கவிஞர் திருமாவளவன்கவிஞர் திருமாவளவன் அவர்கள் சுகவீனம் காரணமாக மருத்துவ நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எழுத்தாளர் எஸ்.கே.விக்கினேஸ்வரன் அவர்கள் முகநூலில் பதிவொன்றினை இட்டிருந்தார். அப்பதிவினைக்கீழே காணலாம். கவிஞர் திருமாவளவன் பற்றிய செய்தி துயர் தருவது. புகலிடக் கவிஞர்களில் பரவலாக அறியப்பட்டவர் கவிஞர் திருமாவளவன். புகலிட அனுபவங்களை மையமாக வைத்துக் கவிதைகள், சிறுகதைகள் படைத்தவர் திருமாவளவன. கலை, இலக்கிய விமர்சகர் திரு. வெங்கட் சாமிநாதனின் அபிமானத்துக்குரிய கவிஞர். அவர் பூரண நலத்துடன் மீண்டு வந்திட வேண்டுகின்றோம்.


முகநூலில்: கவிஞர் திருமாவளவனுடன் சில நிமிட நேரங்கள்....

- எஸ்.கே.விக்கினேஸ்வரன் -

கவிஞர் திருமாவளவனை வைத்தியசாலையில் சென்று பார்த்தேன். அந்தக் கம்பீரமான கவிஞன் கட்டிலின் படுத்திருந்த நிலை நெஞ்சைப் பிழிந்தது . உறவுகளையும் நண்பர்களையும் அடையாளம் காணக்கூட முடியாத அளவுக்கு அவரைப் பற்றிப்பிடித்த நோய் அவரை வெற்றி கொண்டு வருகிறது. தமிழ் இலக்கிய சூழலில் தவிர்க்க முடியாத முக்கியமான ஒரு கவிஞனின் இந்த நிலை தாங்க முடியாத் துயர் தருவது.

" இனி இழப்பதற்கெதுவும் இல்லையென்றானபின்
கொடும் கூற்றென் செயும்
சொரியும் உறைபனிதான் என்செயும்
இறங்கி நடக்கிறேன்
தெருவில்.
வெண்மணல் சேறென
காலடிக் கீழ் நசிந்து உருகுகிறது
முதற்பனி”

என்று நம்பிக்கையுடன் பாடிய கவிஞனின் வாய் இனி ஓய்ந்துடுமோ என்ற அச்சத்துடன் குடும்பத்தினரிடம் கேட்கிறேன்.
வைத்தியர்கள் கைவிரித்துவிட்டதாகச் சொல்கிறார்கள் அவர்கள் கண்ணீர் மல்க.

 

மணிக்கணக்காக அவருடன் மனம்விட்டுப் பேசிய நாட்களின் நினைவுகள் எழுந்து, ஒரு வார்த்தை கூடப் பேசாமல் சில நிமிட நேரம் அவரருகில் நின்றுவிட்டு வந்த நிலையின் துயரத்தை மனதில் கொழுந்தவிட்டு எரியச் செய்கின்றன. கண்ட காட்சியும் கேட்ட தகவலும் ஒரு வெறுங்கனவாய்ப் போய்விடத்தான் மாட்டாதோ என்று தவியாய்த் தவிக்கிறது நெஞ்சம்


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R