- வ.ந.கிரிதரன் -

கல்லுண்டாய் வெளியினூடே
பயணித்த நாட்களை
எண்ணிப் பார்க்கின்றேன்.
எத்தனை காலைகள்!
எத்தனை மாலைகள்!

இருள் பிரியா அதிகாலைகளில்
நகர் நோக்கிச் செல்வதுண்டு;
நகர்நோக்கி மானுடர் சிலர்
நடந்தும் சில்லுகளிலும் செல்வர்.
உழைக்கும் தொழிலாளர் அவர்.

வழுக்கியாறு கடலுடன்
சங்கமிக்கும்
பாலத்தில் இறால்
பிடித்துக்கொண்டிருப்பர்
கடற் தொழிலாளர் சிலர்.

கார்க்கியின் தாய் படித்துக்
கனவுகள்
கண்டுகொண்டிருந்த காலமது
கீழ்வானம் சிவந்திருக்க,
அடிவானத்து வெள்ளி கண்டு
அகத்தில் உவகை பொங்க
மேலும் கனவுகளில் ஆழுமென்
நெஞ்சு.

கீழ்வானம் ,
கீழ்வெள்ளி மாந்தர்தம் விடிவினை
எதிர்வு கூறும். என் நெஞ்சோயதை
எண்ணிக் கும்மியடிக்கும்.

உப்பளம், அதையடுத்து
உள்ள கல்லுண்டாய் வைரவர் கோயில்
இன்னும் சிறுதூரம் சென்றால்
இளந்தென்றலில் கதிராடும்
வயல்வெளி, அதனூடு தவமியற்றும்
மண்கும்பிக் குறுமுனிவர்.
கடந்து செல்லின்
காக்கைதீவு மீன் சந்தை.
கட்டுமரத்தில், வள்ளத்தில்
தொழிலுக்குச் செல்லும்
தொழிலாளர்.

தொடர்கையில்
பாதையொன்று நாவாந்துறை பிரிய
பொம்மைவெளி தாண்டி
நகருக்குள் நான்
நுழைவேன்.

மீண்டும் மாலைகளில்
மருத நில மண் நோக்கி
என் பயணம் தொடங்கும்.
மீண்டும் தொடங்குமிரு
சில்லுப் பயணத்தில்
சிந்தை  யிழப்பேன்.

அந்திக்  கதிராழியில்
அஸ்தமிக்கும் நேரம்.
வெளி ஊடறுத்து விரைகையில்
சில போதுகளில்
உலைகளில் கடலட்டையவித்து
உலரப் போட்டிருப்பர்
வீதியோரங்களில்...

அந்தியிருளில் தொழிலாளர்
வள்ளங்கள் , கட்டுமரங்கள் ..
ஓவியச் சட்டகங்களாய்
நினைவுகளில் படிய..
விரைந்து கொணடிருப்பேன்.

பசுங்கிளிகள், பல்வகைக்கடற்
பறவைகள்,
வயல்வெளிகளில் பயிர்களாட
வெளிகடந்து , வழுக்கியாறு பாலம்
கடந்து
மடத்தடி தாண்டி வீடு திரும்புகையில்
மனத்தில் மகிழ்ச்சி மலரும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R