கவிதை: 'கொரோனா' நடிகன்!
எழுத்தோடுகிறது.
வாருங்கோ... வாருங்கோ.....
வாங்கிட்டுப் போங்கோ..
மலிவு... மலிவு....
நுவரெலியா.. உருளைக் கிழங்கு....
தம்புள்ள.. கிழங்கும் இருக்கு..

சந்தை  வரிசையில்
ஆளுக்கு ஒவ்வொரு விலை
வணிகத்தில் வன்முறை நிகழ்வது
படமாக்கப்படுகிறது.
பெரு மூச்சுக்கு அவிழ்ந்து நகர்கிறது
காட்சி.

காட்சி ஒன்றுக்குள்
வில்லன் இல்லாமல் ஒளிப்பதிவு நிகழ்கிறது.
வில்லனுக்கு 'மேக்கப்' போட்டு முடியவில்லை.

அடுத்த கட்டம்
நான் கதாநாயகனாக நடிக்கப் போகிறேன்.
நசித்துப் பார்க்காத தக்காளிப் பழங்களையும்
கிலுக்கிப் பார்க்காத தேங்காய்களையும்
தொட்டும்
விரித்தும்
புரட்டியும் பார்க்காத
வியாபாரி யாரிருப்பார்.?
சமூகத்தின் இடைவெளியில்
காய்கறி விற்கும்
ஒற்றை மனிதனாய்
தூரத்தே காண்கிறேன்
ஒருவரை.

இன்னும் ஓரிரு நாட்களுக்குள்
ஊரடங்கு தளர்த்தும் போது
நானும் ஒரு வில்லனுமாக
ஆரோக்கிய சந்தையில் சண்டைக் கட்டம்
படமாக்கப்படும்.
படத்தின் பெயர்
வணிக வன்முறை.
படப்பிடிப்பு கொரோனா.

எதைச் சொல்ல வருகிறேன்
என்பது புரிந்திருக்கும் அல்லவா
ரசிகர்களே.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R