தற்போது கனடாவுக்கு வருகை தந்திருக்கும் எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர் அவருடனான சந்திப்பொன்று இன்று மாலை ஸ்கார்பரோவில் அமைந்துள்ள 5 ஸ்பைஸ் (5 Spice) உணவகத்தில் நிகழ்ந்தது. மேற்படி நிகழ்வில் எழுத்தாளர்கள் தேவகாந்தன், கடல்புத்திரன், நண்பர் எல்லாளன் ஆகியோருடன் நானும் கலந்துகொண்டேன். சுமார் இரண்டு மணித்தியாலம் வரை நிகழ்ந்த சந்திப்பில் பல்வேறு விடயங்களைப்பற்றிய எம் எண்ணங்களைப்பகிர்ந்துகொண்டோம்; நனவிடை தோய்ந்தோம்.

சுதாகரனின் சிறுகதைகள் பற்றி, தேவகாந்தனின் நாவல்கள் பற்றி, ஒவ்வொருவரினதும் பால்ய காலத்து வாசிப்பு அனுபவங்கள பற்றியெல்லாம் எண்ணங்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டன. படத்தில் இடமிருந்து வலமாக: வ.ந.கிரிதரன், தேவகாந்தன், சுதாகர், எல்லாளன் & கடல்புத்திரன். சந்திப்பு ஆரோக்கியமாக அமைந்திருந்தது மகிழ்ச்சியே.

5 ஸ்பைஸ் (5 Spice) உணவகப் பணியாளர்களின் பண்பான சேவையும், சுவையான உணவு வகைகளும் நினைவில் தொடர்ந்தும் நிற்கக் கூடியவை.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R