அண்மையில் "அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் அறிக்கை - முருகபூபதி -" என்னும் எழுத்தாளர் முருகபூபதியின் கட்டுரையினைப் பதிவு செய்திருந்தேன். அதற்கு எதிர்வினையாற்றியிருந்த நண்பர் திலினா கிரிங்கொட (Thilina Kiringoda) , கட்டடக்கலைஞர் & நகர வடிவமைப்பு வல்லுநர்; மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் என்னுடன் ஒன்றாகப்படித்தவர், ஆற்றியிருந்த எதிர்வினை என் கவனத்தைக் கவர்ந்தது. அதனை இங்கு தமிழில் தருகின்றேன்:

"கிரி, நாங்கள் கல்விப்பொதுத்தராதர (சாதாரண மற்றும் உயர்தர) வகுப்புகளைக் கொண்டுள்ள பாடசாலைகளுக்கு, விஞ்ஞான மேன்மைக்கான ஶ்ரீலங்கா அமைப்பின் ஆதரவுடன் நடாத்தப்படும் விஞ்ஞானபாடத்திட்டங்களை நடத்துவதற்காகச் செல்வதுண்டு. மண்டலங்களுக்குரிய (Zonal) விஞ்ஞான இயக்குநர்கள் பகல் நேர விஞ்ஞானத் திட்டங்களை நடாத்துவதற்காக 'விஞ்ஞான மேன்மைக்கான ஶ்ரீலங்கா அமைப்பு'க்கு விண்ணப்பிக்க முடியும். தேர்தெடுக்கப்பட்ட பாடசாலைகள் 300 மாணவர்களை உள்ளடக்குவதற்கான வசதிகளைக் கொண்டிருக்க வேண்டும். அத்துடன் இவர்களில் 200 மாணவர்கள் அப்பாடசாலைகள் அமைந்துள்ள மண்டலங்களிலுள்ள, இவ்வகையான விஞ்ஞானத் திட்டங்களை நடாத்துவதற்குரிய வசதிகளற்ற, ஏனைய பாடசாலைகளைச் சேர்ந்தவர்களாகவிருக்க வேண்டும் என்னும் நிபந்தனையைப்பூர்த்தி செய்ய வேண்டும்.

தமிழ்ப்பாடசாலைகளுக்கு ,அண்மையிலிருக்கும் பல்கலைக்கழகத்திலிருந்து தமிழ் பேசும் விரிவுரையாளர்களைப் பெற்றுக்கொள்வோம். இதன் கடைசி விரிவுரையை நான் "அரச பல்கலைக் கழகங்களுக்கு வெளியில், பட்டப்படிப்பையொத்தக் கல்வித் தகமையினைப்பெறுவதற்கான விஞ்ஞான மாணவர்களுக்கான வாய்ப்புகள்" என்னும் தலைப்பில் ஆற்றியிருந்தேன். 'ஶ்ரீலங்காவின் தொழில்சார்ந்த சங்கங்களின் அமைப்பின்' (Organization of Professional Associations of Sri Lanka -OPA) கடந்தகாலத் தலைவரென்ற முறையில், 'ஶ்ரீலங்காவின் தொழில்சார்ந்த சங்கங்களின் அமைப்பின்' அங்கத்தவர்கள் நடாத்தும் பல்கலைக்கழக மான்யக் குழுவின் (University Grant Commission - UGC) அங்கீகாரம் பெற்ற பாடத்திட்டங்கள் பற்றிய விபரங்களைப் பெறும் அனுகூலம் பெற்றவனாகவிருந்தேன்.

கடந்த வருடம் இத்திட்டத்திற்கு நிதியுதவி முழுமையாகக் கிடைத்தது. இம்முறை இதற்கான் நிதியில்லை என அமைச்சு எமக்கு அறிவித்துள்ளது. ஆக பழைய மாணவர் சங்கங்கள், பாடசாலை அபிவிருத்திச் சமூகங்கள் தாம் இத்திட்டத்துக்கு நிதியுதவி வழங்க வேண்டும்.

- Giri, We go to schools, which have OL and AL Classess to conduct Science Day programmes, organized under the aegis of Sri Lanka Association for the Advancement of Science (SLAAS). Science Directors of Zonal Education Offices can request SLAAS to organize Science Day programmes. The selected school must have facilities for accomodating 300-students and it is a condition that about 200-students should be from other schools in the zone, which do not have facilities for conducting such programmes. For Tamil medium schools we get down Tamil speaking science lecturers from the nearest university. I deliver the last lecture in the day's program on "Opportunities for students in science streams to obtain a degree level qualification outside state universities". Being a Past President of the Organization of Professional Associations of Sri Lanka (OPA)I have the advantage of getting details of UGC accredited courses conducted by several member associations of the OPA. last year it was fully funded by the My/Education but this year we have been informed that the Ministry does not have funds for it. So the OBAs/OGAs?School development Societies have to provide funds. -

Archt. Plnr. LT Kiringoda
BSc (Built Env), MSc (Arch), MSc (Urban GIS)
FIA (SL), RIBA, MITPSL, MIEPSL
437/7, Norris Mawatha,
Akuregoda,
Battaramulla 10120
Sri Lanka

Tel (R): 0094-11-2784089
Tel (M): 0094-77-3713873
E-mail: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R