சித்திரைப் புத்தாண்டு பற்றி எண்ணியதும்
சிந்தையில் பற்பல நினைவுகள் எழுந்தன.
பால்ய பருவம் இனிய பருவம்.
கவலைகள் அற்ற சிட்டெனப் பறந்த
களிப்பில் நிறைந்த இனிய பருவம்.
அப்பா, அம்மா , தம்பி , தங்கை
அனைவரும் கூடி மகிழ்ந்த பருவம்.
பண்டிகை யாவும் கொண்டாடி மகிழ்ந்த
நெஞ்சில் அழியாக் கோலமென இன்றும்
இனிக்கும் பருவம் பால்ய பருவம்.
புத்தாடை அணிந்து நண்பருடன் கூடி
மான்மார்க், முயல்மார்க் வெடிகள் கொளுத்தி
கொண்டாடி மகிழ்ந்த பருவம் அஃதே.

இவ்விதம் ஒவ்வொரு பண்டிகை நாளும்
இனிய நினைவால் நிறைவது போலவே
இன்றும் நெஞ்சில் இனிமை மலர்ந்ததே.
இன்பம் நிறைந்த மனத்தால் அனைவரும்
பெறுக நீவிர் நான் பெற்ற இன்பம்
வாழ்த்து கின்றேன் வாழ்க! வாழ்க!
சித்திரை இத்தரை எங்கும் இன்பம்
தரட்டும். இல்ல மெங்கும் மகிழ்சி
நிலவிட , இத்தரை எங்கும் களிப்பு
நிறைந்திட பெருகிட வாழ்த்து கின்றேனே.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R