பொங்கற் கவிதை:  வாழ்த்தி நின்று  பொங்கிடுவோம் !

மனங்கவரும் மார்கழியில்
மகத்தான நாட்கள்வரும்
இந்துக்கள் கிறீத்தவர்கள்
எல்லோரும் பங்குகொள்வர்
வைஷ்ணவமும் சைவமும்
வாழ்த்திநிற்கும் திருவெம்பா
மார்கழியின் முக்கியமாய்
மனமாசை அகற்றிநிற்கும் !

ஒளிவிழா எனும்பெயரால்
உத்தமராம் யேசுபிரான்
வழிநிற்போர் அனைவருமே
வாழ்த்துக்கூறி நிற்பார்கள்
பீடுடைய மாதமாய்
மார்கழியும் அமைந்துதுநின்று
பெருமகிழ்சி வருவதற்கு
தைதனக்கு வழிகொடுக்கும் !

தைபிறந்தால் வழிபிறக்கும்
என்கின்ற நம்பிக்கை
தளர்வுநிலை அகன்றுவிட
தானுரமாய் அமைந்திருக்கு
பொங்கலென்னும் மங்கலத்தை
பொறுப்புடனே தருகின்ற
எங்கள்தையை எல்லோரும்
இன்பமுடன் வரவேற்போம் !

புலம்பெயர்ந்த நாட்டினிலும்
பொங்கலுக்குப் பஞ்சமில்லை
நிலம்பெயர்ந்து வந்தாலும்
நீங்கவில்லை பண்பாடு
நலந்திகழ வேண்டுமென்று
யாவருமே நினைத்தபடி
உளம்மகிழப் பொங்கலிட்டு
உவகையுடன் இருந்திடுவோம் !

வாசலிலே தோரணங்கள்
வடிவாகக் கட்டிடுவோம்
வண்ணப் பொடிகொண்டு
கோலங்கள் போட்டிடுவோம்
எண்ணமெலாம் இறைநினைவாய்
எல்லோரும் இருந்திடுவோம்
எங்கள்வாழ்வு விடிவுபெற
இணைந்து நின்றுபொங்கிடுவோம் !


நிலமெங்கும் சமாதானம்
நிலைக்கவென்று   பொங்கிடுவோம்
வளம்கொளிக்க வேண்டுமென்று
வாழ்த்திநின்று பொங்கிடுவோம்
இளம்மனசில் இறையெண்ணம்
எழுகவென்று பொங்கிடுவோம்
எல்லோர்க்கும் நல்வாழ்வு
இருக்கவென்று பொங்கிடுவோம்

குறையெல்லாம் அகன்றுவிட
கூடிநின்று பொங்கிடுவோம்
மறைவாகப் பேசிவிடும்
மனமகலப் பொங்கிடுவோம்
திறமுடனே தமிழரெலாம்
தலைநிமிரப்  பொங்கிடுவோம்
சீர்சிறப்பு வரவேண்டி
சிரித்தபடி   பொங்கிடுவோம்

ஆரோக்கியம் ஆனந்தம்
அனைவருக்கும் வரவெண்ணி
ஆண்டவனை மனமிருத்தி
ஆவலுடன் பொங்கிடுவோம்
வேண்டுகின்ற அத்தனையும்
விரைவாகக் கிடைத்துவிட
நாங்களெல்லாம் ஒன்றுசேர்ந்து
நன்றாகப் பொங்கிடுவோம் !

- எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா -

- எம் . ஜெயராமசர்மா (மெல்பேண், அவுஸ்திரேலியா) -

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R