மெல்பனில்  அமரர் சிசு. நாகேந்திரன்  நினைவரங்கு

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் காப்பாளரும் எழுத்தாளரும் சமூகப்பணியாளருமான ( அமரர் ) கலைவளன் சிசு. நாகேந்திரன் அய்யாவின் நினைவரங்கு நிகழ்ச்சியும், அவர் எழுதிய மூன்று நூல்களின் வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியும் எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி  15-03-2020) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு மெல்பனில் Vermont South Learning Centre ( Karobran Drive, Vermont South 3133)  மண்டபத்தில் நடைபெறும்.

சங்கத்தின் துணைத்தலைவர் திரு. மணியன் சங்கரன் தலைமையில் நடைபெறவிருக்கும் இந்நிகழ்வில், விக்ரோரியா தமிழ்ச்சங்கம், தமிழர் புனர் வாழ்வுக்கழகம்,  அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் , கேசி தமிழ் மன்றம் மற்றும் தமிழ் மூத்த பிரசைகள் அமைப்பு ,  இலங்கை மாணவர் கல்வி நிதியம் முதலான சமூக அமைப்புகளின்  பிரதிநிதிகளும் உரையாற்றுவர்.

வாசிப்பு அனுபவப்பகிர்வு அரங்கு
சிசு. நாகேந்திரன் அய்யா எழுதிய அந்தக்காலத்து யாழ்ப்பாணம் என்னும் நூலை திருமதி புஸ்பா சிவபாலனும், பிறந்த மண்ணும் புகலிடமும் நூலை திருமதி கலாதேவி பாலசண்முகனும், பழகும் தமிழ்ச் சொற்களின் மொழிமாற்று அகராதி ( தமிழ் – ஆங்கிலம் ) நூலை திரு. அசோக்கும் சபையோருக்கு மீளவும் அறிமுகப்படுத்தி, இந்நூல்களின் சமூகப்பயன்பாடுகள் குறித்து தங்கள் வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்துகொள்வார்கள்.

நிகழ்ச்சியின் இறுதியில் சங்கத்தின் செயலாளர் கலாநிதி மு. ஶ்ரீகௌரி சங்கர் நன்றியுரை நிகழ்த்துவார்.  அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

மேலதிக விபரங்களுக்கு: முருகபூபதி
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் – அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்   -  தொலைபேசி: 0416 625 766

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R