கவிஞர் முனைவர் ராமசந்திரன்

1. இயேசுவின் முகத்தில்  பயத்தின் சாயல்

மூக்கைத் துளைத்து
நினைவில் வடுவான
ரத்த வாசனை!

எப்பொழுது  தோட்டாக்களின்
உறக்கம் களையுமோவென்று
உறங்காமல் இருந்த
பொழுதுகள் அதிகம்!

மனித ஓலங்களின் ஓசை
அடங்க மறுத்து தூங்கி
சிவந்த கண்களோடு பகல்!

பேருந்துகளில் பயணம் செய்ய
கால்கள் நடுங்காமல்
மனம் கலங்காமல்
பயணித்த நாட்கள்...?

வசந்தத்தின் வருகையில்
சில கால அமைதியில்
பூத்திருந்த பூக்களின் வாசனையில்
மீண்டும் மரணத்தின் நெடி!

வஹாபிஸக் கந்தகத்தில்
யாா் யாா் முகமோ
பலிக்கேட்டுக் காத்திருக்கும்
முகவரி இல்லா வன்மம்!

2. காற்றோடு கடந்த வாழ்வு

கவிஞர் முனைவர் ராமசந்திரன்

வீசியக் காற்றில்
தூக்கி எறியப்பட்டது
குப்பைகளோடு என் வாழ்வும்!

உணவைத் தேடியதில்
இத்துப்போன உடம்பில்
ஒட்டிக்கொண்ட உயிர்!

நிறைவேறா ஆசையின்
எச்சங்களும்
தேவையின் விழைவின்
மிச்சங்களும்
பிடுங்கி எறியப்பட்ட மரமாக
நான்!

சுரண்டப்பட்ட வாழ்க்கையில்
புயலாய் நீ
கலைந்த கோலமாக நான்!

3. திசைமாறிய பறவையின் குரல்

கவிஞர் முனைவர் ராமசந்திரன்

காலை உணவைச் சாப்பிட்டுவிட
முடியும் என்ற நம்பிக்கையில்
ஏந்திய கைகளோடு கருணைக்
கண்களைத் தேடி!

கண்கள் குளமாக முதல் பிச்சையில்
இரவெல்லாம் தூங்காமல்
அறுபது ஆண்டுகளின் மேடுபள்ளங்கள்!

இரத்த உறவுகள் குளிர் அறையில்
கிரிகெட் பாா்த்துக்கொண்டிருக்க
தன்மானத்தின் பெரும் பசியில்
வயிற்றுப்பசி மறந்து ஆண்டுகள் சில!

எறும்புகளோடு பேசி பறவைகளோடு உறவாடி
அன்பாகக் கிடைக்கும் ஒருபிடி சோற்றில்
வாழ்தலின் உச்சம்
நிறைந்து வலியும்!

4. மனிதனாகிய நான்

கவிஞர் முனைவர் ராமசந்திரன்

பேயாய் நடனம் ஆடிய
காமத்தின் எச்சங்களையெல்லாம்
எட்டி உதைத்தது
அவள் போட்ட ஒருகரண்டி
சோறும் உட்கலந்த அன்பும்!

கண்களில் நீர் வழிய
தொண்டைக்குழி அடைத்துக்கொள்ள
வெளிக்காட்ட மறுக்கும்
ஆணவத்தோடும்
காட்டிக் கொடுத்தக் கண்களோடும்
யுகம் யுகமாய் கடந்துவந்த
பாதையின் அடிச்சுவட்டில்
அவளின் புன்னகை!

Ramachandran M <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R