பறவை

திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டியவற்றுள்
சில இருப்பதாகத் தோன்றுகிறது.
அது
இறந்து போன ஒரு பறவையின் நீண்ட சிறகாக இருக்குமெனில்,
அது தன்னுடைய மரணத்திற்கு முன்பு
பறந்த வானத்தை
மீண்டும் சிருஷ்டிக்க முடியும்.
அத்தகைய சிருஷ்டியில் இருப்பவை
அது அமர்ந்திருந்த மரத்தை
அம்மரத்தில் தனது காதல் நிகழ்ந்த கூட்டை
அதன் எண்ணிக்கையில்லாக் குஞ்சுகளை
அதன் பறத்தலை
மீண்டும் கண்டு இன்புற முடியும்.

அம்மரத்தின் கிளையை
அக்கிளையில் பூத்திருந்த
அழகான மஞ்சள் நிறப் பூவை,
அப்பூவின் மனத்தால் ஈர்க்கப்பட்ட தேனீக்களை
அத்தேனீ ரீங்கரித்த ஓசையை
அவ்வோசயை எதிரொலித்த பெரிய மலையை
அங்கே பரந்தவெளியில் முளைத்திருந்த புற்களை
அப்புற்களின் மீது பெய்த பனித்துளிகளை
அப்பனித்துளிகளை பெய்த மேகக் கூட்டங்களை
அக்கூட்டங்களின் நடுவே ஆயிரமாயிரம் கூட்டமாய் பறந்த பறவைகளை
அவைகள் பறந்து சென்று கொண்டிருந்த திசையை
அத்திசையை நோக்கி மங்கலாக மறைந்து கொண்டிருந்த சூரியனை
அச்சூரியன் மறைந்த அக்கணத்தில்
வேறொரு திசையில் முளைத்துக் கொண்டிருந்த
நிலவை, அதன் பிறை வடித்தை
அது அப்பொழுது தேய்ந்து கொண்டோ அல்லது பிறையிலிருந்து வளர்ந்து கொண்டோ
மீண்டும் தேய்ந்து மீண்டும் வளர்ந்து பின் தேய்ந்து
அது
முழுமையைப் பெறவேண்டி வளர்ந்து கொண்டிருந்த வளர்தலை அல்லது
முற்றாய் தேய்ந்து போதலை
அத்தகைய அழகான சீழ்பிடிக்காத தருணத்தை
இயற்கையாக மீண்டும் விளைவிக்கச் செய்யலாம்.

அதற்கொரு பறவையின் சிறகு வேண்டும்.
அச்சிறகு அதனுடைய மரணத்திற்கு முன்பு உதிரும் தன்மையில்
இருக்குமெனில் யாருக்குத்தான் பரவசம் உண்டாகாது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R