சிறுவர் இலக்கியம்- பதிவுகளின் சிறுவர் இலக்கியம்: இப்பகுதியில் சிறுவர் இலக்கியப்படைப்புகள் வெளியாகும். உங்கள் படைப்புகளை இப்பகுதிக்கு அனுப்பி வையுங்கள். சிறுவர் இலக்கியத்தைப்பிரதிபலுக்கும் கதை, கவிதை, கட்டுரைகளை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.. - பதிவுகள் -


எழுத்தாளர்  பத்மா இளங்கோவன்

எனது குட்டித் தோழனே
என்ன பெரிய யோசனை
கண்ணை உருட்டிப் பார்க்கிறாய்
காதைப் பக்கம் அசைக்கிறாய்.

சத்தம் ஏதும் கேட்டதோ
சுற்றி எங்கும் அமைதியோ
வானம் வெளித்துப் போனதோ
வீதியில் வாகனம் இல்லையோ.

உலகம் எங்கும் கொரோனாவாம்
உயிரைக் கொல்லும் பெருநோயாம்
வேகமாய்ப் பரவிக் கொள்கிறதாம்
வெளியே சென்றால் தொற்றிடுமாம்.

வீட்டில் யாவரும் இருந்தாலே
விரைவில் நோயும் போய்விடுமாம்
கூடி எங்கும் திரிந்தாலே
கொடிய கொரோனா பெருகிடுமாம்.

வெளியே எங்கு சென்றாலும்
வீடு திரும்பி வந்தவுடன்
கைகளைக் கழுவ வேண்டுமாம்
கால் முகம் கழுவவேண்டுமாம்.

இப்படி என்றும் வாழ்ந்தாலே
எப்படி நோய்கள் வந்துவிடும்
சுத்தம் சுகத்தைத் தருமென்றே
சொல்லித் தந்தனர் பெரியோரே.

முகத்தில் கவசம் அணியாமல்
மக்கள் செல்லக் கூடாதாம்
கைக்கும் கவசம் அணிந்தாலே
காத்திட முடியும் எங்களையாம்.

சின்னப் பூனைக் குட்டியாரே
சொல்வது உனக்குப் புரிகிறதா
எழுந்து வருவாய் விளையாட
எங்கள் வீட்டுத் தோட்டத்தில்.

மகிழ்வாய் ஓடி வந்திடுவாய்
மரத்தில் ஏறிக் குதித்திடுவாய்
பதுங்கிப் பூச்சிகள் பிடித்திடுவாய்
பார்த்து நானும் ரசித்திடுவேன்.

நோயைக் கண்டு மனம்வாடி
நாங்கள் சோரக் கூடாது
எதிர்த்து நின்று போராடி
அழிப்போம் இந்தக் கொரோனாவை.

கிருமியை எதிர்க்கும் சக்தியினை
குழந்தைகள் நாமும் பெற்றிடவே
சத்து நிறைந்த உணவுகளை
சுவைத்து நாளும் உண்போமே.

பள்ளி சென்று நாங்களும்
பாடம் படிக்க வேண்டுமே
மீண்டும் பழைய வாழ்க்கையை
மனமும் காணத் துடிக்குதே.

கொரோனா ஓடிப் போய்விட்டால்
கூடி நாங்கள் மகிழ்ந்திடலாம்
அம்மா அப்பா எல்லோரும்
ஒன்றாய் வெளியே சென்றிடலாம்.

சின்னத் தோழா எம்முடனே
சேர்ந்து நீயும் வந்திட்டால்
துள்ளிக் குதித்து விளையாடி
தூரத் துயரை விரட்டிடலாம்.!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R