கட்டுரைச் சுட்டு

அத்தியாயம் 72

வெங்கட் சாமிநாதன்அந்நாட்கள் மிகவும் சந்தோஷமாகவே கழிந்தன என்று தான் சொல்ல வேண்டும். சுட்டெரிக்கும் கடும் வெயில், எங்கோ தூரத்தில் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் வயிற்றுப் பாட்டுக்காக வாழ்கிறோம் என்பது போன்ற கவலைகள் இருக்கவில்லை. ஏனோ தெரியவில்லை. இப்போது அந்நாட்களைப் பற்றி நினைத்தாலும் சந்தோஷமாகக் கழிந்ததாகவே தோன்றுகிறது. திரும்ப நினைவில் அசை போடுவதிலும் ஒரு சந்தோஷம் இருக்கத் தான் செய்கிறது. அலுவலகத்தில் கழியும் நேரத்தை எவராவது சந்தோஷமாக நினைவு கொள்வார்களா? அதாவது நேர்மையாக உழைத்து கிடைக்கும் அற்ப பணத்தில் வாழ்க்கை நடத்த நிர்ப்பந்திக்கப் படும் கீழ் நிலையில் உள்ளவர்களுக்கு? இன்றைய தினம் எந்த அரசு அலுவலகமும், எத்தகைய கீழ் நிலை சேவகனுக்கும் அது பொது மக்களை ஒரு பொருட்டாகவே கருதாது அதிகாரம் செய்யவும் மிரட்டி பணம் சம்பாதிக்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ள இன்றைய தினம் ஒருவேளை அலுவலக நேரங்கள் தரும் பணத்தையும் முரட்டு அதிகார பந்தாக்களையும் நினைத்து சந்தோஷப் படலாம். அரசின் உச்ச நாற்காலியிலிருந்து வாசல் கேட்டில் சேவக உடை தரித்து வரும் கார்களுக்கு சலாம் போடும் கடை நிலை வரை.

அதெல்லாம் ஏதும்  இல்லாமலேயே அது பற்றிய சிந்தனைகளே ஏதும் இல்லாத அந்நாட்களில் அலுவலக நேரம் கூட சந்தோஷமாகவே கழிந்தன. எத்தனை ரக சகாக்கள். எத்தனை தூரத்திலிருந்து எத்தனை மொழி பேசும், சகாக்கள். அவர்கள் எல்லோருடைய பேச்சும் சுபாவமும், சுவாரஸ்யமானவை. அப்போதும் சந்தோஷமாகத்தான் இருந்தது. இப்போது எழுதும் சாக்கில் நினைத்துப் பார்க்கவும் சந்தோஷமாகத்தான் இருக்கிறது. மனோஹர் லால் சோப்ரா என்று ஒரு பஞ்சாபி. இப்போதைய ஹரியானா விலிருந்து ரோஹ்தக் என்ற இடத்திலிருந்து வந்தவன். ரோஹ்தக்கிலிருந்து நேரே புர்லாவுக்கு வந்திருப்பவன். மேல்நிலை குமாஸ்தா. (அப்பர் டிவிஷன் கிளர்க்) காலேஜில் படித்தவன்.ஒல்லியான தேகம் பஞ்சாபிக்குள்ள சிகப்பு நல்ல உயரம். மூக்கு மாத்திரம் இந்திரா காந்தி மூக்கு மாதிரி கொஞ்சம் முன்னால் நீண்டு நுனியில் வளைந்து இருக்கும் கழுகு மாதிரி என்று சொன்னால் அது மிகைப்படுத்தலாக இருக்கும். ஆனால் ரோஹ்தக்கிலிருந்து நேரே புர்லாவுக்கு வந்தவன். எவ்வளவு உருக்கமாக, ஸ்பஷ்டமான உச்சரிப்பில் வங்காளியில் பாட்டுக்கள் பாடுகிறான். என்று எங்களுக்கு ஆச்சரியம். வங்காளிகள் யாரும் அவன் ஒரு  பஞ்சாபி, என்று அவன் பாட்டின் உச்சரிப்பைக் கொண்டு சொல்லி விட முடியாது. அர்த்தம் தெரியாது. ஆனால் ஒரு வங்காளியின் உச்சரிப்பு ஸ்பஷ்டமாக இருக்கும். அதற்கு எங்களோடு வேலை செய்யும் சகா மிருணால் காந்தி சக்கரவர்க்த்தியே சாட்சி.  ”எங்கேடா கற்றுக்கொண்டாய்?” என்று கேட்டால் ஒரு திருட்டுச் சிரிப்பு தான் பதிலாக வரும். அவன் பாடியதெல்லாம் சோக கீதங்கள். ஆனால் சோகத்தைப் பிழியும் பாட்டுக்கள் என்று அவனுக்கு என்ன தெரியும்? அவை கேட்க என்னவோ மிக இனிமையாக இருக்கும். அவையெல்லாம் சோகத்தைச் சொல்வன என்று கேட்டதும் இன்னும் இனிமையாக இருக்கும் கேட்க.

