ஶ்ரீராம் விக்னேஷ்

கர்ப்பமெனத் தங்கியதைக் : கரையேற்றும் வரையினிலே
காக்கும்தாய் நெஞ்சினிலே தீ - அது
பெற்றவளைப் போலவொரு : பெண்ணாய்ப் பிறந்துவிட்டால்
பிறகு என்ன வாழ்வுமுற்றும் தீ !

கண்சிமிட்டிப் பார்த்துஅது : கலகலப்பாய்ச் சிரித்துவிட்டால்
கண்திருஷ்டி என்றுஒரு தீ - அதை
கண்சுற்றிக் கழிப்பதற்குக் : கண்டுகொண்ட முறையினிலே
கண்முன்னே எரித்திடுவார் தீ !

கல்விகற்க அனுப்பிவிட்டுக் : காலைமுதல் மாலைவரை
கக்கத்திலே தாய்கொள்வாள் தீ - மகள்
கற்கையிலே ஆங்கொருவன் : காதல்வசப் பட்டுவிட்டால்
கண்களிலே கொண்டிடுவாள் தீ !

காதலித்து மணப்பவனும் : கல்யாணப் பந்தரிலே
காசுபணம் கேட்பதுவும் தீ - அதை
கண்டு துடிதுடித்து : கண்ணீர் வடித்திடுவாள்
கன்னியவள் மூச்சினிலே தீ !

கட்டியவன் வாழ்க்கையிலே : காலப் போக்கினிலே
கசப்புடனே பேசுமொழி தீ - அவன்
எட்டிஉதைக்கையிலே : எதிர்ப்பேச்சுப் பேசாமல்
ஏற்றிடுவாள் தன்னுடலில் தீ !

வட்டமிட்டுச் சுழன்றுவரும் : வாழ்க்கைச் சக்கரத்தில்
கட்டவிழ்ந்து பரவிவிடும் தீ - இது
சட்டிவைத்த அடுப்பினிலும் : விட்ட எண்ணெய் விளக்கினிலும்
விசுவாசம் காட்டிவிடும் தீ !

அரும்பான்மை இனத்தோரை : அழித்தே ஒதுக்கிவிடப்
பெரும்பான்மை வைத்துவிடும் தீ - மனம்
திரும்பாமல் எதிர்த்துவிட : பெரும்பாடாய் எழுந்துவிடும்
அரும்பான்மை இனத்துநெஞ்சம் தீ !

இரக்கமின்றி ஜானகியை : இழுத்தே சென்றதனால்
அரக்கரது மண்தனிலே தீ - அது
பெருக்கமுடன் வாழுதுபார் : பேரழிவைக் காட்டுதுபார்
கிறுக்கரது ஆட்சியினால் தீ !

இலங்கையிலே சிங்களமும் : இந்தியாவில் இந்தியுமே
துலங்கிவிடும் தமிழினுக்குத் தீ - உளம்
கலங்கிவிடும் நிலைதன்னைக் : கனவினிலும் காணாமல்
கண்சிமிட்டும் “தமிழ்”அவர்க்குத் தீ !

புறம்காணாப் போரிலே : மறம்காணும் வீரர்தம்
கரம்காணும் வாளிலே தீ - அவர்
நிறம்காண நேரிலே : புறம்காணப் பாடினார்
புலவர்காண் எழுத்தினிலே தீ !

வாழ்வுபுகும் மணவார்முன் : வைத்திடுவார் வேதியர்கள்
நாள்பார்த்து ஓமமென்னும் தீ - இதில்
ஆளொருவர் வஞ்சித்தால் : அவரைச் சுட்டெரித்து
பாழ்படுத்தி விட்டுவிடும் தீ !

லாட்டரிகள் பலஎடுத்தும் : லட்சத்தைக் காணார்க்கு
லம்பாகக் கிடைக்கவைக்கும் தீ - ஒரு
ஓட்டெடுப்பு வேளையிலே : ஒருவன் தீக்குளித்தால்
ஒருலட்சம் கொடுக்கவைக்கும் தீ !

வாழ்வுமுற்றிக் காடுறையும் : வாய்ப்பு வருகையிலே
வாட்டிமெய்யை வேகவைக்கும் தீ - அந்த
வாழ்வுமுற்றும் தம்மோடு : வரும்இன்ப துன்பத்தில்
வணங்கிடுவார் முன்னவர்கள் தீ !

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R