என் அன்புக்குரிய பேரன் தமிழ்-காளையனே, வணக்கம்! உன் அழகுத் தேவதைத் தங்கை தேன்மொழியாள் சுகமா? உன் வீட்டில் பெரிசு சிறிசாகப் பதின் மூன்று நபர்கள் வாழ்வதாகவும், எனவே உனக்கு நிம்மதியாய் இருந்து படிக்கவும் நித்திரை கொள்ளவும் முடியாது இருப்பதாகவும், ஆதலால் பெற்றோர், பன்றிகள் போல் கண்-மண் தெரியாமல் பிள்ளைகள் பெறுவதை அரசினர் தடைசெய்ய வேண்டும்! என்றும் கோபித்து எழுதியிருந்தாய். எமது சமுதாய, வறுமை, அரசியல் பிரச்சினைகளுக்கு எல்லாம் மூலமான காரணி சனத்தொகைப் பிரச்சினையே என சரியாகவே உணர்ந்துள்ளாய். எனவே இக்கட்டுரை உனக்கே வரைந்தது. நான் சொல்வதைக் கவனமாகக் கேள்.
பேரா! எம் இவ்வுலகம் சூரியனிலிருந்து 457-கோடி வருடங்களின் முன் வெடித்துப் பிறந்தது என்றும், அதில் 77-கோடி ஆண்டுகளின் பின் சிற்றுயிர்கள் தோன்றி இருக்கலாம் என்றும், 200,000-150,000 ஆண்டுகளின் முன்னரே எம் மூதாதையர் ஆகிய, நிமிர்ந்து நடக்கும் மனிதரின் இனம் ஆபிரிக்காவின் குரங்குகளிலிருந்து இயற்கையால் உருவாக்கப் பட்டு இருக்கலாம் என்றும், தமது அணு-மரபு-வழி விஞ்ஞானப் பரிசோதனைகளால், இன்றைய சிம்பன்சிக் குரங்குக்கும் எம்மின மனிதருக்கும் இடையில் 98.4 வீதம் ஒப்புமை இருப்பதாகத் தாம் கண்டு பிடித்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஆபிரிக்காவில் ஒரு பகுதியினர் வாழ்ந்து வந்து தம்பாட்டில் விருத்தியடைய, மிச்சப் பகுதியினர் ஐரோப்பா, ஆசியா, மத்திய கிழக்கு, அமெரிக்கா முதலிய கண்டங்களுக்குக் கூட்டாக 125000 தொடக்கம் 60000 ஆண்டுகளின் முன் சென்று தாமும் தம் போக்கில் விருத்தி அடைந்தே இன்றைய மனிதஇனம் உருவாகியது என்றும், சமூகவரலாற்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இதுவே மனிதரின் பூர்வீகம். எனவே, நாம்எல்லோரும் இவ்வுலகில் ஒருவருக்கு ஒருவர் இனத்தவரே. ஒன்றாக ஒருமித்து வாழ வேண்டியவர்களே. அவ்வாறு கூட்டாக வாழ்ந்துவந்த மிருகங்களின் வாரிசுகள், நாங்கள். பல காரணங்களால், கூட்டாக வாழ்ந்தால் தான் நாம் அடை-மழைகள், பூகம்பங்கள், சூறாவளிகள், எரிமலைகள், நெருப்புகள், சுனாமி முதலிய இயற்கை அனர்த்தங்கள் முதலியவற்றில் இருந்தும் காட்டுமிருகங்களில் இருந்தும் எம்மைக்காப்பாற்றி வாழ்ந்து தரிப்பது கூடிய சாத்தியமாகியது. எனினும் ஒற்றுமையாக விட்டுக் கொடுத்து வாழ்ந்த உயிரினங்களில் ஓரினமே நாமும்.
