Le Corbusierநவீனக்கட்டடக்கலையின் முன்னோடிகளில் பன்முகத்திறமை வாய்ந்த ஆளுமைகளில் முதன்மையானவர் சுவிஸ்-பிரான்ஸ் கட்டடக்கலைஞரான லே கொபூசியே. சுவிஸில் பிறந்து பிரான்சு நாட்டின் குடிமகனானவர் இவரின் இயற்பெயர் சார்ள்ஸ் எடுவார்ட் ஜென்னெரெ  Charles-Édouard Jeanneret. நகர அமைப்பு, கட்டடக்கலை, ஓவியம், தளபாட வடிவமைப்பு , எழுத்து எனப்பன்முகத்திறமை வாய்ந்த ஆளூமை மிக்கவர் இவர். உலகின் பல நாடுகளிலும் ஐரோப்பா, அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளிலெல்லாம் இவரது கை வண்ணம் மிளிர்கிறது. சுதந்திர இந்தியாவில் முதன் முதலாகப் புதிதாக அமைக்கப்பட்ட சண்டிகார் நகர வடிவமைப்பினை அமைத்தவர் இவரே. அத்துடன் அந்நகரிலுள்ள பல முக்கியமான கட்டடங்களையும் வடிவமைத்தவரும் இவரே.

நவீனக் கட்டடக்கலையில் முன்னோடிகளில் முக்கியமான எனக்குப் பிடித்த ஆளுமைகளாக ஃப்ராங் லாயிட் ரை (Frank Lloyd Wright ) , மீஸ் வான்ட ரோ (Mies van der Rohe)  , லி கொபூசியே ஆகியோரையே குறிப்பிடுவேன். இவர்களில் எனக்கு மிகவும் பிடித்தவராக நான் கருதுவது லி கோபுசியேயைத்தான். அதற்குக் காரணம் இவரது பன்முகத் திறமையும், படைப்பாக்கத்திறனும், சீரிய சிந்தனை மிக்க எழுத்துகளும்தாம். இம்மூவரும் முறையாகக் கல்விக்கூடங்களில் கட்டடக்கலைத்துறையில் கற்று கட்டடக்கலைஞராக வந்தவர்களல்லர். தம் சொந்தத் திறமையினால் , அனுபவம் வாய்ந்தவர்கள் மூலம் கிடைக்கப்பெற்ற பயிற்சிகள் மூலம், இத்துறை சார்ந்த பாடங்கள் மூலம் தம் கட்டடக்கலையாற்றலை வளர்த்துச் சாதித்தவர்கள். முறையாகக் கர்நாடக சங்கீதம் கற்காமல் வந்து சிறந்த பாடகர்களாக விளங்கும் பாடகர் பாலசுப்பிரமணியம் போன்று , தம் சொந்தத்திறமை காரணமாகச் சிறந்து விளங்கியவர்கள்.

லி கொபூசியே என்றால் முதலில் நினைவுக்கு வருபவை அவரது புகழ்பெற்ற கூற்றான " ஒரு வீடானது வாழ்வதற்குரிய இயந்திரம்"  ("A house is a machine to live in"), என்னும் கூற்றும், நவீனக் கட்டடக்கலையில் கட்டட வடிவமைப்பு சார்ந்து அவர் கொண்டிருந்த ஐந்து முக்கிய கருதுகோள்களும் ஆகும். ஒரு வீடானது வாழ்வதற்குரிய இயந்திரம் என்னும் அவரது கூற்றின் முக்கிய அர்த்தம் என்னவெனில் ஒரு வீட்டின் சகல உறுப்புகளுமே மனித வாழ்வின் தேவைகளைத் தீர்ப்பதற்கான இயந்திரங்களே என்பதுதான். குளியல் அறை, சமையலறையிருந்து அனைத்து அறைகளுமே இயந்திரங்கள்தாம். இவ்விதமான பல இயந்திரங்களை உள்ளடக்கிய பெரும் இயந்திரமே ஒரு வீடு என்னும் அர்த்தத்தையே இவரது கூற்றான " ஒரு வீடானது வாழ்வதற்குரிய இயந்திரம்" என்னும் கூற்று வெளிப்படுத்துகின்றது.

