யாழ்ப்பாணப் புத்தகத்திருவிழா!

இன்று வெளியான 'காலைக்கதிர்' பத்திரிகையில் வெளியான செய்தியொன்று என் கவனத்தை ஈர்த்தது. அது எதிர்வரும் ஆகஸ்ட் 27 ஆம் திகதி செப்டம்பர் 1 வரை யாழ் வீரசிங்க மண்டபத்தில், வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் எண்ணத்துக்கமைய நடைபெறவுள்ள 'யாழ் புத்தகத் திருவிழா' பற்றியது. பெரிய அளவில் நடைபெறவுள்ள இப்புத்தகத்திருவிழாவில் பாடப்புத்தகங்களுடன் இந்திய, இலங்கை எழுத்தாளர்களின் படைப்புகளும் காட்சிப்படுத்தப்படவுள்ளன என்று அறிய முடிகின்றது.

ஆளுநர் அவர்கள் புத்தகக் கண்காட்சியுடன் நின்று விடாது இலங்கை எழுத்தாளர்களின் படைப்புகளை (புகலிடத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளையும் உள்ளடக்கியதாக) பதிப்பகங்கள் அல்லது அமைப்புகள் வர்த்தக ஸ்தாபனங்கள் விற்பனை செய்வதற்கும் வசதிகள் செய்துகொடுத்தால் நன்றாகவிருக்கும். மேற்படி புத்தகத்திருவிழா மேற் குறிப்பிட்டவாறு புத்தக விற்பனையையும் உள்ளடக்கியதாகவும் இருக்கக்கூடும்.

அத்துடன் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்களை பதிப்பகங்கள் வெளியிடுகையில் அவற்றை உடனுக்குடன் வடக்கிலுள்ள நூலகங்கள் வாங்கும் வகையிலான திட்டமொன்றினையும் உருவாக்கிச் செயற்படுத்த முன்வரவேண்டும். அவ்விதம் செய்தால் எழுத்தாளர்கள் தம் படைப்புகள் அதிக அளவில் நூலுருப்பெறும் சாத்தியங்களைப் பெறுவார்கள். பதிப்பகத்தினர் போட்டி போட்டுக்கொண்டு இலங்கை எழுத்தாளர்களின் நூல்களை வாங்குவதற்கு முனைந்து நிற்பார்கள். செய்வாரா வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்?

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R