சிலோன்' விஜயேந்திரன் [ பதிவுகளில் வ.ந.கிரிதரனின் பக்கத்தில்  'சிலோன் விஜயேந்திரன்' பற்றி வெளியான குறிப்பு பற்றிய குரு அரவிந்தனின் எதிர்வினை இது. இங்கு 'சிலோன்' விஜயேந்திரன் பற்றிய மேலதிகத்தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றார். அவருக்கு நன்றி. - பதிவுகள்-]

''பாடையிலே படுத்தூரைச் சுற்றும்போதும்
பைந்தமிழில் அழுமோசை கேட்கவேண்டும்.
ஓடையிலே என்சாம்பர் கரையும் போதும்
ஒண்தமிழே சலசலத்து ஓயவேண்டும்.'' -
கவிஞர் ராஜபாரதியின் கவிதை வரிகள் -

கல்லூரி நாட்களிலே இராஜேஸ்வரன் மனப்பாடம் செய்து வைத்திருந்த கவிதைகளில் இதுவும் ஒன்று. கல்லடி வேலுப்பிள்ளையின் பேரன் என்பதால் இவரிடம் இயற்கையாகவே விகடம் குடியிருந்தது. இலக்கிய ஆர்வத்தால் தனது கல்வியைத் தொலைத்தவர். தனது சகோதரியின்  அகால மரணத்தைத் தொடர்ந்து மகிழ்ச்சியைத் தொலைத்திருந்தார். சகோதரியின் பெயரான விஜயா என்பதையும், அவரது நெருங்கிய நண்பனான மகேந்திரன் என்பவரின் பெயரையும் இணைத்து  விஜயேந்திரன்  என்ற புனைப் பெயரை சூடிக் கொண்டார். படிக்கும் காலத்திலேயே துவிச்சக்கர வண்டியில் யாழ்ப்பாணம் சென்று படம் பார்த்து விட்டு வருவார். பேச்சு வன்மை மிக்கவரான இவர் பைலட் பிரேமநாத் போன்ற படங்களில் நடித்திருக்கின்றார். தமிழ்நாட்டிற்குப் புலம் பெயர்ந்ததால் சிலோன்  விஜயேந்திரன் என அழைக்கப்பட்டார். நடேஸ்வராக் கல்லூரி தமிழ் மன்றத்தில் இலக்கிய ஆர்வம் உள்ள சிலர் ஒன்றாக இணைந்து கையெழுத்துப் பிரதி நடத்தினோம்.உயர் வகுப்பில் இருந்த இவரே இதற்குப் பொறுப்பாகவும் இருந்தார். மாவை ஆனந்தனும் இவரும் இணைந்து தமிழ் இலக்கிய வட்டம் ஒன்றை நடத்தினார்கள். ஆண்டு விழாவிற்காகச் சிறுகதை, கவிதை, கட்டுரைப் போட்டிகள் நடத்தினார்கள். என்னிடம் வீடு தேடி வந்து சிறுகதை ஒன்றைப் போட்டிக்காகப் பெற்றுச் சென்றார்கள். முதற்பரிசு அந்தக் கதைக்குக் கிடைத்ததால் அதற்குப் பரிசாகப் பாரதி பாடலும், பாரதிதாசன் பாடலும் அடங்கிய புத்தகங்களைப் பரிசளிப்பு விழாவில்  பரிசாகத் தந்தார்கள். அதுவே நான் இலக்கியத்திற்காகப் பெற்ற முதற் பரிசாகும் என்பதால் இன்றும் நினைவில் வைத்திருக்கின்றேன்.  தீவிபத்து ஒன்றில் அவர் இறந்ததாகக் கேள்விப்பட்டேன். நல்லதொரு கவிஞரை இழந்துவிட்டோம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R