- ருக்மணி -

செவிக்கும் வாய்க்கும்
பாலமாய்  இருத்திய படி
எக்காளமிட்டுச் சிரித்தனர்
யாரும் பார்க்காமல் அழுதனர்

தூர இருந்து கொஞ்சினர்
அருகில் வைத்து முத்தமிட்டனர்
காதலில்தான் ஆரம்பித்தனர்
காமத்தையே உரைத்தனர்

கொஞ்சமாய் உண்மை விளம்பினர்
நிறையப் பொய்யைப் பரிமாறினர்
அறியாத வண்ணம் ஏமாற்றினர்
அறிந்தும் ஏமாறுவதுபோல் நடித்தனர் 

எண்ணி எண்ணித் தரக் கூறினர்
எண்ணாமலே திட்டித் தீர்த்தனர்
அவ்வப்போது அலறினர்
அடிக்கடி ஆவேசப்பட்டனர்

அறிவுறுத்தினர் வலியுறுத்தினர்
ஆலோசனைகளை அள்ளி வழங்கினர்
வசியம் வைத்தனர் இரகசியம் கசிந்தனர்
விழிபிதுங்கி பழிவாங்கச் சபதமிட்டனர்

வலைவிரித்தனர் விலைகேட்டனர்
வஞ்சம்செய்தனர் இலஞ்சம்வீசினர்
வேவு பார்த்தனர் காவு குறித்தனர்
உலை வைத்தனர் கொலையும் மிரட்டினர்

எல்லோருடனும் எல்லா நேரத்திலும்
மிக நெருக்கமாய் இருந்தாலும்
இதற்குத்தானா படைக்கப்பட்டேன்
என்றே அலறிக் கொண்டிருந்தேன்

அனைவர் கைகளிலும்
ஆறாம் விரலாய் மாறிப்போன
அற்புதக் கண்டுபிடிப்பாம்
அலைபேசி நான் !

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R