1. மீண்டும் நான்..

வாழ்வில் ஏதோ தேடி
கிணற்றை எட்டிபார்த்தேன்
தண்ணீர் கூட்டம்
அசைவால் அதிர்ந்தது
சிறுகல்லை வீசினேன்
சிற்றலை சிரித்தது
அமைதியானது..

என் மௌனம்
நிலையில்லாமல் நின்றது
கடலின் மடியில்
அமர்ந்தேன்
அலையின் வேகம்
குறையவில்லை
என்னைபோல்
கரையில் கூட்டம்
எதை தேடுகிறது
சற்று துணிந்தேன்
நீந்தக் கற்றுகொள்ள
கடலில் குதித்தேன்
அலை கரை ஒதுக்கியது

மீண்டும் குதித்தேன்
சற்றுத்தூரம் கடந்தேன்
சிலரால் கரையில்
தள்ளப்பட்டேன்
இம்முறை
படகை வாடகை எடுத்தேன்
என் பயண அனுபவங்கள்
எவ்வளவு பெரிது?
கற்றுக்கொண்டேன்
வெகுதூரம் சென்றேன்..
கடல் நண்பனான்
அவன் என்னிடம்
நண்பா!
ஆதவன் கண்கள்
முழுவதும் என்மேல்
இரவில் நிலவும் நானும்
பேசிக்கொள்வோம்!
என் கருவறைக்குள்
உயிர்களை பாதுகாத்து
கொடுக்கிறேன்
மானுடன்
என் கருவறையை
சிதைக்கிறானே நண்பா!!

சிலநேரம் கடுமையாகப்
பேசுவேன்
ஆழி பேரலைகள்
தாண்டவம்!
வாழிடம் வந்து சென்றேன்
வியப்பில் நீங்கள்..

சரி நண்பா
உன் பிரச்சனைக்கு
என்னிடம் வந்தாய்
ஆழத்தில் இருக்கும்
அமைதிக்கு வா..
முழுபொருளில்
அமைதி இருக்கும்.

உங்களை அலையால்

தொட நினைக்கிறேன்
சற்றுத்தள்ளியே
உங்கள் பார்வை.

அருகில் அமைதியை
தந்துவிட்டு அல்லவா
நண்பா செல்கிறேன்!

அலை ஒதுக்கியது என்னை

மீண்டும் கரையில்
நான்..

2. நிறங்களின் வலிமை

நிறங்கள் கூட வறுமையில்
கரைந்துபோயின!
உறக்க கூவும் சேவல் போல
கூவினாலும் விழித்து கொள்வது
எத்தனை பேர்?

கருப்பில் கலப்பிடம் இருந்தால்
எதிர்ப்பு குறைந்து போகும்

சிவப்பு சிதைந்தால் போராட்டம்
வெற்றி பெறாது
பசுமை படராமல் கொடி அருக்க
காய்ந்த குடும்பம்!

வெண்மை நிறம்
ஆட்கொண்ட ஆளுமை
மக்கள் தந்தது

அரசனும் ஆண்டியும்
பூர்விகம் புதுப்பித்து
எளிமை காட்டும்
நிறங்கள் வலிமை..

ஏமாந்து வேடிக்கை பார்த்து
பின் செல்லும் மக்கள் எளிமை
அதிகாரம் அடக்கும்

நிறத்தின் நிலைமையால்
நிலைகுலைந்த மக்கள் நிறம்
நிலை என்ன?

வெண்மைக்கு ஒரு கேள்வி?

3. குறைகள்

ஒருவர் வாழ்வின்
பயணத்தில்
வேறுயாரும்
பயணிக்கமுடியாது
அவரின் இன்பம் துன்பம்
அவரின் நிலையில்
வேறு ஒருவர்
உணரமுடியாது
ஒவ்வொருவரின்
பயணம்
புதுமையானது
தனித்துவமானது!!

குறைகள் நிறைந்து..
நிறைகள் குறைந்து..
ஒருவர் குறைசொல்ல
கேட்காத செவிகள்
அதிகம் இருக்கும்..
தன்குறை எடுத்து கூறும்
நாக்குகள் அதிகம்
முரண்பாடு வாழ்வில்
முடிவில்லாதது..
தீர்வு கேட்டு
சாமியாரிடம் சென்றால்
அவரின் வழக்குகூட
நீதிமன்றத்தில்
தீர்ப்புக்காக..

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R