பாடகர் பிரின்ஸ் மறைவு!தன் பாடல்களைத் தானே எழுதி, நடித்து, பாடி, தயாரித்து, கிட்டார் இசைக்கருவியினையும் வாசித்து சாதனை புரிந்த பாடகர் கிராமி விருதுகளை, ஆஸ்கார் விருதினை எனப்பல்வகை விருதுகளையும் பெற்றவர் மட்டுமல்லர் சமுதாயப்பிரக்ஞை மிக்க கலைஞரும் கூட. Rolling Stone சஞ்சிகை இவரை உலகின் சிறந்த கிட்டார் வாத்தியக்கருவியை வாசிப்பதில் 33ஆவது இடத்தில் வைத்துப்புகழாரம் சூட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. எண்பதுகளில் தனது இசைக்குழுவுக்கு 'புரட்சி' (Revolution) என்னும் பெயரினையிட்டுத் தன் இசைப்பயணத்தைத்தொடர்ந்தவர் பிரின்ஸ். அக்காலகட்டத்தில் வெளியான இவரது 'ஆல்பமா'ன 'Purple Rain' , பின் அதே பெயரில் வெளியான 'திரைப்படம்' என்பவை இவரது கலையுலகப்பயணத்தின் சாதனைகள். இத்திரைப்படத்துக்காகவே அவர் ஆஸ்கார் விருதினையும் பெற்றவர். அண்மையில் பால்டிமோர் நகரில் காவற்துறையினரின் பாதுகாப்பிலிருந்த கறுப்பின இளைஞரின் மரணத்துக்குக் குரல் கொடுப்பதற்காகவும், அதனைத்தொடர்ந்து அங்கு வெடித்த ஆர்ப்பாட்டங்களுக்கும் ஆதரவு தெரிவிப்பதற்காகவும் 'பால்டிமோர்' என்னும் பாடலை வெளியிட்டு ஆதரவு தெரிவித்தவர் பிரின்ஸ். சமுதாயப்பிரக்ஞையுள்ள கலைஞன் பிரின்ஸின் மறைவு பெரியதோர் இழப்பே. அவருக்கு எம் அஞ்சலி! அவரைப்பற்றிய விரிவான தகவல்களைக்கீழுள்ள விக்கிபீடியா இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R