அடுத்து நவீனக் கட்டடக்கலையில் கட்டடமொன்றின் வடிவமைப்பைப்பொறுத்தவரையில் லி கொபூசியேயின்  ஐந்து பிரதான கருதுகோள்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:

1. தரைத்தளத்திலிருந்து கட்டடமொன்றினை உயர்த்திப்பிடிக்கும் தூண்கள் (Pilotis): உருக்குக் கம்பிகளினால் அல்லது உருக்கு வலையினால் வலிதாக்க்கப்பட்ட காங்கிரீட்டினால் ஆன தூண்கள். (Reinforced Concrete). இவ்விதமாகக் கட்டடமானது அதன் தரைத்தளத்திலிருந்து உயர்த்திப்பிடிக்கும் தூண்களினால் உயர்த்திப்பிடிக்கும் வகையில் கட்டடங்கள் அமையும்போது, அதனால் உருவாகும் வெளியினால் அதிக வெளிச்சம் அப்பகுதிக்குக் கிடைக்கின்றது. வாகனத்தை நிறுத்த அல்லது மேலும் பல தேவைகளுக்கு அவ்வெளியினைப் பயன்படுத்தும் நிலை உருவாகின்றது.

2.  தளத்தரையின் (Ground Plan)  சுதந்திரமான கட்டுப்பாடட்டற்ற திறந்த வெளி வடிவமைப்பு (Open Floor Plan) :  கட்டமொன்றின் நிறையினைத்தாங்குவதற்கு வலிய தூண்கள் இருப்பதால் , முன்பிருந்ததைப்போல் சுவர்கள் மூலம் கட்டடமொன்றின் நிறையினைத்தாங்கும் நிலைக்கு விடுதலை கிடைக்கின்றது. இதனால் கட்டடமொன்றின் உள்வெளியினை (Interior Space)  விரும்பியவாறு , எவ்வித நிர்ப்பந்தங்களுமற்று வடிவமைக்கும் நிலை உருவாகின்றது.

3. சுதந்திர வடிவமைப்புக்கு இடம் தரும் முகப்பு (The free design of the façade ): கட்டடமொன்றினை பாரம் தாங்குவதைத் தூண்களை உள்ளடக்கிய கட்டுமான அமைப்பு செய்வதால், கட்டடமொன்றின் வெளிப்புறத்தை அதாவது வெளிப்புறச்சுவரினை கட்டட நிறையினைத் தாங்குவது போன்ற அதன் கட்டுமானத்தேவைக்கான பொறுப்பிலிருந்து விடுவிக்கின்றது. இதனால் வெளிப்புறத்தையும் விரும்பியவாறு வடிவமைக்கும் சுதந்திரம் கட்டடக்கலைஞர் ஒருவருக்கு ஏற்படுகின்து.

4. நீண்ட கிடை ஜன்னல்கள் (The horizontal window): சுவர்கள் கட்டடமொன்றின் பாரம் தாங்கும் பொறுப்பிலிருந்து தவிர்க்கப்படுவதால் அச்சுவர்களையும், அச்சுவர்களில் அமையக்கூடிய ஜன்னல்களையும் சுதந்திரமாக வடிவமைக்க முடியும். நீண்ட கிடை ஜன்னல்களை அமைப்பதன் மூலம் கட்டடத்துக்கு வடிவு மட்டுமல்ல, உள்ளிருந்து பார்ப்பதற்கு நீண்ட கண்ணாடி ஜன்னல்கள் உதவுகின்றன. அத்துடன் உள்புறம் அதிக அளவில் வெளிச்சமும் கிடைக்கும் வழியேற்படுகின்றது.

