபர் 21 எழுச்சியின் ஊடான தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தையும் முன்னெடுப்பதில் முன்னின்றார். 1966-77 காலகட்டத்திலான வெகுஜன எழுச்சிகளும் போராட்டங்களும் தமிழர்களுடைய வரலாற்றில் அன்றுவரை புறக்கனிக்கப்பட்டு வந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மனித உரிமைகளையும் ஜனநாயகத்தையும் சமத்துவத்தையும் வென்றெடுக்க வழியேற்படுத்திக் கொடுத்தன. அதுமட்டுமன்றி பிற்காலத்தில் எழுந்த தமிழ்த் தேசிய இனவிடுதலைப் போராட்டம் என்ற தளத்தில் அனைத்துத் தமிழர்களையும் ஒன்றுபட வைத்ததற்காக அடிப்படைகளையும் வெகுஜனப் போராட்டங்கள் ஏற்படுத்திக் கொடுத்தன என்பது சிலர் மறந்துகொள்ளும் ஒன்றாகும். இவ்வெகுஜனப் போராட்ட காலங்களில் தோழர் கே.ஏ.சுப்பிரமணியத்துடன் இணைந்து நின்று போராட்டப் பணியாற்றிய நினைவுகள் இன்றும் பசுமையானவைகளாகவே இருந்துவருகின்றன. நெஞ்சில் உரமும், கொண்ட கொள்கையில் நேர்மைத்திறனும் உழைக்கும் மக்கள் மீதான போராட்ட நம்பிக்கையையும் கொண்ட புரட்சிகரப் பொதுவுடைமைவாதியாக தலைமைத்துவ வழிகாட்டியாக வாழ்ந்து மறைந்தவர் தோழர் மணியம். அவருடனான நினைவுகள் பகிரப்படும் போது அவை போராட்டத்தையும் சமூக மாற்றத்தையும் வேண்டி நிற்கும் இளம் தலைமுறையினருக்கு பயன் உள்ள அனுபவங்களாக அமைய முடியும் என்று நம்புகின்றோம்.( சி.கா. செந்திவேல், 27.11.2011 அன்று தோழர் கே.ஏ. சுப்பிரமணியத்தின் 22வது நினைவு தினக்கூட்டம் கொழும்பு inioru.com 24975)

அந்தவகையில், தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கப் போராட்டமானது மக்களின் யதார்த்த வாழ்க்கையுடன் ஒட்டியதாக இருந்தமை அதன் பலமான அம்சமாகும். சாதிய அமைப்பு முறையின் பிரதான மையங்களாக பெரும் ஆலயங்களும் தேனீர் கடைகளும் திகழ்கின்றன என்ற அடிப்படையில் அவற்றினுள் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் தமக்கான சமத்துவத்தை நிலை நாட்டுவதற்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கம் தெளிவான நிலைபாட்டினை கொண்டிருந்தது. அதனை தலைமை தாங்கிய கம்யூனிஸ்ட் கட்சியும் ”அடிமை குடிமை முறை ஒழியட்டும், ஆலய தேநீர்க்கடை பிரவேசம் தொடரட்டும்” என்ற நிலைபாட்டை முன்வைத்தது. அவ்வகையில் அக்காலக்கட்டத்தில் தோன்றிய கலை இலக்கிய வடிவங்களும் புரட்சிகரமான உள்ளடங்கங்களை கொண்டிருந்த அதே சமயம் மக்களை ஒட்டிய கலை வடிவில் அவை படைப்பாக்கி தரப்பட்டன.

