புதுவை ராமன்இழப்புக்கள் ஏற்படுவது இயற்கைதான், ஆனால் இவ்வளவு விரைவாக ஏன் என்பதுதான் புரியவில்லை. ‘இந்த மண்ணில் மாரடைப்பு என்ற சொல்லைக் கேட்டாலே பயமூட்டுவதாகவும், அதிர்ச்சி தருவதாகவும் இருக்கின்றது’ என்று சென்றவாரம்தான் நண்பர் பொன்னம்பலம் குகதாசனின் (பூநகரான்) மறைவு பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். இலக்கிய நண்பர் புதுவை இராமனின் திடீர் மறைவு மீண்டும் அதிர்ச்சி தருவதாக இருக்கின்றது. சமீபத்தில் டாக்டர் சூரியபாலன், அதிபர் கனகசபாபதி, பேராசிரியர் செல்வா கனகநாயகம், பூநகரான் குகதாசன், புதுவைராமன் இப்படியே ஒவ்வொருவராக நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்கள். நேற்றிருந்தார் இன்றில்லை என்பது இதைத்தான் நினைவூட்டுகின்றது.

நண்பர் புதுவை இராமன் அவர்களைக் கடைசியாக எஸ் ரி. சிங்கம் அவர்களின் நூல் வெளியீட்டு விழாவின்போது கனடா கந்தசுவாமி கோயில் கலையரங்கத்தில் சந்தித்திருந்தேன். ஸ்ரீசிவா, உதயன் ஆகியோரோடு உரையாற்றிக் கொண்டிருந்தபோது அவர் எங்களைப் புகைப்படம் எடுக்க விரும்பினார். ‘கொஞ்சம் சிரிச்சா என்ன?’ என்று புகைப்படம் எடுக்கும்போது கேட்டார். உண்மைதான் நாங்கள் இயல்பான புன்னகையை மெல்ல மெல்லத் தொலைத்து விட்டோம் என்பதை அவர் நினைவூட்டினார். மனதிலே எதையும் வைக்காது, பாரபட்சம் பாராது எல்லோரோடும் இனிமையாகப் பழகக் கூடியவர். நான் திரைக்கதை வசனம் எழுதி வெளிவந்த ஸ்ரீமுருகனின் சிவரஞ்சனி படத்தில் புதுவை இராமனும் நடித்திருந்தார். இன்று அவர் இல்லை, அவரது நினைவுகள் மட்டும் எம்மோடு இருக்கின்றது.

இச்சந்தர்ப்பத்தில் இலக்கிய நண்பர் புதுவை இராமனின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்தித்து, அவரது மனைவி, குடுத்பத்தினருக்கும், உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் பதிவுகள் இணைய இதழ் மூலம் எனது குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R