எழுத்தாளர் பாலகுமாரன்

- அண்மையில் மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் நினைவுக் கவிதை. -

குங்குமம் பொட்டும் குறுகுறுத்த பார்வையும்
எங்குமே பரந்துநிற்கும் எழிலார்ந்த கற்பனையும்
பொங்கிவரும் தமிழுணர்வும் பொறுப்பான எழுத்துக்களும்
எங்களுக்கு அளித்துவிட்டு எங்குசென்றீர் சித்தரையா   !

எழுதிக் குவித்தகை எப்படித்தான் ஓய்ந்ததுவோ
அளவின்றி  பலவற்றை ஆர்வமுடன் தந்தீர்கள்
வழுவின்றி வைகத்தில் வாழும்வகை எழுத்தாக்கி
வழங்கிவிட்டு ஏனையா மனமேங்க வைத்துவிட்டீர்        !

வெள்ளுடையில் மேடையேறி வெளியாகும் கருத்துக்களை
அள்ளிநாம் பருகிவிட ஆசையுடன் இருக்கின்றோம்
வெண்தாடி வெள்ளுடையில் வேறுயார் இங்குள்ளார்
வித்தகரே சித்தரையா விரைவாகச் சென்றதேனோ     !

பரிசுபல பெற்றாலும் பல்லக்கில் ஏறாமல்
பக்குவத்தைக் கடைப்பிடித்து பலபேரும் மதிக்கநின்றாய்
படைக்கின்ற அத்தனையும் பயனாகும் பாங்கினிலே
படைத்தளித்து விட்டுத்தான் பாரைவிட்டு அகன்றனையோ    !

உன்நாவல் அத்தனையும் உரமாக இருக்குமையா
வெவ்வேறு விதமாக விறுவிறுப்பாய் தந்துநின்றாய்
தமிழ்படிப்பார் யாவருமே தலைமீது வைப்பார்கள்
அறிவான எழுத்தாலே அனைவரையும் ஆண்டுவிட்டாய்   !

முக்காலமாய் உந்தன் எழுத்துக்களை பார்த்திடலாம்
முதற்காலம் முற்போக்கு முகிழ்த்ததையே பார்க்கின்றோம்
இடைக்காலம் வெள்ளித்திரை ஈர்த்துவிட இருந்துவிட்டாய்
இக்காலம் இறைபக்தி எழுத்தாக்கி எழுச்சிபெற்றாய்     !

குடும்பத்தை உயர்த்துதற்கு கொடுத்துநின்றாய் பலகருத்தை
குலவிளக்காம் பெண்கள்தமை குன்றேத்திப் பலபுகன்றாய்
நலமிக்க சமுதாயம் நாட்டில் வரவேண்டுமென்று
நாளெல்லாம் எழுதிவிட்டு நாயகரே சென்றதேனோ        !

படைப்புலம் அழுகிறது பத்திரிகை அழுகிறது
பாலகுமாரன் ஐயா பசுந்தமிழும் அழுகிறது           
பரவசமும் பக்குவமும் பாங்காக படைத்தளித்த
பாலகுமாரன் ஐயா பாரைவிட்டுப் போனதேனோ    !

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R