மார்க்சியர்களாலும் ஜனநாயக சக்திகளாலும் முன்னெடுக்கப்பட்டபட்ட தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கப் போராட்டமானது சாதியையும் தீண்டாமையையும் குறி வைத்தே முன்னெடுக்கப்பட்ட போதினும் அப்போராட்டம் சகல விதமான ஒடக்குமுறைகளுக்கும் எதிரான வர்க்கப் போராட்டம் என்ற விஞ்ஞான தளத்துடன் இணைக்கப்பட்டிருந்தமை அதன் பலமான அம்சமாகும். அத்தகைய த்ததுவார்த்த தளத்தினை உருவாக்குவதில் முக்கிய ஆளுமையாக திகழ்ந்தவர் கே. ஏ. சுப்பிரமணியம் அவர்கள்.   

மனிதர்களிடையிலான காதலே உலகை இயக்கிக் கொண்டிருக்கின்றது என்பதற்கு சாட்சியாய் அமைந்தவர் தோழர் மணியம். யாழ்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட அவர் தமது அறிவு-ஆற்றல்-செயற்பாட்டால் அவர் பிறந்த மண்ணை கடந்து தொலைத்தூரங்களிலும் செல்வாக்கு செலுத்த கூடியவராக இருந்தார். அவரது அரசியல் தத்துவம் நடைமுறை என்பன மலையகத்தில் எவ்வாறு வேர் கொண்டு கிளைப்பரப்பியது என்பதை மலையக கவிஞன் ஒருவனின் உணர்வகள் இவ்வாறு பிரவாகம் கொள்கின்றன.

'மலையகத்தில்
நாளை மலரும்
மலையக ரோஜாக்கள்
தோழரின் நிறமாய்
தொடர்ந்து
பூத்திருக்கும்
ஓய்வாய் சாய்ந்திருக்கும்
ஊயரநிலைத் தோழரின்
உன்னத உணர்வுகள்- அங்கு
உரமாய் ஊட்டப்படும்

உழைப்பாளர்களை நேசித்த
உன்னத தோழரில்
உருக்கொண்ட இலட்சியங்கள்
உயரத்தில் ஏற்றப்படும்
அதுவரை
உடலால் இத்தோழமை
ஓய்வு எடுக்கட்டும்'  ( சிவ. இராஜேந்திரன்)

இவ்வகையில் மலையகத்தில் பின்னாட்களில் அரசியலில் பிரவேசம் கொண்ட திருவாளர்கள் சிவ இராஜேந்திரன், ஜோன்சன், வ.விஜேயரட்ணம் இன்னும் இது போன்ற பலர் இவரின் செல்வாக்கிற்கு உட்பட்டுள்ளதை அவதானிக்கலாம். அரசியல் வாதிகள் தவிர்ந்து கலை இலக்கிய வாதிகளுடனும் நேசப்பூர்வமான உறவினை பேணிவந்துள்ளார் என்பதை கைலாசபதி,நுகுமான் ,எ ஜே கனகரத்னா ,சில்லையூர் செல்வராஜன்  கே. கணேஷ் முதலானருடனான உறவுகள் இதனை சிறப்பாக எடுத்துத் காட்டுகின்றன. இதற்கப்பால் தொழிற்சங்க போராட்டங்கள்,விவாசய இயக்கங்கள் நடாத்திய போராட்டங்கள், ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்கள் என பலமுனைப்பட்ட போராட்டங்களிலும் தம்மை அர்பணித்துக் கொண்ட நேர்மையான இடதுசாரியாக வாழ்ந்தவர். ஒருவகையில் அவரின் இந்த பங்களிப்புகள் வெளிக்கொணரப்படாதவையாகவே காணப்படகின்றன. இவைக் பற்றிய ஆய்வுகள் வெளிக் கொணரப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும். அவரது ஆளுமைகளை ஒட்டு மொத்தமாக நோக்குகின்ற போது நோர்மண் பெதுன் பற்றி மாஓ கூறய பின்வரும் வரிகள் நினைவுக்கு வருகின்றது.
 