அத்துடன் எம் மனிதஇனமே எல்லா உயிரினங்களிலும் கூடிய அபிவிருத்தியும் நாகரிகமும் அடைந்துள்ளோம். இது தற்பெருமையல்ல. தர்க்க ரீதி, விஞ்ஞானரீதி உண்மையும் கூட. நாம் இயற்கையை அண்டி, இயற்கையைக் கற்று-கையாண்டு-மாற்றி, இயற்கை அபிவிருத்தியையே துரிதப்படுத்தி எம்மனிதத் தேவைகளைப் பெற்றுப் பூர்த்தி ஆக்கி எமது கற்பனை, சிந்தனை, பேச்சுவன்மை, மொழிவன்மை, ஒழுங்குத்-திட்டப்- பிரயாசை முதலியவற்றால் இவ்வுலகைப் பெருமளவில் இன்று கட்டுப்படுத்தி ஆட்சிசெய்கிறோம். இதனால் எம் தனித்துவமும் பலமுற்றுள்ளது.
அதாவது, பேரா! எம் கூட்டு வல்லமைகளை மட்டுமல்ல, தனித் தனிச் சொந்த வல்லமைகளையுமே கூடிய அளவில் பெருக்கி, குடும்பங்களாக வாழும் அதே வேளை, நீ விரும்புவதைப் போல், நாளாந்தம் சில மணிகளுக்காவது தனித்து இன்புறும் பலத்தையும் விருப்பையும் பெற்று உள்ளோம். ஆக, உன் பிரச்சினைகள் எம் எல்லாருக்கும் பொதுவானதே. ஆனால் எம் தனிச் சுயநலங்கள், பொதுநலன்களுக்குப் பின்னரே வரவேண்டும்.
இன்றைய உலகில் (மிகக் கூடியதில் இருந்து குறைவான) சனத் தொகை கொண்ட நாடுகளாகிய சீனா (1400மி-361சதொசெ-5400டொ), இந்தியா (1200மி-933சதொசெ-1600டொ), அமெரிக்கா (310மி-83சதொசெ-47800டொ) ஆகிய மூன்றுடன், யப்பான் (128மி-873சதொசெ-46400டொ), பிரித்தானியா (62மி-656சதொசெ-38900டொ), சிறீலங்கா (20மி-805சதொசெ-2800டொ) சேர்ந்த ஆறு நாடுகளையும் இப்போ ஒப்பிட்டுப் பார்ப்போம்.
இவற்றின் இன்றைய சனத் தொகை மில்லியன்கள் முதலாகவும், சதுரமைல்-விகித-சனத்தொகைச் செறிவு இரண்டாவதாகவும், ஓராண்டின் தனிநபர்-டொலர்-விகிதத் தேசிய வருமானம் மூன்றாவதாகவும் மேலே (வளை கோடுகளுள்) கொடுக்கப் பட்டு உள்ளன.
இவற்றை ஆராய்ந்தால், இந்தியாவே உலகின் மிகக் கூடிய, சதுரமைலுக்கு 933 சனத்தொகைச் செறிவுள்ள நாடு ஆகிறது. ஆனால், மிகக் குறைந்த, ஆளுக்கு ஆண்டு 1600 டொலர் தேசிய வருமானமுடைய நாடாகவும் இருக்கிறது. இந்தியாவிலும் பார்க்க 200 மில்லியன் சனத்தொகை கூடிய சீனா, இந்தியாவிலும் மிகக் கூடிய பரப்பளவும் உள்ளபடியால், அமெரிக்காவின் சதுரமைலுக்கு 83 பேர் சனத்தொகைச் செறிவுக்கு அடுத்தபடி மிகக்குறைந்த 361 சனத்தொகைச் செறிவுள்ள நாடாகவும் விளங்குகிறது. மேலும், ஆகக் குறைந்த 83 சனத்தொகைச் செறிவு உள்ள அமெரிக்காவே, ஆகக்கூடிய 47800 தனிநபர்-டொலர்-விகிதத் தேசிய வருமானமும் உள்ளது. 128உம் 62உம் மில்லியன் சனத் தொகையே உள்ள யப்பானும் பிரித்தானியாவும், அமெரிக்காவின் 47800 டொலருக்கு அடுத்தடுத்த, நபருக்கு ஆண்டு 46400 டொலரும் 38900 டொலரும் தேசிய வருமானத்தைப் பெறும் சுபீட்ச நாடுகளாகவும் விளங்குகின்றன.
மேலும் இந்தியாவிலும் அறுபது மடங்கு சிறிய சனத் தொகையையும் (1200:20) கிட்டத் தட்ட ஒரே சனத்தொகைச் செறிவையும் (933:805), பரப்பளவில் ஐம்பது மடங்கு (1269000:25300 சதுரமைல்கள்)) சிறியதுமாகிய எம் சிறீலங்காத்தீவின் தனிநபர்-டொலர்-விகிதத் தேசியவருமானம், ஓர் உக்கிரப்போர்முடிந்த ஏழாண்டு நிலையிலும், 75வீதம் கூடியிருப்பது (2800:1600டொ) எம் பெருமை அல்லவா?
