'யாரும் ஊரே! யாவரும் கேளிர்' என்று பாடி வைத்தான் பண்டையத் தமிழ்க்கவிஞன் ஒருவன். உலக மக்கள் அனைவருமே எனது சுற்றத்தவர்கள் என்பது அதன்பொருள். அன்றுள்ளதை விட இன்று உலகம் மிகவும் சுருங்கி விட்டது. பல்லின, பன்மொழி, மத மக்களுக்கிடையிலான புரிந்துணர்வும், தொடர்புகளும் அதிகமானதொரு சூழல் நிலவும் காலகட்டத்தில் நாம் வாழுகின்றோம். இவ்விதமானதொரு சூழலில் சீனதேசத்து மக்கள் 'கொரோனா' வைரஸின் தாக்கத்தால் அதிகளவு பாதிக்கப்பட்டு வாழ்கின்றார்கள். இந்நிலையில் அவர்களுக்கு வேண்டியவை மானுடர்கள் அனைவரினதும் உதவியும், நோயினைக்கட்டுத்துவதற்கான செயற்பாடுகளில் ஒத்துழைப்புமே. & தார்மீக ஆதரவுமே.

பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக'ச் சில நாடுகளில் (இலங்கையுட்பட) சீனர்கள் (கொரோனா வைரஸ் சீனாவில் சீனர்களை ஆயிரக்கணக்கில் பாதிக்கப்படுவதால்) பல்வேறு வகைகளில் பாரபட்சமாக நடத்தப்படுகின்றார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கையில் கூட உணவகமொன்று சீனர்களை அனுமதிக்க மறுத்துள்ளதாக இணையத்தில் செய்தியொன்றினை வாசித்தேன்.

ஒரு சில நாடுகள் அரசியல், பொருளாதாரரீதியில் வலிமை பெற்று வரும் சீனாவில் ஏற்பட்டுள்ள இந்நிலைமை தம் நாட்டுபொருளாதாரத்துக்கு உறுதுணையாக இருக்குமென்று நம்புகின்றார்கள். அரசியல் மற்றும் ஆயுதரீதியிலான சீனாவின் ஆதிக்கத்தை உடைக்கக் கொரோனா உதவும் என்று சிலர் கருத்துகளை உதிர்த்துள்ளார்கள்.

இந்நிலையில் சிறு கோளொன்றில் வாழ்ந்து வரும் மானுடர்களாகிய நாம்  அனைவருமே ஒருவருக்கொருவர் உதவிகள் செய்பவர்காளக இருக்க வேண்டும்; ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துபவர்களாக இருக்க வேண்டும். சந்தப்ப சூழலைப் பாவித்துச் சீன மக்களை உளரீதியாகப் பாதிப்படையச் செய்யும் செயல்களைச் செய்பவர்கள் எவராயினும் அவர்களின் செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

கொரோனா வைரஸுனால் பாதிக்கப்பட்டுள்ள அனைவரும் ,  குறிப்பாக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள சீன மக்கள் அனைவரும் விரைவில் பூரண சுகத்துடன் திரும்புவார்கள் என்றும் நம்புவோம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R