1. வாழ்த்துக் கூறுவோம் !

- எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா        -ஹப்பி பேர்த்டே  என்றுபாடும்
கால மதை மாற்றுவோம்
கன்னித் தமிழில் பாட்டுப்பாடி
கலகலப்பை ஊட்டு வோம்
அம்மா பாலில் எமக்குதந்த
அன்னைத் தமிழைப் பாடுவோம்
அன்னியத்தை அணைத்து நிற்கும்
அவலம் அதைப் போக்குவோம் !

கேக்கை வெட்டி விளக்கணைக்கும்
கேளிக்கையை விரட்டு வோம்
நாக்கில் இனிமை சொட்டசொட்ட
நல்ல தமிழைப் பாடுவோம்
வீட்டில் உள்ள பெரியவரை
வீழ்ந்து வணங்கி நின்றுமே
வாழ்த்து வாங்கி ஆசிபெற்று
வளமாய் தமிழில் பாடுவோம் !

அப்பா அம்மா அருகணைத்து
அக மகிழ்ந்து பாடுவோம்
அக்கா அண்ணா தம்பியோடு
அழகு தமிழில் பேசுவோம்
பக்குவமாய் இனிப்பு வழங்கி
பலரும் மகிழப் பாடியே
செப்பமாகப் பிறந்த நாளை
சிறப்பாய் செய்து மகிழுவோம் !

ஆங்கிலத்தில் பாடும் பாட்டை
அகத்தை விட்டு அகற்றுவோம்
அன்னைத் தமிழில் வாழ்த்துப்பாடி
அகம் மகிழச் செய்குவோம்
இனிய பிறந்த நாளையென்றும்
எங்கள் தமிழால் வாழ்த்துவோம்
எங்கள் தமிழின் இனிமையெங்கும்
பொங்க வாழ்த்துக் கூறுவோம் !

வளங்கொழிக்க வானுயர வாழ்கவென்று வாழ்த்துவோம்
உளம்மகிழ உணர்வுகொண்டு உயர்கவென்று வாழ்த்துவோம்
கருணைகொண்டு கடவுளெம்மைக் காக்கவேண்டி வாழ்த்துவோம்
கன்னித்தமிழ் கொண்டுநின்று பிறந்தநாளை வாழ்த்துவோம் !


2. மாற்றுவோம் !

வரம்தரும் மரங்களை நிரந்தரம் அழித்துமே
தரங்கெட நடந்திடும் மனிதரை ஒதுக்குவோம்
கரந்திடும் மனத்துடன் கானகம் அழித்திடும்
விரிந்திடா மனமுடை மனிதரை விரட்டுவோம் !

வீடுகட்டி மனிதர்வாழ உதவிநிற்கும் மரமதை
வீட்டைவிட்டு காடுசென்று விரயமாக்கும் மனிதரே
காசுதேடும் ஆசைகொண்டு கானகத்தை அழிப்பதை
கடவுள்கூட பொறுக்கமாட்டார் கருணையற்ற மனிதரே !

உணர்ச்சியில்லா மரங்களென்று உரத்தகுரல் எழுப்பிடும்
உணர்ச்சியுள்ள உங்களுக்கு உணர்ச்சி மழுங்கிபோச்சுதே
தளர்ச்சி வந்தபோதுநாம் தடுக்கிவிழா நின்றிட
உதவிநிற்க  தடிதரும்  மரத்தைவெட்டல் ஒழுங்கன்றோ !

நாட்டின்வளம் மரங்களென்று நாளும்பேசி வருகிறோம்
நாளும்மரம் வெட்டிவெட்டி நாட்டை வெளியாக்கிறோம்
காட்டுமரம் அத்தனையும் காசாய்நாட்டில் நிற்குது
வெட்டிவிட்ட மனிதரெல்லாம் விருந்தையுண்டு மகிழ்கிறார் !

காட்டில் விறகுபொறுக்குவார் கள்ளரென்று கூறியே
காவல்துறை கைதுசெய்து கசையடிகள் கொடுக்குது
காட்டுமரத்தை வெட்டுவாரை காவல்துறை கண்டுமே
காசைவாங்கி பையில்போட்டு காலம்கழித்து நிற்குதே !

நிழல்கொடுக்கும் மரங்களும் கனிகொடுக்கும் மரங்களும்
நீண்டபயன் மனிதருக்குக் கொடுத்துக்கொண்டே இருக்குது
பயனடைந்து பயனடைந்து பணத்தை எண்ணும்மனிதனோ
பண்புநிலை தனைமறந்து மரத்தை வெட்டியழிக்கிறான் !

வெட்டிநிற்கும் மனிதரின் கொட்டமதை ஒழித்திட
வெட்டிவீழும் மரங்களோ விரும்பி நிற்பதில்லையே
கெட்டகுணம் கொண்டுமே வெட்டிநாளும் நின்றிடும்
மட்டகுண மனிதருக்கு மாண்டும் விறகாகிடும் !

மரத்தைவெட்டி வரட்சியாக்கும் மனநிலையை மாற்றுவோம்
மரத்தைநட்டு வளத்தைச் சேர்க்கும் வழியினைத்தொடக்குவோம்
மரங்கள் எங்கள்வாழ்விலென்றும் வசந்தமென்று எண்ணுவோம்
மரங்கள்வெட்டி அழிக்கின்றாரின் மனத்தை வெல்லமுயலுவோம் !

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R