கவிதை: மல்லிகையின் ஜீவா வாழ்க !


தொண்ணூறு வயதினைத் தொட்டுநிற்கும் ஜீவாவே
இன்னும்நீ வாழ்வதற்கு இறைவனிடம் வேண்டுகிறேன்
உன்னுடைய ஊக்கத்தால் உரம்பெற்று வளர்ந்தவர்கள்
உனைவாழ்த்தும் வாழ்த்தெல்லாம் உரமாக அமைந்திடட்டும் !

யாழ்நகர வீதிகளில் நீநடந்த காட்சியெலாம்
வாழ்நாளில் சாதனையாய் மல்லிகையாய் மலர்ந்ததுவே
தாழ்வுதனை துணையாக்கி தலைநிமிர்ந்த உன்துணிவை
நாள்முழுக்க நினைந்தபடி நான்வாழ்த்தி மகிழுகின்றேன் ! பரிசுபல பெற்றாலும் பகட்டின்றி வாழ்ந்துநின்றாய்
உரியவரை இனங்கண்டு உன்வழியில் இணைத்துநின்றாய்
வறுமையிலும் செம்மையாய் வாழ்வதற்குக் கற்றுக்கொண்டாய்
பொறுமையுடன் நீயிருந்து பொலிந்துவிட்டாய் படைப்புலகில் !

நல்லதமிழ் ஏடுதந்த நாயகனே நீவாழ்க
நல்லதமிழ் எடுத்தாண்ட வல்லவனே நீவாழ்க
மல்லிகையாய் மணங்கொடுத்த மன்னவனே நீவாழ்க
மல்லிகையின் ஜீவாவே வாழ்ந்திடுக பல்லாண்டு !

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R