5. கூரைத்தோட்டம் (roof garden     ): சாய்வான கூரைகளுக்குப் பதில்  அமைக்கப்படும் காங்கிரீட்டினாலான கிடையான் கூரைகளின் மேல் கூரைட்த்தோட்டங்கள் அமைப்பதால் பல நன்மைகளுள்ளன. ஒன்று கட்டடமொன்றினைக் கட்டுவதால் எடுக்கப்பட்ட நிலத்தின் பகுதியினை ஈடு செய்வதாக முடிகின்றது. அடுத்தது கிடையான காங்கிரீட் கூரைகளுக்கு பாதுகாப்பினையும் வழங்க முடிகின்றது. இவை போன்ற பயன்களுடன் தோட்டங்கள் மானுடருக்கு இன்பத்தினையும் தருகின்றது.


லி கொபூசியேயின்  ஐந்து பிரதான கருதுகோள்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:

லி கொபூசியே வடிமைத்த  பாரிஸிலுள்ள வீடான வில்லா சவோஜ் (Villa Savoge) லி கோபூசியேயின் நவீனக்கட்டடக்கலை பற்றிய ஐந்து கருதுகோள்களையும் உள்ளடக்கிய, சர்வதேசபாணியிலமைந்த நவீனக்கட்டடக்கலையின் மிகச்சிறந்த உதாரணமாகக் குறிப்பிடக்கூடிய கட்டடம்.

லி லொபூசியேயின் இவ்வைந்து நவீனக்கட்டடக்கலை பற்றிய கருதுகோள்களையும் வெளிப்படுத்தும் வகையில் அவரது கட்டடங்கள் அமைந்திருந்தன. நவீனக்கட்டடக்கலையின் சர்வதேசப் பாணியின் (Internattional Style) பிரதான பண்புகளாக தேவையற்ற அலங்காரங்களற்ற கட்டடக்கூறுகள், வளைவுகளற்ற நேர்க்கோடுகளில் அமைந்த தளங்கள், சுவர்களையுள்ளடக்கிய வடிவமைப்பு, ஒளி வழங்கும் நீண்ட கண்ணாடி ஜன்னல்கள், நவீன கட்டடப்பொருட்களாலான கண்ணாடி, வவூட்டப்பெற்ற காங்கிரீட் போன்றவற்றால் உருவாக்கப்பட்ட கட்டடங்கள் என்பவற்றைக் குறிப்பிடலாம். லி கோபூசியேயின் கட்டடங்கள் இவ்வகையான பாணியிலமைந்த கட்டடங்களுக்கு மிகச்சிறந்த உதாரணங்களாகத் திகழ்கின்றன.

- லி கொபூசியே வடிமைத்த  பாரிஸிலுள்ள வீடான வில்லா சவோஜ் (Villa Savoge) -

உசாத்துணைக் குறிப்புகள்:

1 . Le Corbusier's Five Points of Architecture  -  http://www.geocities.com/rr17bb/LeCorbusier5.html
2. Wikipedia: Le Corbusier's Five Points of Architecture  -  https://en.wikipedia.org/wiki/Le_Corbusier%27s_Five_Points_of_Architecture
3. காணொளி:  VIDEO: Villa Savoye, The Five Points of a New Architecture  by Karissa Rosenfield - https://www.archdaily.com/430550/video-le-corbusier-s-five-points-of-architecture
4. book: Towards A  New Archotecture_ https://monoskop.org/images/b/bf/Corbusier_Le_Towards_a_New_Architecture_no_OCR.pdf
5. Wikipedia notes on Modern Architecture


*கட்டுரையாளர் வ.ந.கிரிதரன் இலங்கையிலுள்ள  'மொறட்டுவாப் பல்கலைக்கழகத்தில் (University of Moratuwa) கட்டடக்கலைத்துறையில்  பட்டம் பெற்றவர்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R