அத்துடன், சீனா, யப்பான், இந்தியா, சிறீ லங்கா நான்கும், ஆசிய நாடுகள். பிரித்தானியா, ஐரோப்பிய நாடு. நாம் அமெரிக்கா என மேலே கூறியது, அமெரிக்கக் கண்டத்தின் வட பகுதியை. நிலநடுக்கம், சுனாமி, முதலிய சில இயற்கை அனர்த்தங்களால் சதா ஆண்டாண்டு ஆதிக்கப்பட்டு வரும், இரண்டாம் மகாயுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட ஆசிய நாடாகிய யப்பான், அமெரிக்காவுக்குச் சரிசமனாக, பிரித்தானிவையும் சில அம்சங்களில் மேவி, தொழில் நுட்பத்திலும் பொருளாதாரத்திலும் இன்று விளங்குவது, ஆசியர்களாகிய எமக்கு மனத்தென்பையும் மகிழ்வையும் ஊக்கத்தையும் தரும் ஒரு விடயம் அல்லவா?
யப்பானியரின் மனோதிடத்தையும் உற்சாகத்தையும் பிரயாசை, அஞ்சா நெஞ்சம், விஞ்ஞானத்-தொழில்நுட்ப மேதைமை, தேசிய ஒற்றுமை முதலியவற்றைப் பின்பற்றி நடந்தால் நாமும் முன்னேறலாம்.
முக்கியமாக, நாம் நினைத்தால், குறை காண்பதற்கு, என்றும், எங்கும் எதிலும் முடியும், என் பேரனே!
ஆனால் உலகின் எந்தப் பக்கத்திலும், எப் பகுதியின் நாட்டிலும் இயற்கை வளங்களும், நற்பேறுகளும், வேறு வேறு பிரச்சினைகளும், இருப்பதும் உண்மையே. அதனால், எமது வளங்களைப் பாவித்து, எம் சொந்த வாழ்க்கையையும் பொருளாதாரத்தையும், நாட்டின் ஒற்றுமையையும் கட்டி எழுப்புவதும், சனநெருக்கடி போன்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதும், உன் போன்ற இளைஞரினதும் யுவதிகளின் கைகளிலுமே தங்கியுள்ளது.
உன் நாட்டிலுள்ள எல்லா மொழி, மத இனத்தினரும், சாதிகள் எனப்படும் சமூகக் குழுவினரும், ஆண்பால்-பெண்பால் ஆகிய இரு பாலாரும் சமமெனச் சிந்தித்து விளிப்புடனும் பிரயாசை, விடாமுயற்சியுடனும் விட்டுக் கொடுத்துச் செயற்படுவாய்! நீ இவ்வாறு நடந்தால் கூடிய கெதியில் வாழ்க்கையில் வெற்றிபெற்று மனதிருப்தியுடன் வாழ்வாய் என்பது திண்ணம்.
என் முழு ஆசிகளுடன்...
உன் ஆசைத் தாத்தா,
கோபன்.
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.

பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!

ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு

https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.

Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7

America : https://www.amazon.ca/dp/B08T6186TJ

An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layoutட் என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.


© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems