மனக்குறள் 9 & 10

மனக்குறள் -25 கண்ணதாசன் என்னும் காலக்கவிஞன்

கண்ணதாசன் இன்பக் கவியரசன் காலெடுத்துக்
கண்;ணில் மலர்ந்தேன் கவி !

எண்ணிப் பரந்த இதயக் கருவறைக்குள்;
எண்ணம் வகுத்தான் இதயம் !

வேதாந்தம் சைவம் விளங்கும் மறைமொழிபோல்
நாதாந்த மிட்டான் நயம் !

ஏடு வரைந்து எடுத்தபெயர் கண்ணதாசன்
வேகும் அரசியலின் வேர்!

அர்த்தமுள்ள இந்துமதம் ஆன்மக் கருந்துகளைக்
கற்றுவிட வைத்தானே கண்!

 

திரையிசைப் பாடல்கள் தேசக் கவிதை
பெருகியதே நீதிநூல் போல்!

காப்பியங்கள் நாடகம் காணும் புதினங்கள்
நேத்திரம் செய்த நிதி!

சாகித் தியவிருது சந்தித்த எல்லாமும்
ஆகும் வனவாசம் ஆக !

வாழ்வியலைப் பாடும் மனத்தோடும் நாள்தோறும்
தாய்மொழியைக் காத்தான் தரம்!

பேச்சு எழுத்து புயலாய் அரசியலிற்
காய்த்துப் பழமானான்; காண்!

மனக்குறள்-26  வாழ்க அங்கோர் தமிழ்ச்சங்கம் 

அங்கோர் தமிழ்ச்சங்கம் ஆலும் கவிஞ(ர்)வலம்
கம்போ டியாவொடும் காண்!

இந்தநூற் றாண்டின் இருக்கை யிதுவாகத்
தந்தநூற் றாண்டே தகை!

தனக்கோள் என்கத் தரணியிற் பூக்கும்
கனங்குழை யாம்தமிழ் காப்பு!

வையத் திருந்து வருங்கவி யோர்க்குமே
கைகொடுத் தேற்றும் கவி!

சங்கம் வரலாற்றுச் சார்ந்த இலக்கியம்போல்
அங்கோர் இயற்றும் அகில்!

பனையும் வயற்காடும் பாரொடுங் காணும்
சுனையிடும் அங்கோர் சிறப்பு!

அங்கோவார்ட் என்ப(து) தணிநகர்க் கோவிலாம்
கெம்மர் மொழியின் கிளவி!

அங்கோர் தமிழ்ச்சங்கம் ஆன்ற கவிமன்றம்
எங்கும் பொலிந்தார் இயற்றி!

பல்லவ மன்னர் பசுமைக் கெமருமே
சொல்லும் தமிழர் சிறப்பு!

வாழ்க தமிழ்ச்சங்கம் வாழ்க கவிமன்றம்
வாழ்க தமிழொடுந்தான் வையம் !

(கெமர்-கம்போடிய மொழி)

மனக்குறள்-27 கெந்தவை நன்நகர் கீழடியின்கதை

கெந்தவை நன்நகர் கீழடி யின்மதுரை
தந்ததே வாழ்வின் தளம் !

நான்கென்கத் தேடும் நடைமுறையி லாராய்ச்சி
மேம்பாடு கண்டாரே வேர்!

ஐந்தாயி ரத்தும் அகழ்விற் கிடைத்தபொருள்
முந்தை இருப்பின் விதை !

கிறித்துமுன் ஆறென்கக் கூறுநூற் றாண்டுப்
பேறின் புகல்கண்டார் பேசு !

மட்பாண்டம் காதணிகள் மாநகரம் நீரகழி
எண்தாயக் காயும் இருப்;பு !

நாகரிகம் வாழ்வியல் நற்கட்டு மானங்கள்
ஆக மிளிர்ந்தார் அரண்!

சிந்துவெளி வாழ்வும் சிறக்குங் கீழடியின்
தங்குமடி வாழ்வின் தரம் !

எலும்பிற் பலகண்டார் ஏரெழுத் தாணி
எழுதும் முனைகண்டார் இன்னும் !

இந்தியா மட்டுமன்றி ஏழுலக மெல்லாமும்
சிந்துமே கீழடியின் தேசு !

ஐந்துகட்ட ஆய்வும் அகழ்வு தொடர்ந்திடுமோர்
விந்தை எழுதும் வியப்பு !

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R