- தம்பா (நோர்வே) -இடி,மின்னல், நெருப்பு
தமக்குள் எதிரியை தேடும்
மைதானத்தில் ஊடுபயிராக
மனிதம் துளிர் விடுகிறது.

உயிர் வலித்து
குருதி பருகும் உடல்
ஆத்மா எனும் அந்நியனுக்கு
அரிதாரம் பூசுகிறது.

ஒளி மறந்த தீயின் குளிர்
வேள்வியின் திசையெங்கும்
ஏடுதுவங்கும் உதிர்வின் பேச்சு.

பறக்கின்ற காற்றில்
உனது மூச்சுக்காற்று எது?
ஓடுகின்ற ஆற்றில்
நீ விட்ட கண்ணீர் எது?
பொய்களுக்கு
பொன்னாடை போர்த்தி பொலிவேற்ற
மெய்களுக்கு
பாடைகட்டி பலியிடும் திருவிழாவை
ஆத்மீகமென ஆசுவாசப்படுத்திக்கொள்.

சுயமானம் எனும் ஆடையை
பூசையறையில் அடைவுவைத்து
பயம் எனும் கண்ணாடியிலையை
காலமெல்லாம் அணிந்துவர
சபிக்கப்பட்ட இனமானத்தவர் நாம்.

அறத்தை ஆணவக்கொலை செய்து
ஆணவத்தின் நிழலை
வழிபட வலியுறுத்தும் வல்லாதிக்கம் எங்கும்.

காடழித்து கழனியமைத்து
நாகரிக விதை விதைத்த
மண்ணின் மைந்தர்களுக்கு மட்டும்
`அகதி´ என பொட்டுக்கட்டி
காடுகளுக்கும், வனாந்தரங்களுக்கும்
நேர்ந்து விடப்படுகின்ற அமானுஷ்ய சக்தி
வந்தேறு குடிகளுக்கு வந்துவிடுகிறது.

கண்கள் பிடுங்கப்பட்டும்
வாய்கள் சிதைக்கப்பட்டும்
முன்னோரின் சாட்சியமாக
ஊர் எல்லைகளில் காவல் தெய்வங்கள்
காத்துக்கிடக்கின்றன,
காத்து நிற்கின்றன.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R