எழுத்தாளர் பிரபஞ்சன்எங்கள் காலத்தில் வாசிப்பு முக்கியமானதொன்றாக இருந்தது. ஒருவரோடு உரையாடும் போது அவரிடம் இலக்கியத்தேடல் இருக்கிறதா இல்லையா என்பதை அவருடைய வாசிப்பு அனுபவத்தில் இருந்துதான் பெறமுடிந்தது. இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் நிறைய வாசித்துக் கொண்டே இருந்தார்கள். இதனால் அவர்களின் கல்வி அறிவை மட்டுமல்ல, அவர்களின் பொது அறிவையும் இனம் காண முடிந்தது. சிறுகதை, நாவல் போன்றவற்றில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக எனக்குப் பிடித்தமான எழுத்தாளர்களின் ஆக்கங்களை வாசிக்கத் தொடங்கினேன். அந்த வரிசையில்தான் பிரபஞ்சனின் ஆக்கங்களையும் வாசிக்கத் தொடங்கினேன். சுருங்கச் சொன்னால், முகம் தெரியாத பிரபஞ்சனின் வாசகர்களில் ஒருவனாக இருந்த எனக்கு, அவர் 2011 ஆம் ஆண்டு கனடாவிற்கு வந்த போது, அவரை நேரிலே சந்தித்து உரையாடச் சில சந்தர்ப்பங்கள் கிடைத்தன.

எழுத்தாளர் பிரபஞ்சனை நான் சந்தித்ததற்கு இன்னும் ஒரு காரணம் இருந்தது. சமீபத்தில் அமரரான சித்தன் அவர்களை ஆசிரியராகக் கொண்ட ‘யுகமாயினி’ குறுநாவல் போட்டியில், ‘அம்மாவின் பிள்ளைகள்’ என்ற எனது குறுநாவல் பரிசு பெற்ற போது, அந்தக் குறுநாவல் போட்டிக்கு பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் தான் நடுவர் குழுவுக்குப் பொறுப்பாக இருந்தாகவும் தெரிவித்திருந்தார். அதனால்தான் கனடாவுக்கு எழுத்தாளர் பிரபஞ்சன் வந்திருந்த சமயம், அவரைச் சந்தித்து உரையாடினேன். அப்போது அந்த ‘அம்மாவின் பிள்ளைகள்’ குறுநாவலின் சிறப்பம்சங்களைக் குறிப்பிட்டு என்னைப் பாராட்டியிருந்தார். போர்க்காலச் சூழலில் எழுந்த அந்த நாவலின் கருப்பொருளையும், சிறப்பு அம்சங்களையும் சொன்ன போது, அவருடைய ஞாபக சக்தியையும், முழுமையாக வாசித்துத்தான் அதைத் தெரிவு செய்திருந்தார் என்பதையும் நினைத்து பெருமைப்பட்டேன். தமிழ் ஆசிரியரும், எழுத்தாளரும், சாகித்ய அக்கடமி விருது பெற்றவருமான பிரபஞ்சன் அவர்கள் 21-12-2018 அன்று காலமானார் என்ற செய்தி இலக்கிய உலகிற்கு அதிர்ச்சி தருவதாகவே இருக்கின்றது. 1945 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புதுச்சேரியில் பிறந்த பிரபஞ்சனின் இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம் என்பதாகும். இவரது வானம் வசப்படும் என்ற புத்தகத்திற்குத்தான் 1995 ஆம் ஆண்டு சாகித்ய அக்கடமி விருது கிடைத்தது. இதைவிட மானுடம் வெல்லும், இன்பக்கேணி, நேசம் மறப்பதில்லை போன்ற புதினங்களையும் எழுதி உள்ள இவரது ஆக்கங்கள் சில வேறு மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இவருக்குச் சாரல் விருதும் கிடைத்திருப்பதாகத் தெரிகின்றது. அவரது ஆத்மா சாந்தியடைய அவரது குடும்பத்தின் சார்பாக வாசகர்களாக நாங்களும் பிரார்த்திப்போம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R