'நமது வேலைகளில் பொறுப்பற்றவர்களாக நடந்துக் கொள்பவர்கள் அநோகர் உள்ளனர். இவர்கள் பளுவானவற்றை காட்டிலும் இலகுவானவற்றை நல்லதென்று ஏற்றுக்கொண்டு, பிறருக்கு பளுவானவற்றை தள்ளிவிட்டு எளிதானவற்றை தமக்கு தேர்ந்தெடுத்துக் கொள்கின்றார்கள். எந்தபணியிலும் அவர்கள் தம்மைப் பற்றி தான் முதலில் நினைக்கின்றார் பிறகுதான் மற்றவர்களைப் பற்றி இவர்கள் ஏதேனும் கொஞ்சம் நஞ்சம் செய்து விட்டால் கர்வம் தலைக்கேறியிருக்கும். அது தெரியாமல் போய்விடுமோ என்பதற்காக அதைப் பற்றித் தம்பட்டம் அடிப்பார்கள். இவர்கள் தோழர்கள் பேரிலும் மக்கள் பேரிலும் மனமார்ந்த அன்பைக் கொண்டவர்கல்லர். ஆனால் உணர்ச்சியற்றவர்களாளக, அக்கறையற்றவர்களாக, அலட்ச்சியமிக்கவர்களாக இருப்பவர்கள். உண்மையில் இத்தகையவர்கள் கம்யூனிஸ்டுகள் அல்லர். உண்மையான கம்யூனிஸ்டுகள் என கருதப்படவே முடியாதவர்கள' ஈழப் போராட்டத்தின் பிறழ்வினைகளால் ,தன இறுதி நாட்களை கண்டியில் கழித்தார்.அத தருணத்தில் அவர் எழுதிய பல விடயங்கள் மறுவாசிப்புக்கு அவசியமானவை .நம்மில் விவேகம் உள்ளவர்களும் அறிவுள்ளவர்களும் நிறையவண்டு. ஆனால் ஏதாவொன்றில் அர்பணித்துக் கொண்டு செயற்பட எத்தனைப் பேர் தயார் என்பது தான் கேள்வி. இன்றைய சூழலில் புரட்சிகரமான உணர்வுகள் பல தாக்கங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் உட்பட்டு வந்துள்ளதை நாம் கவனத்திலெடுத்தல் வேண்டும். உலகளாவிய  ரீதியில் ஏற்பட்டுள்ள மக்கள் இயக்கங்களின்  தளர்ச்சி, தனிமனித ஆளுமைச் சிதைவுகள் , இவ்வகையான புறச் சூழ்நிலை காரணமாக இன்று ஒரு பகுதி மக்கள் மத்தியிலும் தோழர்கள் மத்தியிலும் ஒருவித அதிருப்தி மனப்பான்மை வளர்ந்து புரட்சிகர எண்ணங்கள்  மங்கலாகி போவதை நாம் நேரடியாக பார்க்கின்றோம்.  முதலாளித்துவ சமுதாயத்தை அகற்றி, புதிய ஒரு  சமுதாயத்தை அமைப்பதன் மூலம் மட்டுமே மனித குலத்திற்கான விமோசனம் கிடைக்கும் என்பதை மறந்து இன்றுள்ள அமைப்புகள் மீது பிரம்மைகள் வளர்வதை இவ எடத்துக்காட்டுகின்றன.      அதன் காரணமாக போராட்ட உணர்வுகள் மழுங்கி விரக்தியில் மூழ்கி ஒட்டுமொத்தமாக மக்கள் இயக்கங்கள் மீதே வசைபாட முனைந்துள்ள இன்றைய சூழலில் புதிய அரசியல் பண்பாட்டு பாதையில் உருவாகிவரும் எண்ணற்றவர்களுக்கு இத்தோழரின் வாழ்வும் வளமும் வழிகாட்டி நின்கின்றன. அத்தகைய பாதையில் உறுதியுடன் மேலும் முன்னேற முனைவதே இத்தோழருக்காக நாம் செலுத்தும் புரட்சிகர அஞ்சலியாகும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R