- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (

1. புதுமை காட்டும் பாங்குடனே புதிய வருடம் பிறக்கட்டும் !

வெடித்துச் சிதறும் பட்டாசு
விடியல் காட்டும் குறியல்ல
இடக்கு முடக்கு வாதங்கள்
எதற்கும் தீர்வு வழியல்ல
நினைப்பில் மெய்மைப் பொறியதனை
எழுப்பி நின்று பார்திடுவோம்
பிறக்கும் வருடம் யாவருக்கும்
சிறப்பை ஈந்து சிரிக்கட்டும்  !

அறத்தைச் சூது கவ்வுமெனும்
நினைப்பை பொசுக்கி எரித்திடுவோம்
உளத்தில் உறுதி எனுமுரத்தை
இருத்தி வைக்க எண்ணிடுவோம்
வறட்டு வாதம் வதங்கட்டும்
வெறுக்கும் எண்ணம் மடியட்டும்
சிரிப்பு மலராய் மலரட்டும்
பிறக்கும் வருடம் இனிக்கட்டும்  !

வறுமை முகங்கள் மலரட்டும்
சிறுமை தொலைந்து போகட்டும்
சிறகு விரிக்கும் பருந்தெல்லாம்
திசைகள் அறியா சிதறட்டும்
உரிமைக் குரல்கள் ஒலிக்கட்டும்
தரிசு மனங்கள் தளிர்க்கட்டும்
புதுமை காட்டும் பாங்குடனே
புதிய வருடம் பிறக்கட்டும் !

2. இரண்டாயிரத்து இருபதை இன்முகமாய் வரவேற்போம் !

இரண்டாயிரத்து பத்தொன்பது எமைவிட்டு செல்கிறது
இரண்டாயிரத்து இருபது எம்மிடத்து வருகிறது
பட்டவெங்கள் துயரனைத்தும் பறந்தோடிப் போகவென்று
இஷ்டமாய் இறைவனிடம் எல்லோரும் வேண்டிடுவோம்

இனமோதல் மதமோதல் இல்லாமல் போகவென்று
எல்லோரும் மனமார இறைவனிடம் இறைஞ்சிடுவோம்
பணமுள்ளார் மனமெல்லாம் பசித்தவரை பார்ப்பதற்கு
படைத்தவனே உதவிடென பக்குவமாய் வேண்டிடுவோம்

சதைவெறியால் அலைகின்ற சண்டாளர் திருந்துதற்கு
உதவுகின்ற வழிவகையை உயர்சட்ட மாக்கிடுவோம்
தெருவழியே மதுவரக்கன் திரிகின்ற நிலையதனை
உருதெரியா தாக்குதற்கு ஒன்றிணைவோம் வாருங்கள்

அரக்ககுண முள்ளார்கள் அரசுகட்டில் ஏறாமல்
ஆக்குகின்ற விழிப்புணர்வை அனைவருமே பெற்றிடுவோம்
அறவாட்சி செய்திடுவார் எனவெண்ணும் ஆளுமையை
ஆராய்ந்து ஆராய்ந்து அரசுகட்டில் அமர்த்திடுவோம்

பொய்முகத்தைக் காட்டிடுதல் போலிவேசம் போட்டிடுதல்
நல்லதல்ல என்பதனை நாமுணர்தல் நலம்பயக்கும்
வல்லவராய் இருந்தாலும் நல்லவராய் இருந்திடலே
வாழ்வாங்கு வாழ்வதற்கு வழியாகும் எனமுணர்வோம்

பெற்றவரைப் பேணிடுவோம் பெரியவரை மதித்திடுவோம்
கற்றபடி நடந்திடுவோம் கசடதனை களைந்தெறிவோம்
சென்ற வருடத்தை சிந்தையின்று அகற்றிவிட்டு
இந்த வருடத்தை இன்முகமாய் வரவோற்போம்

சமயமெனும் சன்மார்க்க நெறியதனை பாழ்படுத்தும்
சதிகாரக் கும்பலினை தானொதுக்கி வைத்திடுவோம்
மனமதனில் நல்லெண்ணம் தோன்றுதற்கு வழிகாட்டும்
தலைசிறந்த பெரியோரை தானணுகி இருந்திடுவோம்

மணம்பரப்பும் மலராக மலரட்டும் புதுவருடம்
மாசெல்லாம் மனமகன்று மருளகன்று ஓடட்டும்
துணிவு மனமேறட்டும் தொண்டுமனம் நிறையட்டும்
மனமகிழ்வு கொண்டுநாம் வரவேற்போம் வாருங்கள்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R