- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (

உயிரினங்கள் வரிசையிலே உயர்ந்தவிடம் மனிதருக்கே
அறிவென்னும் பொக்கிஷத்தை அவரேதான் பெற்றுள்ளார்
புவியிருக்கும் உயிரினங்கள் உணவெண்ணி உயிர்வாழ
அறிவுநிறை மனிதர்மட்டும் ஆக்குகின்றார் அகிலமதில்  !

காட்டையே வாழ்வாக்கி வாழ்ந்தவந்த மனிதவினம்
காட்டைவிட்டு வெளிவந்து கலாசாரம் கண்டனரே
மொழியென்றார். இனமென்றார் சாதியென்றார் மதமென்றார்
அழிவுள்ள பலவற்றை ஆக்கிடவும் விரும்பிநின்றார்  !

விஞ்ஞானம் எனுமறிவால் வியக்கபல செய்துநின்றார்
அஞ்ஞானம் அகல்வதற்கு விஞ்ஞானம் உதவுமென்றார்
விண்கொண்டார் மண்கொண்டார் வெற்றிமாலை சூடிநின்றார்
வியாதியையும் கூடவே விருத்தியாய் ஆக்கிவிட்டார்  !

ஆராய்சி எனும்பெயரால் அபாயத்தை அரவணைத்தார்
அணுகுண்டை கண்டறிந்து அழிவுசெய்ய ஆவலுற்றார்
ஆக்குகின்ற அவரறிவு அகிலத்தைக் காக்காது
பார்க்குமிடம் எல்லாமே படுகுழியைத் தோண்டியதே  !

நோய்களுக்கு மருந்துகண்டார் போயகலச் செய்துநின்றார்
நல்விருந்தாய் மருத்துவத்தை நாடறியக் கொடுத்துநின்றார்
பேராசை கொண்டிருந்த பேரரசால் ஆராய்ச்சி
பேரழிவைத் தருவதற்கு பெருவழியை வகுத்ததுவே  !

செல்வத்தை திரட்டுவதில் போட்டிபோட்ட அரசெல்லாம்
சிறப்புடைய அறிவியலை சுயநலமாய் ஆக்கியதே
வெல்லவே முடியாமல் விஞ்ஞானம் வளர்ந்தாலும்
வீழ்த்திவிட  சுயநலங்கள் விஸ்வரூபம் கொண்டனவே  !

நுண்கிருமே ஆராய்ச்சி பலவகையில் உதவிடினும்
தம்விரும்பம் நிறைவேற பேரரசார் ஆசைகொண்டார்
நுண்கிருமே நோயாகி பல்லுருவம் எடுத்ததனால்
தம்தலையில் மண்வாரி இறைத்தநிலை ஆகியதே  !

எதையுமே நினையாது வாழ்ந்துவந்த மக்களெலாம்
ஏக்கமுற்று கண்ணீரில் இருக்கும் நிலையாகிதே
விந்தைதந்த விஞ்ஞானம் வினையாக வடிவெடுத்து
கொரனோவை உருவாக்கி பலியெடுத்து நிற்கிறதே  !

அறிவுடைய மனிதவினம் ஆசைகொண்ட காரணத்தால்
பெருவழிவை காணுகின்ற பேரவலம் நிகழ்கிறது
ஆணவத்தால் விஞ்ஞானம் ஆட்கொள்ளப் பட்டமையால்
அநியாயமாய் உயிர்கள் அழிந்தபடி இருக்கிறது  !

இன்னுமே விஞ்ஞானம் காப்பாற்றும் எனவெண்ணி
தம்நலத்தை இழந்துபலர் தளர்வின்றி உழைக்கின்றார்
சுயநலத்தை துறந்திட்டால் துன்மபதைத் துடைத்திடலாம்
கொரனோவை அழிப்பதிலே கோபதாபம் தவிர்த்திடுவோம்  !

பெரியவரா சிறியவரா என்பதல்ல போராட்டம்
பேரழிவைத் தந்துநிற்கும் பெருநோயே போராட்டம்
அதையழிக்க விஞ்ஞானம் உதவும்நிலை வருவதற்கு
ஆணவத்தை விட்டுவிடல் ஆபத்தை அகற்றிவிடும்    !

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R