அவன் எனக்கு அவன் பெயரை சரியாக உச்சரிக்கச் சொல்லிக்கொடுத்து  அலுத்துப் போனான். அலுத்துத் தான் போனானா, இல்லை, அப்படி ஒரு நாடகமாடினானா? தெரியாது. கடைசி வரை எனக்கு அது வரவேயில்லை. தப்பாகத் தான் சொல்கிறேன் என்றே சொல்லி வந்தான். ”சோப்ரா” இல்லை, இதோ பார், நாக்கை கொஞ்சம் பாதி மேலன்னத்தோடு சேர்த்து அழுத்தி சொல்லு ”ச்சோப்ரா”  என்று சொல்லிக் கொடுப்பான். நானும் அவன் சொன்ன படியே சொல்வேன். இதோ பார் சோப்ரா சரிதானா? அப்படி இல்லை, ச் ச் சொல்லு ச். நாக்கை மேலன்னத்தோடு ஒட்டி மடக்கிண்டு சொல்லு ச் ச்சொப்ரா”. இந்த தமாஷ் ரொம்ப நேரம் நடக்கும். அவன் என்னை வைத்துக்கொண்டு தமாஷ் பண்ணுகிறான் என்று சுற்றி இருக்கும் எல்லோருக்கும்  தெரியும். எனக்கும் தெரியும். எல்லோரும் சிரிப்போம்..

அவன் கல்யாணம் பண்ணிக்கொண்டு வந்தான். கல்யாணம் பண்ணிக்கொண்டு வந்தால் வீட்டுக்கு ஒரு இளம் பெண் மனைவியாக வருவாள். வந்தவன் வீட்டில் உள்ளே அவன் மனைவி. வெளியே ஒரு எருமையும் கட்டியிருந்தது. என்னடா இது? என்று கேட்டால், அவன் சிரித்துக் கொண்டே, “இங்கே பாலுக்கு ரொமபவும் கஷ்டப்படுகிறேன் என்று அவராகவே நினைத்துக்கொண்டு ஒரு மாட்டையும் ஒட்டி விட்டு விட்டார் என் மாமனார்” என்றான். அவன் இருக்கும் இடம் கொழுத்த எருமைகளுக்கு பேர் போனது. அன்றிலிருந்து அவன் அலுவலக நேரத்தில் நான் அவன் வரவேற்பதும் முகமன் பரிமாறிக்கொள்வது மாறியது.

கீ ஹால் ஹை பயீ தேரா? (எப்படிடா இருக்கே நல்லாருக்கியா)?

டீக் டாக் ஹூம் யார், படியா சம்ஜோ? ( நல்லா இருக்கேன்  ரொம்ப நல்லா இருக்கேன்னு வச்சுக்க) என்று பதில் சொல்வான்.

அதோடு முகமன் விசாரிப்பது நிற்காது. அடுத்த கேள்வி

“ஓர் தேரா பைன்ஸ் தா ஹால் சுனாவ்? வஹ் பீ டீக் டாக் ஹைனா? ( உன் எருமை? அதுவும் சௌக்கியம் தானே?) 

பதில் ஒவ்வொரு தடவை ஓவ்வொரு மாதிரி இருக்கும். ஒரு சமயம் முறைப்பான். ஒரு சமயம் பதிலுக்குச் சிரிப்பான். இன்னும் சில சமயங்களில் “து கர்லே பயீ மஜாக் கர்லே” (” உனக்கென்ன வேண்டியது கேலி செய்துக்கோ”) என்று பதில் வரும். இன்னும் சில நாட்கள். அவனே எடுத்துக்கொடுப்பான். ”மேரா பைன்ஸ்தா ஹால் க்யோ நஹி பூச்சா? பூல் கயா?) (ஏன் எருமை எப்படி இருக்குன்னு கேட்கலியே,. மறந்துட்டியா?)

கல்யாணத்துக்கு முன் தனிக்கட்டையாக இருந்த போது நடந்தது இது. ஒரு நாள் அவன் தன் கடைசித் தங்கை, பத்துபன்னிரண்டு வயசுத் தங்கை ஊரிலிருந்து வந்திருக்கிறாள் என்று சொன்னான். ரோஹ்தக்கிலிருந்து அவன் அப்பாவுக்கு அவள் இங்கு வந்திருக்கும் செய்தியைச் சொல்லி  கவலைப் பட வேண்டாம் என்று தந்தி அனுப்பிவிட்டு அலுவலகம் வந்திருக்கிறான்.  தனியாக. அவன் சொன்ன கதை நெஞ்சைப் பிழியும். அவன் தங்கைக்கு அவனிடம் பாசம் அதிகம். அவன் இல்லாமல் இருக்க மாட்டாளாம். ஆனால் இங்கே வேலை என்றால் விதி செய்த விளையாட்டுக்கு என்ன செய்ய. அண்ணாவைப் பார்க்கப் போகணும் என்று நச்சரித்துக் கொண்டிருந்தாளாம். ”போகலாம் போகலாம்”, என்று அப்பாவும் அம்மாவும் சொல்லிக்கொண்டே காலத்தைக் கழித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள். இதெல்லாம் மனோஹர் லாலுக்குத் தெரியும். அவனுக்கும் இந்த நச்சரிப்பப் பற்றி கடிதங்கள் எழுதியிருக்கிறார் அவன் அப்பா. பின் நடந்தது எல்லாம் அவள் இங்கு வந்து அவளிடம் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கிறான். ”எப்படிடா வந்தாள் இந்த 12 வயது வாண்டு”? என்று கேட்டதற்கு,  ”நீயே கேட்டுத் தெரிந்து கொள், வீட்டுக்கு வா ஞாயிற்றுக் கிழமை” சாப்பிடலாம். அந்த உன் வாண்டு தான்


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R