From: Siva Ananthan <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
>
To: "
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
" <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
>
Sent: Tuesday, July 24, 2018 2:14 PM
Subject: 83 'ஜூலை' இலங்கை இனக்கலவர நினைவுகள்.....
ஐயா, தங்களுடைய மேற்படி கட்டுரை வாசித்தேன். அனுபவங்கள் சிலவற்றைப் பகிர்ந்தமைக்கு நன்றி. பின்னூட்டங்களுக்கு அங்கே இடமில்லை. காரணம் என்ன?
ஆயினும் ஒரு கருத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.
1983 இல் நடந்தது இனக்கலவரம் என்றே பலரும் குறிப்பிடுகின்றனர். அது தவறென்பது என் கருத்து. கலவரம் அல்லது Riot என்றால் இரு பகுதியினர் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்வது. 83 இல் நடந்தது தமிழரைச் சிங்களக் காடையர் கொலை செய்து கொள்ளையடித்தமை. அது இனக்கலவரம் அல்ல. இனப் படுகொலை அல்லது தமிழரின் படுகொலை. அதை அவ்வாறு கூற நாமே ஏன் தயங்குகின்றோம் என்று புரியவில்லை.
நன்றி.
அன்புடன்,
ஆனந்தன்.
வணக்கம் ஆனந்தன்,கலவரம் என்பது சமூகச்சீர்குலைவு அல்லது சீரழிவு. இதனை ஒரு குழு வன்முறையின் மூலம் அதிகாரிகளுக்கு எதிராக, உடமைகளுக்கு எதிராக மற்றும் மக்களுக்கு எதிராகப் புரியும் சீரழிவுச் செயல் என்றும் கூறலாம். 1983, 1977 மற்றும் 1958 போன்ற ஆண்டுகளில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராகச் சிங்கள இனத்துவேசிகளால் புரியப்பட்ட படுகொலைகள், உடமை அழிப்புகள், பாலியல் வன்முறைகள் எல்லாவற்றையும் எவ்விதம் அழைப்பது?
சிங்களக் காடையர்களின் குழுக்கள் மூலம் தமிழ் மக்கள் மீதும், அவர்கள்தம் உடமைகள் மீதும் புரியப்பட்ட வன்முறை. இதனை இனவன்முறை , இனக்கலவரம் என்று அழைப்பதில் எவ்விதத்தவறுமில்லை. இனக்கலவரம் என்பது பொதுவான சொல். இனக்கலவரத்தின் இன்னுமோர் வடிவமே இனப்படுகொலை (Genocide) . இனக்கலவரம் என்னும்போது சம்பந்தப்பட்ட இனங்கள் ஒருவருடன் ஒருவர் மோதினால் மட்டுமே இனக்கலவரம் என்பதில்லை. ஓரினக் குழு இன்னுமொரு குழுவின் மீது வன்முறையினைப் பாவித்து அழிவு நடவடிக்கைகளைச் செய்தாலும் அதுவும் இனக்கலவரமே.
இலங்கையில் 1983இல் நடைபெற்ற தமிழ் மக்களுக்கெதிரான வன்முறையின்போது, அப்போது ஆட்சியிலிருந்த இனத்துவேசம் மிக்க அமைச்சர்கள் சிலரால் திட்டமிடப்பட்டு அவர்கள்தம் காடையர்கள் குழுக்களால் நாட்டின் தென்பகுதிகளிலிருந்த தமிழ் மக்களுக்கெதிரான வன்முறைகளை, அவை அரசியல்வாதிகள் அல்லது படையினரின் முன்கூட்டியே திட்டமிட்ட நடவடிக்கைகள் என ஆதாரங்களின் அடிப்படையில் நிரூபிக்கலாம். குறிப்பிட்ட இன மக்களின் ஒரு பகுதியினர் மீது திட்டமிடப்பட்டு நடாத்தப்பட்ட அவர்களை அழிப்பதை நோக்கமாகக் கொண்டு நடாத்தப்பட்ட இனரீதியிலான வன்முறை என்பதால் அதனை இனப்படுகொலை வரைவிலக்கணத்தின்படி இனப்படுகொலை (Genocide) எனவும் கூறலாம். Pogrom எனவும் கூறலாம். ஆனால் இவையெல்லாமே இனவன்முறை, இனக்கலவரம்தாம் என்று கூறுவதும் தவறில்லை. இனக்கலவரம் அல்லது இனவன்முறை என்று கூறுவது உலகம் முழுவதும் வழக்கிலுள்ள சொற்றொடர். இவ்விதம் எழுதுவதற்கு சட்டரீதியிலான் ஆதாரங்கள் எவையும் பாவிக்கப்படும் மொழியைப் பொறுத்துத் தேவையில்லை. ஆனால் இனப்படுகொலை என்று கூறுவதற்குச் சர்வதேசச்சட்டரீதியாகப்பல விடயங்களை நிரூபிக்க வேண்டியுள்ளது. எனவேதான் ஊடகங்கள் பொதுவாக இனக்கலவரம் அல்லது இனவன்முறை என்னும் பதங்களைப்பாவிக்கின்றன. 1983 இனவன்முறை அல்லது 1983 இனக்கலவரம் என்று கூறுவதால் அக்கலவரத்தின் உண்மைத்தன்மை எவ்விதத்திலும் நீர்த்துப்போய்விடுவதில்லை.
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.

பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46?single
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...

'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9?single
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.

Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7

America : https://www.amazon.ca/dp/B08T6186TJ

An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layoutட் என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.


© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems