இயக்குநர் பாலு மகேந்திராதமிழ்த்திரையுலகில் சத்யஜித் ரே போன்று யாராவது இருக்கின்றார்களா என்று எண்ணிப்பார்த்தால் முழுமையாக அவரைப்போன்றில்லாவிட்டாலும், ஒரளுக்காவது அவரைப்போன்ற ஒருவர் இருக்கின்றார். யார் அவர் என்று நீங்கள் கேட்கலாம். அவரும் சத்யஜித் ரே போல் பன்முகத்திறமை வாய்ந்தவர்தான். சத்யஜித் ரே இயக்கம், திரைக்கதை, கதை, இசை என்று பன்முகத்திறமை வாய்ந்தவர். அவர் சில படங்களுக்கு இயக்கத்துடன் இசையினையும் வழங்கியிருக்கின்றார். இவரும் பன்முகத்திறமை வாய்ந்தவர்தான். இயக்கம், ஓளிப்பதிவு, 'எடிட்டிங்', திரைக்கதை, கதை என்று பன்முகத்திறமை வாய்ந்தவர்தான்.

இருவருக்கும் இன்னும் சில ஒற்றுமைகளுள்ளன. இருவருமே எழுத்தாளர்கள். அது தவிர இருவருமே 'பைசிக்கிள் தீவ்' திரைப்படத்தைப்பார்த்து விட்டு , அதன் தூண்டுதலால் தரமான சினிமாவை எடுக்க வேண்டுமென்று ஆர்வம் கொண்டவர்கள். இப்பொழுது உங்களுக்கு அவர் யாரென்பது புரிந்திருக்கும். அவர்தான் பாலு மகேந்திரா. ஏன் பாலு மகேந்திராவை நூற்றுக்கு நூறு வீதம் சத்யஜித் ரேயுடன் ஒப்பிட முடியாது என்று கேட்கலாம். அதற்குக் காரணம்: ரே ஒருபோதுமே வர்த்தக சினிமாவுக்காக விட்டுக்கொடுத்தவரல்லர். ஆனால் பாலு மகேந்திரா விட்டுக்கொடுத்தவர். அதனால் அவரது திரைப்படங்கள் பல ரேயின் படங்களைப்போன்று உன்னத நிலையினை அடையவில்லை. அவரே இதனை உணர்ந்திருக்கின்றார். அதனால்தான் அவர் தான் எடுத்த படங்களிலேயே தனக்குப் பிடித்த படங்கள் வீடு மற்றும் சந்தியாராகம் மட்டுமே என்று கூறியிருக்கின்றார். இவையிரண்டிலுமே குறைந்தளவு விட்டுக்கொடுப்புகள் செய்ததாகவும் நினைவு கூர்ந்திருக்கின்றார்.

இவ்விதம் நான் கூறுவதைக்கேட்டு யாரும் ஏன் பாரதிராஜா, பாலச்சந்தர், பாலாவை விட்டு விட்டீர்கள் என்று போர்க்கொடி தூக்கிவிடாதீர்கள். இது என் கருத்து. உங்கள் கருத்தாக இருக்க வேண்டுமென்பதில்லை. பாலச்சந்தர், பாரதிராஜா, பாலா எல்லாருமே சிறந்த இயக்குநர்கள்தாம். ஆனால் அவர்கள் அனைவருமே வர்த்தக சினிமாவுக்காக அதிக அளவில் விட்டுக்கொடுப்பு செய்தவர்கள். கதை , ஒளிப்பதிவு, நடிகர்கள் தேர்வு, கதைப்பின்னல், இசை எல்லாவற்றிலுமே மிகுந்த விட்டுக்கொடுப்புகளைச் செய்தவர்கள். பாலச்சந்தரின் திரைப்படங்களில் பல காட்சிகள் நினைவில் நிற்கும்படியானவை. சிறப்பாகப் படமாக்கப்பட்டிருக்கும். ஆனால் அத்தகைய திரைப்படங்களிலெல்லாமுள்ள விட்டுக்கொடுப்புகளை இயன்ற வரையில் நீக்கி, அவற்றைச் சீரமைத்தால் ஓரளவு தேறும் சாத்தியமுண்டு. பாரதிராஜா கிராமத்தை, கிராமிய இசையைத் தமிழ்ச்சினிமா உலக்குக்குக் கொண்டு வந்தார். ஆனால் அவர் திரைப்படங்கள் அனைத்துமே வர்த்தக சினிமாவுக்காக விட்டுக்கொடுப்புகள் அதிக அளவில் செய்தவைதாம். என்னைப் பொறுத்தவரையில் என் வரிசை இவ்வாறிருக்கும்: பாலு மகேந்திரா, பாலா, மகேந்திரன், பாலச்சந்தர் & பாரதிராஜ.

'வீடு' திரைப்படத்தில் பானுசந்தர் & அர்ச்சனா

இம்முறை நான் தேர்வு செய்யும் திரைப்படம் - பாலு மகேந்திராவின் 'வீடு' . இந்திய மத்திய அரசின் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை (நடிகை அர்ச்சனா) ஆகிய விருதுகளையும் , பிலிம்ஃபெயர் பத்திரிகையின் சிறந்த இயக்குநருக்கான (பாலு மகேந்திரா) விருதினையும் 'வீடு' பெற்றது குறிப்பிடத்தக்கது.

இயக்கம், ஒளிப்பதிவு, 'எடிட்டிங்', திரைக்கதை: பாலு மகேந்திரா
இசை: இளையராஜா
நடிப்பு: அர்ச்சனா, பானுசந்தர், சொக்கலிங்க பாகவதர்
'வீடு; திரைப்பட யு டியூப் இணைப்பு: https://www.youtube.com/watch?v=BYRVBLKa9-o

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R