சுப்ரபாரதிமணியன்சுப்ரபாரதிமணியனின் புதியநாவல்   'கடவுச்சீட்டு' மலேசியப்பின்னணி நாவலை பெ.இராஜேந்திரன் (தலைவர், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் ., கோலாலம்பூர்)  அவர்கள் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கக்கட்டிடத்தில்- கோலாலம்பூர்  ஜலான் ஈப்போவில் - நடைபெற்ற விழாவொன்றில் வெளியிட்டார். எழுத்தாளர்கள் அர்ஜினன், ஈப்போ முல்லைச் செல்வன் போன்றோர் பெற்றுக்கொண்டனர். நாவலை வெளியிட்டு பெ.இராஜேந்திரன், தலைவர், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் ., கோலாலம்பூர்  அவர்கள் பேசினார். அவர் தனதுரையில் "சுப்ரபாரதிமணியன் தன் தொடர்ந்த நாவல் செயல்பாடுகளில் அவரின் 15 வது நாவலாக  'கடவுச்சீட்டு'  மலேசியப்பின்னணி நாவலாக வெளிவந்துள்ளது. அவரின் மலேசியா அனுபவங்களை முன்பே கட்டுரைகள், சிறுகதைகள் மூலம் பல படைப்புகளில் எழுதியிருந்தாலும் ஒரு முழு நாவலாக இதைத் தந்திருக்கிறார்.அதுவும் கோலாலம்பூர்-செந்தூல் பகுதியில் வாழும் ஒரு தமிழ்ப்பெண்ணின் வாழ்க்கையை இந்நாவல் சொல்லுகிறது. ஒரு வெளிநாட்டு தமிழ்ப்பெண்ணின் கனவு சிதைந்து போவதை இந்நாவல் காட்டுகிறது. மலேசிய தமிழ் குடும்பம் ஒன்றின் யதார்த்ததை இதில் வெளிக்காட்டியிருக்கிறார். அகிலனின்   'பால் மரக்காட்டினிலே' அறுபதில் இருந்த மலேசியா தமிழ்ச்சமூகத்தை பிரதிபலித்தது என்றால் சுப்ரபாரதிமணியனின் நாவல் இப்போதையச் சூழலில் எழுதப்பட்டிருக்கும் படைப்பு என்ற சிறப்பு பெறுகிறது ” என்றார். சுப்ரபாரதிமணியன் ஏற்புரை வழங்கினார்.

வீரபாலன் ( முன்னேற்றப் பதிப்பகம் சென்னை) பதிப்பாளர் பேசினார். அவர் தனதுரையில்  "எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்கள் சமூக அக்கறையுடன் எழுதும் எழுத்தாளர் என்பதை அவரின் 15 நாவல்கள் உட்பட 50 நூல்களின் மடைப்பு மையங்களே சொல்லும்.எதிர்கால சமூகம் பற்றிய நல்ல கனவுகளை நோக்கி இன்றைய யதார்த்த உலகை அவரின் படைப்புகள் வெளிப்படுத்தியிருக்கின்றன..மனசாட்சியின் குரலாய் ஒலிக்கும் அவரின் இலக்கியக் குரல் தனித்துவமானது. எழுத்துப்போராளியாகவும் அவர் விளங்கி வருவதை சுற்றுச்சூழல் சார்ந்த அவரின் நூல்கள் அடையாளம் காட்டும். என் 'முன்னேற்றப்பதிப்பகம்'  வெளியிடும் 'கடவுச்சீட்டு'' என்ற இந்நாவல் மலேசியா பின்னணி நாவல் ஆகும். மலேசியா வாழ் தமிழ்மக்களின் வாழ்க்கையைச் சொல்லுவது. அமரர் அகிலன் அவர்களின் 'பால்மரக்காட்டினிலே..' நாவல் மலேசியாவைப் பின்புலமாகக் கொண்ட தமிழ் எழுத்தாளர் எழுதிய நாவல் என்ற வகையில் பெருமை கொண்டது . அது போல் “ கடவுச்சீட்டு “ என்ற இந்நாவல் மலேசியாவைப் பின்புலமாகக் கொண்டது. அம்மக்களின் வாழ்க்கையை கூர்ந்து கவனித்து மொழி, கலாச்சாரம் சார்ந்த விசயங்களின் சாரமாக இதை எழுதி உள்ளார். மலேசியாவைப் பின்புலமாகக் கொண்ட இவரின் இன்னொரு நாவல் ' மாலு'  ( மாலு- ரப்பர் மரத்தில் பால் எடுக்கப் போடப்படும் கோடு )வை உயிர்மை பதிப்பகம் முன்னர் வெளியிட்டுள்ளது. சுப்ரபாரதிமணியனின்  'கோமணம்' என்ற நாவலை சென்றாண்டு வெளியிட்டேன். சிறந்த வரவேற்பு பெற்ற அந்நாவலை அடுத்து இந்நாவலை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன்.சமூகத்தில் எழுத்தாளர்கள் சமூக யதார்த்தை எழுதி சமூக மாற்றங்களுக்கு வித்திட வேண்டும். பயமற்ற எழுத்து பயமற்றப்பதிவு. மலேசியா தமிழர்களின் வாழ்க்கையின் ஒருபகுதியை இந்நாவல் வெளிப்படுத்தியுள்ளது"  என்றார்.

அருள் ஆறுமுகம் ( துணைத் தலைவர், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் ., கோலாலம்பூர் ) எழுத்தாளர்கள் ரேவதி, கண்மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

( ரூ120 முன்னேற்றப் பதிப்பகம் சென்னை வெளியீடு. 94867 32652 )

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R